search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Methodology"

    • கந்தன் என்பவர் இறால் வளர்ப்பில் முறையான மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார்.
    • தொழில் முனைவோர், இறால் வளர்ப்போர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு மீன்வள பல்கலைக்கழகத்தில் இறால் வளர்ப்பு சிறந்த எதிர்காலத்திற்கான வழிமுறை கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதற்கு கல்லூரி முதல்வர் பாலசுந்தரி தலைமை வகித்தார்.

    இதில் சீர்காழி ராஜீவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மைய இயக்குனர் கந்தன் இறால் வளர்ப்பில் முறையான மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார்.

    கருத்தரங்கில் கடலோர நீர் வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்ப இயக்குனர் அந்தோணி சேவியர் சுரேஷ், தொழில்நுட்ப உதவி மேலாளர் குமரவேல், பண்ணை பொது மேலாளர் கோவிந்தராஜ், விஞ்ஞானிகள் குமரன், ரவிசங்கர், சலீம், கல்லூரி பேராசிரியர்கள் ஜாக்குலின் பெரேரா, சந்தோஷ்குமார், இறால் பண்ணை வளர்ப்போர் சங்கத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன் மற்றும் பல்கலைக்கழக மாணவ- மாணவிகள், மேலாண்மை அறிவியல் மையத்தினர், தொழில் முனைவோர் மற்றும் இறால் வளர்ப்போர் கலந்து கொண்டனர்.

    ×