search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Devi"

    • பத்மபுராணம் கூறுகிறது விஷ்ணுவின் பரிவார சக்திகள் எட்டு பேர் என்று
    • வெள்ளை நிறமுடைய சரஸ்வதி தேவி,பச்சை நிறமுடைய பரீதி தேவி

    விஷ்ணுபரிவார சக்திகளில் ஸ்ரீ மஹாலட்சுமி

    பத்மபுராணம் கூறுகிறது விஷ்ணுவின் பரிவார சக்திகள் எட்டு பேர் என்று புதிதாக இருக்கிறதல்லவா?

    அதில் இரு பரிவார சக்திகள் சற்று வித்தியாசமாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    தகதகக்கும் தங்க நிறம் உடைய ஸ்ரீ தேவி, வெள்ளை நிறமுடைய பூமிதேவி.

    வெள்ளை நிறமுடைய சரஸ்வதி தேவி,பச்சை நிறமுடைய பரீதி தேவி,

    சிவப்பு நிறமுடைய கீர்த்தி தேவி, நிறமற்று ஸ்படிகம் போல ஊடுருவும் கண்ணாடித் தன்மையுள்ள சாந்தி தேவி,

    மஞ்சள் நிறமுடைய துஷ்டி தேவி,பச்சை நிறமுடைய புஷ்டி தேவி,

    என்பவர்களே அந்த விஷ்ணுசக்திகள்.

    இவர்கள் எண்மரும் நான்கு திருக்கரங்கள் கொண்டு அவற்றில் மேல் இரு திருக்க்கரங்களில் இரு தாமரை மலர்களும்,

    கீழே வலது கரம் அபயகாஸ்தமாகவும் இடது கரம் வரத காஸ்தமாகவும் அபிநயம் புரியும்படி பரிவார சக்திகளாக அமைந்திருப்பார்கள்.

    • இந்திய திரையுலகின் முன்னனி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
    • கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ஸ்ரீதேவி உயிரிழந்தார்.

    இந்திய திரையுலகின் முன்னனி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து புகழ்பெற்றார். கலைத்துறையில் நடிகை ஸ்ரீதேவி ஆற்றிய பணிக்காக அவருக்கு 2013-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.




    கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ஸ்ரீதேவி உயிரிழந்தார். அவர் கடைசியாக நடித்த 'மாம்' திரைப்படத்திற்காக ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இவரது மகள் ஜான்வி கபூர், தற்போது பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். 


    ஜான்வி கபூர்

    ஜான்வி கபூர்


    இந்நிலையில் ஸ்ரீதேவியின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜான்வி கபூர், தனது சமூக வலைத்தல்பப்பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இன்னும் உங்களை எல்லா இடங்களிலும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களை பெருமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து செயல்களையும் செய்கிறேன். நான் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அனைத்தும் உங்களிடம் தொடங்கி, உங்களிடமே முடிகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி.
    • இவரது இறப்பு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி 1967-ல் கந்தன் கருணை என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.


    ஸ்ரீதேவி

    பின்னர் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1996-ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.


    ஸ்ரீதேவி

    கடந்த 2018-ல் ஸ்ரீதேவி துபாய் சென்றபோது பாத்ரூம் தொட்டிக்குள் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவரது இறப்பு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்கை வரலாறு தற்போது புத்தகமாக வெளியாகவுள்ளது.


    போனிகபூர் பதிவு

    இந்த புத்தகம் 'ஸ்ரீதேவி- தி லைப் ஆப் எ லெஜண்ட்' (sri devi - The life of a legend) என்ற பெயரில் வரவிருக்கிறது. இந்தப்புத்தகத்தை தீரஜ் குமார் எழுதியிருக்கிறார் என அவரது கணவரும், தயாரிப்பாருமான போனிகபூர் தனு சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். மேலும் இந்த புத்தகம் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    சீனாவில் ஸ்ரீதேவி நடித்த படத்திற்கு அமோக வரவேற்பு பெற்று ஒரே நாளில் ரூ.10 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
    இந்திய படங்களுக்கு சமீபகாலமாக உலக அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹாலிவுட் படங்களைபோல் அனைத்து நாடுகளிலும் வசூல் குவிக்கின்றன. இந்திய படங்கள் மீது உலக நாடுகளின் கவனம் திரும்ப காரணமாக அமைந்த முதல் படம் பாகுபலி-2. இந்த படத்தின் வசூல் சர்வதேச அளவில் ரூ.1,000 கோடியை தாண்டியது.

    தற்போது சீனர்களும் இந்தி படங்களை விரும்பி பார்க்கிறார்கள். அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் மிகப்பெரிய இரண்டாவது திரைப்பட சந்தையாக சீனா விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமீர்கானின் தங்கல் இந்தி படத்தை மொழி மாற்றம் செய்து சீனாவில் வெளியிட்டனர். இந்த படம் கார்டியன் ஆப் தி கேலக்சி என்ற ஹாலிவுட் படத்தை மிஞ்சி ரூ.800 கோடி வசூலித்ததது.



    விஜய்யின் மெர்சல் படமும் சீனாவில் திரையிடப்பட்டு வசூல் குவித்தது. இந்த படங்களின் வரிசையில் மறைந்த ஸ்ரீதேவி கடைசியாக நடித்த ‘மாம்’ படத்தையும் சீனாவில் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் திரையிட்டனர். இந்த படம் முதல் நாளிலேயே ரூ.9.8 கோடி வசூலித்து முதல் நாள் வசூல் படங்கள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
    ஸ்ரீதேவியின் புடவையை ஏலத்தில் விட்டு, அதில் வரும் பணத்தை தொண்டு நிறுவனத்துக்கு வழங்க ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். #Sridevi #BoneyKapoor
    தமிழ் படங்களில் அறிமுகமாகி இந்தி சினிமா வரை சென்று கலக்கியவர் ஸ்ரீதேவி. இந்திய அளவில் முன்னணி நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவி இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ஸ்ரீதேவி துபாயில் உயிர் இழந்தார். இதையொட்டி கடந்த பிப்ரவரி 14-ந்தேதியன்று சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள போனி கபூர் இல்லத்தில் ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமார், அவரது மனைவி ஷாலினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நேற்று ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி ஸ்ரீதேவியின் விருப்பமான புடவைகளில் ஒன்றான கோட்டா வகை புடவையை ஏலத்துக்கு விட்டு, அதில் கிடைக்கும் பணத்தைத் தொண்டு நிறுவனத்துக்கு வழங்க ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும், அவரது குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனர்.



    இந்த ஏலத்தை நடத்து வதற்கு பரிசேரா இணைய தளத்தை ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் தேர்வு செய்தனர். ஏலத்தில் புடவைக்கு ஆரம்ப விலையாக ரூ.40,000 நிர்ணயிக்கப்பட்டது. இந்த புடவைக்கு அதிகபட்சமாக ரூ.1.30 லட்சத்துக்கு விலை கேட்கப்பட்டது. இந்த விலையே இறுதி செய்யப்பட்டு விட்டதாக இணையதளம் தெரிவித்துள்ளது.

    இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை ‘கன்சர்ன் இந்தியா பவுண்டே‌ஷன்’ என்ற தொண்டு நிறுவனத்துக்கு வழங்க ஸ்ரீதேவி குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். பெண்கள், குழந்தைகள், முதியோர், ஏழைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக இந்தப் பணம் பயன் படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கண்சிமிட்டல் மூலம் பிரபலமான பிரியா வாரியார், தற்போது நடித்திருக்கும் ஒரு படத்தின் குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. #PriyaVarrier #Sridevi
    கடந்த ஆண்டு கண் சிமிட்டலால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கொள்ளை கொண்டவர் நடிகை பிரியா வாரியார். தற்போது இவரது நடிப்பில் ஸ்ரீதேவி பங்களா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பிரசாந்த் மாம்பூலி இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஏனெனில், கடந்த ஆண்டு நடிகை ஸ்ரீதேவி துபாயில் குளியல் தொட்டியில் மூச்சுதிணறி இறந்துபோனார். தற்போது, வெளியான டீசரில் நடிகை பிரியா வாரியார் குளியல் தொட்டியில் இறந்துகிடப்பது போன்ற காட்சி உள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் இயக்குனருக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், இந்த படத்தில் ஸ்ரீதேவி என்பது பொதுவான பெயர் என்றும் இதனை நான் முறைப்படி சந்திப்பேன் என இயக்குனர் கூறியுள்ளார்.



    1 நிமிடமும் 49 வினாடியும் ஓடும்  ஸ்ரீதேவி பங்களா டிரெய்லரில் பிரியா வாரியர் கிளாமராக தோன்றுகிறார். டீசர் முடிவில்,  ஸ்ரீதேவியின் மர்ம மரணம் குறித்த குறிப்புகளைக் காட்டும் ஒரு குளியல் தொட்டியும் காட்டப்படுகிறது.
    தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான ஸ்ரீதேவியின், வாழ்க்கை வரலாறு படத்திற்காக ரகுல் ப்ரீத் சிங் மெனக்கெட்டு வருகிறார். #SriDevi #RakulPreetSingh
    மறைந்த தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு தமிழ், தெலுங்கு மொழிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இதை தேஜா இயக்குகிறார். இதில் என்.டி.ஆரின் வேடத்தில் அவரின் மகன் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்க அவரின் மனைவியாக வித்யா பாலன் நடிக்கிறார். சந்திரபாபு நாயுடுவாக ராணா, அவரின் மனைவியாக மஞ்சிமா மோகன், சாவித்திரியாக நித்யா மேனன் நடிக்கின்றனர்.

    தற்போது மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை சவாலாக ஏற்ற ரகுல், ஸ்ரீதேவியின் உடல்மொழி, முக பாவனைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அவர் நடித்த படங்களைப் பார்த்து வருகிறார்.



    ஸ்ரீதேவிக்கு நெருக்கமானவர்களிடம் அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து வருகிறார். முதலில் சினிமா, அரசியல் என இரண்டையும் ஒரே படமாக எடுக்க திட்டமிட்ட படக்குழு இப்போது இரண்டு பாகமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். சினிமா வாழ்க்கை அடங்கிய பாகத்துக்கு `கதாநாயகுடு’ என்றும் அரசியல் வாழ்க்கையைச் சொல்லும் பகுதிக்கு ‘மகாநாயகுடு’ என்றும் பெயரிட்டுள்ளனர். இரண்டுமே 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.
    நடிகை ஸ்ரீதேவியின் 55-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் திரைப்படத்துறை பிரிவினர் நடத்திய 2 நாள் விழாவில் போனி கபூர் உட்பட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். #SriDevi #BoneyKapoor
    புதுடெல்லி:

    தமிழகத்தில் சிவகாசி பகுதியில் பிறந்து உலக அளவில் பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராதவிதமாக துபாயில் மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு உலக அளவில் இருக்கும் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்தினர்.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 55-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை ஒட்டி, ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் திரைப்படத்துறை பிரிவினர் சார்பில் 2 நாள் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடத்தப்பட்டது.

    ஸ்ரீதேவியின் இங்கிலீஸ் விங்கிலீஸ், மாம் போன்ற திரைப்படங்கள் இந்த கொண்டாட்டத்தின்போது திரையிடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பாரம்பரிய நடனக்கலைஞரான சோனல் மன்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், ஸ்ரீதேவி விட்டுச் சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது எனவும், அவர் விட்டுச் சென்ற நினைவுகள் மூலமே தாங்கள் வாழ்ந்து வருவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    மேலும், தனது மனைவுக்கு நடத்தப்படும் இந்த விழாவை ஏற்பாடு செய்த அரசுக்கும், தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும், நண்பர் அமர் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.



    தொடர்ந்து பேசிய அவர், தாம் ஸ்ரீதேவியை திரையில் பார்த்த முதல்நாளிலேயே காதல் வசப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து அவரை தொடர்ந்து சென்ற போது, அவரது அழகும், திறமையும் ஏற்படுத்தி இருந்த ஒளிவட்டம் தம்மை மிகவும் ஈர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதேவியின் இதயத்தை கவர 12 வருடங்கள் ஆனதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.

    மேலும், தற்போது ஸ்ரீதேவியின் பிரிவை தாமும் தம் பிள்ளைகளும் நன்கு உணர்வதாகவும், தற்போது பிள்ளைகள் மட்டுமே வாழ்வின் பலம் எனவும் போனி கபூர் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.  #SriDevi #BoneyKapoor
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா, சினிமா உலகில் எனக்கு அவர்தான் முன்மாதிரி என்றும், அவரது வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை இருப்பதாகவும் கூறியிருக்கிறார். #Hansika
    நடிகர், நடிகைகள் வாழ்க்கை படங்கள் சமீப காலமாக தயாராகி வருகின்றன. சில்க் சுமிதா வாழ்க்கை ‘த டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக வந்தது. இதில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்த வித்யாபாலன் தேசிய விருது பெற்றார். மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் வெளியானது.

    இதில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேசுக்கு பாராட்டுகள் குவிந்தன. பிரபல இந்தி நடிகரும் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி சிறை தண்டனை பெற்றவருமான சஞ்சய்தத் வாழ்க்கை சஞ்சு என்ற பெயரில் திரைக்கு வந்துள்ளது. மறைந்த தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதல் மந்திரியுமான என்.டி.ராமராவ் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது.

    என்.டி.ராமராவ் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். மறைந்த தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வாழ்க்கையும் படமாகிறது. சமீபத்தில் துபாய் நட்சத்திர ஓட்டலில் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கையும் படமாகிறது. இதில் ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடக்கிறது. 

    இந்த நிலையில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகா விருப்பம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-



    “எனக்கு ஸ்ரீதேவியை மிகவும் பிடிக்கும். புலி படத்தில் இருவரும் இணைந்து நடித்தோம். அப்போது எனக்கு நிறைய அறிவுரைகளும் ஆலோசனைகளும் சொன்னார். அவருடன் நடித்த நாட்கள் மறக்க முடியாத அனுபவம். என் வாழ்க்கைக்கு அவரைத்தான் முன்மாதிரியாக கருதுகிறேன். ஸ்ரீதேவி வாழ்க்கை கதை படத்தில் அவரது வேடத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது. அவர் வாழ்க்கை கதையை யார் படமாக்கினாலும் அதில் நடிக்க தயார்.”

    இவ்வாறு ஹன்சிகா கூறினார். 
    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி, இந்தியிலும் சரி, தென் இந்திய மொழிகளிலும் சரி எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான் என்று கூறியுள்ளார். #Jhanvi #Dhanush
    கடந்த பிப்ரவரியில் துபாய் நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் நடிகை ஸ்ரீதேவி இறந்தார். அவரது மகள் ஜான்வி அறிமுகமாகும் ‘தடக்’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஜான்வி கூறி இருப்பதாவது:- ‘இந்தியிலும் சரி, தென் இந்திய மொழிகளிலும் சரி எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான். அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் அவரது நடிப்பும் என்னை கவர்ந்துவிட்டது.

    ‘நான் வளர்ந்து விட்டாலும் அம்மாவுக்கு என்றுமே சிறு குழந்தை தான். காலையில் எழுந்தவுடன் அம்மாவை தான் தேடுவேன். சில நேரம் எனக்கு உணவு ஊட்டிவிடுவார். தட்டிக் கொடுத்து தூங்க வைப்பார். அவர் துபாய் செல்வதற்கு முதல் நாள் தூக்கம் வரவில்லை தூங்க வையுங்கள் என்றேன். 



    அம்மா பொருட்களை எடுத்து வைப்பதில் பிசியாக இருந்தார். அதன் பிறகு பாதி தூக்கத்தில் இருந்த என்னை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தார்’ என்றார்.
    ×