என் மலர்
நீங்கள் தேடியது "Sri Devi"
- சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி.
- இவரது இறப்பு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி 1967-ல் கந்தன் கருணை என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

ஸ்ரீதேவி
பின்னர் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1996-ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஸ்ரீதேவி
கடந்த 2018-ல் ஸ்ரீதேவி துபாய் சென்றபோது பாத்ரூம் தொட்டிக்குள் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவரது இறப்பு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்கை வரலாறு தற்போது புத்தகமாக வெளியாகவுள்ளது.

போனிகபூர் பதிவு
இந்த புத்தகம் 'ஸ்ரீதேவி- தி லைப் ஆப் எ லெஜண்ட்' (sri devi - The life of a legend) என்ற பெயரில் வரவிருக்கிறது. இந்தப்புத்தகத்தை தீரஜ் குமார் எழுதியிருக்கிறார் என அவரது கணவரும், தயாரிப்பாருமான போனிகபூர் தனு சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். மேலும் இந்த புத்தகம் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
We are thrilled to announce that we will be publishing @AuthorDhiraj's definitive biography of Sridevi—an iconic superstar and true legend. Out in 2023! pic.twitter.com/JVgaeYFR73
— Westland Books (@WestlandBooks) February 8, 2023
- இந்திய திரையுலகின் முன்னனி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
- கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ஸ்ரீதேவி உயிரிழந்தார்.
இந்திய திரையுலகின் முன்னனி நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து புகழ்பெற்றார். கலைத்துறையில் நடிகை ஸ்ரீதேவி ஆற்றிய பணிக்காக அவருக்கு 2013-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ஸ்ரீதேவி உயிரிழந்தார். அவர் கடைசியாக நடித்த 'மாம்' திரைப்படத்திற்காக ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இவரது மகள் ஜான்வி கபூர், தற்போது பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஜான்வி கபூர்
இந்நிலையில் ஸ்ரீதேவியின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜான்வி கபூர், தனது சமூக வலைத்தல்பப்பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இன்னும் உங்களை எல்லா இடங்களிலும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களை பெருமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து செயல்களையும் செய்கிறேன். நான் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அனைத்தும் உங்களிடம் தொடங்கி, உங்களிடமே முடிகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
- பத்மபுராணம் கூறுகிறது விஷ்ணுவின் பரிவார சக்திகள் எட்டு பேர் என்று
- வெள்ளை நிறமுடைய சரஸ்வதி தேவி,பச்சை நிறமுடைய பரீதி தேவி
விஷ்ணுபரிவார சக்திகளில் ஸ்ரீ மஹாலட்சுமி
பத்மபுராணம் கூறுகிறது விஷ்ணுவின் பரிவார சக்திகள் எட்டு பேர் என்று புதிதாக இருக்கிறதல்லவா?
அதில் இரு பரிவார சக்திகள் சற்று வித்தியாசமாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தகதகக்கும் தங்க நிறம் உடைய ஸ்ரீ தேவி, வெள்ளை நிறமுடைய பூமிதேவி.
வெள்ளை நிறமுடைய சரஸ்வதி தேவி,பச்சை நிறமுடைய பரீதி தேவி,
சிவப்பு நிறமுடைய கீர்த்தி தேவி, நிறமற்று ஸ்படிகம் போல ஊடுருவும் கண்ணாடித் தன்மையுள்ள சாந்தி தேவி,
மஞ்சள் நிறமுடைய துஷ்டி தேவி,பச்சை நிறமுடைய புஷ்டி தேவி,
என்பவர்களே அந்த விஷ்ணுசக்திகள்.
இவர்கள் எண்மரும் நான்கு திருக்கரங்கள் கொண்டு அவற்றில் மேல் இரு திருக்க்கரங்களில் இரு தாமரை மலர்களும்,
கீழே வலது கரம் அபயகாஸ்தமாகவும் இடது கரம் வரத காஸ்தமாகவும் அபிநயம் புரியும்படி பரிவார சக்திகளாக அமைந்திருப்பார்கள்.




தமிழகத்தில் சிவகாசி பகுதியில் பிறந்து உலக அளவில் பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராதவிதமாக துபாயில் மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு உலக அளவில் இருக்கும் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்தினர்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 55-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை ஒட்டி, ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் திரைப்படத்துறை பிரிவினர் சார்பில் 2 நாள் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடத்தப்பட்டது.
ஸ்ரீதேவியின் இங்கிலீஸ் விங்கிலீஸ், மாம் போன்ற திரைப்படங்கள் இந்த கொண்டாட்டத்தின்போது திரையிடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பாரம்பரிய நடனக்கலைஞரான சோனல் மன்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், ஸ்ரீதேவி விட்டுச் சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது எனவும், அவர் விட்டுச் சென்ற நினைவுகள் மூலமே தாங்கள் வாழ்ந்து வருவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தாம் ஸ்ரீதேவியை திரையில் பார்த்த முதல்நாளிலேயே காதல் வசப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து அவரை தொடர்ந்து சென்ற போது, அவரது அழகும், திறமையும் ஏற்படுத்தி இருந்த ஒளிவட்டம் தம்மை மிகவும் ஈர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதேவியின் இதயத்தை கவர 12 வருடங்கள் ஆனதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது ஸ்ரீதேவியின் பிரிவை தாமும் தம் பிள்ளைகளும் நன்கு உணர்வதாகவும், தற்போது பிள்ளைகள் மட்டுமே வாழ்வின் பலம் எனவும் போனி கபூர் பெருமையுடன் தெரிவித்துள்ளார். #SriDevi #BoneyKapoor








