என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டெல்லி உயர் நீதிமன்றம்"
- ஸ்பா மையங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதே பாலினத்தவர்களே மசாஜ் செய்ய உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தொடரப்பட்டது
- இந்த வழக்கை, தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பிஎஸ் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது
ஸ்பா மையங்களில் ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண்ணே மசாஜ் செய்ய உத்தரவிட வேண்டும் என்று பொதுநல டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
அந்த மனுவில், ஆகஸ்ட் 18, 2021 அன்று டெல்லி அரசினால் வெளியிடப்பட்ட ஸ்பாக்கள்/மசாஜ் மையங்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை மீறி பல்வேறு ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் மையங்களில் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மசாஜ் செய்கின்றனர். ஆகவே ஸ்பா மையங்களில் ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண்ணே மசாஜ் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை, தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பி.எஸ் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, டெல்லி அரசினால் வெளியிடப்பட்ட ஸ்பாக்கள்/மசாஜ் மையங்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே அந்த வழக்கின் முடிவு தெரியும் வரை இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக்கூறி உந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தள்ளுபடி செய்யப்பட்ட அந்த மனுவில், ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் மையங்களின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை டெல்லி மகளிர் ஆணையத்துடன் தொடர்ச்சியாக பகிர்ந்து கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த மாதம் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.
- 2022-ல் இத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை 23 ஆண்டுகளாக அரசாங்கம் நீட்டித்தது.
ஆயுதப் படைகளில் ஆள் சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்ததோடு, அதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தினர். அப்போது, திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது ஒருங்கிணைந்த பதிலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டது.
ஜூன் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அக்னிபாத் திட்டம், 17 முதல் 21 வயது வரையிலான பாதுகாப்புப் படைகளில் 25 சதவீதத்தினரை இன்னும் 15 ஆண்டுகளுக்குத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே இளைஞர்களைச் சேர்ப்பதற்கு வழங்குகிறது.
கடந்த மாதம் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. பின்னர், 2022-ல் இத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை 23 ஆண்டுகளாக அரசாங்கம் நீட்டித்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்