search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரவணைப்பு"

    • வாழ்க்கை இனிமையாக செல்ல 'ரொமான்ஸ்' தான் ஆணிவேர்.
    • 'நன்றி' என்ற எளிய வார்த்தை பல அற்புதங்களைச் செய்யும்.

    கணவன்-மனைவிக்கு இடையிலான அந்தரங்க நெருக்கமும், அது சார்ந்த அன்யோன்ய செயல்பாடுகளும் தான் ரொமான்ஸ் வாழ்க்கை அலுக்காமலும், சலிக்காமலும் இனிமையாகச் செல்ல இந்த 'ரொமான்ஸ்' தான் ஆணிவேர். அந்த ஆணிவேருக்கு எப்படி நீரூற்றுவது என்று பார்க்கலாமா...?

    நன்றியும், பாராட்டும்:

    முன்பின் தெரியாத யார் யாருக்கோ அவ்வப்போது நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் பலர், வீட்டுக்குள் அதை கடைப்பிடிப்பதில்லை. நம்மவர்தானே... வழக்கமாக செய்யும் வேலைதானே... என்று அந்த எண்ணத்தை ஒத்தி வைத்துவிடுகிறார்கள். மாறாக, மனைவி விசேஷமாக ஒன்றை சமைக்கும்போது, அவருக்காக கணவர் வேலையில் உதவி செய்யும்போது யோசிக்காமல் பரஸ்பரம் பாராட்டு தெரிவிக்கலாம். 'நன்றி' என்ற எளிய வார்த்தை பல அற்புதங்களைச் செய்யும்.

     நேர ஒதுக்கீடு:

    இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலின் மீது குற்றச்சாட்டை போட்டு விட்டு எல்லோரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஏன் இந்த ஓட்டம் என்று எவரும் யோசிப்பதில்லை. வாழ்க்கை முழுவதும் நம்முடன் வந்துகொண்டே இருக்கும் துணைக்கு நேரம் ஒதுக்கி, மனம் திறந்து பேசுவதும், அவர் கூறுவதை கேட்பதும் முக்கியம். முடிந்தால் இருவரும் வெளியிலும் சென்று வரலாம்.

     இன்ப அதிர்ச்சி:

    திடீர் இன்ப அதிர்ச்சி எவருக்கும் ஒரு 'திரில்'லை ஏற்படுத்தும். அது பரிசுப் பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எதிர்பாராத நேரத்தில் ஒரு அன்பான பார்வை, நெகிழ்ச்சியான சொல் போன்றவை உங்கள் வாழ்க்கைத்துணையின் மனமார்ந்த வரவேற்பை பெறும். உறவினர்கள் சூழ்ந்திருக்கையில், "நான் அவளிடம் கூட சொன்னதில்லை... பசங்களை அவளைப் போல யாரும் பொறுப்பா பார்த்துக்க முடியாது' என்ற வார்த்தைகூட மனைவிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும்.

     வெளிப்படையான பேச்சு:

    வெளிப்படையான பேச்சும், நேர்மையான தகவல்தொடர்பும் இல்லற வாழ்வின் வலுவான அஸ்திவாரமாகத் திகழும். கணவன்-மனைவி தங்களுக்கு இடையிலான பேச்சை மேம்போக்காக வைத்துக்கொள்ளாமல், தமது உணர்வுகள், கனவுகள்... ஏன், பயங்களை கூட பகிர்ந்து கொள்ளலாம். இது உணர்வு ரீதியாக இருவரும் நெருக்கமாக உதவும்.

    காது கொடுத்து கேட்பது:

    கணவன், மனைவியிடமும், மனைவி, கணவனிடமும் தங்கள் எண்ணங்களை, தேவைகளை முதலில் கூற முற்படுவார்கள். அப்போது, 'சும்மா தொண தொணக்காதே..' என்றோ, ஆரம்பிச்சுட்டீங்களா?' என்று முட்டுக்கட்டை போடாமல், பொறுமையாக, காது கொடுத்து கேளுங்கள். துணையின் பிரச்சனைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்பதுகூட இல்லை. கவனமாக கேட்டு, ஆறுதலாக கூறும் இரண்டு வார்த்தைகளே அவருக்கு மிகுந்த நிம்மதியை தரும்.

     அரவணைப்பும், அன்பு முத்தமும்:

    தம்பதியர் இடையில் நெருக்கத்தை வளர்ப்பதில் ஸ்பரிசத்துக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. கைகளை ஆதரவோடு பற்றுதல், அரவணைத்தலுடன், திடீர் அன்பு முத்தமும் அதிசயங்களை நிகழ்த்தும்.

    • ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பெரும் சவாலாகவே அமையும்.
    • தாயின் வயிற்றுக்குள் கதகதப்புடன் இருக்கும்.

    சுற்றுச்சூழல், காற்று, வெயில், மழை, குளிர் என அனைத்தும் பிறந்த குழந்தைகளுக்குப் புதிதாக இருக்கும். குழந்தைகளின் வருகை மகிழ்ச்சியைத் தந்தாலும் இதுப்போன்ற புதிய சூழலுக்கு எப்படி அவர்களைப் பராமரிப்பது? என்பது ஒவ்வொரு தாய்மார்களுக்கும் ஒரு பெரும் சவால் தான். முதன் முறையாக குழந்தையை பெறும் தாயாக இருந்தால் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற அச்சமும் ஏற்படும். அதிலும் குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பெரும் சவாலாகவே அமையும்.

     அரவைணப்பு:

    குழந்தைகள் 9 மாத காலங்களுக்கு தாயின் வயிற்றுக்குள் கதகதப்புடன் இருக்கும். நவம்பர் முதல் ஜனவரி வரையிலான குளிர்காலத்தில் பிறக்கும் சூழல் ஏற்பட்டால் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்தால் தாய்மார்கள் கங்காரு மதர் கேர் முறையைப் பின்பற்ற வேண்டும்.

    பிறந்தவுடன் தாயின் அரவணைப்பில் மட்டுமே இருக்க வேண்டும். குழந்தைகளைப் பார்ப்பதற்கு யார் வந்தாலும் தூக்க சொல்ல வேண்டாம். இது குழந்தைக்குத் தொற்று பாதிப்பிற்கு வழிவகுக்கும். அம்மாவின் அரவணைப்பு மற்றும் குளிருக்கு இதமான ஆடைகள் தான் குளிர்காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்றதாக அமையும்.

     மசாஜ்:

    தாயின் வயிற்றில் இருந்து வெளிவரும் குழந்தையின் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும். ஆனால் குளிர்ந்த காற்று அவர்களின் சருமத்தை வறண்டு விடச் செய்கிறது. உடலின் வெப்பநிலையும் சமமாக இருக்காது. இந்தநேரத்தில் குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். இது உடலின் வெப்பநிலையை அதிகரித்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. சுத்தமான இயற்கை எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    சூடான நீரில் குளிக்க வைத்தல்:

    குழந்தையின் உடல் நலம் மற்றும் பருவநிலைக்கு ஏற்றவாறு அவர்களைக் குளிக்க வைக்க வேண்டும். குளிர்காலத்தில் சூடான நீரில் மட்டுமே அவர்களைக் குளிக்க வைக்கவும். எடைக்குறைவாக இருக்கும் குழந்தைகள் என்றால், குளிக்க வைக்க வேண்டாம். மாறாக காட்டன் துணிகளை சூடான நீரில் நனைத்து துடைத்தெடுக்கவும்.

    ஆடை:

    குழந்தைகளை சூடாகவும் குளிரின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் ஆடைகளின் தேர்வு முக்கியமானது. அதற்கென்று குழந்தைகளுக்கு எரிச்சலூட்டம் வகையிலான ஆடைகளை அணிய கூடாது. மிருதுவான ஸ்வெட்டர்கள், தொப்பிகள், கையுறைகள், சாக்ஸ் போன்றவற்றை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    தடுப்பூசி:

    குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் தொற்றைக் குறைக்க வேண்டும் என்றால் சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் சளி, இருமல் தொல்லை இருந்தால் மருத்துவரின் அறிவுரையின் படி தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது நல்லது.

    தாய்ப்பால்:

    பிறந்தவுடன் குழந்தைகளுக்கு தாய்மார்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதிலும் குளிர்காலத்தில் அதிகமாக குழந்தைகள் சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதால் அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இரவில் நல்ல தூக்கத்தில் இருந்தாலும், குழந்தையை எழுப்பிவிட்டு உட்கார்ந்து தான் பால் கொடுக்க வேண்டும். படுத்துக் கொண்டு கொடுக்கவே கூடாது. மேலும் புதிதாகப் பிறந்த குழந்தையின் கழுத்துத் தசைகள் வளர நேரம் எடுக்கும் என்பதால் குழந்தைகளைத் தூக்கும் போது எப்போதும் தலையிலும் கை வைத்து தூக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    டயப்பர் மாற்றுதல்:

    புதிதாகப் பிறந்த குழந்தைக்கு பல டயப்பர்கள் தேவைப்படும். எனவே அடிக்கடி அவற்றை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

    ×