என் மலர்
நீங்கள் தேடியது "Seizure"
- தேனி மாவட்டத்தில் அனுமதியில்லாமல் மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது.
- கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுகிறது.
கூடலூர்:
கூடலூர் அருகே ஒரு வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக உத்தமபாளையம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சூரிய திலகராணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உத்தமபாளையம் டி.எஸ்.பி. செங்குட்டு வேலவன் தலைமையில் போலீசார் கருநாக்கமுத்தன்பட்டியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு வீட்டில் இருந்து அதிக நபர்கள் வந்த வண்ணம் இருந்ததால் 2வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (வயது 55) என்பவரது வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர்.
அப்போது ராஜா தனது வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜாவை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக குடத்தில் வைத்திருந்த 20 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூடலூர் அருகில் உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியில் தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
தற்போது மீண்டும் மக்கள் வசிக்கும் பகுதியிலேயே சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டத்தில் அனுமதியில்லாமல் மதுபான விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுகிறது. இதனிடையே சாராயம் விற்பனையும் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்கை பால் மற்றும் பன்னீர் விற்பனை செய்து வந்துள்ளார்.
- செயற்கைப் பாலை அதன் தோற்றம், சுவை அல்லது வாசனையால் யாரும் வேறுபடுத்த முடியாது.
உத்தரப் பிரதேசத்தில் ரசாயனத்தை பயன்படுத்தி போலி பால் மற்றும் பன்னீர் தயாரித்த விநியோகம் செய்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் அகர்வால் டிரேடர்ஸ் உரிமையாளர் அஜய் அகர்வால் உண்மையான பால் போல் தோன்றும் வகையில் ரசாயனங்களில் செயற்கை இனிப்புகள் மற்றும் சுவைகளை கலக்கிறார். இந்த முறையில் கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்கை பால் மற்றும் பன்னீர் விற்பனை செய்து வந்துள்ளார்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் அகர்வாலின் கடை மற்றும் 4 குடோன்களில் சோதனை நடத்தி, தொடர்புடைய ரசாயனங்களைப் பறிமுதல் செய்தனர்.
அகர்வால் போலி பாலை உருவாக்க பயன்படுத்திய ரசாயனங்கள் என்ன என்று இன்னும் கண்டறியப்படாத நிலையில் அதில் 5 மில்லிலிட்டர்களை மட்டுமே பயன்படுத்தி 2 லிட்டர் வரை போலி பாலை THAYAARIKAமுடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது 1 லிட்டர் ரசாயனத்தைப் பயன்படுத்தி 500 லிட்டர் போலி பாலை தயாரிப்பதற்குச் சமமாகும்.
एक होता है मिलावटी, दूसरा होता है नकली। 100% नकली दूध बनाने का डेमो देखिए। कई केमिकल मिलाकर एक सफेद घोल तैयार हुआ। उसे नेचुरल पानी में डाला और दूध बनकर तैयार। इस 1 लीटर केमिकल से 500 लीटर दूध बनता है। फार्मूला बनाने वाला अजय अग्रवाल गिरफ्तार है।?बुलंदशहर, उत्तर प्रदेश pic.twitter.com/00tkeujkGM
— शिक्षक वाणी (@sirjistp) December 8, 2024
சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுவதால் செயற்கைப் பாலை அதன் தோற்றம், சுவை அல்லது வாசனையால் யாரும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
இந்த கெமிக்கல் பார்முலாவை உள்ளூர் கிராம பால் விற்பனையாளர்களுக்கும் அகர்வால் கற்றுக்கொடுத்துள்ளார். இந்த பார்முலாவை அவர் எங்கு தெரிந்துகொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஏற்கனவே 2 முறை போதைப் பொருட்களை கடத்தி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
- பிடிப்பட்ட நபர்கள் ஜாபர் சாதிக்குடன் அரசியல் ரீதியான தொடர்பில் இருந்தார்களா?
சென்னை:
சென்னையில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் போதைப் பொருட்கள், கடத்தலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு மெத்தா பெட்டமைன் போதைப் பொருட்களை கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசூல் ரகுமான், இப்ராகிம் மற்றும் சென்னையை சேர்ந்த மன்சூர் ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து, 70 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'மெத்தாம்பெட்டமைன்' போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர்.
சென்னை அருகே செங்குன்றம் பகுதியில், குடோன் ஒன்றில் போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த 7 கிலோ மதிப்பிலான மெத்தா பெட்டமைன் போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். போலீசார் அதன் பின்னணிகளை பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இதில் கைதான இப்ராகிம் தி.மு.க. பிரமுகர் என்பது தெரிய வந்துள்ளது.
இவர் அந்த கட்சியில் மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ளார். இந்த கும்பல் ஏற்கனவே 2 முறை போதைப் பொருட்களை கடத்தி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கடத்தப்படும் போதைப் பொருட்களை இங்கிருந்து பஸ் மற்றும் கார்களில் ராமநாதபுரத்துக்கு கடத்தப்படுகிறது. அங்கிருந்து கடல் வழியாக படகில் இலங்கைக்கு கடத்தியதையும் கண்டுபிடித்துள்ளனர்.
டெல்லியிலிருந்து போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் இருந்து மெத்தா பொட்டமைன் போதைப் பொருள்தான் சிக்கியது என்றும் இதையடுத்து சென்னையில் தற்போது பிடிபட்டுள்ள 3 பேருக்கும், ஜாபர்சாதிக்குக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிப்பட்ட நபர்கள் ஜாபர் சாதிக்குடன் அரசியல் ரீதியான தொடர்பில் இருந்தார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் குடியிருக்கும் சுமதி என்பவர் வீட்டில் இருந்து சிலைகள் பறிமுதல்.
- நாகாத்தம்மன் உலோக சிலை, உலோக உடைவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 2 பழங்கால சிலைகள், உலோக வாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், பெண் சுமதி, பிரகாஷ், தங்கராஜ் மற்றும் ராஜேஷ் கண்ணன் என 4 பேர் கைது செய்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் குடியிருக்கும் சுமதி என்பவர் வீட்டில் இருந்து சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாகாத்தம்மன் உலோக சிலை, உலோக உடைவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சுமதியிடம் விசாரித்ததில், கோயிலில் இருந்து திருடப்பட்டதாகவும், சரியான நேரத்தில் விற்க காத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
சுமதியும், அவரது கணவர் பிரகாஷூம் சிலை குறித்து எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்காததால் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிலைகள் எந்த கோயிலில் இருந்து எடுக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- பறிமுதல் செய்யப்பட்ட நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.
ஓசூர்:
சேலம் சரக குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. விஜயகுமார் மற்றும் கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, பெருமாள் மற்றும் போலீசார் தளி ஆனேக்கல் சாலையில் உள்ள உச்சனப்பள்ளி முனியப்பன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 40 கிலோ எடை கொண்ட, 20 மூட்டைகளில் ரேஷன் அரிசியை கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து வேனை ஓட்டி சென்ற தளி கும்பார் வீதியை சேர்ந்த அல்லாபகாஷ், (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.
- தடை செய்யப்பட்ட 10 கிலோ போதை பொருட்கள் இருந்தன.
- வடமாநில வாலிபர்களிடம் போலீசார் சோதனை
கோவை:
கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, நெல்லை, நாகர்கோவில், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர கேரள மாநிலத்திற்கு செல்லக்கூடிய ரெயில்களும் கோவை சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ரெயில் நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.
பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் இன்று மதியம் கோவை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தது. இந்த ரெயிலில் போதைப்பொருள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரேஸ்கோர்ஸ் உதவி கமிஷனர் அருண்குமார் தலைமையில் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்திற்கு சென்று, பீகாரில் இருந்த வந்த ரெயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அந்த ரெயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டி மற்றும் பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் தடை செய்யப்பட்ட 10 கிலோ போதை பொருட்கள் இருந்தன.
அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 10 வடமாநில வாலிபர்களையும் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் போதை பொருட்களை கடத்தி வந்தனரா? அல்லது வேறு யாராவது கடத்தி இதில் வைத்தனரா? என பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ரூ.975.08 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
- பங்குகள் மற்றும் பத்திரங்கள் முடக்கப்பட்டுள்ளன.
மும்பை:
மராட்டிய மாநிலம் மும்பையை தலைமை இடமாக கொண்டு மந்தனா என்ற பெயரில் ஜவுளி தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் அதிபர் மற்றும் செயல் இயக்குனர்கள் அங்குள்ள பரோடா வங்கியில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் கடன் பெற்றனர். ஆனால் இந்த கணக்கு 2016-ம் ஆண்டு செயல்படாத சொத்தாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட தணிக்கையில் அந்த நிறுவனம் ரூ.975.08 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் புருஷோத்தம் சகன்லால் மந்தனா, முன்னாள் நிர்வாக இயக்குனர் மணீஷ் பிஹாரிலால் மந்தனா உள்ளிட்டோர் மீது வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யில் புகார் செய்தது.
புகாரின் பேரில் மந்தனா நிறுவனத்தின் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மந்தனா நிறுவனத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் மும்பை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது 140-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள், 5 லாக்கர்கள் மற்றும் ரூ.5 கோடி மதிப்புள்ள பங்குகள் மற்றும் பத்திரங்கள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் லெக்சஸ் மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட 3 உயர்ரக கார்களும் ரோலக்ஸ், ஹூப்லாட் போன் பிரபல பிராண்டுகளின் கைக்கடிகா ரங்கள் மற்றும் ஏராளமான டிஜிட்டல் சாதனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இதே மாவட்டத்தில் சர்வதேச சந்தையில் ரூ.800 கோடி மதிப்புள்ள 80 கோக்கேன் பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றியிருந்தனர்.
- சுமார் ரூ.130 கோடி மதிப்புள்ள 13 பாக்கெட் கொக்கைன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுள்ளது.
குஜராத்தில் ரூ.130 மதிப்புள்ள போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள காந்திதாம் நகரின் அருகே மிதி ரோகார் கிராமத்தில் வைத்து சர்வதேச சந்தையில் சுமார் ரூ.130 கோடி மதிப்புள்ள 13 பாக்கெட் கொக்கைன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுள்ளது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இதே மாவட்டத்தில் சர்வதேச சந்தையில் ரூ.800 கோடி மதிப்புள்ள 80 கோக்கேன் பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றியிருந்தனர். அதுதொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது இரண்டாவது அதிகபட்ச கொக்கைன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுதொடர்பான விசாரணை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது
இந்தியாவில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கலாச்சாரத்துக்கு மத்தியில் நிழலுலகில் செயல்பட்டுவரும் வரும் சர்வதேச போதைப்பொருள் மாஃபியா இந்தியாவிலும் சந்தையை திறக்கத் தொடங்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- சோதனையிட முயன்றதும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடினர்.
- ரூ. 40 லட்சம் மதிப்பில் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டணம் கடற்கரைக்கு செல்லும் பாதை வழியாக இலங்கைக்கு வாகனம் மூலம் பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக மாவட்ட `கியூ' பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர்கள் ராமர், இருதய ராஜகுமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது லோடு வேனில் 30 கிலோ எடை கொண்ட 84 மூட்டைகள் பீடி இலைகள் இருந்ததும், அதனை இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வந்ததும் தெரிய வந்தது.
போலீசார் வாகனத்தை சோதனையிட முயன்றதும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். இதை யடுத்து பீடி இலைகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த 'கியூ' பிரிவு போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, வெள்ள மடத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 63) என்பவரை மட்டும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலையின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இதேபோல் நேற்று அதிகாலை தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதற்கு முன்பு வேம்பார் கடற்கரையில் ரூ 50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.இதன்படி ஒரே வாரத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள பீடி இலை கடத்தல்களை `கியூ' பிரிவு போலீசார் தடுத்து கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- பயங்கரவாத தடுப்பு படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
- துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல கும்பலின் தலைவன் பெரும்பாவூர் அனஸ். கொச்சி பியூட்டிபார்லர் துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவர் மீது மேலும் பல வழக்குகள் இருக்கின்றன. இவருடைய கூட்டாளிகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அனசின் கூட்டாளியான எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள மஞ்சலி கொச்சுகுன்றும்புரம் பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் 2 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 4 துப்பாக்கிகள், 2 கத்திகள், துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 25 குண்டுகள் இருந்தன.
அவற்றை சோதனையில் ஈடுபட்ட பயங்கரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ரியாசின் வீட்டில் இருந்து ரூ8.83 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து ரியாசை போலீசார் கைது செய்தனர். ரியாசின் வீட்டில் கடந்த 8 ஆண்களுக்கு முன்பு இதேபோல் பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போதும் அவர் துப்பாக்கிகளுடன் சிக்கியிருக்கிறார். அவர் தனது வீட்டில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கிவைத்திருந்தது தொடர்பாக அவரிடம் பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று அனசின் மற்றொரு கூட்டாளியான அல்தாப் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து ரிவால்வர் கேஸ், கைவிலங்கு மற்றும் சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அனசின் நெருங்கிய கூட்டாளியான பெரும்பாவூரை சேர்ந்த ஷாஜி பாப்பன் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் அனசுடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் கோவை மாவட்டம் ஆனைமலையில் ஒருவரின் வீடு, மேட்டுப்பாளையத்தில் ஒருவரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் பயங்கரவாத தடுப்பு படையினர் அந்த மாவட்ட போலீசாரின் உதவியுடன் சோதனை நடத்தி உள்ளனர்.
பயங்கரவாத தடுப்பு படையினரின் அதிரடி சோதனையில துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வெண்டிலேட்டர் வழியாக செல்போன் காமிரா வீடியோ பதிவு.
- 2 செல்போன், லேப்டாப் பறிமுதல்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பகுதியில் ஆயுர்வேத மற்றும் சித்தா சிகிச்சை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண், பெண்களுக்கு மசாஜ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் ஒருவர் அங்கு மசாஜ் செய்வதற்காக வந்தார். அவருக்கு அங்கு பணியமர்த்தப்பட்ட பெண் ஒருவர் மசாஜ் சிகிச்சை அளித்தார்.
அந்த அறையில் உள்ள வெண்டிலேட்டர் வழியாக செல்போன் காமிரா மூலமாக வீடியோ பதிவு செய்யப்பட்டதை பார்த்த பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இது தொடர்பாக அவர் உறவினர்களுக்கும், வடசேரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.
அவர்கள் அந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் பணிபுரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது பெண்ணின் வீடியோ காட்சிகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் முன்னிலையிலேயே பெண்ணின் உறவி னர்கள் சரமாரியாக தாக்கினர். பின்பு அவரை போலீசார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அவர் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்திருக்கிறார். இதையடுத்து அவரது 2 செல்போன்கள் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஆய்வு செய்தனர்.
அவரது லேப்டாப்பில் மேலும் சில பெண்களின் கிளு கிளு வீடியோ காட்சிகள் இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு சிகிச்சை வந்தவர்களா? வேறு ஏதாவது பெண்களின் வீடியோ காட்சிகளா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- ரூ 20 லட்சம் பணம் மற்றும் 275 கிராம் தங்க நகைகள் கடத்தல்.
- பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
திருப்பதி:
தெலுங்கானாவில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெடிகட்டா போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை கண்ட போலீசார் அவரது வயிறு வீங்கியபடி இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தனர்.
வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்ட வாலிபர் திருத்திருவென விழித்தார். வாலிபரை அறைக்கு அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்தனர்.
வாலிபரின் ஆடைகளில் ஆங்காங்கே பித்யோகமாக பைகள் அமைத்து அதில் கட்டுக்கட்டாக பணம், நகைகளை வாலிபர் பதுக்கி வைத்திருந்தார்.
இதனை கண்டு போலீசார் திகைத்து போயினர். ரூ 20 லட்சம் பணம் மற்றும் 275 கிராம் தங்க நகைகள் இருந்தது. பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வாலிபரை கைது செய்த போலீசார் நகை பணத்தை எங்கிருந்து யாருக்காக கடத்தி வந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.