என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டல்களில் சோதனை"

    • குட்கா மற்றும் பான்மசாலா விற்பனை செய்யும் கடைகளை காவல்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து உடனடி அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
    • தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு த்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தா லோசிக்கப்பட்டது.

    ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்களை அதிகளவு சேகரித்து பயோடீசலாக மாற்ற அறிவுறுத்தப்பட்டது.

    தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகள் உபயோகம் மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

    குட்கா மற்றும் பான்மசாலா விற்பனை செய்யும் கடைகளை காவல்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து உடனடி அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தினார்கள். Eat Right Challenge (ERC) Activity குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    மேலும் அசைவ உணவு தயாரிக்கும் அனைத்து உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    பள்ளி மற்றும் கல்லூரிகளில் அயோடின் விழிப்புணர்வு உடன், உணவு பொருட்கள், திண்பண்டங்கள் லேபிள்களில் (தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி) குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் சாந்தி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் கடைகளில் அயோடின் கலந்த உப்புகளை விற்பனை செய்வது குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா, வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நகர வர்த்தகர் சங்கம், நுகர்வோர் சங்கம், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாவட்டம் சோழவந்தானில் திடீர் சோதனை நடந்தது.
    • ஓட்டல்களில் தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தரமற்ற உணவு பொருட்கள், இறைச்சி விற்பதாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்கள் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் அலுவலர்கள் மார்க்கெட் வீதி, கடை வீதி, காய்கறி சந்தை பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். கடைகளில் பதுக்கி வைத்திருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பாலிதீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேேபால் இைறச்சி கடைகளில் நடந்த சோதனையில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த கெட்டுப்போன கோழிக்கறி, ஆட்டுக்கறியை கைப்பற்றி அழித்தனர். தடை செய்யப்பட்ட தரமற்ற உணவு மற்றும் பாலிதீன் பைகளை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வின்போது மேஸ்திரி வினோத்குமார், சுந்தரராஜன், பணியாளர்கள் பூவலிங்கம், பாண்டி, முருகன் உடன் இருந்தனர்.

    ×