என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்திரையிடாத 12 மின்னனு எடை தராசுகள் பறிமுதல்
    X

    முத்திரையிடாத 12 மின்னனு எடை தராசுகள் பறிமுதல்

    • முத்திரையிடாத 12 மின்னனு எடை தராசுகள் புறிமுதல் செய்யப்பட்டது
    • தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறையினர் மறுமுத்திரையிடாத 12 மின்னனு எடை தராசுகள் புறிமுதல் செய்தனர்.

    பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) மூர்த்தி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் மற்றும் பயிற்சி தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆகியோர் கொண்ட குழுவினர் பெரம்பலூர், வாலிகண்டாபுரம், லப்பைகுடிகாடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் மீன் மார்கெட், இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    24 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில், 12 மின்னனு தராசுகள் மறுமுத்திரையிடப்படாதது தெரியவந்ததையடுத்து அந்த 12 மின்னனு தராசுகள் பொது பறிமுதல் செய்யப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் தங்களது எடையளவுகளை குறித்த காலத்தில் முத்திரையிட்டு பயன்படுத்தவேண்டும், முத்திரையிடாத மின்னனு தராசுகளை பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×