என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
- கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
- வருவாய் கோட்டாட்சியருக்கு ரகசிய தகவல் வந்தது.
கரூர்
கரூர் மாவட்டம், தோகைமலை-மணப்பாறை வழியாக அனுமதி இல்லாமல் கிரானைட் கற்கள் ஏற்றி செல்வதாக வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தேவிக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் அவரது தலைமையில் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவ்வழியாக கிரானைட் கற்கள் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், லாரி டிரைவர் செழியன், லாரி உரிமையாளர் பிரசாத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






