என் மலர்
நீங்கள் தேடியது "Anxiety-Depression"
- மனம் அதன் போக்கில் போனால் உடல்நிலை மோசமாகிவிடும்...
- சாலையில் செல்லும் வாகனங்களை போலத்தான் நம் எண்ண ஓட்டமும்!
மன சோர்வு அல்லது கவலை என்பது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கக்கூடியவை. இந்த மன அழுத்தம் நாளடைவில் உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. மனசோர்வு மற்றும் கவலையிருந்து வெளியே வர என்ன செய்யவேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
கவலை தரும் விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது
நாம் சாலையில் சென்றுக் கொண்டிருக்குமாறு கற்பனை செய்துகொள்வோம். நமக்கு இணையாக, நம் பின்னால், நம் முன்னால் ஏராளமான வாகனங்கள் செல்லும். அவற்றை நாம் கவனிக்கமாட்டோம். சில வாகனங்கள் அதிக சத்தத்துடனும், வேகமாகவும், அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலி எழுப்பானை அடித்துக்கொண்டும் செல்லும். உடனே அந்த வாகனத்தின்மீது நம் கவனம்செல்லும். அந்த வாகனம் இடையூறாக இருந்ததால் நாம் அதில் கவனம் செலுத்துகிறோம். இந்த வாகனங்களை போலத்தான் நம் எண்ண ஓட்டமும்.
சில எண்ணங்கள் அமைதியாக, கவனிக்கப்படாமல் கடந்து செல்கின்றன. ஆனால் ஒருசிலவை சத்தமாகவும், இடையூறாகவும் இருக்கும். இவை பெரும்பாலும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இதனால் நாம் கவலையை உணர்கிறோம். இந்த கவலையை எண்ணி எண்ணி மன அழுத்தத்திற்குள் செல்கிறோம். நமக்கு கவலையளிக்கும் விஷயங்களோ, செயல்களோ, எண்ணங்களோ மனதில் எழும்போது, அல்லது அந்த விஷயங்கள் மனதில் நுழையும்போது சாலையில் சென்ற சத்தமான கார்போல, அதற்கு கவனம் செலுத்தாமல் கடந்து செல்ல வேண்டும். ஒரு துன்பம் தரும் செயல் நடந்துவிட்டால் அதை பற்றிக்கொள்ளாமல், அவற்றில் சிக்கிக் கொள்ளாமல் அல்லது அதில் அதிக கவனம் செலுத்தாமல், அதை கடந்து செல்லப் பழகுங்கள். இது கவலை அல்லது சோகத்தில் மூழ்காமல் இருக்க உதவும்.

சம்பவங்களை கடந்து செல்லப் பழகுங்கள்
நாட்குறிப்பு எழுதுங்கள்...
தாங்கமுடியாத அல்லது வெளியே சொல்லமுடியாத அளவு துயரம் என்னை ஆட்கொண்டிருக்கிறது. யாரிடமாவது பேசினால் உடைந்து அழுதுவிடுவேன் என்று நினைத்தால், கண்டிப்பாக உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பேசி உடைந்து அழுங்கள். அப்படி நெருக்கமானவர்களிடமும் பேசமுடியவில்லை, மனது மிகவும் பாரமாக இருக்கிறது என்றால் தனியாக வெளியே செல்லுங்கள். பிடித்த உணவை வாங்கி சாப்பிடுங்கள். பிடித்த சினிமாவை சென்று பாருங்கள். அப்படி இதுவும் சரிப்பட்டு வரவில்லை என்றால், டைரி எழுதுங்கள். நீங்கள் என்ன சொல்ல நினைத்தீர்களோ, அல்லது உங்கள் மனதில் எது ஆழமாக ஓடிக்கொண்டிருக்கிறதோ அதைப்பற்றி எழுதுங்கள். எழுதிவிட்டு, அதை படித்துவிட்டு, கிழித்தெரிந்து விடுங்கள். இது கண்டிப்பாக ஒரு ஆறுதலை தரும்.
தியானம்
வாழ்க்கை எல்லா நேரமும் ஒரேமாதிரி செல்லாது. ஒரு கட்டத்தில் அனைவரும் ஒரு மோசமான பகுதியை கடந்துசெல்வர். கடந்துதான் ஆகவேண்டும். ஆனால் அந்தக் கட்டம் நிறைய அனுபவங்களையும், பாடங்களையும் உங்களுக்கு கற்றுக்கொடுக்கும். அவை அனைத்தும் வாழ்க்கைக்கு தேவையானவையே. இப்படி ஒரு கட்டத்தில் மனிதர்கள் இருக்கும்போது யாரிடமும் பேசத்தோன்றாது. எந்த எண்ணமும் இருக்காது. மனதில் எந்த சிந்தனையும் ஓடாவிட்டாலும், ஒரு பிடிமானம் இல்லாத, விருப்பமில்லாத, வாழ்க்கையின் போக்கில் சென்றுக்கொண்டிருப்போம். இந்தநிலையில் நாம் உணரவேண்டியது மனம் ஒருநிலையில் இல்லை என்பதுதான். மனம் அதன் போக்கில் போனால் உடல்நிலை மோசமாகிவிடும். இதிலிருந்து வெளியேவர மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். எண்ண ஓட்டங்களை நிறுத்தவேண்டும். அதாவது சோகம் தரும் அல்லது வெற்றிடமாக தோன்ற வைக்கும் எண்ணத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு தியானம் உதவும். தியானத்தில் நீங்கள் விரும்பும் அளவுக்கு நேரத்தைச் செலவிடுங்கள். இது கவலையிலிருந்து வெளிப்படவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவும்.
- இருவருக்கும் இடையேயான பந்தத்தை பலப்படுத்தவும் செய்யும்.
- நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவசியமான அன்பு, பாசம், பச்சாதாபம், புரிதல் போன்ற உணர்ச்சிகளை கட்டிப்பிடித்தல் மூலம் வெளிப்படுத்த முடியும். இருவருக்கும் இடையேயான பந்தத்தை பலப்படுத்தவும் செய்யும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஏன் கட்டிப்பிடிப்பது முக்கியம் என்பது பற்றி பார்ப்போம்.
உடல் நலம்
வலி நிவாரணம்:
உடல் ரீதியான தொடுதல், மசாஜ் அல்லது எளிய அரவணைப்பு போன்றவை இயற்கை வலி நிவாரணிகளான எண்டோர்பின்களின்வெளியீட்டை தூண்டும். வலியின் உணர்வை குறைக்கவும், அசவுகரியத்தை போக்கவும் உதவும்.
நோய் எதிர்ப்பு:
கட்டிப்பிடிப்பது போன்ற நேர்மறையான உடல் தொடர்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கட்டிப்பிடிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைவதும், ஆக்சிடாசின் வெளிப்படுவதும் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதய ஆரோக்கியம்:
உடல் தொடுதல், குறிப்பாக கட்டிப்பிடித்தல் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு குறைவதற்கு வழிவகுக்கும். கட்டிப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்வது காலப்போக்கில் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கும்.
மன நலம்
மனநிலை மேம்பாடு:
கட்டிப்பிடிப்பது உட்பட உடல் ரீதியான தொடுதல் எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டும். அதன் மூலம் மனநிலையை மேம்படுத்தி மகிழ்ச்சிக்கு வித்திடும். உணர்வுகளை சீராக கடத்துவதற்கு வழிவகை செய்யும். இயற்கையாகவே மன நிலையை மேம்படுத்துவதில் அரவணைப்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
கவலை-மனச்சோர்வு:
கட்டிப்பிடித்தல் போன்ற உடல் ரீதியான தொடுதல் ஆறுதலையும், உணர்ச்சிப்பூர்வமான ஆதரவையும் அளிக்கும். கவலை மற்றும் மனச்சோர்வுக்கான அறிகுறிகளை குறைப்பதற்கும் வழிவகுக்கும். பாதுகாப்பு உணர்வையும் தரும்.
மன அழுத்தம்:
தொடுதல் ஆக்சிடாசின் வெளியீட்டை தூண்டி மன அழுத்ததிற்கு காரணமான கார்டிசோலின் அளவை குறைக்கும். அதனால் மன அழுத்தம் குறையும். நாள்பட்ட மன அழுத்தத்தில் இருந்தால் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். கட்டிப்பிடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை குறைப்பது நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்யும். மன அழுத்த மேலாண்மையை நிர்வகிக்கும் கருவியாக செயல்படும். அன்றாட வாழ்வின் சவால்களை சமாளிப்பதற்கும் வழிவகுக்கும்.
உணர்ச்சி:
கட்டிப்பிடித்தல் என்பது வாய்மொழி அல்லாத சக்தி வாய்ந்த தொடர்பு வழிமுறையாகும். உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவசியமான அன்பு, பாசம், பச்சாதாபம், புரிதல் போன்ற உணர்ச்சிகளை கட்டிப்பிடித்தல் மூலம் வெளிப்படுத்த முடியும். இருவருக்கும் இடையேயான பந்தத்தை பலப்படுத்தவும் செய்யும்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை தவிர செல்லப்பிராணிகளை கட்டிப்பிடிக்கவும் மறவாதீர்கள். தன்னைத்தானே கட்டிப்பிடிப்பதும் கூட சிறப்பானதுதான். மூச்சை ஆழமாக உள் இழுத்தவாறு இரு கைகளையும் தோள்பட்டைகளில் அழுத்தி தழுவி அரவணையுங்கள். சுய இரக்கத்துடனும், சுய அன்புடனும் கைகளை தழுவுவது இனிமையான உணர்வுகளை வெளிப்படுத்தும்.
அன்பு, பாசம், இன்பம், துக்கம் என அத்தனை வகை உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் சக்தி வாய்ந்த பிணைப்பாக அரவணைப்பு அமைந்திருக்கிறது. கட்டிப்பிடிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை காப்பதில் முக்கிய பங்கு வகிப்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன. கட்டிப்பிடிப்பது ஆக்சிடாசின் ஹார்மோன் வெளியீட்டை தூண்டச் செய்யும். இது காதல் ஹார்மோன், பிணைப்பு ஹார்மோன் என்று குறிப்பிடப்படுகிறது.
கட்டிப்பிடிக்கும் நபரிடத்தில் நம்பிக்கை, பச்சாதாபம், இணக்கம் போன்ற உணர்வுகளை ஊக்குவிக்கும். மன அழுத்தத்தைக் குறைப்பதில்இருந்து உணர்ச்சி ரீதியான தொடர்பை மேம்படுத்துவது வரை கட்டிப்பிடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெற முடியும்.






