search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoughts"

    • சுயமாகவே கூட கலர் தெரபி செய்யலாம்.
    • நிறங்களுக்கும், மன நலனுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது.

    நிறங்களுக்கும், மன நலனுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மன நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மை அதற்கு உண்டு. நிறங்களை மையமாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் 'கலர் தெரபி' சிகிச்சையை பலரும் விரும்புகிறார்கள்.

    சுயமாகவே கூட கலர் தெரபி செய்யலாம். ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? சிவப்பு நிறத்தில் உடை, சிவப்பு நிற ஷு அணிந்து செல்லலாம். சிவப்பு நிற துண்டு, சிவப்பு வண்ண தண்ணீர் பாட்டில், சிவப்பு நிற பேக் எடுத்து செல்லலாம். அங்கு உடற்பயிற்சி செய்யும்போது உடல் இயக்க செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மை சிவப்பு நிறத்திற்கு இருக்கிறது.

    தன்னம்பிக்கையை இழந்து சோர்ந்து போய் இருப்பவர்களை சிவப்பு மற்றும் கருப்பு நிறம் ஆசுவாசப்படுத்தும். அதில் இருந்து மீளவைத்து உற்சாகமான மனநிலைக்கு இட்டு செல்லும்.

    நீண்ட நாள் கனவான விரும்பிய வேலைக்கு நேர்காணல் செல்கிறீர்களா? சிவப்பு மற்றும் கருப்பு நிறம் கலந்த ஆடையை உடுத்தி செல்லலாம். இந்த நிறங்கள் நம்பிக்கையுடன் தொடர்புடையவை. தன்னம்பிக்கைதரும். மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி புத்துணர்வு அளிக்கச் செய்யும்.

    ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்கள் மகிழ்ச்சியான மனநிலைக்கு இட்டுச்செல்லக்கூடியவை. பெண்கள் தங்கள் துணி அலமாரியை ஆரஞ்சு, மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்கலாம். அந்த நிறங்கள் கொண்ட துணிகளை அதில் இடம் பெற செய்யலாம். அந்த நிறங்கள் சுறுசுறுப்புடனும், மகிழ்ச்சியுடனும் தொடர்புடையவை.

    ஏதாவதொரு காரியத்தில் கவனம் செலுத்தும்போது நீல நிறத்தை தேர்வு செய்யலாம். அது அமைதியான மனநிலைக்கு வித்திடும். வேறு பக்கம் கவனம் திரும்பாமல் பார்த்துக்கொள்ளும். சிந்தனை திறனையும் மேம்படுத்தும்.

    சுப நிகழ்ச்சிகளுக்காக வீட்டை அலங்கரிக்கும்போது ஆரஞ்சு நிறத்தை தேர்வு செய்யலாம். அதிலும் பார்ட்டி போன்ற விருந்து உபசரிப்பு நிகழ்வுகளுக்கு ஆரஞ்சு நிறம் சிறந்த தேர்வாக இருக்கும். அது விழாவுக்கான உற்சாகத்தை அதிகப்படுத்தும். அனைவருடைய கவனத்தையும் சட்டென்று ஈர்க்கும் விதத்திலும் அமைந்திருக்கும்.

    • ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?
    • சம்பந்தப்பட்ட முடிவுகளை தானே எடுக்க வேண்டும்.

    இரண்டு மன்னர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான், நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் உன் நாடு உனக்கே என்றான்.

    கேள்வி:- ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்? என்று கேட்டான். (வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியை கேட்டுவிட்டு விடை சொன்னால்தான் நமக்கு திருமணம் என்று சொல்லியிருந்தாள்.)

    தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான். விடை கிடைக்கவில்லை. கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரகிழவியிடம் சென்று கேட்டான். அவள் சொன்னாள், விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும். உனக்கு நாடு கிடைக்கும். ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?. அதற்கு அவன் என்ன கேட்டாலும் தருகிறேன் என்று சொன்னான்.

    சூனியக்கார கிழவி சம்பந்தப்பட்ட முடிவுகளை தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம் என்றாள். இந்த பதிலை அவன் போரில் வென்ற மன்னனிடம் சென்று கூறினான், அந்த பதிலை அவன் தன் காதலியிடம் சொன்னான். எனவே அவர்களது திருமணம் நடந்தது. இவனுக்கு நாடும் கிடைத்தது. அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான். வேண்டியதை கேள் என்றான். அவள் நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற அவனும் ஒப்பு கொண்டான்.

    உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறி காட்சியளித்தாள். அவள் சொன்னாள், நாம் வீட்டில் தனியாக இருக்கும்போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன். ஆனால் நான் வெளியே வரும்போது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன். இதில் எது உன் விருப்பம் என்று கேட்டாள்.

    அவன் சற்றும் யோசிக்காமல், இது உன் சம்பந்தப்பட்ட விஷயம். முடிவு நீதான் எடுக்க வேண்டும் என்று சொன்னான். அவள் சொன்னாள், முடிவை என்னிடம் விட்டுவிட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்க தீர்மானித்துவிட்டேன் என்றாள்.

    ஆம்! பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும்போது சூனியக்கார கிழவியாகி விடுகிறாள்.

    • 12 முனைவர் பட்டங்கள் உள்ளிட்ட 339 மாணவ- மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.
    • உட்கட்டமைப்பு உள்ளிட்ட–வைகளில் தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூரில் உள்ள தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வளபல்கலை க்கழகத்தி ன் 7வது பட்டம ளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.

    215 இளங்கலை மீன்வள அறிவியல் மாணவர்கள், 55 இளநிலை தொழில்நுட்ப கல்வி மாணவர்கள், 25 முதுகலை மீன்வள அறிவியல் மாணவர்கள், 12 முனைவர் பட்டங்கள் உள்ளிட்ட 339 மாணவ- மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.

    பின்னர் ஆளுநர் வாசிக்க பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொ ண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகையில்;

    உலக பொருளாதாரம் வேகமாக முன்னேறி கொண்டு இருக்கும் சூழலில், அதே வேகத்தில் நாமும் முன்னேற வேண்டும். சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளோம்.

    அடுத்த வர 25 ஆண்டுகளில் இதைவிட வேகமாக உழைக்கவேண்டும்.

    நாட்டின் முன்னேற்றத்திற்கு இளை–ஞர்கள் பொறுப்பேற்க வேண்டும். மாறுபட்ட புதிய சிந்தனைகளை உருவாக்கி நாட்டை முன்னேற்ற இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

    மகளிர் மேம்பாடு, தொழிற்துறை, உட்கட்டமைப்பு உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார்.

    விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், பல்கலைகழக துணை வேந்தர்கள், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, நிவேதாமுருகன், மீன்வளத்துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    பட்டமளிப்பு விழாவிற்கு கவர்னர் வருகை தந்ததை அடுத்து நாகை மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ×