search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleanup Facial"

    • பருக்கள் வந்தால் அதனை தொடாதீர்கள்.
    • கொலாஜென் செல்களை உயிர்பிக்க ஆவி பிடிக்க வேண்டும்.

    சருமம் பொலிவாகவும், அழகாகவும் இருக்க அனைவரும் விரும்புவோம். ஆனால் முக அழகை கெடுக்கும் ஓர் விஷயம் பருக்கள். பருக்கள் எரிச்சலூட்டுவதாக இருக்கும்.

    பருக்கள் வந்தால் அதனை தொடாதீர்கள், கிள்ளாதீர்கள், கிழிக்காதீர்கள். அப்படி செய்தால் தோல்களில் உள்ள கொலாஜென் என்னும் செல்கள் இறந்து அந்த இடத்தில் பெரிய குழி அல்லது அது தழும்பாக மாறிவிடும். கொலாஜென் செல்களை உயிர்பிக்க ஆவி பிடிக்க வேண்டும். பின்னர் முகத்தில் உள்ள சதைகளை குறைந்தது 5 நிமிடங்களாவது மசாஜ் செய்து இலகுவாக செய்ய வேண்டும்.

     தக்காளி, முல்தானி மட்டி, ரோஸ் வாட்டர் ஆகிய மூன்றையும் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு அரைத்து அந்த கலவையை தினமும் 30 நிமிடம் தடவி வந்தால் நிச்சயமாக 30 நாட்களுக்குள் முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் பருக்கள் மறைந்துவிடும்.

     தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் முகத்தில் உள்ள எண்ணெய் தன்மையை கண்ட்ரோல் செய்யும். அதுமட்டுமல்லாது ஆன்டி ஏஜிங் கொலாஜென் செல்கள் உயிர்பிக்க வழிவகுக்கும்.

    தினமும் சீரகம் கலந்த தண்ணீர் 4 லிட்டர் கண்டிப்பாக அருந்த வேண்டும். ரத்த சுத்திகரிப்புக்காக தினமும் ஏ.பி.சி. ஜூஸ் பருக வேண்டும். ஐஸ் கியூப் கொண்டு தினமும் 2 நிமிடமாவது மசாஜ் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்யும் போது முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து ஒரு பளபளப்புத்தன்மை உருவாகும்.

    ×