search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dehydration"

    • கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம்.
    • புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம். இதற்கு சில உணவுகளையும், நீர் பானங்களையும் உள் பருக வேண்டும். அதற்கு வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக பருகுவது நல்லது. இதனால் சருமம் மங்காமல், செழுமை அடையும்.

    கோடைக் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளான, வாழைத் தண்டு, கீரை முதலானவற்றை எடுத்துக்கொள்ளுதல் அவசியம். அதோடு அதிக அளவிலான தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைபாடு இன்றி உடலை பாதுகாக்க வேண்டும்.

    கோடைக் காலத்தில் சருமத்தில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் கோடைகாலத்தில் அதிக தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெயிலில் செல்வதால் தோல்களில் அலர்ஜி, உடலில் தடிப்புகள், முகத்தில் பருக்கள், உடல் முழுது வியர்க்குரு போன்றவை ஏற்படும். இவற்றை தடுக்க வேண்டியது அவசியமான ஒன்று.

     அழகு நிலையங்கள் செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே அரிசி மாவு, கடலை மாவு, தயிர் முதலியவற்றைப் பயன்படுத்தி இயற்கை முறையில் உங்கள் முகம் மற்றும் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

     வாரம் இமுறை வேப்பிலைகள் உடன் சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து நீராடினால் தலைச்சூடு குறைந்து தலைமுடி குளிர்ச்சியாகவும் நறுமணத்துடன் காணப்படும்.

     அவ்வப்போது நெல்லிக்காயை, ஒரு துண்டு இஞ்சி, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து சாறாக குடித்து வரவும் இதன் மூலம் ரத்தசோகை குறைந்து உடல் புத்துணர்ச்சி பெறும்.

    சோற்றுக் கற்றாழையை அவ்வப்போது முகம், கை, கால், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி சற்று நேரம் கழித்து நீராடவும் உடல் குளிர்ச்சியாகவும் பொலிவும் காணப்படும்.

    கோடையில் விலை உயர்ந்த குளிர்பானங்களை வாங்குவதை தவிர்த்து தயிர் மோர் பயன்படுத்தலாம் அதில் வெந்தயம் சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து பயன்படுத்துவது நல்லது.

    இயற்கை பொருட்களான தேன் மற்றும் தயிர் இரண்டும் வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல் பாலாடையில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

     ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பட்டுப்போல பளப்பளப்பாக இருக்கும்.

    இதனை தொடர்ந்து செய்யும்போது வறண்ட சருமம் பளிச்சென்று ஆகிவிடும். மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், அழுக்குகளையும் மற்றும் இறந்த செல்களை நீக்கி பொலிவு பெறச் செய்கிறது. முகத்தில் சுருக்கங்களை நீக்குவதால் இளமையைத் தக்கவைக்கும்.

    கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பருக்கள், கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம். தேன் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. முகம் வறண்டு போகாமல் தடுக்க இவை உதவுகின்றன.

     மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாற்றை முகத்தில் தடவலாம். எலும்பிச்சைச் சாறு மற்றும் சர்க்கரையை இணைத்து முகத்தில் பயன்படுத்தினால் முகம் பொலிவு பெறும். தக்காளிப் பழத்தையும், சர்க்கரையையும் இணைத்து அதன் சாற்றை முகத்தில் தடவி வந்தால் முகம் பளப்பளவென மாற்றம் அடையும்.

    • அளவுக்கு மீறி உண்பது நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு காரணமாகும்.
    • சர்க்கரை நோய் பாதிப்பால் உடலில் சுண்ணாம்பு, இரும்பு, நார்ச்சத்துக்கள் குறைந்து விடும்.

    ஒரு வேளை உண்பவன் யோகி, இரு வேளை உண்பவன் போகி, மூன்று வேளையும் உண்டவன் ரோகி. எனவே அளவறிந்து உண், பசித்து புசி என்ற பழமொழிகள் எல்லாம் உடலை நோயில் இருந்து காக்க கூறப்பட்டவை. அளவுக்கு மீறி உண்பது, அரிசியுடன் இறைச்சி, நெய் உள்பட உடலுக்கு மந்தம் தரும் உணவுகளை தொடர்ந்து அளவுக்கு மீறி உண்பது நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு காரணமாகும் என்கின்றன, சித்த நூல்கள்.

    பொதுவாக, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்காத நிலையில் கண் பார்வை குறைவு, கால்களில் ஆறாத புண் என்று பல பாதிப்புகள் தொடர்ந்து விடும். சர்க்கரை நோய் பாதிப்பால் உடலில் சுண்ணாம்பு, இரும்பு, நார்ச்சத்துக்கள் குறைந்து விடும்.

    எனவே, நீரிழிவு நோயாளிகள் உணவில் வாழைப்பூ, பாகற்காய், வெந்தயம் ஆகியவற்றை அடிக்கடி உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது சித்த மருத்துவம். நீரிழிவு நோயை எளிதில் கட்டுப்படுத்த எளிய மருந்துகளையும் சொல்கிறது சித்த மருத்துவம்.

    நாவல் மரத்தின் பட்டையை ஒரு நாள் முழுவதும் இரவில் நீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் இந்த நீரை அருந்தினால் சர்க்கரை அளவு கட்டுப்படும். நாவல் கொட்டை, மருதம் பட்டை, சிறுகுறிஞ்சான், வேப்பம் பட்டை, கடலஞ்சில் ஆகிய ஐந்தையும் சம அளவு பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, இரவு ஆகிய நேரங்களில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

    இதே போல், ஆவாரம்பூ, சுக்குடன் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்த நீரை கசாயமாக சாப்பிடலாம். இது எளிய முறை. பொதுவாக, சர்க்கரை நோயாளிகள் உணவு மற்றும் மருந்துகளை டாக்டரின் ஆலோசனைப்படி உட்கொள்வதே பாதுகாப்பானது.

    • சிவப்பு ஒயினில் ரெஸ்வெராட்ரோல் போன்ற பாலிபினால்கள் உள்ளன.
    • ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

    ரெட் ஒயின் மற்றும் தோல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவு மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாகும், சில ஆய்வுகள் மிதமாக உட்கொள்ளும் போது சாத்தியமான நன்மைகளை வழங்குகிறது. சிவப்பு ஒயினில் ரெஸ்வெராட்ரோல் போன்ற பாலிபினால்கள் உள்ளன, அவை ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன.

    மருத்துவர்கள் கூறுகையில், "சிவப்பு ஒயினில் பாலிபினால்கள் உள்ளன, இது சூரிய ஒளியில் இருந்து உங்கள் பாதுகாப்பை அதிகரிக்கும். இருப்பினும், சிவப்பு ஒயின் தோலை சேதப்படுத்துகிறது, ஏனெனில் அது ரோசாசியாவை (தோல் நிலை), நீரிழப்பு மற்றும் ஹிஸ்டமினிக் எதிர்வினைகளை ஏற்படுத்தும், அதே நேரத்தில் உணர்திறன் சாத்தியத்தை அதிகரிக்கும்.

    ஒயினில் உள்ள பாலிபினால்கள் திராட்சை மற்றும் பிற பழங்களில் இருந்து நேரடியாக எடுக்கப்படலாம் என்றும் அது ஒயின் மூலம் வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

    "ஆல்கஹால் ஆக்சிஜனேற்ற சேதத்தை தூண்டுகிறது மற்றும் உங்களுக்கும் உங்கள் சருமத்திற்கும் வயதாகிவிடுவதால், உங்கள் சருமத்தை பாதுகாக்க விரும்பினால் சிவப்பு ஒயினை தவிர்க்க வேண்டும். சிவப்பு ஒயினில் ஆக்சிஜனேற்றங்கள் இருந்தாலும், பொதுவாக, ஆல்கஹால் தோல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகிய இரண்டிலும் தீங்கு விளைவிக்கும் என்பதை அடையாளம் காண வேண்டியது அவசியம்.

    நீரேற்றம், சரியான தோல் பராமரிப்பு மற்றும் உகந்த தோல் நல்வாழ்வுக்கான அடித்தளமாக சத்தான உணவு ஆகியவற்றை உள்ளடக்கிய சமநிலையான வாழ்க்கை முறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறந்த சரும நன்மைகளுக்கு மதுவை நம்புவதற்குப் பதிலாக, சருமத்தைப் பராமரிப்பதில் எளிமையான மற்றும் பயனுள்ள அணுகுமுறைகளைத் தழுவுவது நல்லது.

    அதிகப்படியான மது அருந்துதல் தோல் நீரிழப்புக்கு வழிவகுக்கும், முன்கூட்டிய வயதாவதை ஊக்குவிக்கும். ஒரு சமநிலையான அணுகுமுறை, பல்வேறு ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவை உள்ளடக்கியது, உகந்த தோல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.

    மிதமான சிவப்பு ஒயின் நுகர்வு தோல் தொடர்பான சில நன்மைகளை அளிக்கும் போது, தனிநபர்கள் சீரான உணவு, நீரேற்றம், சூரிய பாதுகாப்பு மற்றும் அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதைத் தவிர்த்தல் உள்ளிட்ட நிறுவப்பட்ட தோல் பராமரிப்பு நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    ஒயின் குடிப்பது அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது என்று பெரும்பாலான தோல் மருத்துவர்கள் கருதினாலும், தனிப்பட்ட உடல்நலம் மற்றும் தோல் நிலைகளின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனையைப் பெற தோல் மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெறுவது எப்போதும் சிறந்தது.

    • மருந்துகளால் மலச்சிக்கல் உண்டாகலாம்.
    • பச்சைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    மலச்சிக்கல் என்பது ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறுவது அல்லது மிகவும் உலர்ந்தும், வலியுடனும் வெளியேறுவதாகும். சர்க்கரை நோயாளிகளில் 60 சதவீதம் பேர் மலச்சிக்கலால் அவதிப்படுகின்றனர். இதற்கு முக்கியகாரணம் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும் போது ஏற்படும் குடற்பாதை நரம்புகளின் பாதிப்பாகும்.

    மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு, நீரிழிவு நோய்க்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகளாலோ (டாப்பாகிளப்லோ சின் போன்ற எஸ்.ஜி. எல்.டி2 இன்ஹிபிட்டர்ஸ்) அல்லது கூடுதலாக உள்ள இதய நோய் அல்லது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளாலோ மலச்சிக்கல் உண்டாகலாம். (புரூஸிமைடு, கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ், இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து மாத்திரைகள்). புரூப்பன், ஆஸ்பிரின், ஒபியாட்ஸ் போன்ற வலி நிவாரண மருந்துகள் உட்கொள்பவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படலாம்.

    மலச்சிக்கலுக்கு தீர்வாக சர்க்கரை நோயாளி கள் நார்ச்சத்து அதிகமாக உள்ள பச்சைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கலுக்கு நீர் வறட்சி காரணம் என்பதால் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மைதா போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    எக்காரணம் கொண்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மலச்சிக்கலுக்காக மலமிளக்கி மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.

    • குளிர்காலத்தில் எளிதாகவும், விரைவாகவும் வறட்சி அடையும்.
    • உதடு வறண்டு தோல் உரிதல் ஏற்படும்.

    உதடுகளில் உள்ள தோல், உடலின் மற்ற பாகங்களில் உள்ள தோலை விட மிகவும் மென்மையானது. மேலும், உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் கிடையாது. இதன் காரணமாக உதடுகள் எளிதாகவும், விரைவாகவும் வறட்சி அடையும். எனவே உதடுகளை கவனமாக பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.

    உதடுகள் வறண்டு போகும்போது நாக்கினால் அவற்றை அடிக்கடி ஈரப்படுத்துவது, உதடுகளில் தோல் உரிவதற்கு முக்கியமான காரணமாகும். இதுமட்டுமில்லாமல் வைட்டமின் 'டி' குறைபாடு, உடலில் நீர்ச்சத்து குறைவது, உதடுகளில் அதிகப்படியான சூரிய ஒளி மற்றும் குளிர்ந்த காற்று படுவது, ரசாயனம் கலந்த உதடு பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது, வாய் வழியாக மூச்சு விடுவது, காலநிலை மாற்றம், உடலின் வெப்பநிலை அதிகரிப்பது போன்ற காரணங்களாலும் உதடு வறண்டு தோல் உரிதல் ஏற்படும்.

    உதடுகளில் தோல் உரிவதைத் தடுக்க, அடிக்கடி அவற்றை நாக்கால் ஈரப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ரசாயனம் கலக்காத, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உதடு பராமரிப்பு பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உதடுகளில் படியும் இறந்த செல்களை அவ்வப் போது நீக்கினால் உதடுகள் மென்மையாகவும், இயற்கையான நிறத்தோடும் இருக்கும்.

    சிறிதளவு சர்க்கரையுடன் தேன் சேர்த்து நன்றாகக் கலந்து உதடுகளில் பூசவும். பின்பு விரல்களைக் கொண்டு வட்ட இயக்கத்தில் உதடுகளில் மென்மையாக மசாஜ் செய்யவும். பின்பு அதை சுத்தம் செய்துஉதடுகளில் தேங்காய் எண்ணெய் பூசவும். வாரத்தில் ஒருமுறை இவ்வாறு செய்வதால் உதடுகள் மென்மையாக இருக்கும்.

    உதடுகளுக்கு வாசனையில்லாத, ஒவ்வாமை ஏற்படுத்தாத லிப் பாம் உபயோகிப்பது சிறந்தது.

    கிளிசரின் மற்றும் ஆமணக்கு எண்ணெய் சேர்த்த லிப் பாம்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். வாசனை திரவியங்கள் மற்றும் சுவையூட்டும் மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்ட லிப் பாம்களை தவிர்ப்பது நல்லது. மென்தால், யூகலிப்டஸ், மெழுகு சேர்த்த லிப் பாம்கள் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

     ரசாயனங்கள் கலந்த லிப் பாம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெய், வெண்ணெய், பெட்ரோலியம் ஜெல் ஆகியவற்றை உதடுகளில் பூசி வரலாம்.

    உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் இருக்க, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இளநீர், மோர், வெள்ளரிக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ணவுகளை சாப்பிட வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். லிப் பாம்,

    உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்தும். நீண்ட நேரம் உதடுகளை நீரேற்றமாகவும் வைத்திருக்கும். வீட்டை விட்டு வெளியே செல்லும் நேரங்களில், இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை லிப் பாம் பூசுவது நல்லது.

    ×