search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "psychiatry"

    • மயிர்கால்களை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும்.
    • முடி உதிர்தல் பிரச்சனையை அலட்சியம் செய்யக்கூடாது.

    * கரிசாலை இலை, நெல்லி வற்றல், அதிமதுரம் சமமாக எடுத்து அரைத்துப் பூசி பின் குளித்து வரும் பழக்கத்தை மேற்கொண்டால் முடி கொட்டுதல் நிற்கும்.

    * நிலாவரை இலையை அரைத்து முடி உதிரும் இடத்தில் தேய்க்கலாம்.

    * துவரம் பருப்பை முதல் நாள் ஊற வைத்து மறுநாள் அதே நீரில் அரைத்து தலைக்கு பற்றுப்போட்டு சிறிது நேரம் கழித்து குளித்தால் முடி கொட்டுதல் நிற்கும்.

    * சிறிய வெங்காயத்தை நன்கு அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் முடி உதிர்தல் நிற்கும்.

    * பேய்ப்புடல் சாறு எடுத்து தலையில் பூசி நன்கு ஊறிய பின் சீகைக்காய் போட்டுக் குளிக்க முடிஉதிர்தல் நிற்கும்.

    * செம்பருத்திப் பூவை நன்கு அரைத்து வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து, ஊற வைத்த பயித்தம் மாவு போட்டுக் குளிக்க முடி உதிர்தல் நிற்கும்.

    * தேங்காய்ப்பால், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து ஊற வைத்துக் குளிக்கவும்.

    * பொன்னாங்கண்ணிச் சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, தேங்காய் எண்ணெய் சமமாக எடுத்து நீர் வற்றக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துவர முடி உதிர்தல் நிற்கும்.

    * உலர்ந்த மருதாணி இலைப்பொடி 2 ஸ்பூன், எள்ளு 2 ஸ்பூன் அதிமதுரப் பொடி 2 ஸ்பூன், நெல்லி வற்றல் 2 ஸ்பூன் இவைகளைப் பால் விட்டு அரைத்து தண்ணீர் கலந்து பின் சூடாக்கி, இளஞ்சூட்டில் இறக்கித் தலையில் தேய்த்து வேர்க் கால்களில் படும்படி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்துக் குளிக்க முடி உதிர்தல் நிற்கும்

    * கோழி முட்டையின் வெண்கருவில் வெங்காயத்தை நசுக்கிப் போட்டு தலையில் தேய்த்து ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்தல் நிற்கும்.

    * மேலும் உடல் உஷ்ணம் மிகுந்தவர்கள் இரவில் நல்லெண்ணையை உள்ளங்காலில் தேய்த்து மசாஜ் செய்யவும்.

    சத்துக் குறைவுள்ளவர்கள் பழங்கள், கீரைகள், தாவர எண்ணைய்கள், நெய், கொட்டைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் முடி கொட்டுவது நிற்கும்.

    நாம் உண்ணும் உணவு நம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் அன்றாடம் உண்ணும் உணவு, நமது தோல் மற்றும் முடி பளபளப்பையும் பாதிக்கிறது.

    ஒருவருக்கு முடி உதிர்கிறது என்றால், அது சாதாரண விஷயமல்ல. நம்முடைய தலைமுடி அளவுக்கு அதிகமாக உதிர்கிறது என்றால், நம் உடலில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதற்கான முதல்கட்ட அறிகுறியே முடி உதிர்தல். அதை நாம் எப்போதும் அலட்சியம் செய்யக்கூடாது.

    ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமானதோ அதேபோல தான் தலைமுடிக்கு மயிர்கால்கள். உங்களுக்கு நீண்ட வலிமையான மற்றும் ஆரோக்கியமான தலைமுடி வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் மயிர்கால்களை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும்.

    உங்களுடைய மயிர்கால்கள் வலுவிழந்து காணப்பட்டால் அது உங்களின் தலைமுடி வளர்ச்சியை பாதிக்கலாம். உங்கள் மயிர்க்கால்களை வலுப்படுத்துவதற்கு உங்களுடைய முடி பராமரிப்பு புராடக்டுகளில் அதிக கெமிக்கல்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

    தலைமுடி ஆரோக்கியமாக வளர வேண்டுமானால், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ள உணவுகள் எடுக்க வேண்டும். இந்த ஊட்டச்சத்துக்களுடன் சேர்த்து, வைட்டமின் சி, பி, இ போன்றவை இருக்கும்படியும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

    பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற கொட்டை வகைகளில் பல்வேறு விதமான அடிப்படையான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. இவற்றை நாள்தோறும் கையளவு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மட்டுமல்ல, தலை முடிக்கு பலம் சேர்க்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    நீங்கள் தினமும் சாப்பிடும் ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிக்களை ஒதுக்கிவைத்துவிட்டு அதற்கு மாற்றாக மேற்கூறிய ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும்.

    • தசை சோர்வு, அதிக தூக்கம், நினைவாற்றல் குறைவு காணப்படும்.
    • மரபணு தொடர்புகள் இப்பிரச்சினையை வளர்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

    வாதநீர் பிரச்சினை இல்லாமல், எப்போதும் உடல் வலி, சோர்வு இருந்தால் அது தசை வாதம் எனப்படும் பைப்ரோமயால்ஜியா நோயாக இருக்கும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோர்வு, உடல் வலி, தசை சோர்வு, அதிக தூக்கம், நினைவாற்றல் குறைவு காணப்படும்.

    காரணங்கள்:

    1. மூளை மற்றும் முள்ளந்தண்டுவடத்தில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், வலி மற்றும் வலியற்ற சமிக்ஞைகளை மிகைப்படுத்தலாம்.

    2. மரபணு தொடர்புகள் இப்பிரச்சினையை வளர்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

    3. நோய்த்தொற்றுகள் சில நேரங்களில் பிரச்சினையை தூண்டும் அல்லது மோசமாக்கும்.

    4. சில நேரங்களில் காயங்கள், விபத்து போன்ற உடல்ரீதியான நிகழ்வுகளால் தூண்டப்படலாம். நீடித்த உளவியல் அழுத்தமும் இந்த நிலையைத் தூண்டலாம்.

    சித்த மருத்துவ தீர்வுகள்:

    சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    1) அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச்செந்தூரம் 200 மில்லிகிராம், சிவனார் அமிர்தம் 200 மில்லிகிராம், முத்துச்சிப்பி பற்பம் 200 மில்லிகிராம், குங்கிலிய பற்பம் 200 மில்லிகிராம் இவைகளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா லேகியம் 5 கிராம் வீதம் இரு வேளை சாப்பிட வேண்டும்.

    3) வலியுள்ள இடத்தில் சிவப்பு குங்கிலிய தைலம், கற்பூராதி தைலம் கலந்து மெதுவாக தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.

    4) வைட்டமின் டி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பால், முட்டை, பாதாம், பிஸ்தா, முருங்கை கீரை, பாலக் கீரை, வால்நட் இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    5) உடற்பயிற்சி தவறாமல் செய்ய வேண்டும், மனச்சோர்வு நீங்க இறை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    • சொரியாசிஸ் என்பது தன்னுடல் நோய் எதிர்ப்பு பாதிப்பு தோல் நோயாகும்.
    • ஒருவருடத்தில் இருந்து மற்றவருக்கு தொற்றுவது இல்லை.

    சொரியாசிஸ் என்பது தன்னுடல் நோய் எதிர்ப்பு பாதிப்பு தோல் நோயாகும். மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் இந்த நோய் வரலாம். இது ஒருவருடத்தில் இருந்து மற்றவருக்கு தொற்றுவது இல்லை. புகைபிடித்தல், அதிக மது அருந்துதல் இந்நோய் பாதிப்பை அதிகரிக்கிறது.

    சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி கீழ்க்கண்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்:

    1) பறங்கிப்பட்டைச் சூரணம் 1 கிராம், சிவனார் அமிர்தம் 200 மி.கி, பலகரை பற்பம் 200 மி.கி. ஆகியவற்றை இருவேளை, தேன் அல்லது வெந்நீரில் சாப்பிடலாம்.

    2) கந்தக ரசாயனம் 1 கிராம் அல்லது கந்தக மெழுகு 200 மி.கி, இரு வேளை சாப்பிட வேண்டும்.

    3) பறங்கிப்பட்டை ரசாயனம் 1 கிராம் வீதம் இரு வேளை சாப்பிட வேண்டும்.

    4) அறுகன்புல் தைலம், வெட்பாலை தைலம் இவைகளை நோய் பாதித்த தோலில் பூச வேண்டும்.

    5) வைட்டமின் டி குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வாதம், பித்தம், கபம் தான் நோய்களுக்கு முக்கிய காரணம் என்கிறது சித்தமருத்துவம். இது உடல் உறுப்புகளுக்கு மட்டுமல்ல , ஒவ்வொரு உடல் செல்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் தோல் என்பது நம் உடலில் பரந்து விரிந்த மிகப்பெரிய உறுப்பு. அதில் வாத, பித்த கப ஏற்றத்தாழ்வுகள் வராமல் தடுக்க உதவுவது தான் எண்ணெய் குளியல் என்கிறது சித்தமருத்துவம்.

    உணவுமுறைகள்:

    பால், முட்டை வெள்ளைக்கரு, முருங்கைக் கீரை, பசலைக்கீரை, பாதாம், அவகோடா, வால்நட், உளுந்தங்களி, வெந்தயக்களி இவைகளை சாப்பிட வேண்டும். இளம் சூரிய வெயிலில் சிறிது நேரம் உலாவுவது நல்லது. இந்நோய் உள்ளவர்களுக்கு தீவிர மன உணர்ச்சிகளான கவலை, சோகம், பயம், பதட்டம், கோபம், மன அழுத்தம் காணப்படும். எனவே இவற்றை போக்க இறை பிரார்த்தனை, தியானம் செய்யலாம்.

    • வெப்ப தாக்குதல் மிகவும் அதிகமானால் ஹீட் ஸ்ட்ரோக் வரலாம்.
    • வெயில் நேரத்தில் தீவிர உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது.

    வெயில் பாதிப்பினால் உடலில் வெப்பம் அதிகரித்து நீர்ச்சத்து குறைந்து வறட்சி ஏற்பட்டு சோர்வு, களைப்பு, மயக்கம் உண்டாகிறது.

    வெப்ப தாக்குதல் மிகவும் அதிகமானால் 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் 'வெப்ப பக்கவாதம் வரலாம். இந்த பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லை என்றால், மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் உடல் தசைகளை விரைவாக இது சேதப்படுத்தும். சில சூழ்நிலைகளில் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும்.

    வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை கிடைக்கும் வரை கீழ்க்கண்ட முதல் உதவி அளிக்க வேண்டும்.

    1) பாதிக்கப்பட்டவரை நிழ லான அல்லது குளிரூட்டப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

    2) ஈரமான துணி மூலம் உடலை துடைக்கலாம். குளிர்ந்த நீரை உடலில் தெளிப்பதன் மூலம் வெப்பத்தை தணிக்க வேண்டும்.

    3) வியர்வை மூலம் உடலில் உப்பு சத்து குறைவதால், குளிர்பானங்கள் மற்றும் இழந்த உப்பை ஈடுசெய்யும் பானங்களை குடிக்க கொடுக்க வேண்டும்.

    பொதுவாக வெயில் பாதிப்பில் இருந்து உடம்பை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்:

    1) வெயில் நேரத்தில் தீவிர உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது, அடிக்கடி முகம், கை.கால்கள் கழுவிக் கொள்ள வேண்டும்.

    2) நைலான். பாலிஸ்டர் போன்ற துணிகளால் செய்த உடைகளை தவிர்த்து பருத்தி உடைகளை அணிய வேண்டும்.

    3) மண் பானையில் வெட்டிவேர் போட்டு மறுநாள் அந்த தண்ணீரை குடிக்கும் பொழுது உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். நா வறட்சி நீங்கும்.

    4) அவ்வப்போது மோர், இளநீர், நுங்கு, பதநீர், நீராகாரம் அல்லது தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் காலத்தில் காரமான உணவுகள், அத்துடன் கோழி, நண்டு, இறால் போன்ற உஷ்ணத்தை அதிகப்படுத்தும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    5) எலுமிச்சை பழச்சாற்றில் உப்பு, சர்க்கரை சேர்த்து ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும். நன்னாரி சர்பத், வில்வ பழ சர்பத், பதநீர், இளநீர், கரும்புச் சாறு, தர்ப்பூசணி ஜூஸ், முலாம் பழ ஜூஸ், வெண்பூசணி ஜூஸ், சோற்றுக்கற்றாழை ஜூஸ் இவை கோடை வெயிலுக்கு ஏற்ற பானங்கள்.

    6) வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து எண்ணெய் குளியல் எடுப்பது நல்லது.

    சித்த மருத்துவம்:

    1) உடல் வெப்பத்தை தணிப்பதற்கு தண்ணீர் விட்டான் கிழங்கு நெய் - காலை, இரவு 5 மி.லி. வீதம் சாப்பிடலாம்.

    2) உடல் வெப்பம் நீங்க தலையில் தேய்த்து குளிப்பதற்கு பொன்னாங்கண்ணி தைலம், சந்தனாதி தைலம், கரிசாலை தைலம் இவைகளில் ஒன்றை பயன்படுத்தலாம்.

    • அளவுக்கு மீறி உண்பது நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு காரணமாகும்.
    • சர்க்கரை நோய் பாதிப்பால் உடலில் சுண்ணாம்பு, இரும்பு, நார்ச்சத்துக்கள் குறைந்து விடும்.

    ஒரு வேளை உண்பவன் யோகி, இரு வேளை உண்பவன் போகி, மூன்று வேளையும் உண்டவன் ரோகி. எனவே அளவறிந்து உண், பசித்து புசி என்ற பழமொழிகள் எல்லாம் உடலை நோயில் இருந்து காக்க கூறப்பட்டவை. அளவுக்கு மீறி உண்பது, அரிசியுடன் இறைச்சி, நெய் உள்பட உடலுக்கு மந்தம் தரும் உணவுகளை தொடர்ந்து அளவுக்கு மீறி உண்பது நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு காரணமாகும் என்கின்றன, சித்த நூல்கள்.

    பொதுவாக, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்காத நிலையில் கண் பார்வை குறைவு, கால்களில் ஆறாத புண் என்று பல பாதிப்புகள் தொடர்ந்து விடும். சர்க்கரை நோய் பாதிப்பால் உடலில் சுண்ணாம்பு, இரும்பு, நார்ச்சத்துக்கள் குறைந்து விடும்.

    எனவே, நீரிழிவு நோயாளிகள் உணவில் வாழைப்பூ, பாகற்காய், வெந்தயம் ஆகியவற்றை அடிக்கடி உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது சித்த மருத்துவம். நீரிழிவு நோயை எளிதில் கட்டுப்படுத்த எளிய மருந்துகளையும் சொல்கிறது சித்த மருத்துவம்.

    நாவல் மரத்தின் பட்டையை ஒரு நாள் முழுவதும் இரவில் நீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் இந்த நீரை அருந்தினால் சர்க்கரை அளவு கட்டுப்படும். நாவல் கொட்டை, மருதம் பட்டை, சிறுகுறிஞ்சான், வேப்பம் பட்டை, கடலஞ்சில் ஆகிய ஐந்தையும் சம அளவு பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, இரவு ஆகிய நேரங்களில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

    இதே போல், ஆவாரம்பூ, சுக்குடன் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்த நீரை கசாயமாக சாப்பிடலாம். இது எளிய முறை. பொதுவாக, சர்க்கரை நோயாளிகள் உணவு மற்றும் மருந்துகளை டாக்டரின் ஆலோசனைப்படி உட்கொள்வதே பாதுகாப்பானது.

    • கழுத்தெலும்பு தேய்மானம் என்பது சித்த மருத்துவத்தில் 'சகன வாதம்' எனப்படும்.
    • உடற்பருமன் இருந்தாலும் கழுத்துவலி வரும்.

    கழுத்தெலும்பு தேய்மானம் என்பது சித்த மருத்துவத்தில் 'சகன வாதம்' எனப்படும். செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்' என்பது இதன் மருத்துவப்பெயர். கழுத்து முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள 'டிஸ்க்' அல்லது சவ்வு தேய்ந்து போவது அல்லது விலகி விடுவது போன்ற காரணங்களால் கழுத்து வலி வருகிறது.

    தொழில் ரீதியாக ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, எடுத்துக்காட்டாக, கம்ப்யூட்டர் டெய்லரிங், டிரைவிங் போன்ற வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவது. இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது செல்போனில் பேசிக்கொண்டு செல்வது மற்றும் தொடர்ச்சியாக பயணம் செய்வதும் கழுத்துவலியை வரவழைத்து விடும்.

    உடற்பருமன் இருந்தாலும் கழுத்துவலி வரும். இந்த நோயின் ஆரம்பத்தில் கழுத்தில் மட்டும் வலி ஏற்படும். பிறகு தோள்பட்டைக்கு வலி பரவும். கைகளில் குடைவது போல் வலிக்கும். விரல்கள் வரை வலி பரவக்கூடும். சிலருக்குக் கை, விரல்கள் மரத்துப்போவதும் உண்டு. நாளாக ஆக கழுத்தைத் திருப்பும் போது கழுத்து வலியுடன், தலைச்சுற்றலும் ஏற்படும்.

    வாழ்க்கை முறை:

    எப்போதும் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். நீண்ட நேரம் உட்காரும் போது அடிக்கடி கழுத்தை மெதுவாக வலது, இடது பக்கம் திருப்ப வேண்டும். அதுபோன்று மேலேயும் கீழேயும், அசைக்க வேண்டும். மிருதுவான சிறிய தலையணையை பயன்படுத்த வேண்டும். உடல் பருமனை குறைக்க வேண்டும்.

    சித்த மருத்துவம்:

    1) அமுக்கிரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி., முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி., குங்குலிய பற்பம் 200 மி.கி. இவைகளை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா லேகியம் அல்லது தண்ணீர் விட்டான் கிழங்கு லேகியம் 1 முதல் 2 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    3) தண்டுவட பிரச் சினைகளுக்கு எண்ணெய் மசாஜ் மற்றும் வர்ம முறை மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரி தைலம், விடமுட்டி தைலம், சுக்கு தைலம், உளுந்து தைலம் இவைகளில் ஏதேனும் ஒன்றை மேலி ருந்து கீழ் நோக்கி நன்றாக தேய்த்து விட வேண்டும். வெந்நீரில் குளிப்பது மிகவும் சிறந்தது.

    4) வாத மடக்கி, வாத நாராயணன், தழுதாழை, நொச்சி, முடக்கத்தான், பழுத்த எருக்கம் இலை இவை களை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி வலியுள்ள இடங்களில் ஒத்தடமிட வேண்டும். 5)உணவில் கால்சியம், வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள பால், தயிர், முட்டை, மீன், இறைச்சி, பசலைக் கீரை, முருங்கைக்கீரை, பிரண்டைத் தண்டு, பாலக் கீரை, உளுந்து, வெந்தயம், பாதாம், வால்நட், எலும்பு சூப் இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • முதுகு, இடுப்பு பகுதியில் வலிகள் கால்கள் மரத்துப் போதல்.
    • வைட்டமின் டி சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    தண்டுவட எலும்புகள் தேய்வதால் வரும் வாதத்தை சித்த மருத்துவத்தில் தண்டக வாதம் என்றுகூறுவோம். தண்டுவட எலும்புகள் ஒவ்வொன்றின் இடையே சதையாலான டிஸ்க்" இருக்கும். இதன் இடையில் சைனோவியல் திரவம் என்ற எண்ணெய் போன்ற பொருள் நிரப்பப்பட்டிருக்கும். இவை ஒரு மெத்தை போல் இருந்து, தண்டுவட எலும்புகள் உராய்வில்லாமல் ஒழுங்காக செயல்படவும், உடல் அசைவிற்கும் உதவுகிறது.

    எலும்புகளுக்கு இடையேயுள்ள டிஸ்க்" நீர்த்துவம் குறைந்து, உலர்ந்து சுருங்கி இருந்தால் அது 'ஸ்பாண்டிலோசிஸ்' என்று அழைக்கப்படும். தண்டுவட எலும்புகளுக்கு இடையே உள்ள டிஸ்க் ஒருபுறமாக அல்லது இருபுறமாக வெளியேநீட்டி நிற்பது ஹெர்னியேட்டட்டிஸ்க்' எனப்படும்.

    டிஸ்க் வீங்கி மிருந்தால் அது பல்ஜிங் தண்டுவட எலும்புகளின் ஓரத்திலிருந்து எலும்புகள் துருத்தி வளர்ந்து காணப்பட்டால் ஆஸ்டியோபைட் அல்லது ஸ்பர்' என்றும் விபத்து, காயங்களில் டிஸ்க்குகளில் ஏற்படும் வீக்கங்கள் அல்லது அழற்சிகள் ஸ்பாண்டிலைடிஸ்' என்றும் அழைக்கப்படும்.

     காரணங்கள்:

    அடிபட்ட காயங்கள் விபத்துக்கள் காரணமாகவும், தொழில் ரீதியாக அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும் சுமை தூக்குபவர்கள் மற்றும் டெய்லர்களுக்கும் மற்றும் வயதானவர்களுக்கும் அதிகமாக தண்டுவட பாதிப்புகள் ஏற்படுகிறது.

    அறிகுறிகள்:

    முதுகு, இடுப்பு பகுதியில் வலிகள் கால்கள் மரத்துப் போதல், உட்கார்ந்து எழும்புவதில் சிரமம், நடை மாறுபடுவது போன்ற அறிகுறிகள் காணப்படும்.

    சித்த மருத்துவத் தீர்வுகள்:

    1)அமுக்கரா சூரணம் 1 கிராம். சண்டமாருதச் செந்தூரம் 100 மி.கி. பவள பற்பம் 200 மி.கி, குங்கி லிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி. குங்கிலிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    3) அமுக்கரா சூரணம் 1 கிராம், அயக்காந்த செந்தூரம் 200 மி.கி. முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி. குங்கிலிய பற்பம் 200 மி.கி மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    4) தண்டுவட பிரச்சினைகளுக்கு எண்ணெய் மசாஜ், வர்ம மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரித்தைலம் சிவப்புருக்கில் தைலம் விடமுட்டி தைலம், சுக்குத் தைலம், கற்பூராதி தைலம் குக்கில் தைலம் உளுந்து தைலம் இவைகளில் ஏதேனும் ஒன்றை கழுத்தில் இருந்து முதுகு இடுப்பு கால்கள் வரை நன்றாகத் தேய்த்து விட வேண்டும்.

    வெந்நீரில் இவாதாடக்கி வாதநாராயணன் முடக்கற்றான், தழுதாழை நொச்சி பழுத்த எருக்கம் இலை இவைகளில் ஒன்றை எண்ணெய்யில் வதக்கி வலி உள்ள இடங்களில் ஒத்தடம் வேண்டும்.

    கொல்சியம் வைட்டமின் டி சத்து அதிகமுள்ள பிரண்டைத் தண்டு முருங்கை கீரை, முட்டையின் வெள்ளை கரு, பால், தயிர், பசலைக்கீரை, பாதாம், வாதுமை வெந்தயம் உளுந்து இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • திடீர் நியாபக மறதியை 'டோர்வே எபக்ட்' என்றழைக்கலாம்.
    • நியாபக மறதி டிமென்சியா, அம்னீஷியா என இரு வகைகளில் அடங்கும்.

    நியாபக மறதி என்பது குழந்தைகள் முதல் இளம் வயதினர், நடுத்தர வயதினர், முதியவர்கள் என அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். எல்லோரையும் பாதிக்கும் திடீர் நியாபக மறதியை 'டோர்வே எபக்ட்' என்றழைக்கலாம்.

    நம் கண் முன்னாலேயே ஒரு பொருள் இருந்தும் அதை கவனிக்காமல் தேடிக் கொண்டே இருப்பது, அவசர கதியில் ஒரு பொருளை எங்கே வைத்தோம் என்று தேடுவது, கையில் கொண்டு செல்லும் பொருளை செல்லும் இடங்களில் வைத்து விட்டு, வந்த பின் எங்கு வைத்தோம் என்று தேடுவது.

    முன்பு அறிமுகமான நபரைத் திடீ ரென பார்த்தவுடன் கண்டுபிடிக்க முடியாமல் சமாளிப்பது, பேனா, சாவி, கண்ணாடி, பர்ஸ் இவைகளை கைகளிலோ அல்லது அருகிலோ வைத்து விட்டு தேடுவது. ஒருவருக்கு போன் செய்வதற்கு நினைத்து விட்டு மறந்துவிடுவது இவையாவும் இந்த திடீர் நியாபக மறதியில் வந்து விடும்.

     பொதுவாக நியாபக மறதி 'டிமென்சியா' மற்றும் 'அம்னீஷியா' என இரு வகைகளில் அடங்கும். நியாபக மறதிக்கு சித்த மருத்துவத்தில் உள்ள மருந்துகள்:

    1) பிரமி நெய் 5 மி.லி வீதம் காலை, இரவு சாப்பிடலாம். இது மனக்குழப்பத்தை நீக்கும்.

    2) வல்லாரை மாத்திரை 1-2 மாத்திரை காலை, இரவு எடுக்க வேண்டும்.

    3) அமுக்கரா லேகியம் 1-2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    4) நெல்லிக்காய் லேகியம் 1-2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    5) சங்கு புஷ்ப மலர்களை டீ போட்டு குடிக்கலாம். இவை மூளை நரம்புகளுக்கு நல்ல பலனைத் தரும்.

    6) செம்பருத்திப் பூ, குங்குமப்பூ இவைகளை கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்தால் மூளை, நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

    7) உணவில் வைட்ட மின் பி1, பி6, பி12 சத்து, செலீனியம், துத்தநாகம் குறைவு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    8) வல்லாரை, பிரமி, துளசி இலைகள் நியாபக சக்தியை அதிகப்படுத்தும் மூலிகைகள். இவைகளில் வகைக்கு இரண்டு இலைகளை இரவு முழுவதும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை குடித்து வர மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். நியாபக சக்தி பெருகும்.

    9) வெண்டைக்காய், நெல்லிக்காய், எலுமிச்சை, புதினா, கேரட், திராட்சை, ஆப்பிள், பேரீச்சை, முட்டை, பசலைக்கீரை, சிறுகீரை, பாதாம் பருப்பு, வால்நட், முருங்கைக்காய் போன்றவைகளை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெர்ரி வகை பழங்கள், பூசணி விதைகள், வேர்க்கடலை இவைகளில் உள்ள வைட்டமின் ஈ, வைட்டமின் டி, ஒமேகா-3 கொழுப்பு அமிலம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்றவைகள் ஞாபகசக்தியை அதிகப்படுத்துகின்றன.

    10) தினமும் 10-15 நிமிடங்கள் உடற்பயிற்சி, யோகாசனங்கள், தியானம் செய்ய வேண்டும்.

    11) சீரான தூக்கம் இன்றியமையாதது, டி.வி, வீடியோ கேம்ஸ் இவைகளை தவிர்ப்பது நல்லது.

    • ட்ரை கிளிசரைடுகள் என்பது ரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு ஆகும்.
    • கார்போஹைட்ரேட் உணவுகள் ட்ரை கிளிசரைடுகளாக உடலில் சேமிக்கப்படுகிறது.

    ட்ரை கிளி சரைடுகள் என்பது ரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு ஆகும். நாம் சாப்பிடும் உணவில், உடலுக்கு தேவையான அளவு கலோரியை விட அதிகளவு கார்போஹைட்ரேட் வகை உணவுகளை நாம் உட்கொண்டால், அவை ட்ரை கிளிசரைடுகளாக உடலில் சேமிக்கப்படுகிறது. இது ஹைபர் ட்ரை கிளிசெரிடெமியா எனப்படும்.

     ட்ரை கிளிசரைடுகளின் வேலை பயன்படுத்தப்படாமல் சேமிக்கப்பட்ட கலோரிகள் மூலம் உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. ஆனால் இவை ரத்தத்தின் சராசரி அளவான 150-ஐ விட அதிகமாகும் போது இதய தமனிகள் மற்றும் ரத்த நாளங்களில் படிகிறது. இது அர்த்ரோஸ் கிளிரோசிஸ் என்ற நிலையை ஏற்படுத்துகிறது. இவை பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

    வளர்சிதை மாற்ற நோய்க்குறிகளான இடுப்பைச் சுற்றி அதிக கொழுப்பு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த சர்க்கரை அளவு, டைப் 2 வகை நீரிழிவு நோய் இவைகளை ஏற்படுத்துகிறது.

     ட்ரை கிளிசரைடுகளை கட்டுக்குள் வைப்பது எப்படி?

    1) தினசரி நடைப்பயிற்சி, சைக்கிள், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். குறைந்தது 30 நிமிட உடல் செயல்பாடுகள் ட்ரை கிளிசரைடுகளைக் குறைத்து, 'நல்ல' கொழுப்பை அதிகரிக்கும்.

    2) கார்போஹைட்ரேட் வகை உணவுகளான சர்க்கரை, மாவுப் பண்டங்கள், குளிர்பானங்கள். சோடா, பிரக்டோஸ், பீட்சா, பர்கர், பேக்கரி உணவுகள் கூடுதல் கலோரிகளைத் தருவதால் இவை ட்ரை கிளிசரைடுகளாக மாற்றப்பட்டு கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. அதிக கலோரிகளை தரும் உணவுகளை குறைப்பது ட்ரை கிளிசரைடுகளின் அளவை குறைக்கும்.

    சிவப்பு இறைச்சியை அளவுடன் எடுக்க வேண்டும். டிரான்ஸ் கொழுப்புகள், ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட எண்ணெய்கள் அல்லது கொழுப்புகள் சேர்ந்த உணவுகளை தவிர்க்கவும். மது அருந்துவது ட்ரை கிளிசரைடுகளின் அளவை உயர்த்துகிறது. ஆல்கஹாலில் அதிகமான கலோரிகள் மற்றும் சர்க்கரை உள்ளது. எனவே மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

    3) ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சாளை மீன் (சார்டின்). டூனா மீன், பாதாம், வால்நட்,ப்ளாக் சீட்ஸ் (அலிசி விதை). ஆளி விதை, பூசணி விதை, முழுத்தானியங்கள், பருப்பு வகைகள், வெள்ளரி விதை இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரைகள் இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, புதினா, லவங்கப்பட்டை, சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம் இவைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    4) எந்த எண்ணெய் பயன்படுத்தினாலும் அளவுடன் எடுக்க வேண்டும். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய். ஆலிவ் எண்ணெய் சிறந்தது.

    சித்த மருத்துவம்:

    1) ஏலாதிச்சூரணம்-1 கிராம், குங்கிலிய பற்பம் -200 மி.கி. வீதம் மூன்று வேளை வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    2) வெண்தாமரை இதழ் பொடியை காலை, இரவு ஒரு கிராம் வீதம் வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    • நோய்களில் இருந்து நம் உடலை காக்க உணவு முறைகள் அவசியம்.
    • வாரத்திற்கு ஒரு முறையாவது உண்ணாவிரதம் இருப்பது நல்லது.

    மனிதனுக்கு அடிப்படையான ஆதாரம், உணவு. சித்த மருத்துவ முறைப்படி வாதம், பித்தம் மற்றும் கபம் என்ற மூன்று கூறுகளும், அதேமாதிரி ஏழு உடல் கூறுகளும் எப்பொழுதும் சமநிலையில் இருக்க வேண்டும். உணவு தான் நம் உடலுக்கு ஆற்றலை கொடுப்பதோடு மலம், சிறுநீர் மற்றும் வியர்வை போன்ற கழிவுப் பொருளாகவும் மாறுகிறது. இந்த செயல்பாட்டில் எப்பொழுதும் சமநிலை இருந்தால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். இந்த சமநிலை மாறு பட்டால் உடல்நிலை நோய்களை உருவாக்க ஆரம்பித்து விடும். எனவே நோய்களில் இருந்து நம் உடலை காக்க உணவு முறைகள் அவசியம்.

    உணவு நன்றாக செரிமானம் அடைய வேண்டும் என்றால் வயிற்றில் பாதி பகுதியை காலியாக விட்டு விட வேண்டும். அதேபோல் வாரத்திற்கு ஒரு முறையாவது உண்ணாவிரதம் இருப்பது அல்லது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உணவு சாப்பிடுவது செரிமான அமைப்புக்கு நல்லது. இது அஜீரணத்தை குறைக்கிறது.

    பழங்கள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், மீன், இறைச்சி போன்றவை நமது உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். மணி சம்பா போன்ற அரிசி வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கும், ஜீரக சம்பா மற்றும் குந்திரமணி சம்பா வாத நோய்களுக்கும் நல்லது. அரிசி, கோதுமை, ஓட்ஸ் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் கூழ்கள் மிகவும் நல்லது.

    சோயா, காலிஃபிளவர், பட்டாணி பருப்புகள், கிரீன் டீ போன்றவை மூட்டு அழற்சியை போக்குகிறது. இதயம், செரிமான அமைப்பு, முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், வயிற்றுக்கோளாறுகள் உள்ளவர்களுக்கு இது நல்லது.

    பாலில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு கீல்வாதத்தில் காணப்படும் மூட்டுகளில் வீக்கம் மற்றும் சேதத்தை தடுக்கிறது. இதில் காணப்படும் லினோலெனிக் அமிலம் அழற்சியை தடுக்கிறது. இரவில் பால், மோர் குடிப்பது வெப்ப உணர்வு, ரத்த சோகை, வயிற்று வலி போன்றவற்றை நீக்குகிறது. நெய்யை சேர்த்துக் கொள்வதும் நல்லது.

    ரத்த சோகை, பலவீனமாக இருத்தல், மனநல கோளாறுகள் போன்றவற்றுக்கு ஆட்டு இறைச்சி நல்லது. மனநல கோளாறுகள் மற்றும் காசநோய்க்கு முயல் இறைச்சியும் பரிந்துரைக்கப்படுகிறது. கோழி முட்டை வாதம் மற்றும் கபம் நோய்களுக்கு நல்லது.

    ஏலக்காய் வெப்பத்தை குறைத்து செரிமான சக்தியை அதிகரிக்கிறது. சீரக விதைகள் பசி ஏற்படுத்தும் தன்மையை அதிகரிக்கிறது. இஞ்சி கீல்வாதம் மற்றும் முடக்கு வாதத்திற்கு நல்லது. மேலும் கருப்பை புற்றுநோயை தடுக்கிறது. பூண்டு கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. பெருங்காயம் குடற் புழுத்தொல்லை மற்றும் அஜீரணத்தை போக்க உதவுகிறது.

    வெந்தயம் பித்தத்தை குறைக்கிறது. மிளகு கபம் நோய்களை போக்குகிறது. காது கோளாறுகள், கல்லீரல் நோய்கள், அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள் போன்ற பல்வேறு நோய்களை சரி செய்கிறது.

    தவிர்க்க வேண்டியவை

    டால்டா, வனஸ்பதி போன்ற எண்ணெய் வித்துக்கள் தவிர்க்க வேண்டும். பலாப் பழம் ஆசைக்கு எடுத்துக்கொள்ளலாம். அளவுக்கு மீறி உண்ண வேண்டாம்.

    செம்மறி, மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியையும் தவிர்க்க வேண்டும். கோழியின் தோல் பகுதி வாத நோய்களை ஏற்படுத்துகிறது மற்றும் மூல நோயை அதிகரிக்க செய்கிறது. எனவே இதனை தவிர்ப்பது நல்லது.

    • 41 பயனாளிகளுக்கு அதற்குரிய மருந்து மாத்திரைகள் பரிந்துரைத்து மருத்துவ அறிவுரைகள்.
    • காப்பகத்தில் உள்ள வேற்று மொழி பயனாளிகளிடம் டாக்டர்கள் அவரவரது மொழியில் பேசி கேட்டறிந்தார்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு நம்பிக்கை மனநல காப்பகத்தில் பில்லியன் ஆர்ட்ஸ் பீட்டிங் பவுண்டேஷன் இணைந்து பொது மருத்துவ முகாம் நம்பிக்கை மனநல காப்பகத்தில் நடைபெற்றது

    திருத்துறைப்பூண்டி நகர் மன்ற உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான எழிலரசன் தலைமை வகித்தார். நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன், அப்போலோ மருத்துவமனை குழுமம் சார்பில் மூத்த அலுவலர் ஆனந்தபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காப்பக திட்ட மேலாளர் விஜயா அனைவரையும் வரவேற்று பேசினார் .மூத்த டாக்டர் வர்கீஸ், உதவி பேராசிரியர் டாக்டர் சருண், தசை இயக்க டாக்டர் கருணாநிதி மற்றும் செவிலியர்கள் உடல் எடை, உயரம், இரத்த அழுத்தம், சுகர் நிலை, உடல் இயக்கங்கள், கை நடுக்கம், ரத்த சோகை, தலைவலி, போன்ற பல்வகை வியாதிகளுக்கு உண்டான பரிசோதனைகள் செய்து நம்பிக்கை மனநல காப்பகத்தில் உள்ள 41 பயனாளிகளுக்கு அதற்குரிய மருந்து மாத்திரைகள் பரிந்துரைத்து மருத்துவ அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கினார்கள் .

    காப்பகத்தில் உள்ள வேற்று மொழி பயனாளிகளிடம் டாக்டர்கள் அவரவரது மொழியில் பேசி கேட்டறிந்தார்கள். மனநலம் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் டாக்டர்களிடம் நன்றாக சாப்பிடுகின்றோம் சந்தோஷமாக இருக்கிறோம். என்று சொன்னதை கேட்டு டாக்டர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். மேலும் இவர்களை சந்தோஷமாக மகிழ்விக்க பணியாளர்கள் அனைவருக்கும் உதவி பேராசிரியர் டாக்டர் சருண் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கினார்.

    காப்பக பணியாளர்கள் சரவணன், கோகிலா, சக்தி பிரியா, வள்ளி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியில் அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆனந்த் பாபு நன்றி கூறினார்.

    மனநலத்தை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை, என்ன மாதிரியான கவனிப்பு கொடுக்கப்படுகிறது என்பதை வறுமை, கல்வியறிவு போன்றவையே தீர்மானிக்கின்றன.
    உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி, நம் நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட மனநோயாளிகளில், 10 சதவீதத்தினருக்கு மட்டுமே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் வசதி கிடைக்கின்றது. மீதி பேர் அதாவது, பெருவாரியான மனநோயாளிகள் தங்கள் வீட்டிலேயே அவர்களின் குடும்பத்தாரால் பராமரிக்கப்படுகின்றனர்.

    மனநோய் என்பது பேய் பிடித்தல், முற்பிறவியில் செய்த பாவங்களின் பலன், பில்லி சூனியம் போன்றவற்றால் வருவது என இந்தியாவின் பல பகுதிகளில் பாரம்பரியமாக நம்பப்படுகிறது. வேரூன்றி இருக்கும் பரவலான மூடநம்பிக்கைகள், தவறான தகவல்கள் ஆகியவற்றால் இத்தகைய உளவியல் பிரச்சினைகளுக்கு பணம் பறிக்கும் சாமியார்கள், மந்திரவாதிகள் ஆகியோரின் உதவியைத்தான் முதலில் நாடுகிறார்கள். உளவியல் நிறுவனம் ஒன்று, 198 மனநோயாளிகளுக்கான சிகிச்சைகள் குறித்து செய்த மதிப்பாய்வில் 45 சதவீதத்தினர் சாமியார்களிடம்தான் முதன்முதலில் போயிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

    இந்தியாவின் மிக மிக குறைந்த அளவிலான நிதியே மனநலத்துக்கு ஒதுக்கப்படுகிறது. ஒரு லட்சம் மக்களுக்கு 0.036 சதவீதம் என்ற அளவில்தான் மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள். 2001-ல் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், மனப்பிறழ்வு போன்ற நோய்களுக்கு மரபணு, தலைமுறை ஆகியவற்றை காரணமாக உயர்கல்வி பெற்றவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். படிக்காதவர்கள், குறைந்த படிப்புள்ளவர்கள் பேய், பிசாசு இவற்றை காரணமாக காட்டுகிறார்கள். மனநலத்தை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை, என்ன மாதிரியான கவனிப்பு கொடுக்கப்படுகிறது என்பதை வறுமை, கல்வியறிவு போன்றவையே தீர்மானிக்கின்றன.

    மனநோயாளிகள் பற்றிய தவறான புரிதல்களுக்கு ஆண்டாண்டு காலமாக நம்முள் பதிந்துள்ள மூட நம்பிக்கைகள், அறியாமை இவையே காரணம். ஆரம்பத்திலேயே அறிகுறிகளை கண்டுபிடித்து தரமான சிகிச்சை அளிப்பதை தடுப்பதும் இவையே. மனநோய் ஓர் அவமான சின்னமாக கருதப்படுவதால், பல தருணங்களில் மனநோயாளிகள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகின்றனர்.

    அதிலும் பெண் நோயாளிகள் இருந்தால் குடும்பத்தினர் அவமானமாக கருதி அவர்களை மறைத்துவைக்கிறார்கள். மனநோய் சிகிச்சையில் முக்கியமான விஷயம், சில மாதங்கள் கழித்தே பலனை அறிய முடியும் என்பதால், மனநோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து தொடர்ந்து வெகுநாட்களுக்கு, நாள் தவறாமல் உட்கொள்ள கொடுக்கப்பட வேண்டும். ஆனால், மிக வேகமாக பலனை எதிர்பார்க்கும் பலர், பாதியிலேயே சிகிச்சையை கைவிடுகின்றனர். குடும்பத்தினர் கொஞ்சம் அக்கறையோடு செயல்பட்டால், பலரை மனநோயிலிருந்து மீட்டெடுக்க முடியும்.
    ×