என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Amnesia"
- திடீர் நியாபக மறதியை 'டோர்வே எபக்ட்' என்றழைக்கலாம்.
- நியாபக மறதி டிமென்சியா, அம்னீஷியா என இரு வகைகளில் அடங்கும்.
நியாபக மறதி என்பது குழந்தைகள் முதல் இளம் வயதினர், நடுத்தர வயதினர், முதியவர்கள் என அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். எல்லோரையும் பாதிக்கும் திடீர் நியாபக மறதியை 'டோர்வே எபக்ட்' என்றழைக்கலாம்.
நம் கண் முன்னாலேயே ஒரு பொருள் இருந்தும் அதை கவனிக்காமல் தேடிக் கொண்டே இருப்பது, அவசர கதியில் ஒரு பொருளை எங்கே வைத்தோம் என்று தேடுவது, கையில் கொண்டு செல்லும் பொருளை செல்லும் இடங்களில் வைத்து விட்டு, வந்த பின் எங்கு வைத்தோம் என்று தேடுவது.
முன்பு அறிமுகமான நபரைத் திடீ ரென பார்த்தவுடன் கண்டுபிடிக்க முடியாமல் சமாளிப்பது, பேனா, சாவி, கண்ணாடி, பர்ஸ் இவைகளை கைகளிலோ அல்லது அருகிலோ வைத்து விட்டு தேடுவது. ஒருவருக்கு போன் செய்வதற்கு நினைத்து விட்டு மறந்துவிடுவது இவையாவும் இந்த திடீர் நியாபக மறதியில் வந்து விடும்.
பொதுவாக நியாபக மறதி 'டிமென்சியா' மற்றும் 'அம்னீஷியா' என இரு வகைகளில் அடங்கும். நியாபக மறதிக்கு சித்த மருத்துவத்தில் உள்ள மருந்துகள்:
1) பிரமி நெய் 5 மி.லி வீதம் காலை, இரவு சாப்பிடலாம். இது மனக்குழப்பத்தை நீக்கும்.
2) வல்லாரை மாத்திரை 1-2 மாத்திரை காலை, இரவு எடுக்க வேண்டும்.
3) அமுக்கரா லேகியம் 1-2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.
4) நெல்லிக்காய் லேகியம் 1-2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.
5) சங்கு புஷ்ப மலர்களை டீ போட்டு குடிக்கலாம். இவை மூளை நரம்புகளுக்கு நல்ல பலனைத் தரும்.
6) செம்பருத்திப் பூ, குங்குமப்பூ இவைகளை கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்தால் மூளை, நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும்.
7) உணவில் வைட்ட மின் பி1, பி6, பி12 சத்து, செலீனியம், துத்தநாகம் குறைவு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
8) வல்லாரை, பிரமி, துளசி இலைகள் நியாபக சக்தியை அதிகப்படுத்தும் மூலிகைகள். இவைகளில் வகைக்கு இரண்டு இலைகளை இரவு முழுவதும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை குடித்து வர மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். நியாபக சக்தி பெருகும்.
9) வெண்டைக்காய், நெல்லிக்காய், எலுமிச்சை, புதினா, கேரட், திராட்சை, ஆப்பிள், பேரீச்சை, முட்டை, பசலைக்கீரை, சிறுகீரை, பாதாம் பருப்பு, வால்நட், முருங்கைக்காய் போன்றவைகளை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெர்ரி வகை பழங்கள், பூசணி விதைகள், வேர்க்கடலை இவைகளில் உள்ள வைட்டமின் ஈ, வைட்டமின் டி, ஒமேகா-3 கொழுப்பு அமிலம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்றவைகள் ஞாபகசக்தியை அதிகப்படுத்துகின்றன.
10) தினமும் 10-15 நிமிடங்கள் உடற்பயிற்சி, யோகாசனங்கள், தியானம் செய்ய வேண்டும்.
11) சீரான தூக்கம் இன்றியமையாதது, டி.வி, வீடியோ கேம்ஸ் இவைகளை தவிர்ப்பது நல்லது.
- நாங்கள் செகந்திராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடவில்லை.
- 2019 லோக்சபா தேர்தலில் நாங்கள் உத்தரபிரதேசத்தில் 3 எம்.பி. தொகுதியில் போட்டியிட்டோம்.
திருப்பதி:
ஐதராபாத் எம்.பி ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியை ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.
ஒவைசி பா.ஜ.க.வின் பி டீம் பா.ஜ.க வேட்பாளர் போட்டியிடும் இடங்களில் ஏ.ஐ.எம்.ஐ.எம் வேட்பாளர் நிறுத்தப்படுவார் இதன் மூலம் பா.ஜ.க எளிதில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்து ஒவைசி, கூறுகையில் :-
ராகுலுக்கு அம்னீசியா என்ற அரசியல் மறதி நோய் உள்ளது. அவர் எளிதில் மறந்து விடுவார். நாங்கள் செகந்திராபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிடவில்லை. அங்கு பா.ஜ.க. வேட்பாளர் கிஷன் ரெட்டி வெற்றி பெற்றார்.
இதில் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்ததா? 2019 லோக்சபா தேர்தலில் நாங்கள் உத்தரபிரதேசத்தில் 3 எம்.பி. தொகுதியில் போட்டியிட்டோம்.
ஆனால் அமேதியில் போட்டியிடவில்லை. அமேதியில் ஸ்மிருதி ராணியிடம் ராகுல் தோல்வி அடைந்தார். அங்கு ஸ்மிருதி ராணியிடம் ராகுல் பணம் வாங்கினாரா? குஜராத்தில் பா.ஜ.க ஏன் வெற்றி பெறுகிறது. எவ்வளவு பணம் வாங்கப்பட்டுள்ளது என்றார்.
* அன்றாடம் ஏதாவது படியுங்கள். கற்றுக் கொள்ளுங்கள். மூளைக்கு சவால்களை கொடுங்கள்.
* உங்களுக்கு காது கேளாமை இருப்பின் உடனடியாக அதனை சரி செய்யுங்கள். சில முதியவர்களுக்கு காது கேளாமையினை சரி செய்தவுடன் அவர்கள் சுறுசுறுப்பாய் நல்ல மூளைத் திறனோடு செயல்படுவார்கள்.
* 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவதும் 6 மணி நேரத்திற்கும் அதிகமாகத் தூங்குவதும் மூளை செயல்பாட்டுத் திறனைக் குறைக்கும்.
* இருதயம் சீராய் இருத்தல், முறையான ரத்த அழுத்தம் இரண்டுமே ஆரோக்கியமான மூளைக்கு மிக அவசியம்.
* அதிக உடல் எடை, சதை கூடியவர்களுக்கு மறதி பாதிப்பு ஏற்படும். சரியான உடல் எடையினை வைத்திருங்கள்.
* புகை பிடிப்பவர்களின் மூளைத் திறன் மழுங்கி விடுகின்றது என பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
* அதிக சோகம், மனஉளைச்சல் இவை சுறுசுறுப்பான மூளையின் எதிரிகள்.
* அக்கம் பக்கத்தினரிடம் நட்போடு பழகுங்கள்.
* சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பது மிக அவசியம்.
* காலையில் காபி, டீ குடியுங்கள். மதியம் 12 மணிக்கு மேல் வேண்டாம்.
* வானவில் நிறத்தில் காய்கறிகளை உண்ணுங்கள்.
* ஆயுர்வேத மசாஜ் முறை சிறந்ததே.
* வாய்விட்டு சிரியுங்கள்.
* பகலில் 10-20 நிமிட சாய்வு நாற்காலி தூக்கம் நல்லதே.
* சிறிதளவு பட்டை தூளினை உணவில் தூவிக் கொள்ளுங்கள்.
* சிறு சிறு தொட்டிகளுடன் தோட்டம் உருவாக்கலாமே.
இவையெல்லாம் செய்து பாருங்கள். உங்கள் உடலும் மூளையும் சுறுசுறுப்பாய் இருப்பதனை நீங்களே உணருவீர்கள்.
யாருக்குத்தான் உடலில் அதிக எடையினை தூக்கிக் கொண்டு வாழ பிடிக்கும். வாழும் முறையில் சில மாற்றங்களே அதிக பலனை உடலுக்கு அளிக்கும்.
* அதிக நேரம் உட்கார்ந்தே நாளை செலவழிக்காதீர்கள். முடிந்த வரை வீட்டில் கூட நடந்த படியே இருங்கள்.
* சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பது மிக அவசியம் என இன்றைய காலத்தில் அனைவரும் அறிவர். கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் தான் முடியாமை ஏற்படுகின்றது. சிறு சிறு அளவிளான உணவினை அடிக்கடி உண்டு வந்தால் இதற்கு மிக நல்ல தீர்வு கிடைக்கும்.
* கண்டிப்பாய் 1½-2 லிட்டர் நீரினை நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாய் குடியுங்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்