என் மலர்

    நீங்கள் தேடியது "Meditation"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்து செல்களையும் புதுப்பிக்கக்கூடிய அதிஅற்புதமான முத்திரை.
    • உத்திரபோதி முத்திரை நுரையீரலையும், பெருங்குடலையும் வலுப்படுத்துகிறது.

    உடலில் உள்ள அனைத்து செல்களையும் புதுப்பிக்கக்கூடிய அதிஅற்புதமான முத்திரை இந்த உத்திரபோதி முத்திரை என்று போகர் சித்தர் கூறி உள்ளார்.

    முதலில் முத்திரைகளை செய்வதற்கு முன்னால் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் மனதில் நம்பிக்கையுடனும், மன ஒருமைப்பாட்டுடனும் செய்யும் போதுதான் முத்திரையின் பலன்களாக இருந்தாலும், யோகா, தியானத்தினுடைய பலன்களாக இருந்தாலும் நமக்கு கிடைக்கும்.

    உத்திரபோதி முத்திரை நுரையீரலையும், பெருங்குடலையும் வலுப்படுத்துகிறது. உத்திரபோதி முத்திரையை எப்படி செய்ய வேண்டும் என்றால் இரண்டு கைவிடல்களிலும் உள்ள கட்டைவிரலும், ஆள்காட்டி விரலும் மட்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும் மற்ற விரல்கள் அனைத்தும் கோர்த்துக்கொண்டு இருக்க வேண்டும். ஆள்காட்டிவிரல் மேல் பார்த்தவாறு இருக்க வேண்டும். கட்டைவிரல் கீழ்நோக்கி இருக்க வேண்டும். இதற்கு தான் உத்திரபோதி முத்திரை என்று பெயர்.

    இந்த முத்திரையை தினமும் 20 நிமிடம் செய்யலாம். இந்த முத்திரையை உட்கார்ந்துகொண்டும், நடந்துகொண்டும் செய்யலாம். பெரும்பாலும் முத்திரைகளை உட்கார்ந்து செய்வது தான் உடலுக்கு நல்லது.

    உத்திரபோதி முத்திரையை நாம் தொடர்ந்து செய்துகொண்டு வரும்போது நமது உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உடலும், மனதும் சோர்ந்துபோய் இருக்கும் போது நமக்கு நியாபகம் வரக்கூடிய முத்திரை இந்த உத்திரபோதி முத்திரை. எப்போதெல்லாம் நாம் சோர்ந்துபோய் இருக்கிறோமோ அல்லது கொஞ்சம் ரிலாக்சாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த உத்திரபோதி முத்திரையை செய்யலாம்.

    ஏதாவது ஒரு விஷயத்தை நாம் கையாளும் போது நான் என்னசெய்வது என்று தெரியாமல் பரபரப்பாக காணப்படுவோம். அவ்வாறு இருக்கும் போது இந்த உத்திரபோதி முத்திரையை செய்தால் கண்டிப்பாக மனதுக்குள் ஒரு அமைதியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

    நாம் முத்திரையை செய்யும் போது மூச்சு உள்வாங்கப்படும்போது நம் மனதில் உள்ள ஸ்டிரெஸ் (மன அழுத்தம்) குறைகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் பரீட்சைக்கு போகும்போது வரக்கூடிய பயத்தை போக்குவதற்கும், மேடை ஏறி பேசுவதற்கு பயப்படுகிறவர்கள் அதுமட்டுமில்லாமல் இண்டர்வியூக்கு செல்லும் போது ஏற்படக்கூடிய பயத்தையும் போக்குவதற்கு இந்த உத்திரபோதி முத்திரை உதவுகிறது.

    இந்த உத்திரபோதி முத்திரையை நாம் செய்யும் போது அவர்களுக்கு நிதானமும், படித்ததை பரிட்சையில் எழுதுவதற்கோ அல்லது இண்டர்வியூவை சரியாக கையாள்வதற்கோ அவர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது.

    ஒருசிலர் மேடையில் ஏறி பேசுவதற்கே பயப்படுவார்கள். ஏனென்றால் ஒருவித பயத்துடனேயே காணப்படுவார்கள். இவர்கள் இந்த உத்திரபோதி முத்திரையை தொடர்ந்து செய்துகொண்டு வரும் போது மேடைபேச்சில் சிறந்துவிளங்குவார்கள்.

    ஒரு சிலர் காரணமே இல்லாமல் எல்லாவற்றுக்கும் பயந்துகொண்டே இருப்பார்கள். அவர்களுக்கும் இந்த உத்திரபோதி முத்திரை ஒரு சிறந்த தீர்வினை அளிக்கிறது. இதுகூடவே நாம் தியானமும் செய்து வந்தால் மிகவும் நல்லது.

    இந்த முத்திரை தொடர்ந்து செய்யும் போது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து பகுதிகளிலும் உள்ள செல்களை புதுப்பித்து நம் மூளையை புத்துணர்ச்சி அடைய வைக்கிறது. நம் மனதில் உள்ள பிரச்சினைகளை சுத்தப்படுத்தி நம்முடைய மூளைக்கு தெளிவாக முடிவு எடுக்கக்கூடிய சக்தியை கொடுக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மிக எளிமையான வழிகளில் ஒன்று தியானம்.
    • புருவ மத்தியில் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்களே.

    நம்முடை மனம் அமைதிபெற வேண்டும். வாழ்க்கையில் நினைத்த காரியங்களை சாதிக்க வேண்டும் என்றால் அதற்கு துணைசெய்யும் மிக எளிமையான வழிகளில் ஒன்று தியானம். தியானம் யாரெல்லாம் செய்யலாம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தியானம் செய்யலாம். தியானம் எந்த இடத்தில் செய்யலாம் என்றால், அமைதியாக இருக்கக்கூடிய எந்த இடமாக இருந்தாலும் அங்கு அமர்ந்து தியனம் செய்யலாம்.

    சரி தியானம் எப்படி செய்ய வேண்டும்? புருவ மத்தியில் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்களே, புருவ மத்தியை நினைத்துக்கொண்டு இருந்தால் தலைவலி மட்டும் தான் வரும். அப்போது பல பேர் என்ன சொல்லுவாங்க தியானம் செய்தால் தலைவலிதான் வருகிறது. அதனால் தியானம் செய்வதை நிறுத்திவிட்டேன் என்று சொல்வார்கள்.

    இப்போது குதிரையில் சவாரி செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது உடனே நாம் குதிரையில் ஏறி அமர்ந்துவிடுவோம். ஆனால் அந்த குதிரை பழக்கமான குதிரை இல்லை. புது குதிரை. இப்போது ஏறி உட்கார்ந்த உடனேயே குதிரையோட கடிவாளத்தை பிடித்துக்கொள்ள வேண்டும். குதிரையை ஓடவிட்டு பார்க்க வேண்டும். அதனை ஓடவிட்டு பார்த்து அது எப்படி ஓடுகிறது. எவ்வளவு தூரம் ஓடுகிறது என்று கவனிக்க வேண்டும். அதற்கு பிறகு அந்த கடிவாளத்தை நமக்கு ஏற்றார் போல் திசை திருப்ப வேண்டும் என்று சொன்னால்தான் அந்த குதிரையை நாம் சிறப்பாக இயக்க முடியும்.

    இதையே நாம் தியானம் செய்யும் போது எடுத்த உடனேயே நாம் நம் மனதை அடக்க வேண்டும் என்று நினைத்தால் அது முடியாது. மனித மனம் என்பது ஒரு குரங்கு. அது ஓரிடத்தில் இல்லாமல் வெவ்வேறு இடத்திற்கு தாவிக்கொண்டே இருக்கும். அப்போது நிலையில்லாமல் இருக்கும் மனதை நிலையாக இரு என்று சொல்லிக்கொண்டே இருந்தால் அது எவ்வாறு நிலையாக இருக்கும் இருக்காது.

    அப்போ தியானமே செய்ய முடிதா என்றால் செய்யலாம். அதற்காக எடுத்தவுடனேயே 100 சிந்தனைகள் நமக்குள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த 100 சிந்தனைகளையும் நாம் அடக்குவது என்பது கடினம். எனவே அந்த ௧௦௦ சிந்தனைகளையும் ஒரே மையப்புள்ளிக்கு கொண்டுவர வேண்டும்.

    இப்போது உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தை மனதில் நினைத்துக்கொள்ள வேண்டும். யார் யாருக்கு எந்த தெய்வங்களை பிடிக்குமோ அந்த தெய்வங்களை நினைத்துக்கொள்ளலாம். இப்போது நீங்கள் மனதில் நினைத்த அந்த தெய்வத்தை தவிர வேறு எந்த சிந்தனைகளையும் மனதிற்குள் கொண்டுவரக்கூடாது.

    இப்போ 100 சிந்தனைகளை ஒருசேர நாம் ஒரு புள்ளியில் கொண்டுவைத்துவிட்டோம். இப்போது அந்த தெய்வத்தை மட்டுமே நினைக்க வேண்டும். எனக்கு தெய்வம் பிடிக்கவில்லை என்றால் இயற்கை பிடித்தால் இயற்கையை நினைத்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு அருவி, கடல் மலை அல்லது அழகான மலர், பறவை, மேகம் இவற்றில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை உங்கள் மனதிற்குள் நீங்கள் கொண்டுவர வேண்டும். அதையே நீங்கள் மனதிற்குள் நினைக்க வேண்டும்.

    இதையே நாட்கள் செல்ல செல்ல இதையும் கூட இல்லானல் செய்துவிட முடியும். தனக்குள்ளே தன்னை தேடுகின்ற ஆழ்நிலை தியானத்தை இப்படித்தான் செய்ய வேண்டும். இதனால் பயிற்சி பெறுகிறவர்கள் முதலில் இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும். எப்படி உட்கார வேண்டும் என்றால் பத்மாசனத்தில் உட்கார வேண்டும். அல்லது வஜ்ஜிராசனத்தில் உட்கார வேண்டும்.

    இல்லையென்றால் எங்களுக்கு வயதாகிவிட்டது. கால்வலி, மூட்டுவலி எல்லாம் உள்ளது என்றால் நீங்கள் எப்போதும் போல் சேரில் கூட அமர்ந்துகொள்ளலாம். சரி சேரில் உட்கார்ந்துவிட்டோம். இப்போது கைகளை எப்படி வைக்க வேண்டும். கைகளில் சின் முத்திரையை வைத்துக்கொள்ளலாம். அதாவது உங்கள் கட்டை விரலையும், நம்முடைய ஆள்காட்டி விரலையும் ஒன்றாக இணைத்து வைத்தால் அதற்கு சின் முத்திரை என்று பெயர்.

    இல்லையென்றால் அவர்கள் இரண்டு கைகளை ஒன்றோடு ஒன்று கோர்த்துக்கொள்ள வேண்டும். கைகளை கோர்த்தவண்ணம் தியானம் செய்யும்போது கைகளை வைத்துக்கொள்ளலாம். இப்போது எந்த நிலையில் தியானம் செய்ய வேண்டும், எந்த இடத்தில் தியானம் செய்யலாம். எவ்வாறு அமர்ந்து தியானம் செய்யலாம். கைகளை எப்படி வைத்து தியானம் செய்யலாம் என்பதை தெரிந்துகொண்டோம்.

    இதையும் மீறி நாம் எவ்வளவு நேரம் தியானம் செய்ய வேண்டும் என்று கேட்டால் தியானத்திற்கு நேரம் என்பது கிடையாது. ஆரம்பத்தில் உங்களால் எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருக்க முடிகிறதோ அவ்வளவு நேரம் உட்கார்து தியானம் செய்யலாம். முதலில் உட்காருவதில் சிரமம் இருக்கும். அதுவே பழகப்பழக 10 நிமிடம், 15 நிமிடம் அல்லது ஒருமணிநேரம் கூட இந்த தியானம் என்பதை செய்ய முடியும்.

    இந்த தியானம் செய்வதினால் நமக்கு என்ன பயன் என்று கேட்டால், யாராக இருந்தாலும் முதலில் ஒரு தெளிவான மனநிலை உருவாகும். மிகவும் அருமையாக உடற்கூறுகள் இயங்குவதற்கு உண்டான தன்மை கிடைக்கும். நுரையீரல் நமக்கு நன்றாக வேலை செய்யும். தியானம் செய்யும் போது மூச்சில் நமது கவனம் இருப்பதால் ஆயுள் அதிகரிக்கும்.

    இது இல்லாமல் தியானம் செய்யும் போது உடலும் மனதும் ஒன்றாக சேரும். நல்ல நினைவாற்றல் ஏற்படும். எதை எப்படி செய்ய வேண்டும் என்ற தெளிவான மனநிலை இருக்கும். ஒரு மனிதனி பண்படுத்தி மனிதனாகவே வைத்திருக்கக்கூடிய உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்வது தியானம். அதிலும் ஆழ்நிலை தியானம் தொடர்ந்து செய்துகொண்டு வந்தால் நம்மை இன்னும் அதாவது ஒரு மகானின் நிலைக்கு உயர்த்தும்.

    அதனால் படிப்படியாக தியானம் செய்பவர்களுக்கு இதுதான் வழி. அதனால் ஆரம்பத்தில் முதலில் ஒன்றை நினைக்க வேண்டும். அதன்பிறகு அந்த ஒன்றையும் நீக்கிவிடுவது தான் நமக்கு முழுமையான வெற்றி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூட்டு தியானத்தில் பங்கெடுத்து தியானம் செய்யுங்கள்.
    • மூச்சுக் காற்றை விடுவதையும் எடுப்பதையும் கவனிப்பது.

    தியானத்தின் போது எண்ணங்கள் எழுந்து மனதை அலைக்கழிப்பது என்பது அனேகமாக எல்லாரும் அனுபவிக்கும் பிரச்சனை தான்.ஒவ்வொரு மனிதனின் குணாதிசயமும் வித்தியாசமானது; ஒருவருக்குப் பலன் தரும் ஒரு வழி மற்றொருவருக்கு வேலை செய்யும் என்று சொல்ல முடியாது;

    நாள் முழுவதும் நற் சிந்தனை, நற் செயல்கள் செய்தும் அன்று தியானத்தில் மனம் அடங்காது போகலாம். அதற்கு மாறாக, உடம்பும் மனதும் அலைந்த ஒரு நாளில் மனம் தியானத்தில் சட்டென்று அடங்கியும் போகலாம்!

    * கூட்டு தியானத்தில் பங்கெடுத்து தியானம் செய்யுங்கள். அப்போது உண்டாகும் சாதகமான அதிர்வலைகள் உங்கள் எண்ணங்களை அடக்கும் திறனுள்ளவை.

    * தினம் ஒரு குறிப்பிட்ட ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் தியானம் செய்ய அமர்வது. அப்படி ஒரு பழக்கம் உண்டாகிவிட்டால், அந்த நேரத்தில் மனம் எளிதில் அடங்கும்.

    * ஒரு நாளில் சில குறிப்பிட்ட சமயங்களில் செய்யும் தியானங்களில் எந்த நேரத் தியானத்தில் கூடுதல் மனம் எளிதில் அடங்குகிறதோ அந்த நேரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தியானிப்பது.

    * எண்ணங்களை அவற்றின் போக்கில் ஓடவிட்டு ஒரு சாட்சியாக அவற்றைக் கவனிப்பது. இதுவும் பழக்கத்தில் தான் வரும். ஓடும் எண்ணம் சாட்சியையும் அடித்துக்கொண்டு போய்விடுவது அவ்வப்போது நடக்கும்! மீண்டும் விழிப்புடன் தன்னை எண்ணத்துக்கு அன்னியமாக ஆக்கிக்கொண்டு மனதைக் கவனிக்க வேண்டும்.

    * மூச்சுக் காற்றை விடுவதையும் எடுப்பதையும் கவனிப்பது. (இது விபாஸனா முறை)

    * பிராணாயாமம் செய்துவிட்டு தியானம் செய்வது. (தகுந்த குருவிடம் முறைப்படி பிராணாயாமம் கற்பது அவசியம்; நாமாகவே புத்தகத்தில் படித்துவிட்டுச் செய்வது சரியன்று). மனதும் பிராணனும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவையாதலால், பிராணனை அடக்கினால் மனமும் அடங்கும்.

    * உங்கள் நாம ஜபத்தை செய்யுங்கள். ஜபிக்கும்போது அந்த மந்திரத்தின் பொருளைச் சிந்திப்பது; அது முடியவில்லை என்றால் அந்த மந்திரத்தின் உச்சரிப்பில் கவனம் வைப்பது.

    * ஜப மாலை வைத்துக்கொண்டு ஜபம் செய்யுங்கள்; மந்திரம் ஜெபிக்கும்போது மனம் அலைந்தாலும், கையில் ஜபமாலையின் மேரு தட்டுப்படும்போது, மீண்டும் மனதை ஜபத்தின் பொருளுக்கோ, உச்சரிப்போ திருப்புங்கள்.

    * மந்திரத்துக்கே மனதை அடக்கும் சக்தி உண்டு. தொடர்ந்து மனம் அலைந்தாலும், தொடர்ந்து ஜபிக்கும்போது அந்த மந்திரத்தின் சக்தியே மனத்தை அடக்க உதவும். மனம் அடங்குவது தெரிந்ததும் ஜபத்தை நிறுத்திவிட்டு தியானத்துக்கு மாறலாம்.

    * எண்ண ஓட்டங்களைக் கவனித்தவாரே ஜபிப்பது; எண்ணங்கள் அடங்கும்போது ஜபத்தை நிறுத்துவது; மீண்டும் எண்ணங்கள் ஓடத்தொடங்கினால், மீண்டும் ஜபிப்பது. இப்படிச் செய்யும் போது விரைவில் மனம் அடங்கி, ஜபம் முற்றிலும் நின்றுவிடுவதைக் காணலாம்.

    * தியானிக்கும்போது முதுகுத்தண்டும் கழுத்தும் நிமிர்ந்து நேராக இருக்கவேண்டும் என்பது அடிப்படை. ஆனால், மனதில் எண்ணங்கள் கூடுதல் ஓடும்போது, முதுகுத் தண்டு தொய்வதையும், கழுத்து வளைந்து தலை முன்பக்கம் குனிவதையும் அறிய முடியும். மீண்டும் முதுகுத்தண்டை நிமிர்த்தி கழுத்தையும் நேராக்கினால் எண்ணங்கள் குறைவதைக் காண முடியும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தகுந்த பயிற்சியாளர்களிடம் இந்த தியானத்தைக் கற்றுக் கொள்வது சிறந்தது
    • உங்கள் மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் வையுங்கள்.

    ஆரம்பத்தில் இந்த தியானம் கஷ்டமாகத் தோன்றினாலும் செய்யச் செய்ய நாளடைவில் இது மிக சுலபமானதாக மாறி விடும். இதில் அந்தந்த சக்ராக்களின் பெயரைச் சொல்வதும், மந்திரங்களைச் சொல்வதும் சத்தமாகவோ, மனதினுள்ளோ உங்கள் வசதிப்படி சொல்லலாம். அந்தந்த சக்ராவின் சின்னங்களை உருவகப்படுத்திக் கொள்ள சிரமம் இருந்தால் அந்தந்த சக்ராவின் நிறமுள்ள சக்கரங்களாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம்.

    1) மற்ற தியானங்களைப் போலவே அமைதியான ஓரிடத்தில் உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ நிமிர்ந்து நேராக அமருங்கள். உங்கள் உள்ளங்கை மேலே பார்த்த வண்ணம் திறந்திருக்கும் படி தொடைகளில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள். கைகளின் கட்டை விரலின் அடிப்பாக நுனியில் சுட்டு விரல் நுனியை வைத்து ஒரு முத்திரையை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் வையுங்கள்.

    2) உங்கள் மூலாதாரச் சக்ராவை மனதில் அந்தச் சின்னமாகவோ அல்லது சிவப்பு நிறச் சக்கரமாகவோ உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி உருவகப்படுத்திக் கொள்ள ஆரம்பத்தில் சிறிது நேரம் தேவைப்படலாம். அவசரமில்லாமல் அமைதியாக உருவகப்படுத்திக் கொண்டு உங்கள் கவனத்தை அந்த சக்ராவிற்கு கொண்டு செல்லுங்கள். மனதில் இந்த சக்ரா சின்னமாகவோ, சிவப்பு நிற சக்கரமாகவோ பதிந்த பின்னர் "ஓம் மூலாதார" என்று சத்தமாகவோ, மனதிற்குள்ளோ சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது லா........ம்/ங் என்ற மந்திரத்தை சத்தமாகவோ, மனதிற்குள்ளோ நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள்.

    இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இப்படி லா........ம்/ங் மந்திரத்தை ஒரு முறையிலிருந்து ஏழு முறை வரை வெளிமூச்சு விடும் போது உச்சரிக்கலாம். இதைச் செய்யும் போது உங்கள் முழுக்கவனமும் இந்த சக்ராவிலேயே இருக்கட்டும். (நீங்கள் இந்த மந்திரத்தை எத்தனை முறை இந்த சக்ராவிற்குச் சொல்கிறீர்கிறீர்களோ அத்தனையே முறை தான் மற்ற ஆறு சக்ராக்களுக்கும் உரிய மந்திரத்தை நீங்கள் சொல்ல வேண்டும்.) முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்

    3) அடுத்ததாக உங்கள் கவனத்தை சுவாதிஷ்டானா சக்ரா அமைந்துள்ள இடத்திற்குக் கொண்டு செல்லுங்கள். அந்த சின்னமாகவோ, ஆரஞ்சு நிற சக்கரமாகவோ அந்த சக்ராவை அந்த இடத்தில் மனக்கண்ணில் காணுங்கள். உங்கள் உருவகம் தெளிவான பின் "ஓம் ஸ்வாதிஸ்தான" என்று சொல்லுங்கள். பின் மூச்சை உள்ளிழுக்கையில் இந்தச் சக்ரா நல்ல ஒளி பெறுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளி விடும் போது இந்த சக்ரா திறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். மூச்சை வெளியே விடும் போது வா........ம்/ங் என்ற மந்திரத்தை நிதானமாக உச்சரித்த படியே வெளியே விடுங்கள். இந்த மந்திர ஒலியால் அந்த திறக்கப்படும் சக்ரா சக்தி பெறுவதாக உணருங்கள். இந்த மந்திரத்தையும் நீங்கள் மூலாதார மந்திரத்தை எத்தனை முறை சொன்னீர்களோ அத்தனை முறை சொல்ல வேண்டும். முடிக்கையில் அந்த சக்ரா குறைபாடுகள் ஏதாவது இருந்திருக்குமானால் நீங்கி வலிமையடைந்து ஜொலிப்பதாக உணருங்கள்.

    4) இதே போல் மற்ற சக்ராக்களுக்கும் செய்தல் வேண்டும். மணிப்புரா சக்ராவுக்கு அந்த சின்னம் அல்லது மஞ்சள் நிற சக்கரம் நினைத்து "ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம்" என்று சொல்லி ரா........ம்/ங் என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் அனாஹத, ஓம் விஷுத்தி, ஓம் ஆஜ்னேய, ஓம் சஹஸ்ரார என்று சொல்லி, அந்தந்த சின்னங்கள் அல்லது அந்தந்த நிறச் சக்கரங்களை எண்ணி, முறையே யா........ம்/ங், ஹா.......ம்/ங், ஓ.......ம் (a…u….m), ஓ...கூம்...சத்யம்....ஓ...ம்" என்ற மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.

    5) சக்ராக்களின் பெயர்களைச் சொல்வதில் மணிபுரா சக்ராவிற்கு மட்டும் "ஓம் ஸ்ரீ மணிபத்மே ஹம்" என்று சொல்ல வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு ஓம் என்று சொல்லி அந்தந்த சக்ராவின் பெயரையே சொல்ல வேண்டும். அதே போல் மந்திர ஒலிகள் உச்சரிப்பதில் சஹஸ்ராரா சக்ராவுக்கு மட்டும் 'ஓகூம் சத்யம் ஓம்' என்ற மந்திரத்தைச் சொல்ல் வேண்டும். மற்ற சக்ராக்களுக்கு முன்பு நாம் சொன்ன மந்திரங்கள் தான். இந்த இரு வித்தியாசங்களைத் தவிர எல்லா சக்ராக்களையும் எண்ணி சக்ரா தியானம் செய்வது ஒரே மாதிரி தான். இதை நினைவில் கொள்ளவும்.

    இந்த சக்ரா தியானம் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் ஒவ்வொரு சக்ராவுக்கும் சமமான முக்கியத்துவத்தைத் தருவது முக்கியம். ஒரு சங்கிலியின் உண்மையான வலிமை அதன் மிக பலவீனமான பகுதியைப் பொறுத்தே இருக்கிறது என்று சொல்வார்கள். ஒரு பகுதி மிக வலிமையாக இருந்து இன்னொரு இணைப்பு மிக பலவீனமாக இருந்தால் அந்த இடத்தில் அது சுலபமாகத் துண்டிக்கப்படும் அல்லவா? அது போலத் தான் சக்ராக்களும்.

    எல்லா சக்ராக்களையும் சமமாக பாவித்து ஒரே மாதிரியான முக்கியத்துவம் அளியுங்கள். (குறிப்பு: கூடுமான அளவு எளிமையாக இந்த தியான செய் முறை விளக்கப்பட்டு இருந்தாலும் தகுந்த பயிற்சியாளர்களிடம் இருந்து இந்த தியானத்தைக் கற்றுக் கொள்வது சிறந்தது) (குண்டலினி சக்தியை மேலுக்குக் கொண்டு வருவதும் இந்த சக்ராக்கள் மூலமாகத் தான். மூலாதார சக்ராவில் உறங்கிக் கிடக்கும் குண்டலினியை சஹஸ்ரார சக்ராவிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வார்கள்.

    ஆனால் அதற்கு முறையான பயிற்சியும், கடுமையான கட்டுப்பாடும், தகுந்த சுத்தமான சூட்சுமமான மனநிலையும் இருப்பது மிக அவசியம். அதில் ஏதாவது சிறு குறைகள் ஏற்பட்டால் கூட பெரிய ஆபத்தை அவை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே முறையாக சரியாக தயார்ப்படுத்திக் கொள்ளாமல், உண்மையான நிபுணரின் கண்காணிப்பில் அல்லாது முயற்சி செய்வதும் ஆபத்தே. குண்டலினியை நான் எழுப்பிக் காட்டுகிறேன் என்று பலரும் இணையத்திலும், பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்வதை உடனே நம்பி ஏமாந்து விடாமல் இருப்பது நல்லது.

    மிகச் சிலரே உண்மையில் அதில் தேர்ச்சி பெற முடியும் என்பதையும் அதிலும் வெகுசிலரே பொது வாழ்வில் காணக் கிடைப்பார்கள் என்பதையும், அவர்களும் கூட தகுதிகளை பரிசோதித்து தெளிவடையாமல் கற்றுக் கொடுக்க முனைய மாட்டார்கள் என்பதையும் நினைவில் வைக்கவும்.) இந்த சக்ரா தியானம் உடலின் எல்லா சக்ராக்களையும் சூட்சுமமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆரோக்கியம், வலிமை, அறிவு, ஞானம் ஆகிய அனைத்துமே சக்ரா தியானம் செய்யச் செய்ய மேம்படும் என்பது உறுதி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தியானத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன் பேச்சை குறைத்து கொள்ளுங்கள்.
    • தியானத்தை எப்பொழுதும் மகிழ்ச்சியாக தொடங்குங்கள்.

    தியானத்தை விரும்பும் யாவரும் கீழ்க்காணும் 10 வழிமுறைகளை பின்பற்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும்.தியானம், மனதை ஒருமுகப்படுத்தி பல சாதனைகளை புரிய உதவுகிறது. தியானம் மனிதனை மலரைபோல் மென்மையாகவும் சிங்கத்தை போல் கம்பீரமாகவும் சூரியனை போல் பிரகாசமாகவும் வைத்திருக்கும். தியானத்தால் கிடைக்கும் நண்மைகள் ஏராளம்.

    தியானத்தை விரும்பும் யாவரும் கீழ்க்காணும் முறைகளை பின்பற்றி வந்தால் மிக எளிதாக பழக முடியும்.

    1. முதல் கட்டதியான முறையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை ஆழ்ந்து படித்து உணர்ந்த பின் தியானத்திற்கு உங்களை தயார் செய்து கொள்வது சிறப்பாகும். நாம் வசிக்கின்ற வீட்டில் தியானம் செய்வதற்கு நல்ல வசதியான இடத்தை தேர்ந்தெடுங்கள்.

    2. தியானத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன் பேச்சை குறைத்து கொள்ளுங்கள். தியானத்தின் இடையில் தடைகள் ஏற்பட்டால் பிறர் மீது கோபம் கொள்ளாதீர்கள். தியானத்தை எப்பொழுதும் மகிழ்ச்சியாக தொடங்குங்கள். அதே போல் மகிழ்ச்சியாக முடியுங்கள். தியானம் பழக ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் தடங்கல்கள் நிறைய வந்து உங்களை ஈடுபடவிடாமல் தடுக்கும்.

    3. ஆரோக்கியமான, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை அளவோடு மற்றும் நேரத்தோடு எடுத்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சியும் அவசியம் தேவை.

    4. தியானப்பாதையில் செல்லும்போது அவர்களை வழிநடத்தவும், கஷ்டம் வரும்போது உபதேசித்து தைரியம் கூறுவதற்கும் நிச்சயம் ஒரு குரு தேவை. தியானப் பாதையில் வெற்றி பெற்ற குருவாக ஒருவர் இருக்கவேண்டும் .

    5. மறதி, சோம்பல், அதீத தூக்கம் ஆகிய மூன்று குறைகளும் தியானத்தின் முக்கிய தடைகளாகும். பதஞ்சலி சந்தேகம் , மனச்சலிப்பு , சோம்பல் , அலட்சியம்,எழுச்சிகள், தவறாக புரிந்துக்கொள்ளுதல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

    6. அமர்வதற்கு உடலுக்கு அச்சுறுத்தல் இல்லாதவாறு மெத்தை அல்லது போர்வையை மடித்து பயன்படுத்தலாம். தியானம் பழகும் இடத்தை அடிக்கடி மாற்ற கூடாது. அமர்வதற்கு பயன்படுத்தும் போர்வைகளையும் மாற்றுதல் கூடாது. முடிந்தால் மனதுக்கு பிடித்த வாசனையுள்ள பத்தியை கொளுத்தி வையுங்கள்.

    7. அது இயற்கையின் விளையாட்டு. ஆதலால் மிகுந்த மன உறுதியுடன் பழகுங்கள். அப்படி ஒருவேளை இடையில் போக வேண்டி இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லி விட்டு தியானத்தை முடித்து விடுங்கள். காலையில் தியானம் செய்ய முடியாவிட்டால் மாலையில் செய்ய முடியும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.

    8. ஓசைகள், குப்பைக்கூளங்கள், தீயவர்கள் உடனிருக்கும் சூழல்களில் தியானம் செய்ய மனம் வராதுதான். முடிந்தவரை சூழலை மாற்றிக்கொள்ளுங்கள். இல்லையெனில், தியானம் மனதில்தானே நடக்கின்றது என்பதைத் தெளிவாக புரிந்துக்கொண்டு எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் தியானம் செய்யுங்கள் .

    9. நோய்கள் வந்தால் தியானத்தை நிறுத்துவது கூடாது. எப்படி ஒருவேளை உணவை நாம் எப்போதும் தவிர்க்க நினைப்பதில்லையோ, எந்த ஒரு நிமிடமும் நாம் சுவாசிப்பதை எப்படி நிறுத்துவதில்லையோ அதுபோல தியானமும் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாற வேண்டும். ஆசனம், தியானம், பிராணாயாமம் ஆகியவற்றை தொடர்ந்து செய்யுங்கள் நோய்களைத் தவிருங்கள்.

    10. தியானத்தை விட்டு விட்டு செய்யாதீர்கள். கண்ட நேரத்திலும், கண்ட இடங்களிலும் அதை செய்யாதீர்கள். காலை 4 மணிக்கோ அல்லது 6 மணிக்கோ, மாலை 6 மணிக்கோ அல்லது இரவு 8 மணிக்கோ தொடர்ந்து ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் செய்வதை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

    மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி தியானத்தை முறையாக கடைபிடிக்க வாழ்த்துக்கள்!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இது உடல் முழுவதுக்குமான பிராணாயாமம்.
    • தூக்கமின்மை பிரச்சனை குணமாகும்.

    இது உடல் முழுவதுக்குமான பிராணாயாமம்.

    சூடு இல்லாத சமமான ஒரு தரையில் விரிப்பைப் போட்டு, தரையில் முதுகு படும்படி மல்லாந்து படுங்கள். கைகளையும் கால்களையும் நன்றாக நீட்டிக்கொள்ளுங்கள். உடல் உறுப்புகளை விறைப்பு இன்றி கிடத்துங்கள். பக்கவாட்டில் நீண்டு கிடக்கும் கைகளில் உள்ளங்கைகள் மேலே பார்த்தபடி இருக்கட்டும். மூட வேண்டாம். பாதங்கள் நேரே சற்று விலகி இருக்கட்டும். உடலின் தசைகள், நரம்புகள், உறுப்புகள் எல்லாம் தளர்ந்து இருக்கட்டும். அகலமாக இருந்தால் கட்டிலில் கிடந்து இதைப் பண்ணலாம்.

    இரு மூக்குத் துளைகள் மூலமாக ஓசையின்றி மூக்கு சுருங்குதலோ, விரிதலோ இல்லாமல் மெள்ள சீராக மூச்சை உள்ளே இழுங்கள். முடியும் வரை சிரமம் இல்லாத வரையில் மூச்சை உள்ளே நிறுத்துங்கள். விடத் தோன்றும்போது இரு மூக்கின் வழியாகவும் மெள்ளச் சீராக மூச்சை, தொடர்ச்சியாக வெளியே விடுங்கள்.

    இப்படி காலையில் 10 முறையும், மாலையில் 10 முறையும் செய்து பழகுங்கள். மூச்சை இழுக்கும்போதும் விடும்போதும் 'ஓம்' என்று ஜபிக்கலாம். கும்பகத்தின்போதும் ஜபிக்கலாம்.

    பலன்கள்: மனமும் உடலும் பூரண ஓய்வுகொள்கிறது. கொஞ்சம் வயதானவர்கள் சுகமாக இதைப் பயிற்சிக்கலாம். மனக்கொதிப்பு, மன அழுத்தம், மறதி, படபடப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமாகும். இதயம் இதமாக இருக்கும். தூக்கமின்மை பிரச்சனை குணமாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விளக்கின் முன்பு அமர்ந்து அதன் ஒளியை இடைவிடாமல் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
    • நம்மை அறியாமல் நமக்குள் ஒரு ஆனந்தம் ஏற்படும்.

    பொதுவாக தியானத்தை இரண்டு வழிகளின் செய்யலாம். ஒன்று கண்களை மூடிக்கொண்டு செய்வது இன்னொன்று கண்களை திறந்து கொண்டு செய்வது. கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வதென்பது அவ்வளவு எளிதான விடயம் அல்ல. அனால் கண்களை திறந்துகொண்டு எளிதாக தியானம் செய்யலாம். வாருங்கள் கண்களை திறந்து தியானம் செய்யும் முறை பற்றி விரிவாக பாப்போம்.

    வீட்டில் சத்தம் இல்லாத ஒரு அறையில் அமர்ந்து கொண்டு, அந்த அறையில், நான்கு சதுரம் உள்ள தகரக் கண்ணாடிக் கூண்டு விளக்கை வைக்க வேண்டும். அதன் மத்தியில் ஒரு அகல் விளக்கோ அல்லது வேறு ஏதாவது ஒரு விளக்கோ வைத்து. அதில் திரி போட்டு பின் நல்லெண்ணெயோ அல்லது தேங்காய் நல்லெண்ணெயோ ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அந்த விளக்கின் முன்பு அமர்ந்து அதன் ஒளியை இடைவிடாமல் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    நம்மால் எவ்வளவு நேரம் தொடந்து அந்த ஒளியை பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். விளக்கில் இருந்து வரும் ஒளியானது நமது கண்கள் வழியாக ஊடுருவி ஆன்மாவை தொடும். இதனால் நம்மை அறியாமல் நமக்குள் ஒரு ஆனந்தம் ஏற்படும். இதை நாம் தொடர்ந்து செய்தால் நமக்குள் ஒரு பேராற்றல் வெளிப்படும். நம்முடைய மனது நம் கட்டுப்பாட்டிற்குள் எளிதில் வரும்.

    இந்த வகையான தியானத்தை செய்வதற்கு நேரம் காலம் எல்லாம் பார்க்க தேவை இல்லை. நமக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் செய்யலாம். இதை தொடர்ந்து ஒரு ஐந்து நாட்கள் செய்தால் அதன் பிறகு இதில் உள்ள மகிமையை புரிந்து நாமே இதை தொடர்ந்து செய்ய ஆரமித்துவிடுவோம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மனதைக் கட்டுப்படுத்த நம் முன்னோர்கள் காட்டிய வழி தியானம்.
    • தியானம் செய்யும் நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாம்.

    நன்மை தீமையை பிரித்து செயல்படும் தன்மை மனிதனுக்கு மட்டுமே உள்ளது. எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அது நல்லது என்று உணர்ந்தால் மட்டுமே மனிதனால் அதை செய்ய முடிகிறது. எது நல்லது, எது கெட்டது என்பதை நம்முடைய மனது தீர்மானிக்கிறது. அப்படிப்பட்ட மனதை கட்டுப்படுத்தி நல்ல வழிப்படுத்த வேண்டியது நம்முடைய கடமையாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த தவறும் போது பிரச்னைகள் எழுகின்றன. மனித மனம் குரங்கு போன்றது. ஒரு இடத்தில் நிலையாக இருக்காது. தாவிக் கொண்டே இருக்கும். மனதைக் கட்டுப்படுத்தாவிட்டால் மனிதனுக்கும் விலங்குக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும்.

    மனதைக் கட்டுப்படுத்த நம் முன்னோர்கள் காட்டிய வழி தியானம். தியானம் மனதை மட்டுமல்ல உடலையும் காக்கும் தன்மை கொண்டது. ஒருவர் தன் மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவருக்கு நல்ல எண்ணங்கள் மேலோங்கும். உடலும் மனமும் ஆரோக்கியமடையும்.

    எல்லோராலும் தியானம் செய்ய முடியும். அதற்கு சில வழிகாட்டுதல்கள் உள்ளன. சுயமாக முயல்வதில் தவறு இல்லை. இருப்பினும் ஒரு வழிகாட்டியை அணுகி தியானப் பயிற்சி பெறுவது நல்லது.

    தினம் செய்ய சலனமற்ற, அமைதியான, எழில் மிக்க, இனிய சூழல் அவசியம். இதற்கு அதிகாலை நேரம் சரியானதாக இருக்கும். பிரம்ம முகூர்த்தம் என்று கூறப்படும் நேரத்தில் தியானம் செய்யலாம். இது போன்ற அமைதியான சூழல் இருந்தால் மாலை நேரத்திலும் கூட தியானம் செய்யலாம்.

    குறைந்த ஒளி, இதமான சூழல், அமைதியான இடம், நறுமணம் வீசும் காற்று போன்றவை தியானத்தில் மனம் ஈடுபடுவதை மேலும் உறுதி செய்யும்.

    மெல்லிய, இனிய இசையைக் கேட்ட படி தியானம் செய்யும்போது மூளை நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, மன இறுக்கம் குறையும்.

    காலையில் எழுந்து குளித்துவிட்டு அல்லது கை, கால், முகத்தை கழுவிவிட்டு, தளர்வான ஆடை அணிந்து பத்மாசம் அல்லது சம்மணம் போட்டு தரையில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். தரையில் அமர முடியாதவர்கள் சௌகரியமாக நாற்காலியில் அமர்ந்தும் செய்யலாம்.

    தொடையின் மீது உள்ளங்கை மேற்புறம் இருப்பது போல வைக்க வேண்டும். சின்முத்திரை எனப்படும் கட்டை விரல் நுனியையும் ஆட்காட்டி விரல் நுனியையும் தொட்டபடி அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும்.

    மூச்சை ஆழமாக உள் இழுத்து சில விநாடிகள் நிறுத்தி நிதானமாக வெளியே விட வேண்டும். இப்படிச் செய்யும்போது ஒருவித சக்தி நம் உடலுக்குள் பாய்வதை உணரலாம்.

    தொடக்கத்தில் நீண்ட நேரம் தியானம் செய்வது இயலாத காரியம் போலத் தெரியும். எனவே, 5 – 10 நிமிடங்களுக்கு தியானம் செய்ய இலக்கு நிர்ணயித்து செய்ய வேண்டும். தொடர்ந்து செய்யும்போது தியானம் செய்யும் நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆக்ஞா தியான பயிற்சியை தினமும் செய்து வந்தால் நிச்சயமாக நமது மூளையின் திறன் மேம்படும். நாம் நமது மூளை திறனால் அளவிடற்கரிய சாதனைகளை உலகில் நிகழ்த்தலாம்.
    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கை சின் முத்திரையில் வைக்கவும். பெருவிரலால் ஆள்காட்டிவிரல் நுனியை தொடவும். இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஐந்து முறைகள் செய்யவும். பின் உங்களது மனதை நெற்றிப் புருவ மையத்தில் கூர்ந்து தியானிக்கவும். நல்ல பிராண சக்தி அந்தப் பகுதி முழுவதும் கிடைப்பதாக எண்ணவும். ஐந்து நிமிடங்கள் நெற்றிப் புருவ மையத்தில் நிதானமாக தியானிக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

    மேற்குறிப்பிட்ட பயிற்சியை தினமும் பயிலுங்கள். நிச்சயமாக நமது மூளையின் திறன் மேம்படும். நற்சிந்தனை பிறக்கும். நாம் நமது மூளை திறனால் அளவிடற்கரிய சாதனைகளை உலகில் நிகழ்த்தலாம். புது புது கண்டுபிடுப்புகளை சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கலாம். உங்கள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே கற்றுக்கொடுங்கள். வளர்ந்து வரும் பொழுது சிறந்த அறிஞர்களாக அவர்கள் நினைத்த துறையில் சாதனை புரிந்து வெற்றியாளர்களாக விஞ்ஞானிகளாக உருவாகுவது உறுதி.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நம்மில் பலர் பல மணி நேரத்தை உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுகிறோம், ஆனால் நம்முடைய பெரிய சொத்தான நமது மனதிற்கான பயிற்சியை செய்ய மறந்து விடுகிறோம்.
    நாம் சில நேரங்களில் உண்மையில் கோபமோ அல்லது விரக்தியோ அடைந்த நிமிடங்கள் இருக்கும், ஆனால் நமக்கு நினைவில் வைத்திருக்க வேண்டும் : “அதிக அன்பானவராக இருங்கள்” ஏனெனில் இந்த மனநிலையோடு தேவையான தியான பயிற்சியும் சேர்ந்தால் நாம் பழக்கப்படுவோம், நம்மால் உடனுக்குடன் அதனை உருவாக்க முடியும்.

    யாருமே நிறைவானவர் அல்ல, நாம் அனைவருமே ஏதோ ஒரு தீய பழக்கத்தை கண்டறிந்து அதில் இருந்து வெளியேற நினைக்கிறோம். அதிர்ஷ்டவசமாக இந்த பழக்கங்கள் மாற்ற முடியாத கற்களில் செதுக்கியதாக இல்லாமல், மாற்றிக்கொள்ளும் வகையில் உள்ளன.

    இந்த மாற்றம் தேவை தான் ஆனால் அதற்கு நம்முடைய சொந்த முயற்சியும் முக்கியம். நம்மில் பலர் பல மணி நேரத்தை உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுகிறோம், ஆனால் நம்முடைய பெரிய சொத்தான நமது மனதிற்கான பயிற்சியை செய்ய மறந்து விடுகிறோம். தொடக்கத்தில் இது கடினம் தான், ஆனால் ஒரு முறை தியானம் நம் வாழ்வில் கொண்டு வந்திருக்கும் பலன்களைப் பார்த்துவிட்டால், நமது மனதிற்காக நேரத்தை முதலீடு செய்து செயலாற்றுவதில் நாம் மகிழ்ச்சியடைவோம்.

    மனதின் நன்மை பயக்கும் நிலைகளை மேம்படுத்தும் ஒரு வழிமுறையே தியானமாகும். மனதின் சில நிலைகளை உருவாக்க அதுவே பழக்கமாகும் வரை திரும்பத் திரும்ப செய்கிறோம். உடல் அளவில் தியானம் என்பது புதிய நரம்பியல் பாதைகளை கட்டமைப்பதாகக் காட்டுகிறது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print