என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Osteoarthritis"

    • வாடிப்பட்டி யூனியன் குட்லாடம்பட்டியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • 6 மாநில ரெட்டி நலச்சங்கம் மற்றும் திருநெல்வேலி சக்தி மருத்துவமனை இணைந்து இந்த முகாமை நடத்தியது.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி யூனியன் குட்லாடம்பட்டியில் 6 மாநில ரெட்டி நலச்சங்கம் மற்றும் திருநெல்வேலி சக்தி மருத்துவமனை இணைந்து எலும்புமூட்டு நோய் மற்றும் மகப்பேறு நோய்க்கான இலவச மருத்துவமுகாம் நடந்தது. யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா தலைமை தாங்கினார். சங்க தலைவர் வைத்தியலிங்கம் தொடங்கி வைத்தார். ஆலோசகர் பட்டாபிராமன், துணைத் தலைவர் செல்வகுமார், வழக்கறிஞர் கிருபாகரன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கதிரவன் வரவேற்றார்.

    அகில இந்திய ரெட்டி நல சங்க பொருளாளர் கே.ஆர்.முரளிராமசாமி, திருமங்கலம் மோனிகா சதீஷ், கார்த்திக் செல்வம் ஜெ.சி.பி.ரங்கசாமி, பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர். மருத்துவர்கள் வெங்கடேஷ் பாபு, சுமதி தலைமையில் மருத்துவகுழுவினர் 345 பேருக்கு மருத்துவஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.

    • கழுத்தெலும்பு தேய்மானம் என்பது சித்த மருத்துவத்தில் 'சகன வாதம்' எனப்படும்.
    • உடற்பருமன் இருந்தாலும் கழுத்துவலி வரும்.

    கழுத்தெலும்பு தேய்மானம் என்பது சித்த மருத்துவத்தில் 'சகன வாதம்' எனப்படும். செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்' என்பது இதன் மருத்துவப்பெயர். கழுத்து முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள 'டிஸ்க்' அல்லது சவ்வு தேய்ந்து போவது அல்லது விலகி விடுவது போன்ற காரணங்களால் கழுத்து வலி வருகிறது.

    தொழில் ரீதியாக ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, எடுத்துக்காட்டாக, கம்ப்யூட்டர் டெய்லரிங், டிரைவிங் போன்ற வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவது. இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது செல்போனில் பேசிக்கொண்டு செல்வது மற்றும் தொடர்ச்சியாக பயணம் செய்வதும் கழுத்துவலியை வரவழைத்து விடும்.

    உடற்பருமன் இருந்தாலும் கழுத்துவலி வரும். இந்த நோயின் ஆரம்பத்தில் கழுத்தில் மட்டும் வலி ஏற்படும். பிறகு தோள்பட்டைக்கு வலி பரவும். கைகளில் குடைவது போல் வலிக்கும். விரல்கள் வரை வலி பரவக்கூடும். சிலருக்குக் கை, விரல்கள் மரத்துப்போவதும் உண்டு. நாளாக ஆக கழுத்தைத் திருப்பும் போது கழுத்து வலியுடன், தலைச்சுற்றலும் ஏற்படும்.

    வாழ்க்கை முறை:

    எப்போதும் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். நீண்ட நேரம் உட்காரும் போது அடிக்கடி கழுத்தை மெதுவாக வலது, இடது பக்கம் திருப்ப வேண்டும். அதுபோன்று மேலேயும் கீழேயும், அசைக்க வேண்டும். மிருதுவான சிறிய தலையணையை பயன்படுத்த வேண்டும். உடல் பருமனை குறைக்க வேண்டும்.

    சித்த மருத்துவம்:

    1) அமுக்கிரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி., முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி., குங்குலிய பற்பம் 200 மி.கி. இவைகளை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா லேகியம் அல்லது தண்ணீர் விட்டான் கிழங்கு லேகியம் 1 முதல் 2 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    3) தண்டுவட பிரச் சினைகளுக்கு எண்ணெய் மசாஜ் மற்றும் வர்ம முறை மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரி தைலம், விடமுட்டி தைலம், சுக்கு தைலம், உளுந்து தைலம் இவைகளில் ஏதேனும் ஒன்றை மேலி ருந்து கீழ் நோக்கி நன்றாக தேய்த்து விட வேண்டும். வெந்நீரில் குளிப்பது மிகவும் சிறந்தது.

    4) வாத மடக்கி, வாத நாராயணன், தழுதாழை, நொச்சி, முடக்கத்தான், பழுத்த எருக்கம் இலை இவை களை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி வலியுள்ள இடங்களில் ஒத்தடமிட வேண்டும். 5)உணவில் கால்சியம், வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள பால், தயிர், முட்டை, மீன், இறைச்சி, பசலைக் கீரை, முருங்கைக்கீரை, பிரண்டைத் தண்டு, பாலக் கீரை, உளுந்து, வெந்தயம், பாதாம், வால்நட், எலும்பு சூப் இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • கால் மூட்டுகளை சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் வீக்கம் ஏற்படலாம்.
    • வயதாகும் போது கீல் வாதத்தின் பாதிப்பு அதிகரிக்கிறது.

    பொதுவாக கால் மூட்டுகளில் ஏற்படுகின்ற காயங்களால் வீக்கம் அல்லது வலி மூட்டுகளில் ஏற்படுகிறது. இந்த காயங்கள் மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகள், தசைநார்கள், எலும்புகள் அல்லது தசைகளுக்குள் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    ஆனால் பெரும்பாலும் எலும்பு குருத்தெலும்பு தேய்வால் இரு கால் மூட்டுகளில் வரும் கீல் வாதம் தான் அதிகம். இது வயதானவர்களையும், மகளிரையும் மிக அதிகமாக பாதிப்படையச் செய்கிறது.


    காரணங்கள்

    கீல் வாதத்தில் கால் மூட்டுகளில் உள்ள எலும்புகளின் முனைகளை, குஷன் போன்று பாதுகாக்கும் குருத்தெலும்பு படிப்படியாக பலகீனமடைந்து, இறுதியாக, குருத்தெலும்பு முற்றிலும் தேய்ந்துவிடுகிறது.

    மூட்டுகளிடையே உள்ள சினோவியல் திரவமும் அளவில் குறைகிறது. இதனால் கால் முட்டி எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி, கடுமையான கால்வலி, வீக்கம், நடக்கும் போது சொடக்கு விடுவது போன்ற சத்தம் இவற்றை ஏற்படுத்துகிறது.

    வயதாகும் போது கீல் வாதத்தின் பாதிப்பு அதிகரிக்கிறது. பெண்களுக்கு கீல் வாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஆண்களை விட அதிகம்.

    மாதவிடாய் முடிந்த மகளிருக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாட்டால் எலும்பு அடர்த்தி குறைவது இதற்கு முக்கிய காரணமாகும். விளையாடும்போது அல்லது விபத்தினால் ஏற்படும் காயங்கள், கீல்வாதத்தின் அபாயத்தை அதிகரிக்கலாம்.


    அறிகுறிகள்

    நடக்கும் போது, தரையில் உட்காரும் போது, நிற்கும் போது, பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வலி அதிகமாக உணரப்படும். காலையில் எழுந்தவுடன் கால் மூட்டுகள் விறைப்பு நிலையில் இருக்கும். இதனால் நடப்பதற்கு சிறிது நேரம் சிரமமாக இருக்கும்.

    கால் மூட்டுகளை சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் வீக்கம் ஏற்படலாம். சில வளர்சிதை மாற்ற நோய்கள், நீரிழிவு மற்றும் உடலில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் நிலை (ஹீமோக்ரோமாடோசிஸ்) ஆகியவை கீல் வாத பிரச்சனையை அதிகரிக்கும்.


    தவிர்க்க வேண்டியவை

    உடல் பருமன் இருந்தால் அதை குறைக்க வேண்டும். மென்மையான உடற்பயிற்சிகள் பயன் தரும். எலும்புகளின் அடர்த்திக்கு கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சைவ-அசைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

    தினமும் அதிகாலை வெயில் அல்லது மாலை இளவெயிலில் சிறிது நேரம் நடக்கலாம். கால்மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தவும், நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும் மற்றும் வலியைக் குறைக்கவும் பிசியோ தெரபி சிகிச்சை உதவுகிறது. குளிப்பதற்கு வெந்நீர் சிறந்தது. புளிப்பு சுவை உள்ள உணவுகளை அளவோடு எடுக்க வேண்டும்.

    ×