என் மலர்
நீங்கள் தேடியது "Osteoarthritis treatment"
- எலிகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்தது.
- எளிய மருந்துகள் மூலமே மூட்டு தேய்மானத்தை குணப்படுத்த உதவலாம்
இன்றைய காலக்கட்டத்தில் அவசர உலகத்தில் இயந்திர தனமாக அனைவரும் ஓடிக் கொண்டே பூமியை விட வேகமாக சுழன்று கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் நாம் நிற்க நடக்க, உட்கார வேலை செய்ய வாகனங்களை இயக்க என எல்லா விதத்திலும் நமக்கு கால்கள் மிகவும் அவசியம். அவ்விதத்தில் முழங்கால் மூட்டு வலி (Knee Pain) என்பது அனைவருக்கும் தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக உள்ளது. அதிலும் 40-50 வயதை கடந்த பெண்களும், ஆண்களும் சற்று அதிகப்படியாகவே அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மூட்டுத் தேய்மான சிகிச்சைக்கு புதிய முறையை அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மூட்டுகளில் தேய்ந்து போன குருத்தெலும்புகளை (Cartilage) மீண்டும் இயற்கையாக வளரச் செய்யும் முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து அசத்தியுள்ளார்
வயது முதிர்வால் மூட்டுகளில் அதிகரிக்கும் 15-PGDH என்ற புரதத்தைச் செயலிழக்கச் செய்து, உடலில் உள்ள ஸ்டெம் செல்களைத் தூண்டி இயற்கையாகவே குருத்தெலும்புகளை மீண்டும் வளரச் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
எலிகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்ததாகவும், இதன் மூலம் எதிர்காலத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் எளிய மருந்துகள் மூலமே மூட்டு தேய்மானத்தை குணப்படுத்த உதவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மருத்துவர்களின் சங்கம் சார்பில் திண்டுக்கல்லில் 2 மாநாடு நடைபெற்றது.
- சிறந்த ஆய்வறிக்கையாக தேர்வு செய்யப்பட்டு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
உடுமலை:
திண்டுக்கல் மாவட்ட எலும்பு முறிவு மூட்டு நோய் சிகிச்சை மருத்துவர்களின் சங்கம் சார்பில் திண்டுக்கல்லில் 2 மாநாடு நடைபெற்றது.
இதில், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டு, எலும்பு முறிவு மற்றும் மூட்டு நோய் பற்றிய ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர். இதில், உடுமலையைச் சேர்ந்த எலும்பு முறிவு மூட்டு நோய் சிகிச்சை மையத்தின் தலைமை மருத்துவர் சுந்தர்ராஜன் கலந்துகொண்டு, எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்த பின், எலும்புகள் கூடாமல் இருப்பது பற்றியும், அதை சரி செய்வது எப்படி என்பது பற்றியும் அறிக்கைசமர்ப்பித்தார்.
இது சிறந்த ஆய்வறிக்கையாக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இந்த விருதை மூட்டு நோய் சிகிச்சை மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரமேஷ் வழங்கினார். மருத்துவ சங்க மாநிலச் செயலாளர் நவீன்தக்கார் மற்றும் பல்வேறு மருத்துவர்கள் டாக்டர் சுந்தர்ராஜனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.






