search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Researchers"

    • முதல்கட்ட மாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது.
    • ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் ஆய்வு நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் இருந்த குழியில் பிரமாண்டமாக இரும்பால் செட் அமைக்கப்பட்டு, அதன் மேல் கண்ணாடி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    செய்துங்கநல்லூர்:

    இந்தியாவில் 5 இடங்களில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதில் தமிழ்நாட்டில் ஆதிச்ச நல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டி ருந்தார்.

    அடிக்கல் நாட்டுவிழா

    இதையடுத்து முதல்கட்ட மாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது. அகழாய்வு பணிகள் நிறைவடைந்து தற்போது ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    இதற்கிடையில் தற்போது ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலை ஓரத்தில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வருகின்ற 5-ந் தேதி ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்ப தற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளதாக ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆராய்ச்சியாளர்கள் தகவல்

    இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய தொல்லியல் துறை தலைமை இயக்குநர் கிஷோர் பாஷா, கூடுதல் தலைமை இயக்குநர் குருமீட் சாவ்லா, இந்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண் ராஜ் ஆகியோர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்து பேசினர்.

    அதில் வருகின்ற 5-ந் தேதி ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ள தகவலை தெரிவித்தனர். அதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அனுமதி அளித்துள்ளார். இந்த தகவலை ஆய்வாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

    முதுமக்கள் தாழிகள்

    இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் ஆய்வு நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் இருந்த குழியில் பிரமாண்டமாக இரும்பால் செட் அமைக்கப்பட்டு, அதன் மேல் கண்ணாடி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் மூலம் கண்ணாடியின் மேல் இருந்த படியே உள்ளே உள்ள பொருட்களை பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் முக்கியமான ஆய்வாளர்கள் அதிகாரிகள் வரும்போது கீழே இறங்கி சென்று பார்க்கும் வண்ணம் இந்த இடத்தில் இந்த செட் அமைக்கப்பட்டு வருகிறது. ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் தேர்வு செய்யப் பட்டுள்ள இடத்தில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது.

    இதற்கான நிகழ்ச்சி ஆகஸ்ட் 5-ந் தேதி நடை பெறுகிறது. இந்த நிகழ்ச்சிகள் மாலையில் நடைபெற உள்ளதாகவும், முதலில் சி சைட்டிலும், பின்னர் பி சைட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிடுகிறார். அதன்பின்னர் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளார் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • சிவன் கோவிலில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினார்கள்.
    • இன்னும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் பல உண்மைகள் தெரிய வரும் எனவும் தெரிவித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ள பறவை அன்னம் காத்தருளியசாமி கோவிலில் வரலாற்றுக் கள ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினார்கள்.

    ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் பல உண்மைகள் தெரிய வந்துள்ளது கிபி 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் 12-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

    தற்போது உள்ள பறவை அன்னம் காத்தருளிய சுவாமி விக்ரகம் ஏற்கனவே உள்ள ஒரு பாழடைந்த மண்டபத்தில் இருந்ததாகவும் தற்போது பாதுகாப்பு காரணம் கருதி அந்த மண்டபத்திலிருந்து வேறொரு மண்டபத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கன்னிமூல திசையில் இருந்த கணபதி தற்போது சிவன் உள்ள கருவறையில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் முருகன் சந்நிதியும் இதர சன்னதிகளும் பாழடைந்த நிலையில் காணப்பட்டுள்ளன. இந்த சன்னதிகளை தொல்பொருள் ஆராய்ச்சி துறை சார்பில் ஆய்வு செய்து உரிய ஏற்பாடுகள் செய்தால் பல உண்மைகள் தெரியவரும் எனவும் வரலாற்று கள ஆராய்ச்சியா ளர்கள் தெரிவிக்கின்றனர்.

    வரலாற்று கள ஆராய்ச்சி யாளர் சார்பில் வெங்கடேஷ், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, சுகாதார ஆய்வாளர்கள் காளி, பழனி குரு உள்பட பலர் இதில் கலந்துகொண்டு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இன்னும் ஆராய்ச்சி களை மேற்கொண்டால் பல உண்மைகள் தெரிய வரும் எனவும் தெரிவித்தனர்.

    இறுக்கமாக உள்ளாடை அணியும் ஆண்களுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். #Fertility
    பாஸ்டன்:

    அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஆஸ்பத்திரிகளில் குழந்தை பேறுக்காக 656 பெண்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அதற்கான காரணம் குறித்து பாஸ்டனில் உள்ள லிடியா மிங்குயஷ்-அலார்சன் நிறுவனத்தின் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இவர்கள் அனைவரும் 18 முதல் 56 வயது நிரம்பியவர்கள். குழந்தை பேறுக்காக சிகிச்சை பெறும் பெண்களின் கணவன்மார்களிடம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

    அவர்களின் விந்து பரிசோதிக்கப்பட்டது. அவற்றில் குறைந்த எண்ணிகையிலான உயிரணுக்கள் இருந்தன. அவை விரைவாக சென்று கருமுட்டையை அடையும் தன்மையற்றவையாக இருந்தன.


    அதே நேரத்தில் தளர்வான உள்ளாடை அணிந்த ஆண்களின் விந்து பரிசோதிக்கப்பட்டது. அதில் 25 சதவீதம் உயிரணுக்களின் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகமாகும். 25 சதவீதம் கூடுதல் வீரிய சக்தி இருப்பதும் கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் குழந்தை பாக்கியம் உள்ளவர்களாகவும் இருந்தனர். விந்து உற்பத்திக்கு உடலின் வெப்ப நிலை 3 முதல் 4 டிகிரிக்கு கீழே இருக்க வேண்டும். ஆனால் இறுக்கமாக உள்ளாடை அணியும் ஆண்களின் விரைப்பையில் வெப்பத்தை அதிகரித்து விந்து உற்பத்தியை குறைக்கிறது.

    அதே நேரத்தில் தளர்வாக உள்ளாடை அணியும் ஆண்களின் விரைப்பையில் வெப்பத்துக்கு பதிலாக குளிர்ச்சியை ஏற்படுத்தி விந்து உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. இதுவே இவர்களின் குழந்தை பேறுக்கு காரணமாக அமைகிறது.

    எனவே இறுக்கமான உள்ளாடை அணியும் ஆண்களுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இக்கட்டுரை ‘மனித உற்பத்தி’ என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இக்கருத்தை நிபுணர்கள் பலர் ஆதரித்துள்ளனர். #Fertility 
    ×