search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Human Brain"

    • மூளையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
    • மனித உடலில் கொழுப்பால் ஆன முக்கிய உறுப்பும் மூளைதான்.

    மனித மூளையைப் பற்றி ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. அதன் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தும் மூளையின் எடை 1.37 கிலோ. 60 சதவீதம் கொழுப்புகளால் ஆன ஓர் உறுப்பு. அத்துடன் மனித உடலில் கொழுப்பால் ஆன முக்கிய உறுப்பும் மூளைதான்.

    23 வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் மனித மூளையிடம் இருக்கிறது. உடலில் உற்பத்தியாகும் ரத்தம் மற்றும் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை மூளை எடுத்துக்கொள்கிறது. இன்னும் மூளையின் முக்கியத்துவத்தை அடுக்கிக்கொண்டே போகலாம்.

     உடலின் மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதிதான் நம்முடைய மூளை. தகவல்களை பெறுவதற்கும் அனுப்புவதற்கும் அதிக திறனை கொண்டுள்ளது மூளை பகுதி. மூளையின் அமைப்பானது 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை முன் மூளை, நடு மூளை, பின் மூளை என்று தனி தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. உடலில் அதிகமாக ஆற்றலை அதிகரிக்கக்கூடியது மூளை பகுதி தான்.

    வயது வந்தவர்களின் மூளையானது சுமார் 1.4 கிலோ கிராம் எடை அளவிற்கு இருக்கும். மனிதரின் உடல் எடையில் மூளையானது 2 சதவிகிதத்தினை கொண்டுள்ளது.

    பெண்கள் மூளையை விட 10% ஆண்களுடைய மூளையானது பெரியது. ஆண்களின் மூளையானது கிட்டத்தட்ட 1274 கன செ.மீ அளவிற்கு இருக்கும். சராசரியாக பெண்களின் மூளையின் அளவானது 1131 கன செ.மீ அளவு இருக்கும்.

    மூளையின் முக்கியப் பகுதியாக இருப்பது பெருமூளை. மண்டை ஓட்டின் முன் பகுதியில் அமைந்துள்ள மூளையின் முக்கிய பகுதியாக விளங்கும் பெருமூளையின் எடை 85 சதவீதம் இருக்கும். மூளையானது 75 சதவீதம் நீரினை கொண்டது. அதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து காணப்படும் போது மூளையின் செயல்பாடுகளில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.

    மனித மூளையானது சுமார் 18 வயதில் இருந்து வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். 25 வயதில் முழு முதிர்ச்சியை மூளை அடைகிறது. முதல் வருடத்தில் இதனுடைய வளர்ச்சி மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.

     கழுத்து பகுதி, தலையின் தசைகள் மற்றும் நரம்புகளுடன் சேர்ந்து மூளையில் ஏற்படக்கூடிய ரசாயன எதிர்வினை காரணமாக தலைவலி பிரச்சனை உண்டாகிறது. மனித மூளையில் சுமார் 10,000 கோடி நியூரான்கள் உள்ளது.

    மனிதர்கள் தங்களுடைய மூளையில் 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பது தவறான விஷயம். உண்மையில் நாம் மொத்த மூளையையும் பயன்படுத்துகிறோம். இரவில் தூங்கும் பொழுது 10 சதவீதத்திற்கும் மேலாக மூளையை பயன்படுத்துகிறோம்.

    நீங்கள் கண்களால் பார்க்கக் கூடிய, மனதால் நினைக்கக்கூடிய, செய்யக்கூடிய எல்லா தகவல்களும் உங்களுடைய மூளையில் உள்ள நியூரான்களுக்கு இடையில் நடைபெறுகிறது. நியூரான்கள் தகவல்களை வேறுபட்ட வேகத்தில் நகர்த்துகிறது. நியூரான்களுக்கு இடையில் தகவல்கள் அதிகபட்சமாக 402 கிலோமீட்டர்கள் வேகத்தில் அனுப்பப்படுகிறது.

    மனித மூளையனாது 20 வயதிற்கு பிறகு சில நினைவு திறன மற்றும் அறிவாற்றல் திறனை இழக்க தொடங்குகிறது. நமக்கு வயது அதிகரிக்கும் போது மூளை பகுதியானது சிறியதாக தொடங்கும். மனித மூளையில் 160000 கிலோமீட்டர் நீளத்திற்கு ரத்த நாளங்கள் உள்ளது.

    மூளையானது நமது உடலில் 20 சதவீதம் ஆக்சிஜன் மற்றும் ரத்தத்தை பயன்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் இதயம் துடிக்கும் போது தமனிகள் உங்கள் ரத்தத்தில் 20 முதல் 25 சதவீதம் அளவிற்கு மூளைக்கு எடுத்துச் செல்கிறது. ஒவ்வொரு நிமிடமும் 750-ல் இருந்து 1000 மில்லி லிட்டர் ரத்தம் மூளை வழியாக செல்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனித மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தி சோதிக்கும் ஆய்வுக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.
    • சோதனையை சில மாதங்களில் நியூராலிங்க் நிறுவனம் தொடங்க உள்ளது.

    வாஷிங்டன்:

    உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளையில் "சிப்" பொருத்தி கணினியுடன் இணைத்து, நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு தொழில்நுட்பம் மூலம் மருத்துவ உதவிகளை வழங்க ஆய்வு நடத்தி வருகிறது.

    நரம்பியல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களும், பக்கவாதம், பார்வை குறைபாடு உள்ளவர்களும் ஸ்மார்ட்போன் கணினி போன்ற ஸ்மார்ட் டிவைஸ்களை எளிதாக பயன்படுத்தும் நோக்கத்துடன் அவர்களது மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

    இதன் மூலம் கண் பார்வை, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறது.

    இதில் பல கட்ட சோதனையில் குரங்குகளின் மூளையில் 'சிப்'பை பொருத்தி நடத்தப்பட்ட பரிசோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன.

    இது தொர்பான ஆய்வறிக்கைகைளை அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் நியூராலிங்க் நிறுவனம் சமர்ப்பித்து அடுத்த கட்டமாக மனிதர்களிடம் ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டது.

    இந்த நிலையில் மனித மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தி சோதிக்கும் ஆய்வுக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த ஒப்புதலுக்கு அமெரிக்க அரசிடம் நியூராலிங்க் நிறுவனம் பலமுறை விண்ணப்பித்து இருந்தது. ஆனால் அவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது அனுமதி வழங்கி உள்ளது.

    இது தொடர்பாக நியூராலிங்க் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, "ஒருநாள் எங்கள் தொழில்நுட்பம் ஏராளமானோருக்கு உதவி செய்ய போவதன் முக்கிய முதல்படிதான் இது.

    நியூராலிங்க் குழுவினர் மேற்கொண்ட மிகவும் இன்றியமையாத பணிகளின் காரணமாக அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் இந்த அனுமதியை அளித்திருக்கிறது" என்று கூறியுள்ளது.

    மேலும் மூளையில் உள்ள தகவல்களை ப்ளுடூத் மூலம் மின் பொருட்களுக்கு அனுப்புவது குறித்து மேற்கொள்ளப்படும் சோதனையில் பங்கேற்பவர்களை பதிவு செய்யும் பணிகள் குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இச்சோதனையை சில மாதங்களில் நியூராலிங்க் நிறுவனம் தொடங்க உள்ளது.

    ×