search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vitamin-D Diets"

    • முதுகு, இடுப்பு பகுதியில் வலிகள் கால்கள் மரத்துப் போதல்.
    • வைட்டமின் டி சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    தண்டுவட எலும்புகள் தேய்வதால் வரும் வாதத்தை சித்த மருத்துவத்தில் தண்டக வாதம் என்றுகூறுவோம். தண்டுவட எலும்புகள் ஒவ்வொன்றின் இடையே சதையாலான டிஸ்க்" இருக்கும். இதன் இடையில் சைனோவியல் திரவம் என்ற எண்ணெய் போன்ற பொருள் நிரப்பப்பட்டிருக்கும். இவை ஒரு மெத்தை போல் இருந்து, தண்டுவட எலும்புகள் உராய்வில்லாமல் ஒழுங்காக செயல்படவும், உடல் அசைவிற்கும் உதவுகிறது.

    எலும்புகளுக்கு இடையேயுள்ள டிஸ்க்" நீர்த்துவம் குறைந்து, உலர்ந்து சுருங்கி இருந்தால் அது 'ஸ்பாண்டிலோசிஸ்' என்று அழைக்கப்படும். தண்டுவட எலும்புகளுக்கு இடையே உள்ள டிஸ்க் ஒருபுறமாக அல்லது இருபுறமாக வெளியேநீட்டி நிற்பது ஹெர்னியேட்டட்டிஸ்க்' எனப்படும்.

    டிஸ்க் வீங்கி மிருந்தால் அது பல்ஜிங் தண்டுவட எலும்புகளின் ஓரத்திலிருந்து எலும்புகள் துருத்தி வளர்ந்து காணப்பட்டால் ஆஸ்டியோபைட் அல்லது ஸ்பர்' என்றும் விபத்து, காயங்களில் டிஸ்க்குகளில் ஏற்படும் வீக்கங்கள் அல்லது அழற்சிகள் ஸ்பாண்டிலைடிஸ்' என்றும் அழைக்கப்படும்.

     காரணங்கள்:

    அடிபட்ட காயங்கள் விபத்துக்கள் காரணமாகவும், தொழில் ரீதியாக அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும் சுமை தூக்குபவர்கள் மற்றும் டெய்லர்களுக்கும் மற்றும் வயதானவர்களுக்கும் அதிகமாக தண்டுவட பாதிப்புகள் ஏற்படுகிறது.

    அறிகுறிகள்:

    முதுகு, இடுப்பு பகுதியில் வலிகள் கால்கள் மரத்துப் போதல், உட்கார்ந்து எழும்புவதில் சிரமம், நடை மாறுபடுவது போன்ற அறிகுறிகள் காணப்படும்.

    சித்த மருத்துவத் தீர்வுகள்:

    1)அமுக்கரா சூரணம் 1 கிராம். சண்டமாருதச் செந்தூரம் 100 மி.கி. பவள பற்பம் 200 மி.கி, குங்கி லிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி. குங்கிலிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    3) அமுக்கரா சூரணம் 1 கிராம், அயக்காந்த செந்தூரம் 200 மி.கி. முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி. குங்கிலிய பற்பம் 200 மி.கி மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    4) தண்டுவட பிரச்சினைகளுக்கு எண்ணெய் மசாஜ், வர்ம மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரித்தைலம் சிவப்புருக்கில் தைலம் விடமுட்டி தைலம், சுக்குத் தைலம், கற்பூராதி தைலம் குக்கில் தைலம் உளுந்து தைலம் இவைகளில் ஏதேனும் ஒன்றை கழுத்தில் இருந்து முதுகு இடுப்பு கால்கள் வரை நன்றாகத் தேய்த்து விட வேண்டும்.

    வெந்நீரில் இவாதாடக்கி வாதநாராயணன் முடக்கற்றான், தழுதாழை நொச்சி பழுத்த எருக்கம் இலை இவைகளில் ஒன்றை எண்ணெய்யில் வதக்கி வலி உள்ள இடங்களில் ஒத்தடம் வேண்டும்.

    கொல்சியம் வைட்டமின் டி சத்து அதிகமுள்ள பிரண்டைத் தண்டு முருங்கை கீரை, முட்டையின் வெள்ளை கரு, பால், தயிர், பசலைக்கீரை, பாதாம், வாதுமை வெந்தயம் உளுந்து இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • உடலின் வெளித்தோல் 27 நாட்களுக்கு ஒருமுறை மாறிக்கொண்டிருக்கும்.
    • செதில் உதிர்ந்த இடங்களில் ரத்தக்கசிவும் காணப்படும்.

    சோரியாசிஸ் என்பது ஆட்டோ இம்யூன் நோய் வகையைச் சார்ந்தது. அதாவது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியே, நம் உடலின் செல்களுக்கு எதிராக செயல்படுவதால் வருகின்ற நோயாகும். சாதாரணமாக நம் உடலின் வெளித்தோல் அடுக்கு சராசரியாக 27 நாட்களுக்கு ஒருமுறை மாறிக்கொண்டிருக்கும்.

    ஆனால் சோரியாஸிஸ் நோயில் தோலின் வெளி அடுக்கு அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும். இதனால் தோல் செதில்களாய் உதிர்ந்து கொண்டிருக்கும். செதில் உதிர்ந்த இடங்களில் சில நேரம் சிறு ரத்தக்கசிவும் காணப்படும்.

     பெரும்பாலும் வட்ட வடிவில் படை போன்று காணப்படும் இந்த நோய் சித்த மருத்துவத்தில் செதில் உதிர் நோய் அல்லது காளாஞ்சகப்படை என்று அழைக்கப்படுகிறது.

    இதுபெரும்பாலும் தலை, நெற்றி, காது, காதின் பின்புறம், கை முழங்கையின் பின்புறம், முதுகு, தொடை போன்ற இடங்களிலும், ஒரு சிலருக்கு உள்ளங்கை, உள்ளங்கால்களிலும் வருகிறது.

    இந்நோய் உடலின் வெளித்தோலை பாதிப்படையச் செய்வதால், மனதில் கவலையை ஏற்படுத்துகிறது. இதற்கான சித்த மருத்துவம்:

    1) வெட்பாலை தைலம்:

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த தைலத்தை தேய்த்து வர வேண்டும். ஒன்று முதல் இரண்டு சொட்டு உள்ளுக்கும் சாப்பிட வேண்டும்.

    2) பறங்கிப் பட்டை:

    ரசாயனம் 1 கிராம் வீதம் காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட வேண்டும்.

    3) கந்தக ரசாயனம்:

    1 கிராம் அல்லது கந்தக மெழுகு 500 மி.கி. வீதம் காலை, இரவு இரண்டு வேளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.

    4) அமுக்கரா மாத்திரை:

    காலை 2. இரவு 2 வீதம் சாப்பிட வேண்டும்.

    5) நலுங்குமா:

    சந்தனம், வெட்டி வேர், கோரைக்கிழங்கு, பாசிப்பயறு, கிச்சிலிக்கிழங்கு, கார்போகரிசி, விலாமிச்சை வேர் இவைகளை பொடி செய்து இந்த பொடியைத் தேய்த்து குளிக்க வேண்டும்.

     6) வைட்டமின் டி:

    இந்நோயால் தோலின் வெளி அடுக்கு பாதிக்கப்படுவதால் வைட்டமின் டி-யை தோலினால் சூரிய ஒளியில் இருந்து பெற முடியாது. ஆகவே வைட்டமின் டி குறையாமல் இருக்க பால், தயிர், பாலாடைக்கட்டி, பீட்ரூட், கேரட். எள், முருங்கைக்காய், முட்டைகோஸ், பிரக்கோலி, திராட்சை,மாதுளை, அத்திப்பழம், அவகோடா, முட்டை, ஆட்டிறைச்சி, கீரைகளில் வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை, பாலக்கீரை, பசலைக்கீரை, அறுகீரை, பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

     7) மனக்கவலை படுவதினால் சோரியாஸிஸ் நோய் வருவதில்லை. ஆனால் சோரியாஸிஸ் நோய் வந்தவர்கள் கவலை இல்லாமல் வாழ பழகிக்கொள்ள வேண்டும். ஏனெனில் மனக்கவலை இந்நோயை அதிகப்படுத்தும்.

    ×