search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rheumatoid Arthritis"

    • முதுகு, இடுப்பு பகுதியில் வலிகள் கால்கள் மரத்துப் போதல்.
    • வைட்டமின் டி சத்து அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    தண்டுவட எலும்புகள் தேய்வதால் வரும் வாதத்தை சித்த மருத்துவத்தில் தண்டக வாதம் என்றுகூறுவோம். தண்டுவட எலும்புகள் ஒவ்வொன்றின் இடையே சதையாலான டிஸ்க்" இருக்கும். இதன் இடையில் சைனோவியல் திரவம் என்ற எண்ணெய் போன்ற பொருள் நிரப்பப்பட்டிருக்கும். இவை ஒரு மெத்தை போல் இருந்து, தண்டுவட எலும்புகள் உராய்வில்லாமல் ஒழுங்காக செயல்படவும், உடல் அசைவிற்கும் உதவுகிறது.

    எலும்புகளுக்கு இடையேயுள்ள டிஸ்க்" நீர்த்துவம் குறைந்து, உலர்ந்து சுருங்கி இருந்தால் அது 'ஸ்பாண்டிலோசிஸ்' என்று அழைக்கப்படும். தண்டுவட எலும்புகளுக்கு இடையே உள்ள டிஸ்க் ஒருபுறமாக அல்லது இருபுறமாக வெளியேநீட்டி நிற்பது ஹெர்னியேட்டட்டிஸ்க்' எனப்படும்.

    டிஸ்க் வீங்கி மிருந்தால் அது பல்ஜிங் தண்டுவட எலும்புகளின் ஓரத்திலிருந்து எலும்புகள் துருத்தி வளர்ந்து காணப்பட்டால் ஆஸ்டியோபைட் அல்லது ஸ்பர்' என்றும் விபத்து, காயங்களில் டிஸ்க்குகளில் ஏற்படும் வீக்கங்கள் அல்லது அழற்சிகள் ஸ்பாண்டிலைடிஸ்' என்றும் அழைக்கப்படும்.

     காரணங்கள்:

    அடிபட்ட காயங்கள் விபத்துக்கள் காரணமாகவும், தொழில் ரீதியாக அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும் சுமை தூக்குபவர்கள் மற்றும் டெய்லர்களுக்கும் மற்றும் வயதானவர்களுக்கும் அதிகமாக தண்டுவட பாதிப்புகள் ஏற்படுகிறது.

    அறிகுறிகள்:

    முதுகு, இடுப்பு பகுதியில் வலிகள் கால்கள் மரத்துப் போதல், உட்கார்ந்து எழும்புவதில் சிரமம், நடை மாறுபடுவது போன்ற அறிகுறிகள் காணப்படும்.

    சித்த மருத்துவத் தீர்வுகள்:

    1)அமுக்கரா சூரணம் 1 கிராம். சண்டமாருதச் செந்தூரம் 100 மி.கி. பவள பற்பம் 200 மி.கி, குங்கி லிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி. குங்கிலிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    3) அமுக்கரா சூரணம் 1 கிராம், அயக்காந்த செந்தூரம் 200 மி.கி. முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி. குங்கிலிய பற்பம் 200 மி.கி மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

    4) தண்டுவட பிரச்சினைகளுக்கு எண்ணெய் மசாஜ், வர்ம மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரித்தைலம் சிவப்புருக்கில் தைலம் விடமுட்டி தைலம், சுக்குத் தைலம், கற்பூராதி தைலம் குக்கில் தைலம் உளுந்து தைலம் இவைகளில் ஏதேனும் ஒன்றை கழுத்தில் இருந்து முதுகு இடுப்பு கால்கள் வரை நன்றாகத் தேய்த்து விட வேண்டும்.

    வெந்நீரில் இவாதாடக்கி வாதநாராயணன் முடக்கற்றான், தழுதாழை நொச்சி பழுத்த எருக்கம் இலை இவைகளில் ஒன்றை எண்ணெய்யில் வதக்கி வலி உள்ள இடங்களில் ஒத்தடம் வேண்டும்.

    கொல்சியம் வைட்டமின் டி சத்து அதிகமுள்ள பிரண்டைத் தண்டு முருங்கை கீரை, முட்டையின் வெள்ளை கரு, பால், தயிர், பசலைக்கீரை, பாதாம், வாதுமை வெந்தயம் உளுந்து இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • 'அன்கிலோசிங் ஸ்பான்டிலைடிஸ்’ என்பது வாத நோய்களில் ஒன்று.
    • முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்பு இடையே மூட்டுகளில் வீக்கம்.

    'அன்கிலோசிங் ஸ்பான்டிலைடிஸ்' என்பது வாத நோய்களில் ஒன்றாகும். சித்தமருத்துவத்தில் 85 வகை வாத நோய்களை சித்தர்கள் கூறியுள்ளனர். இந்நோயில் முதுகில் உள்ள முதுகெலும்புகள் இடைவெளியின்றி ஒன்றாக இணைகின்றன. இதனால் முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மை குறைகிறது. சிலநேரங்களில் விலா எலும்புகளும் பாதிக்கப்படலாம். இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். பெண்களைவிட ஆண்களை அதிகமாக பாதிக்கும்.

     அறிகுறிகள்:

    நோயின் முக்கிய அறிகுறி முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்பு (சாக்ரோலியாக் மூட்டுகள்) இடையே உள்ள மூட்டுகளில் வீக்கம் காணப்படும். இந்த வீக்கம் முதுகெலும்பின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம். இதனால் முதுகு அல்லது பிட்டத்தில் கடுமையான வலி காணப்படும். காலை நேரங்களில் வலி அதிகமாவது அல்லது வலியினால் இரவில் தூக்கம் வராமல் வேதனைப்படுவது போன்ற சிரமங்களை சந்திக்க நேரிடும்

    குதிகாலின் பின்புறம் தசைநார்கள் இணைக்கும் இடங்களில் வலி, நடப்தில் சிரமம் போன்ற பாதிப்புகளும் இருக்கலாம். இந்தநோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் HLA-B27 மரபணு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இந்த மரபணு இல்லாதவர்களுக்கும் இந்நோய் ஏற்படுகிறது.

    சித்த மருத்துவம்:

    இந்த நோய்க்கு சிறந்த சித்த மருந்துகள் உள்னை. இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது அவசியம்.

    1. சண்டமாருதச் செந்தூரம் 100 மி.கி. முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கிட குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவைகளுடன் அமுக்கரா' சூரணம் 1 கிராம் சேர்த்து காலை இரவு இருவேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    2 கந்தி மெழுகு 500 மி.கி.கலை. இரவு இருவேளை சாப்பிட வேண்டும். வலியுள்ள இடங்களில் விடமுட்டி தைவம் உளுந்து தைலம், கற்பூராதி தைலம் சிவப்பு குங்கிலியத் தைலம் இவைகளில் ஒன்றை தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.

    3. உட்கார்ந்து வேலை செய்பவர்கள், சில மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடந்து விட்டு மீண்டும் உட்கார வேண்டும். முதுகெலும்பு வளையாமல் நேர்பட உட்காருவது நல்லது.

    • விரல்களை மடக்க இயலாத நிலை, நடப்பதற்கு சிரமம்.
    • புளிப்பான உணவுகள் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    ருமட்டாய்டு ஆர்தரைடிஸ் நோய்' சித்த மருத்துவத்தில் 'வளி அழல் கீல் வாயு' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு 'தன்னுடல் எதிர்ப்பு நோய்'. நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு, மூட்டுகள் மற்றும் இணைப்புத் திசுக்களை சேதப்படுத்துவதால் இந்த நோய் பாதிப்பு வருகிறது.

    கை,கால், மணிக்கட்டு, கணுக்கால், விரல்கள் ஆகிய கீல்களில் நாள்பட்ட அழற்சி அல்லது வலியை ஏற்படுத்தும். அந்த இடங்களில் சூடு, சிவப்பு நிறம், எரிச்சல் அல்லது வலியையும் உண்டாக்கும். என்ன மருத்துவம் பார்த்தாலும், அதற்கு அடங்காமலும், சில நேரங்களில் மருத்துவத்திற்கு அடங்கினாலும் சிறிது நாட்களில் மீண்டும் திரும்பி வருவதுமாக இருக்கும் குணம் கொண்டது இந்த நோய். இதனால் பாதிக்கப்பட்ட மூட்டு பகுதிகளை நீட்டவும், நன்றாய் மடக்கவும் முடியாது.

    மேலும் இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தூக்க மின்மை, அவ்வப்போது லேசான காய்ச்சல், காலையில் எழுந்தவுடன் கை விரல்கள், மூட்டுகளில் விரைப்புத் தன்மை, விரல்களை மடக்க இயலாத நிலை, நடப்பதற்கு சிரமம், உடல் பலவீனம் போன்ற பாதிப்புகள் இருக்கும்.

    ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை ரத்தத்தில் 'ஆர்.ஏ' மற்றும் சைக்ளிக் சிட் ருலினேடட் பெப்டைடு (சி.சி.பி) பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து கொள்ளலாம். இந்த நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சைகள் சித்தர்களால் கூறப்பட்டுள்ளன. இந்த நோய் பாதிப்பு உள்ளவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பதையும், புளிப்பான உணவுகள் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    இந்த நோய் தாக்கியவர்களுக்கு வாதமும், பித்தமும் அதிகரித்திருக்கும். இதை சமன் செய்ய சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி பேதி மருந்து மற்றும் வாந்தி மருந்துகள் எடுத்து விட்டு அதன்பிறகு நோய்க்குரிய மருந்துகளை சாப்பிட வேண்டும். மருந்து உண்ணும் காலத்தில் எளிதில் செரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும்.

    கீழ்க்கண்ட சிகிச்சை முறைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கலாம்.

    1) வங்கச் சுண்ணம், முத்துப்பற்பம், தங்க பற்பம் இவற்றை வகைக்கு 65 மி.கி. எடுத்து பாலில் இரு வேளை சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச்செந்தூரம் 200 மி.கி, குங்கிலிய பற்பம் 200 மி.கி, முத் துச்சிப்பி பற்பம் 200 மி.கி. இவைகளை இருவேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    3) உளுந்து தைலம், சிவப்பு குங்கிலிய தைலம், வாதகேசரி தைலம் இவைகளில் ஒன்றை வலி உள்ள இடங்களில் மெதுவாக பூசி வர வேண்டும்.

    • எலும்புகள் அல்லது தசைகளுக்குள் ஏற்படும் காயங்களாலும் மூட்டுவலி வருகிறது.
    • காலையில் எழுந்தவுடன் வலி ஏற்பட்டு நடக்க சிரமப்படுதல்

    மூட்டுகளில் ஏற்படுகின்ற காயங்கள் அல்லது புண்கள், இவற்றால் வீக்கம் அல்லது வலி ஏற்படுகிறது. மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகள், தசைநார்கள், எலும்புகள் அல்லது தசைகளுக்குள் ஏற்படும் காயங்களாலும் மூட்டுவலி வருகிறது. ஆனால் பெரும்பாலும் குருத்தெலும்பு தேய்வால் வருகின்ற கீல்வாதம் தான் அதிகம். எலும்பில் உள்ள குருத்தெலும்பு தேய்வால் வருகின்றது.

    கீல்வாதம் (ஆஸ்டியோ ஆர்தரைடிஸ்):

    இவ்வகை மூட்டுவலி வயதானவர்களையும், பெண்களையும் மிக அதிகமாக பாதிக்கிறது. இந்த வகை வாதத்தில், கால் மூட்டுகளில் உள்ள எலும்புகளின் முனைகளை, குஷன் போன்று பாதுகாக்கும் குருத்தெலும்பு படிப்படியாக பலவீனமடைந்து, இறுதியாக, குருத்தெலும்பு முற்றிலும் தேய்ந்துவிடுகிறது. மூட்டுகளிடையே உள்ள சினோவியல் திரவமும் அளவில் குறைகிறது. இதனால் கால் முட்டி எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி, கடுமையான கால் வலி, வீக்கம், சூடு இவற்றை ஏற்படுத்துகிறது.

    முடக்கு வாதம் (ருமட்டாய்டு ஆர்தரைடிஸ்):

    முடக்கு வாதம் என்பது ஒரு தன்னுடல் தாக்கக் கோளாறு. நம் உடல் நோய் எதிர்ப்பு அமைப்பு நம் சொந்த உடலின் திசுக்களை தவறுதலாக தாக்கும்போது இது நிகழ்கிறது. இவ்வகை வாதத்தில் எலும்பில் தேய்வுகள் இருக்காது. ஆனால் வலி, வீக்கம், காலையில் எழுந்தவுடன் வலி ஏற்பட்டு நடக்க சிரமப்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

    யூரிக் அமிலம் அதிகமாவதால் ஏற்படும் கீல்வாதம்:

    ரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரித்து, மூட்டு களில் உள்ள இடைவெளிகளுக்குள் அமிலம் படிந்து வீக்கம், வலியை ஏற்படுத்துகிறது.

    பாக்டீரியா தொற்றால் ஏற்படும் செப்டிக் ஆர்தரைடிஸ்:

    செப்டிக் ஆர்தரைடிஸ் என்பது பாக்டீரியா தொற்று காரணமாக உருவாகிறது. நம் மூட்டுகளிடையே உராய்வைத் தடுக்க சினோவியல் திரவம் உள்ளது. பாக்டீரியாக்கள் இந்த திரவத்தில் நுழையும் போது, அவை குருத்தெலும்புகளை சேதப்படுத்தி இறுதியில் மூட்டு வலி, வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

    மேற்கூறிய வாத வகைகளில் பெரும்பாலும் லும்பு குருக் குருத்தெலும்பு தேய்வால் வருகின்ற ஆஸ்டியோ ஆர்தரைடிஸ் வகை வாதம் தான், வயதான ஆண்கள் மற்றும் மகளிரை அதிக மாக பாதிக்கிறது. மாதவிடாய் முடிந்த மகளிருக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாட்டால் எலும்பு அடர்த்தி குறைவதும் முக்கிய காரணமாகும். இதற்கான மருத்துவ முறை பற்றி பார்ப்போம்.

    தவிர்க்க வேண்டியவை:

    உடல் பருமன் இருந்தால் அதை குறைக்க வேண்டும். எளிய உடற்பயிற்சிகள் செய்ய செய்ய வேண்டும். எலும்புகளின் அடர்த்திக்கு கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். தினமும் அதிகாலை வெயில் அல்லது மாலை இளவெயிலில் சிறிது நேரம் நடக்கலாம். குளிப்பதற்கு வெந்நீர் சிறந்தது, புளிப்பு சுவை உணவுகளை அளவோடு எடுக்க வேண்டும்.

    மருந்துகள்:

    சித்த மருத்துவத்தில் இந்த நோய்க்கு சிறப்பான மருந்துகள் உள்ளது. இவைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.

    * அமுக்கரா சூரணம் 1 கிராம், குங்கிலிய பற்பம் 200 மி.கி, முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி, ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை, தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    * அமுக்கராச் சூரணம் 1 கிராம், பூரணச் சந்திரோதயம் 100 மி.கி., சங்கு பற்பம் 200 மி.கி. இவற்றை மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    * நொச்சி இலை, பழுத்த எருக்கிலை, வாத நாராயணன் இலை, தழுதாழை இலை இவைகளை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் வலியுள்ள மூட்டுகளில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

    * வாத கேசரிதைலம், கற்பூராதி தைலம், விடமுட்டி தைலம், சிவப்பு குங்கிலியத் தைலம் இவைகளில் ஒன்றை வலியுள்ள மூட்டுகளில் தேய்த்து வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வலி குறையும்.

    ×