search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Work from Home"

    • பலர் இன்றும் வீட்டிலே இருந்தே பணியாற்றி வருகின்றனர்.
    • ஊழியர்கள் அலுவலகம் சென்று பணியாற்ற துவங்கினர்.

    சர்வதேச சந்தையில் முன்னணி லேப்டாப் பிராண்டு டெல். உலகளவில் பல்வேறு அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் டெல் நிறுவனத்திற்காக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் இன்றும் வீட்டிலே இருந்தே பணியாற்றி வருகின்றனர்.

    உலகம் முழுக்க கொரோனா பெருந்தொற்று காரணமாக வீட்டில் இருந்து பணியாற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. பிறகு, பெருந்தொற்று சூழல் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து உலகின் பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதை ஆதரிக்கவில்லை. இதன் காரணமாக ஊழியர்கள் அலுவலகம் சென்று பணியாற்ற துவங்கினர்.

    இந்த நிலையில், டெல் நிறுவனம் வீட்டில் இருந்தே பணியாற்றும் தனது ஊழியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி பெற முடியாது என தெரிவித்துள்ளது. ஊழியர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும் என்றும் டெல் தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்து பணியாற்றுவோர் பதவி உயர்வு மற்றும் நிறுவனத்திற்குள் தங்களது பொறுப்பை மாற்றிக் கொள்ளவும் முடியாது.

    கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பில் இருந்தே ஊழியர்கள் வீட்டில் இருந்தும் பணியாற்ற அனுமதி அளித்த நிலையில், டெல் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு வீட்டில் இருந்து பணியாற்றி வரும் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. டெல் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக வீட்டில் இருந்து பணியாற்றி வருவோருக்கு, இனிமேல் பதவி உயர்வு, பதவிகளை மாற்றிக் கொள்ள முடியாது என்ற அறிவிப்பு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ஒரே இடத்தில் உட்கார்ந்து கொள்வதால் கலோரிகளை எரிக்க கடினமாக உள்ளது.
    • அடிக்கடி செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

    இன்றைய காலகட்டத்தில், பலர் வீட்டில் இருந்து வேலை (வொர்க் ஃப்ரம் ஹோம்) என்ற பெயரில் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இந்த வேலைகளில் பெரும்பாலானவை 8 முதல் 9 மணிநேர ஷிப்டுகளை அடிப்படையாகக் கொண்டவை. அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் அனைவரும் 8 முதல் 9 மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இருப்பினும், இது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    உட்கார்ந்து வேலை செய்பவர்கள் பல உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். உட்கார்ந்து வேலை செய்பவர்களிடையே அதிகரித்து வரும் பிரச்சனைகள் என்ன என்பத்தை இங்கே தெரிந்து கொள்வோம்..

    தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து கொள்வதால் கலோரிகளை எரிக்க கடினமாக உள்ளது. அதனால் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் சில சமயம் உடல் பருமனாக மாறுகிறார்கள். இது கெட்ட கொழுப்பாக உடலில் சேரும். உடல் பருமன் உடலில் பல கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

    அதுபோல், உட்கார்ந்து வேலை செய்பவர்கள் அடிக்கடி செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். ஏனெனில், ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதால் அவை செரிமானம் ஆகாது. அத்தகையவர்களுக்கு மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளும் இருக்கும்.

     நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் தசைகள் பலவீனமடைகின்றன. முழங்கால் வலியும் தொல்லை தரும். இப்போதெல்லாம் 9 மணி நேரம் உட்கார்ந்திருக்கும் வேலையில் உடலில் ரத்த ஓட்டம் மிகவும் மெதுவாக உள்ளது. இதனால் கால்களில் கூச்சம் ஏற்படும்.

    மேலும் இவர்களின் உடல் செயல்பாடு மிகவும் குறைவாக இருக்கும். இதன் காரணமாக, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. அவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். அத்தகையவர்கள் முடிந்தால் தவறாமல் உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும்.

    உட்கார்ந்து வேலை செய்பவர்கள் பெரும்பாலும் கணினிகள் அல்லது மடிக்கணினிகளில் வேலை செய்கிறார்கள். ஒருவர் 8 முதல் 9 மணி நேரம் கணினித் திரையைப் பார்ப்பதால், அதிலிருந்து வெளிப்படும் நீலக்கதிர்கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதன் தாக்கம் கண்பார்வையை பலவீனப்படுத்துகிறது.

    தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இதை தவிர்க்க நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் மற்றும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

    • சில நிறுவனங்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற உத்தரவிட்டிருக்கின்றன
    • 2.67 கோடி பணியாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது

    2020 கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் உலகெங்கும் பல நாடுகளில் தங்கள் பணியாளர்களை "வர்க் ஃப்ரம் ஹோம்" (Work From Home) எனும் முறையில் வீட்டிலிருந்தே பணிபுரிய நிறுவனங்கள் அனுமதித்தன. இது பெருமளவில் மென்பொருள் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களில் கடைபிடிக்கபட்டது.

    ஆனால், சுமார் 2.5 வருட காலம் கடந்து, ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கின்றன. பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை முழுவதுமாக அலுவலக முறைக்கு மாற்றி விட்டன; ஒரு சில நிறுவனங்கள் படிப்படியாக மாறி வருகின்றன.

    இரண்டு மாறுபட்ட வழிமுறைகளினாலும் நிறுவனங்களின் வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் குறித்து ஸ்கூப் டெக்னாலஜிஸ் மற்றும் பாஸ்டன் கன்சல்டின் குழுமம் ஆகிய நிறுவனங்கள் எடுத்த ஒரு ஆய்வில் சில ஆச்சரியம் அளிக்கும் முடிவுகள் வெளிவந்திருக்கிறது.

    இந்த ஆய்வில் 554 பெரு நிறுவனங்கள் பங்கேற்றன. இவற்றில் 2.67 கோடி பணியாளர்கள் பணி புரிகின்றனர். இந்நிறுவனங்கள் முழுவதும் பணியாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வீட்டிலிருந்தும் அல்லது அலுவலகத்திற்கு வந்து பணிபுரியவும் அனுமதிக்கும் நிறுவனங்களில் அவற்றின் வருமானமும், வளர்ச்சியும் 21 சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இதில் தொழில்நுட்பத்தில் இருந்து காப்பீடு உள்ளிட்ட பல துறை நிறுவனங்களும் அடங்கும்.

    புதிய பணியிடங்களுக்கு வீட்டிலிருந்து பணி புரிய அனுமதிக்கப்படும் நிறுவனங்களில், தொலைதூரத்தில் இருக்கும் பணியாளர்கள் சுலபமாக பணிபுரிய முடியும். இதனால், காலியிடங்களை நிரப்ப தேவைக்கு அதிகமாகவே திறமையான பணியாளர்கள் கிடைக்கிறார்கள் என்பது அந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர இலக்குகளை சுலபமாக எட்டுவதாகவும் தெரிய வந்துள்ளது.

    • அலுவலக பணிகளை வீட்டில் இருந்து செய்வது பெண் ஊழியர்களுக்கு பல விதங்களிலும் பாதுகாப்பானது.
    • முதுகுவலி ஏற்படுத்தாத நாற்காலியை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

    பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் 'வீட்டில் இருந்து பணி செய்யும்' ஒர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கின்றன. மேலை நாடுகளில் பரவலாக இருந்த இந்த முறை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றிலும் தற்போது கடைபிடிக்கப்படுகிறது.

    இந்தியாவில் உள்ள இதர தனியார் நிறுவனங்களும் அவர்களது ஊழியர்களை வாரத்தின் குறிப்பிட்ட நாட்கள் வீட்டில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ள தெரிவித்துள்ளன. அலுவலக உள்கட்டமைப்பு வசதிகள் அனைவரது வீடுகளிலும் இருக்காது என்பதால் சில மாற்றங்களை வீட்டில் செய்து கொள்வது அவசியம். அப்படிப்பட்ட மாற்றங்கள் பற்றி உள்கட்டமைப்பு வல்லுனர்கள் அளித்துள்ள குறிப்புகளை இங்கே காணலாம்.

    உள்கட்டமைப்பும், அலுவலக சூழலும் உள்ள இடத்தில் பணிபுரிவதற்கும், வீட்டின் ஒரு பகுதியை மாற்றியமைத்து பணி புரிவதற்கும் பல மாற்றங்களை, ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அலுவலக பணிகளை வீட்டில் இருந்து செய்வது பெண் ஊழியர்களுக்கு பல விதங்களிலும் பாதுகாப்பானது. வீட்டில் உள்ள ஒரு அறையை பணி புரிவதற்கேற்ப மாற்றம் செய்யும்போது லைப்ரரி, படிக்கும் அறை ஆகியவற்றுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.

    ஒரு படுக்கையறை கொண்ட வீடுகளில் ஒரு பகுதியை தடுப்பு அல்லது ஸ்கிரீன் அமைத்து தனிப்பட்ட இடமாக பயன்படுத்தலாம். அல்லது படுக்கை அறையின் ஒரு பகுதியை பயன்படுத்தலாம். வெளி நபர்கள் அடிக்கடி வந்து செல்லும் நிலையில் வரவேற்பறையின் ஒரு பகுதியை பார்டிஷன் மூலம் பிரித்து பயன்படுத்தலாம்.

    அறையின் கார்னர் பகுதி, மாடிப்படிகளின் கீழ்ப்புறம் அல்லது அறையின் ஒரு பக்க உள்ள சுவரை ஒட்டிய பகுதியை தேர்வு செய்து பணியிடமாக அமைக்கலாம். மேஜை, நாற்காலி, அலமாரி ஆகியவற்றுடன், மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் நிலையில் முதுகுவலி ஏற்படுத்தாத நாற்காலியையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

    பணிபுரியும் அறை ஜன்னலுக்கு அருகில், செடிகள் வளர்ந்துள்ள வெளிப்பகுதி, மரங்கள் உள்ள பகுதியாக இருந்தால் கண்களுக்கு இதமாக இருக்கும். அலுவலகங்களில் வைக்க இயலாத குடும்ப புகைப்படம், பரிசுகள் ஆகியவற்றை வீட்டில் பணிபுரியும் பகுதிகளில் வைக்க முடியும். பணிபுரிய அமரும் இடத்தில் எதிர்ப்புற சுவர் வெண்மை நிறத்தில் இருப்பதுடன், மின்விளக்கு வெளிச்சமும் பரவலாக இருப்பது நல்லது.

    பணி இடத்துக்கு அருகில் வெள்ளை மார்க்கர் போர்டு ஒன்றை சுவரில் மாட்டி வைத்து, தினமும் காலையில் அன்று செய்ய வேண்டிய பணிகள் பற்றிய குறிப்பினை எழுதி வைத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால், கணினியில் ஸ்டிக்கி நோட்ஸ் பகுதியில் குறிப்புகளாக வைத்துக்கொண்டு பணிகளை செய்து வரலாம்.

    மனம் கவரும் நிறங்களில் லைட் செட்டிங் அமைப்பது கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். அறைகளில் இயற்கையான வெளிச்சம் வரும் அளவுக்கு மனதில் உற்சாகம் ஏற்படும். குறிப்பாக நல்ல வெளிச்சமும், காற்றும் வரக்கூடிய ஜன்னல் அமைந்துள்ள பகுதிகள் கணினி பணியின் களைப்பை அகற்ற உதவுகின்றன.

    பணி புரியும் அறை அல்லது இடங்களில் குழந்தைகள் குறுக்கீடு என்பதை தவிர்க்க இயலாது. வீட்டில் உள்ள குழந்தைகளுடன், பக்கத்து வீட்டு குழந்தைகளும் அந்த சிக்கலுக்கு துணையாக அமைந்து விடுவார்கள். படிப்பு சம்பந்தமான பயிற்சி முறைகளுக்கு மட்டுமே சில கட்டுப்பாடுகளுடன் அவர்களை அங்கே அனுமதிக்கலாம். வளர்ப்பு பிராணிகளான நாய் அல்லது பூனை போன்றவை அங்கே உலாவுவதை அனுமதிக்கக்கூடாது.

    ×