search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women workers"

    • பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பத ற்கான பிரசாரம் தொடங்கி நடந்து வருகிறது
    • சத்தியமங்கலத்தில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் 150-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்

    சத்தியமங்கலம்

    கார்மெண்ட்ஸ் மற்றும் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் கடந்த 5 வருடங்களாக பெண் தொழிலாளர்களின் நலனுக்காக பணிபுரிந்து வருகிறது. உலக அளவில் பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளில் 3 ஒரு வன்முறை பணியிடங்களில் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

    எனவே உலக முழுவதும் இதனை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பத ற்கான பிரசாரம் தொடங்கி நடந்து வருகிறது. பெண் தொழிலாளர்களுக்காக பணி புரியும் கார்மெண்ட்ஸ் மற்றும் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் முதல் கட்ட பிரச்சா ரத்தை தொடங்கியுள்ளது.

    கோபி, நம்பியூர், டி. என். பாளையம், அவிநாசி, பெருந்துறை, ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதி களில் நடத்த திட்டமிட்டு உள்ளது.

    இதை தொடர்ந்து சத்தியமங்கலத்தில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் 150-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பிரசாரத்தை சங்கத்தின் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ரீட் அமைப்பின் தலைவர் கருப்புசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சங்கத்தின் தலைவர் கல்பனா வரவேற்றார். செயலாளர் ஜானகி தொகுத்து வழங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் மகேஸ்வரி நன்றி கூறினார்.

    இதில் பெண்கள் தங்கும் விடுதிகளை பதிவு செய்ய வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ., மகப்பேறு சலுகைகள் போன்ற நல த்திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரி க்கைகள் வலியுறுத்த ப்பட்டன.

    • திமுக.வின் தோ்தல் அறிக்கையின்படி மகளிா் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம்.
    • ஒப்பந்த முறையில் குறைந்த ஊதியத்தில் புலம்பெயா்ந்த பெண் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

    திருப்பூர்:

    புலம் பெயா்ந்த பெண் தொழிலாளா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எம்.ரவி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

    திமுக.வின் தோ்தல் அறிக்கையின்படி மகளிா் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம். அதேவேளையில், புலம் பெயா்ந்த பெண் தொழிலாளா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, திருப்பூா் போன்ற தொழில் நகரங்களில் பல்வேறு தொழில்கள், தூய்மைப்பணியில் ஒப்பந்த முறையில் குறைந்த ஊதியத்தில் புலம்பெயா்ந்த பெண் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

    எனவே, புலம் பெயா்ந்த பெண் தொழிலாளா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காஷ்மீரில் அமைதி திரும்ப உதவ வேண்டும் என அங்குள்ள பெண்களிடம் மாநில முதல் மந்திரி மெகபூபா முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். #MehboobaMufti #WomanWorkers
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி பெண் தொழிலாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    காஷ்மீரில் கடந்த மூன்று பத்தாண்டுகளாக தொடரும் வன்முறை சம்பவங்களால் ஒரு தாயாக, மனைவியாக, சகோதரியாக மட்டுமின்றி ஒரு பெண்ணாகவும் நாம் சிரம்ப்பட்டு வந்துள்ளோம்.
    சண்டை நிறுத்தப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததால் புனித ரமலான் மாதத்தில் சண்டை நிறுத்தப்பட்டு உள்ளது.

    சண்டை நிறுத்தத்தை தொடர்ந்து, இந்த மாதம் முழுவதும் காஷ்மீரில் உள்ள தாய்மார்கள் அமைதியாக வாழ வகை செய்யப்பட்டு உள்ளது.     

    இந்த சமுதாயத்தின் சொத்துக்களாக கருதப்படுவது இளைஞர்கள் தான். அவர்களது அறிவும், திறமையும் தவறாக பயன்பட அரசு அனுமதிக்காது என தெரிவித்துள்ளார். #MehboobaMufti #WomanWorkers
    ×