search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Steps to"

    • திமுக.வின் தோ்தல் அறிக்கையின்படி மகளிா் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம்.
    • ஒப்பந்த முறையில் குறைந்த ஊதியத்தில் புலம்பெயா்ந்த பெண் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

    திருப்பூர்:

    புலம் பெயா்ந்த பெண் தொழிலாளா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எம்.ரவி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

    திமுக.வின் தோ்தல் அறிக்கையின்படி மகளிா் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம். அதேவேளையில், புலம் பெயா்ந்த பெண் தொழிலாளா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, திருப்பூா் போன்ற தொழில் நகரங்களில் பல்வேறு தொழில்கள், தூய்மைப்பணியில் ஒப்பந்த முறையில் குறைந்த ஊதியத்தில் புலம்பெயா்ந்த பெண் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

    எனவே, புலம் பெயா்ந்த பெண் தொழிலாளா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுவையில் ஜவுளிப்பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
    • அரசு சார்பில் திட்டம் தயாரித்து அனுப்ப வேண்டும்

    புதுச்சேரி:

    புதுவை பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மத்திய அரசின் பிரதான் மந்திரி மித்ரா திட்ட அறிவிப்பை பயன்படுத்தி, புதுவையில் ஜவுளிப்பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதையேற்று புதுவை சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம், புதுவையில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

    இதன் தொடர்ச்சியாக அமைச்சர் நமச்சிவாயத்தை சட்டசபையில் உள்ள அவரின் அலுவலகத்தில், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம், புதுவை பஞ்சாலை சங்கத்தின் தலைவர் அபிஷேகம், செயலாளர் மூர்த்தி, துணைத்தலைவர் முனிசாமி, துனைச்செய லாளர் ஏழுமலை, நிர்வாக குழு உறுப்பினர் ஜெயசதீஷ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

    அப்போது அமைச்சர் நமச்சிவாயம், புதுவையில் ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கான திட்டம் உள்ளது. கடந்த மாதம் மத்திய ஜவுளித்துறை அதிகாரிகளின் குழு புதுவைக்கு வந்து பார்வை யிட்டு சென்றுள்ளது. ஜவுளிப்பூங்கா புதுவையில் அமைக்க அரசு சார்பில் திட்டம் தயாரித்து அனுப்ப வேண்டும். அதை விரைவாக செய்கிறோம் என தெரிவித்தார். 

    ×