என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக பெண்கள்"

    • கை நிறைய சம்பளம், தங்குவதற்கு இடம், சாப்பாடு கிடைக்கும் என போலி ஏஜெண்டுகள் அப்பாவி இளம்பெண்களை ஏமாற்றி, இங்கு அனுப்பி விடுகிறார்கள்.
    • தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண்கள், வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் ஆகியோரை புரோக்கர்கள் குறி வைக்கிறார்கள்.

    திருச்சி:

    அரபு நாடுகளில் வீட்டு வேலை, சமையல் வேலை, குழந்தைகளை பராமரிக்கும் வேலைகளுக்கு செல்லும் தமிழகப் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    திருச்சி துவாக்குடி பகுதியைச் சேர்ந்த மீனா (வயது 35) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏஜெண்ட் மூலமாக துபாய் அனுப்பி வைக்கப்பட்டார்.

    இரண்டு ஆண்டுகள் பல்வேறு இன்னல்களுக்கு இடையே வீட்டு வேலை செய்து வந்த அவரின் விசா காலம் முடிந்து விட்டது. இதையடுத்து அந்த வீட்டு உரிமையாளர் அவரை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். பின்னர் அவரது பாஸ்போர்ட்டை பறித்து விட்டு அங்குள்ள ஒரு அறையில் அடைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அங்குள்ள சிலர் முயற்சித்தனர். அதிர்ச்சியடைந்த அவர், தமிழகத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் மூலமாக, துபாயில் தங்கி தொழில் செய்து அறக்கட்டளை நடத்தி வரும் அன்வர் அலி என்பவர் உதவியை நாடினார். பின்னர் அவர் அந்த இளம்பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி விமான டிக்கெட் எடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

    சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி கூறும்போது,

    அரபு நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த பல பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். எனக்கும் அவர்கள் குறி வைத்தார்கள். நான் ஒரு வழியாக அவர்களின் பிடியிலிருந்து தப்பித்து வந்து விட்டேன். ஆகவே பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்ற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்றார்.

    இதுபற்றி அன்வர் அலி கூறும்போது, அரபு நாடுகளில் உள்ள வீடுகளில் சமையல் வேலை, குழந்தைகளை பராமரிக்கும் வேலை, வீட்டு வேலைகள் காலியாக உள்ளன. இதற்கு கை நிறைய சம்பளம், தங்குவதற்கு இடம், சாப்பாடு கிடைக்கும் என போலி ஏஜெண்டுகள் அப்பாவி இளம்பெண்களை ஏமாற்றி, இங்கு அனுப்பி விடுகிறார்கள்.

    தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் உள்ள நர்சுகள், கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண்கள், வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் ஆகியோரை இந்த புரோக்கர்கள் குறி வைக்கிறார்கள். இவ்வாறு வேலை தேடி வரும் பெண்களின் குடும்ப பொருளாதார சூழ்நிலையை தெரிந்துகொண்டு பாஸ்போர்ட், விசா, போக்குவரத்து செலவுக்கான செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள்.

    அதன் பின்னர் சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு அவர்களை அழைத்து வந்து தங்களது பாலியல் தேவைக்கு பயன்படுத்துகிறார்கள். பின்னர் அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அடிமைகளாக விற்பனை செய்கிறார்கள். திருச்சி பெண் மீனா எனது உதவியை நாடியதால் தப்பித்துக் கொண்டார். இல்லையென்றால் அவரையும் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி இருப்பார்கள்.

    எனவே வீட்டு வேலைகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் வேலையை ஆராய்ந்து வர வேண்டும். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல பெண்கள் இங்கு இன்னல்களை அனுபவித்து வருவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

    அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இருக்கிறேன்.

    திருச்சி மாவட்டம் நிர்வாகமும் அப்பாவி பெண்களை ஏமாற்றி அனுப்பும் போலி ஏஜெண்டுகளை இனம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வீட்டில் இருந்தே பணிபுரியும் முறை தமிழ்நாட்டில் அதிகரித்தது.
    • இந்தியாவில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழக பெண்கள் ஆவர்.

    குடும்ப பொறுப்பு அதிகரிக்கும் நேரங்களில் பெண் பணியாளர்களை வீட்டில் இருந்தவாறு பணியாற்ற அனுமதிக்கலாம் என தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜெயந்த் யோசனை தெரிவித்துள்ளார்.

    மேலும், "இந்தியாவில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழக பெண்கள் என்பதால் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதித்தால் அவர்களது முன்னேற்றத்திற்கும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்" என்றும் அவர் கூறினார்.

    கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வீட்டில் இருந்தே பணிபுரியும் முறை தமிழ்நாட்டில் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய அளவில் சிசேரியன் பிரசவம் மூலம் குழந்தை பிறப்பு விகிதம் 21.5 சதவீதமாகும்.
    • தென் மாநிலங்களில் சிசேரியன் பிரசவ விகிதம் அதிகமாகவும், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் பீகாரில் குறைவாகவும் உள்ளது.

    புதுடெல்லி:

    வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் சிசேரியன் பிரசவங்கள் குறைவாக உள்ளன. நாட்டில் அரசு மருத்துவமனைகளைவிட தனியாா் மருத்துவமனைகளில் அதிக சிசேரியன் பிரசவம் நடைபெறுகிறது.

    'தி லான்செட் பிராந்திய சுகாதாரம்-தென்கிழக்கு ஆசியா' எனும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் கடந்த 2019 முதல் 2021 வரையிலான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, டெல்லியில் உள்ள 'ஜாா்ஜ் இன்ஸ்டிடியூட் பாா் குளோபல் ஹெல்த்' நிறுவன ஆராய்ச்சியாளா்கள் இந்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளனா்.

    நாட்டின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் 15 முதல் 49 வயதுடைய 7.2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களின் பிரசவ தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேசிய அளவில் சிசேரியன் பிரசவம் மூலம் குழந்தை பிறப்பு விகிதம் 21.5 சதவீதமாகும். பல்வேறு மாநிலங்களில் இந்த விகிதம் கணிசமாக வேறுபடுகிறது. ஒப்பீட்டளவில், நாகாலாந்தில் குறைந்தபட்சமாக 5 சதவீதமும், தெலுங்கானாவில் அதிகபட்சமாக 60.7 சதவீதமும் சிசேரியன் பிரசவ விகிதம் உள்ளது.

    பெரும்பாலான மாநிலங்களில் வசதியான குடும்ப பெண்கள் மத்தியில் சிசேரியன் பிரசவம் இரு மடங்கு அதிகமாக உள்ளது. தெலுங்கானா, தமிழகம், ஆந்திரம் போன்ற தென் மாநிலங்களில் சிசேரியன் பிரசவ விகிதம் அதிகமாகவும், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் பீகாரில் குறைவாகவும் உள்ளது.

    பொருளாதார வளா்ச்சி, போதிய சுகாதார வசதிகள், அதிக கல்வியறிவு போன்ற காரணிகளுடன் சுக பிரசவம் மீதான அச்சம், வலியற்ற பிரசவம், நல்ல நாளில் குழந்தை பெற வேண்டுமென்ற விருப்பம் ஆகியவையும் சிசேரியன் பிரசவம் அதிகரிப்புக்கு காரணமாகின்றன.

    பீகாரை பொருத்தவரை, பெரும்பாலும் வசதி குறைவானவா்களைக் கொண்ட மாநிலம். அங்கு மருத்துவா் சிசேரியனுக்கு பரிந்துரைத்தாலும் குறைவான மருத்துவச் செலவு மற்றும் எளிதில் குணமடைவதைக் கருத்தில் கொண்டு, மக்கள் சுகப்பிரசவத்தையே தோ்வு செய்கின்றனா் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×