என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WFH"

    • பலர் இன்றும் வீட்டிலே இருந்தே பணியாற்றி வருகின்றனர்.
    • ஊழியர்கள் அலுவலகம் சென்று பணியாற்ற துவங்கினர்.

    சர்வதேச சந்தையில் முன்னணி லேப்டாப் பிராண்டு டெல். உலகளவில் பல்வேறு அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் டெல் நிறுவனத்திற்காக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் இன்றும் வீட்டிலே இருந்தே பணியாற்றி வருகின்றனர்.

    உலகம் முழுக்க கொரோனா பெருந்தொற்று காரணமாக வீட்டில் இருந்து பணியாற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. பிறகு, பெருந்தொற்று சூழல் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து உலகின் பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதை ஆதரிக்கவில்லை. இதன் காரணமாக ஊழியர்கள் அலுவலகம் சென்று பணியாற்ற துவங்கினர்.

    இந்த நிலையில், டெல் நிறுவனம் வீட்டில் இருந்தே பணியாற்றும் தனது ஊழியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி பெற முடியாது என தெரிவித்துள்ளது. ஊழியர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும் என்றும் டெல் தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்து பணியாற்றுவோர் பதவி உயர்வு மற்றும் நிறுவனத்திற்குள் தங்களது பொறுப்பை மாற்றிக் கொள்ளவும் முடியாது.

    கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பில் இருந்தே ஊழியர்கள் வீட்டில் இருந்தும் பணியாற்ற அனுமதி அளித்த நிலையில், டெல் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு வீட்டில் இருந்து பணியாற்றி வரும் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. டெல் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக வீட்டில் இருந்து பணியாற்றி வருவோருக்கு, இனிமேல் பதவி உயர்வு, பதவிகளை மாற்றிக் கொள்ள முடியாது என்ற அறிவிப்பு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    • கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் வேலையிடங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளானது.
    • அலுவலகத்திற்கு நேரடியாக வேலைக்கு வராமல் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் முறை அதிகமானது.

    உலகம் முழுவதும் 87% தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) அலுவலகத்தில் தொடர்ந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெகுமதி அளிக்கத் தயாராக உள்ளனர் என்றும் இந்தியாவில் இந்த விகிதம் 91% ஆக உள்ளது என்று KPMG India CEO Outlook இன் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    125 இந்திய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் உடைய பதில்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. பதிலளித்த அனைத்து நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 4,200 கோடிக்கும் அதிகமாகும்.

    கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் வேலையிடங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளானது. அலுவலகத்திற்கு நேரடியாக வேலைக்கு வராமல் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் முறை அதிகமானது.

    இந்நிலையில் அனைத்து பணியாளர்களும் அலுவலகத்தில் வந்து வேலை பார்க்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள தலைமை நிர்வாக அதிகாரிகளில் 78% பேர் விரும்புகின்றனர். உலக அளவில் இந்த விகிதம் 83% ஆக உள்ளது.

    இந்தியாவில் உள்ள 50% தலைமை நிர்வாக அதிகாரிகள், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளித்து வருகின்றனர்.

    ×