search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blood Cholesterol"

    • ட்ரை கிளிசரைடுகள் என்பது ரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு ஆகும்.
    • கார்போஹைட்ரேட் உணவுகள் ட்ரை கிளிசரைடுகளாக உடலில் சேமிக்கப்படுகிறது.

    ட்ரை கிளி சரைடுகள் என்பது ரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு ஆகும். நாம் சாப்பிடும் உணவில், உடலுக்கு தேவையான அளவு கலோரியை விட அதிகளவு கார்போஹைட்ரேட் வகை உணவுகளை நாம் உட்கொண்டால், அவை ட்ரை கிளிசரைடுகளாக உடலில் சேமிக்கப்படுகிறது. இது ஹைபர் ட்ரை கிளிசெரிடெமியா எனப்படும்.

     ட்ரை கிளிசரைடுகளின் வேலை பயன்படுத்தப்படாமல் சேமிக்கப்பட்ட கலோரிகள் மூலம் உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. ஆனால் இவை ரத்தத்தின் சராசரி அளவான 150-ஐ விட அதிகமாகும் போது இதய தமனிகள் மற்றும் ரத்த நாளங்களில் படிகிறது. இது அர்த்ரோஸ் கிளிரோசிஸ் என்ற நிலையை ஏற்படுத்துகிறது. இவை பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

    வளர்சிதை மாற்ற நோய்க்குறிகளான இடுப்பைச் சுற்றி அதிக கொழுப்பு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த சர்க்கரை அளவு, டைப் 2 வகை நீரிழிவு நோய் இவைகளை ஏற்படுத்துகிறது.

     ட்ரை கிளிசரைடுகளை கட்டுக்குள் வைப்பது எப்படி?

    1) தினசரி நடைப்பயிற்சி, சைக்கிள், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். குறைந்தது 30 நிமிட உடல் செயல்பாடுகள் ட்ரை கிளிசரைடுகளைக் குறைத்து, 'நல்ல' கொழுப்பை அதிகரிக்கும்.

    2) கார்போஹைட்ரேட் வகை உணவுகளான சர்க்கரை, மாவுப் பண்டங்கள், குளிர்பானங்கள். சோடா, பிரக்டோஸ், பீட்சா, பர்கர், பேக்கரி உணவுகள் கூடுதல் கலோரிகளைத் தருவதால் இவை ட்ரை கிளிசரைடுகளாக மாற்றப்பட்டு கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. அதிக கலோரிகளை தரும் உணவுகளை குறைப்பது ட்ரை கிளிசரைடுகளின் அளவை குறைக்கும்.

    சிவப்பு இறைச்சியை அளவுடன் எடுக்க வேண்டும். டிரான்ஸ் கொழுப்புகள், ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட எண்ணெய்கள் அல்லது கொழுப்புகள் சேர்ந்த உணவுகளை தவிர்க்கவும். மது அருந்துவது ட்ரை கிளிசரைடுகளின் அளவை உயர்த்துகிறது. ஆல்கஹாலில் அதிகமான கலோரிகள் மற்றும் சர்க்கரை உள்ளது. எனவே மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

    3) ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சாளை மீன் (சார்டின்). டூனா மீன், பாதாம், வால்நட்,ப்ளாக் சீட்ஸ் (அலிசி விதை). ஆளி விதை, பூசணி விதை, முழுத்தானியங்கள், பருப்பு வகைகள், வெள்ளரி விதை இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரைகள் இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, புதினா, லவங்கப்பட்டை, சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம் இவைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    4) எந்த எண்ணெய் பயன்படுத்தினாலும் அளவுடன் எடுக்க வேண்டும். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய். ஆலிவ் எண்ணெய் சிறந்தது.

    சித்த மருத்துவம்:

    1) ஏலாதிச்சூரணம்-1 கிராம், குங்கிலிய பற்பம் -200 மி.கி. வீதம் மூன்று வேளை வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    2) வெண்தாமரை இதழ் பொடியை காலை, இரவு ஒரு கிராம் வீதம் வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    • பக்கவாதம் உடலின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கும் நோயாகும்.
    • மூளையின் ரத்த ஓட்டம் திடீரென தடைபடுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.

    'பக்கவாதம்' என்பது மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்பட்டு மூளை இயங்குவதற்கு தேவையான ஆக்சிஜன் இல்லாமல் மூளை திசுக்கள் சேதமடைந்து, உடலின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கும் நோயாகும். இது, 'இஸ்கீ மிக் ஸ்ட்ரோக்', 'ஹெமெரோஜிக் ஸ்ட்ரோக்' என்று வகைப்படுத்தப்படுகிறது.

    இஸ்கீமிக் ஸ்ட்ரோக்:

    மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் சுருக்கம், கொழுப்பு படிவதால் வரும் அடைப்புகளால், மூளையின் ரத்த ஓட்டம் திடீரென தடைபடுவ தால் வருவது ஆகும்.

    ஹெமெரோஜிக் ஸ்ட்ரோக்:

    மூளையின் ரத்தக் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், ரத்தக் குழாய்கள் கிழிந்து அதிலிருந்து வெளியேறும் ரத்தம் இவைகளால் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் கட்டுப்பாடற்ற ரத்த அழுத்தம், ரத்தக் குழாய்கள் வீங்கி (அனியுரிசம்) உடைந்து ரத்தம் வெளியேறுதல், தலையில் ஏற்படும் காயங்கள், விபத்துக்கள் இவைகளால் ஏற்படுகிறது.

    அறிகுறிகள்:

    உடல் சமநிலை இழத்தல், முகம் ஒரு புறமாக இழுத்தல், ஒரு பக்க கை, கால் களின் செயல்பாடு இழத்தல், கண் பார்வை மங்குதல் போன்றவை.

    காரணங்கள்:

    பரம்பரையில் பக்கவாதம் இருப்பது, உயர் ரத்தஅழுத்தம், இதய நோய், ரத்தத்தில் அதிகரித்த கொழுப்புகள், புகைப்பிடித்தல், தொடர் மதுப்பழக்கம், கட்டுப்பாடில்லா நீரிழிவு நோயின் பாதிப்புகள், உடல் பருமன், சிறிதளவு கூட உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, உறக்கத்தில் குறட்டை பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும் திடீர் மூச்சு திணறல் (சிலிப் அப்னியா), தலை, மூளைக்காயங்கள் இவைகளை தொடர்ந்து பக்கவாதம் வருகிறது.

    சிகிச்சைகள்:

    பக்கவாதம், வந்தவுடன் அல்லது அதற்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் நேரத்தை வீணடிக்காமல் உடனே நவீன மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். காலம் பொன்னானது. ஆகவே மூளை, நரம்பியல் மருத்துவர்களை பார்க்க வேண்டும். பக்கவாதத்தினால் ஏற்படும் பிந்தைய பாதிப்புகளை குணப்படுத்த ஏராளமான சித்த மருத்துவ தீர்வுகள் உள்ளன.

    பேச்சு குழறலுக்கு:

    அண்ட தைலம் 1-2 சொட்டு நாக்கின் அடியில் தொட்டு வைக்க வேண்டும். இது நாட்பட நல்ல பலனைத் தரும்.

    கை, கால் செயலிழப்பு முகம் ஒரு பக்கமாக இழுத்தல்:

    திரிகடுகு சூரணம் 1 கிராம், சண்ட மாருதச் செந்தூரம் 100 மி.கி., முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை சாப்பிட வேண்டும். திரிபலா சூரணம் 1 கிராம், நவ உப்பு மெழுகு 100 மி.கி. இவற்றை இரு வேளை சாப்பிட வேண்டும்.

    முகத்தில் தேய்த்து மசாஜ் செய்வதற்கு உளுந்து தைலம் அல்லது விடமுட்டி தைலம் பயன்படுத்த வேண்டும். கை கால்களை தேய்த்து மசாஜ் செய்வதற்கு, சிவப்பு குக்கில் தைலம், வாத கேசரி தைலம், கற்பூராதி தைலம், சித்திர மூலத் தைலம் இவைகளை பயன்படுத்தலாம்.

    ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு நீரிழிவு இவைகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும். மது, புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். குளிப்பதற்கு வெந்நீர் பயன்படுத்துவது சிறந்தது. சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

    ×