search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Treatments"

    • பக்கவாதம் உடலின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கும் நோயாகும்.
    • மூளையின் ரத்த ஓட்டம் திடீரென தடைபடுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.

    'பக்கவாதம்' என்பது மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்பட்டு மூளை இயங்குவதற்கு தேவையான ஆக்சிஜன் இல்லாமல் மூளை திசுக்கள் சேதமடைந்து, உடலின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கும் நோயாகும். இது, 'இஸ்கீ மிக் ஸ்ட்ரோக்', 'ஹெமெரோஜிக் ஸ்ட்ரோக்' என்று வகைப்படுத்தப்படுகிறது.

    இஸ்கீமிக் ஸ்ட்ரோக்:

    மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் சுருக்கம், கொழுப்பு படிவதால் வரும் அடைப்புகளால், மூளையின் ரத்த ஓட்டம் திடீரென தடைபடுவ தால் வருவது ஆகும்.

    ஹெமெரோஜிக் ஸ்ட்ரோக்:

    மூளையின் ரத்தக் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், ரத்தக் குழாய்கள் கிழிந்து அதிலிருந்து வெளியேறும் ரத்தம் இவைகளால் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் கட்டுப்பாடற்ற ரத்த அழுத்தம், ரத்தக் குழாய்கள் வீங்கி (அனியுரிசம்) உடைந்து ரத்தம் வெளியேறுதல், தலையில் ஏற்படும் காயங்கள், விபத்துக்கள் இவைகளால் ஏற்படுகிறது.

    அறிகுறிகள்:

    உடல் சமநிலை இழத்தல், முகம் ஒரு புறமாக இழுத்தல், ஒரு பக்க கை, கால் களின் செயல்பாடு இழத்தல், கண் பார்வை மங்குதல் போன்றவை.

    காரணங்கள்:

    பரம்பரையில் பக்கவாதம் இருப்பது, உயர் ரத்தஅழுத்தம், இதய நோய், ரத்தத்தில் அதிகரித்த கொழுப்புகள், புகைப்பிடித்தல், தொடர் மதுப்பழக்கம், கட்டுப்பாடில்லா நீரிழிவு நோயின் பாதிப்புகள், உடல் பருமன், சிறிதளவு கூட உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, உறக்கத்தில் குறட்டை பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும் திடீர் மூச்சு திணறல் (சிலிப் அப்னியா), தலை, மூளைக்காயங்கள் இவைகளை தொடர்ந்து பக்கவாதம் வருகிறது.

    சிகிச்சைகள்:

    பக்கவாதம், வந்தவுடன் அல்லது அதற்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் நேரத்தை வீணடிக்காமல் உடனே நவீன மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். காலம் பொன்னானது. ஆகவே மூளை, நரம்பியல் மருத்துவர்களை பார்க்க வேண்டும். பக்கவாதத்தினால் ஏற்படும் பிந்தைய பாதிப்புகளை குணப்படுத்த ஏராளமான சித்த மருத்துவ தீர்வுகள் உள்ளன.

    பேச்சு குழறலுக்கு:

    அண்ட தைலம் 1-2 சொட்டு நாக்கின் அடியில் தொட்டு வைக்க வேண்டும். இது நாட்பட நல்ல பலனைத் தரும்.

    கை, கால் செயலிழப்பு முகம் ஒரு பக்கமாக இழுத்தல்:

    திரிகடுகு சூரணம் 1 கிராம், சண்ட மாருதச் செந்தூரம் 100 மி.கி., முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை சாப்பிட வேண்டும். திரிபலா சூரணம் 1 கிராம், நவ உப்பு மெழுகு 100 மி.கி. இவற்றை இரு வேளை சாப்பிட வேண்டும்.

    முகத்தில் தேய்த்து மசாஜ் செய்வதற்கு உளுந்து தைலம் அல்லது விடமுட்டி தைலம் பயன்படுத்த வேண்டும். கை கால்களை தேய்த்து மசாஜ் செய்வதற்கு, சிவப்பு குக்கில் தைலம், வாத கேசரி தைலம், கற்பூராதி தைலம், சித்திர மூலத் தைலம் இவைகளை பயன்படுத்தலாம்.

    ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு நீரிழிவு இவைகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும். மது, புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். குளிப்பதற்கு வெந்நீர் பயன்படுத்துவது சிறந்தது. சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

    • கூடல்நகர் பகுதியில் குலசேகரன்பட்டினம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • முகாமில் குடற்புழுநீக்கல், சினைப்பரிசோதனை, கருவூட்டல் செய்தல் உள்ளிட்டவைக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

    உடன்குடி:

    தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உடன்குடி யூனியன் மாதவன்குறிச்சி ஊராட்சி கூடல்நகர் பகுதியில் குலசேகரன்பட்டினம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கால்நடைத்துறை துணைஇயக்குநர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி இயக்குநர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். முகாமை உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தொடங்கி வைத்தார். முகாமில் சிறந்த கிடாரி கன்றுகளுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கினார். மேலும் தற்காலிக மலட்டு தன்மை நீக்குதல், குடற்புழுநீக்கல், ஆண்மை நீக்கம் செய்தல், சினைப்பரிசோதனை, கருவூட்டல் செய்தல், மனது கால நோய்கள் தடுப்பு உள்ளிட்டவைக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. முகாமில் மாதவன்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் சேர்மதுரை, துணைத்தலைவர் கருப்பசாமிமற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் சிறந்த கலப்பின பசு, சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் விருதுகளை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் வழங்கினார்.
    • மேலும் இலவச மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு திட்ட முகாம் தென்திருப்பேரை பேரூராட்சி கல்லாம்பாறை கிராமத்தில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமையில் துணை தலைவர் அமிர்த வள்ளி, பேரூராட்சி உறுப்பினர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    முகாமில் சிறந்த கலப்பின பசு, கிடாரி கன்றுகளுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் மற்றும் விருதுகளை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் வழங்கினார்.

    முகாமில் ஆத்தூர் கால்நடை உதவி மருத்துவர் செந்தில் கண்ணன், தென்திருப்பேரை கால்நடை உதவி மருத்துவர் வினோதினி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், காளைகள் மற்றும் கிடாக்களுக்கு ஆண்மை நீக்கம், கோழி கழிச்சல் தடுப்பூசி போடப்பட்டது.

    மேலும் இலவச மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை டி.வி.எஸ். சேவைகள் அறக்கட்டளை சார்பில் இசக்கி செய்திருந்தார். முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் மருத்துவர்கள் ராஜ்பாபு, ராஜ் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் 10-க்கும் மேற்பட்டோர் கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
    • தொடர்ந்து சிறப்பாக வளர்க்கப்பட்ட கிடாரிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அதன் உரிமையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே சவலாப்பேரி கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சஞ்சீவிராஜ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி கோட்டத்தின் கால்நடை உதவி மருத்துவர் விஜய்ஸ்ரீ முன்னிலை வகித்தார்.

    முகாமில் மருத்துவர்கள் ராஜ்பாபு, ராஜ் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் 10-க்கும் மேற்பட்டோர் கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

    இதில் அப்பகுதியை சேர்ந்த 96 கால்நடைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 10 கால்நடைகளுக்கு மலட்டு தன்மை நீக்குதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைத்து ஆடு, மாடுகளுக்கும் தடுப்பூசி மற்றும் தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. மேலும் குடற்புழு நீக்கம் உட்பட பல்வேறு சிகிச்சைகள் கால்நடைகளுக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக வளர்க்கப்பட்ட கிடாரிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அதன் உரிமையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவர் ராஜ் பாபு, மற்றும் ராஜ், கால்நடை உதவியாளர்கள் செய்தி ருந்தனர்.

    ×