search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veterinary medical camp"

    • முகாமில் மருத்துவர்கள் ராஜ்பாபு, ராஜ் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் 10-க்கும் மேற்பட்டோர் கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
    • தொடர்ந்து சிறப்பாக வளர்க்கப்பட்ட கிடாரிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அதன் உரிமையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே சவலாப்பேரி கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சஞ்சீவிராஜ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி கோட்டத்தின் கால்நடை உதவி மருத்துவர் விஜய்ஸ்ரீ முன்னிலை வகித்தார்.

    முகாமில் மருத்துவர்கள் ராஜ்பாபு, ராஜ் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் 10-க்கும் மேற்பட்டோர் கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

    இதில் அப்பகுதியை சேர்ந்த 96 கால்நடைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 10 கால்நடைகளுக்கு மலட்டு தன்மை நீக்குதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைத்து ஆடு, மாடுகளுக்கும் தடுப்பூசி மற்றும் தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. மேலும் குடற்புழு நீக்கம் உட்பட பல்வேறு சிகிச்சைகள் கால்நடைகளுக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக வளர்க்கப்பட்ட கிடாரிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அதன் உரிமையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவர் ராஜ் பாபு, மற்றும் ராஜ், கால்நடை உதவியாளர்கள் செய்தி ருந்தனர்.

    • சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் சுமார் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு வழங்கப்பட்டது.
    • சிறந்த கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    செந்துறை:

    நத்தம் தாலுகா செந்துறை அருகே மந்தகுளத்துப்பட்டியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    திண்டுக்கல் கோட்ட உதவி இயக்குநர் திருவள்ளுவன் ஆலோசனையின் பேரில் நடந்த முகாமில் செந்துறை கால்நடை மருந்தக உதவி மருத்துவர் இந்து தலைமையில் உதவி மருத்துவர்கள் சிறுகுடி குமரேசன், குட்டுப்பட்டி பிரேமாவதி ஆய்வாளர் கமலா, பராமரிப்பு உதவியாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதில் சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் சுமார் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு வழங்கப்பட்டது. சிறந்த கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகளை குடகிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி மற்றும் வார்டு உறுப்பினர் கணேசன் வழங்கினர்.

    ×