என் மலர்
நீங்கள் தேடியது "ரத்த கொழுப்பு"
- உடலின் தசைகளிலும், ரத்தத்திலும் காணப்படும் 80 சதவீத கொழுப்பு உடலால் உற்பத்தி செய்யப்படுகிறது.
- கொழுப்பை ரத்தத்தில் உள்ள கொழுப்பு எனவும், உணவு மூலம் பெருகும் கொழுப்பு எனவும் 2 வகைகளாக பிரிக்கலாம்.
கொழுப்பு என்ற சொல்லைக் கேட்டாலே பலருக்கு பயம் வரும். ஏனெனில் உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்போது மாரடைப்பு போன்ற திடீர் மரணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உண்மையில், கொழுப்பு உடலுக்கு முக்கியமான ஒன்று. கொழுப்பு என்பது ஒவ்வொரு உயிர் அணுவிலும் இருக்கின்ற இயற்கையான பொருள் ஆகும். மனித உடலில் சுரக்கும் ஜீரண நீர்கள், ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் 'டி'-யை உற்பத்தி செய்வதில் கொழுப்பு பெரும் பங்கு வகிக்கிறது. நரம்பு, தசைநார்களை காக்கும் பணியையும் செய்கிறது.
உடலின் தசைகளிலும், ரத்தத்திலும் காணப்படும் 80 சதவீத கொழுப்பு உடலால் உற்பத்தி செய்யப்படுகிறது. 20 சதவீத கொழுப்பு மட்டுமே உணவு மூலம் உற்பத்தியாகிறது. மனித உடல் தனக்கு தேவையான கொழுப்பை தானே உற்பத்தி செய்து கொண்டு, உடலுக்கு தேவையான அளவு பயன்படுத்திக் கொள்கிறது.
அதிக கொழுப்பு நிரம்பிய உணவுகளால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேரும்போது, உடல் தனது கொழுப்பு உற்பத்தியை குறைத்துக்கொண்டு உடலின் கொழுப்பு அளவை சமநிலை செய்கிறது.
கொழுப்பை ரத்தத்தில் உள்ள கொழுப்பு எனவும், உணவு மூலம் பெருகும் கொழுப்பு எனவும் 2 வகைகளாக பிரிக்கலாம். இதில் ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவு அதிகமாகும்போது மட்டுமே அது இதய நோய்க்கு காரணமாக அமைகிறது.
இதய நோய்க்கு உயர் ரத்த அழுத்தம், புகைத்தல், உடற்பயிற்சி இல்லாதது, நீரிழிவு நோய் ஆகியவையும் காரணங்களாக அமைகின்றன. உடலில் உருவாகும் நிறைவுற்ற கொழுப்பு ஏற்படுத்தும் விளைவை விடக் குறைந்த அளவு பாதிப்பே உணவில் உள்ள கொழுப்பு மூலம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே கொழுப்பை பொறுத்தவரை, ரத்த கொழுப்பின் அளவு சீராக இருக்கும் வண்ணம் கவனித்துக் கொள்வதுதான் இதய பாதிப்புகளை தடுக்கும் வழி என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
- பக்கவாதம் உடலின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கும் நோயாகும்.
- மூளையின் ரத்த ஓட்டம் திடீரென தடைபடுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.
'பக்கவாதம்' என்பது மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்பட்டு மூளை இயங்குவதற்கு தேவையான ஆக்சிஜன் இல்லாமல் மூளை திசுக்கள் சேதமடைந்து, உடலின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கும் நோயாகும். இது, 'இஸ்கீ மிக் ஸ்ட்ரோக்', 'ஹெமெரோஜிக் ஸ்ட்ரோக்' என்று வகைப்படுத்தப்படுகிறது.
இஸ்கீமிக் ஸ்ட்ரோக்:
மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் சுருக்கம், கொழுப்பு படிவதால் வரும் அடைப்புகளால், மூளையின் ரத்த ஓட்டம் திடீரென தடைபடுவ தால் வருவது ஆகும்.
ஹெமெரோஜிக் ஸ்ட்ரோக்:
மூளையின் ரத்தக் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், ரத்தக் குழாய்கள் கிழிந்து அதிலிருந்து வெளியேறும் ரத்தம் இவைகளால் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் கட்டுப்பாடற்ற ரத்த அழுத்தம், ரத்தக் குழாய்கள் வீங்கி (அனியுரிசம்) உடைந்து ரத்தம் வெளியேறுதல், தலையில் ஏற்படும் காயங்கள், விபத்துக்கள் இவைகளால் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
உடல் சமநிலை இழத்தல், முகம் ஒரு புறமாக இழுத்தல், ஒரு பக்க கை, கால் களின் செயல்பாடு இழத்தல், கண் பார்வை மங்குதல் போன்றவை.
காரணங்கள்:
பரம்பரையில் பக்கவாதம் இருப்பது, உயர் ரத்தஅழுத்தம், இதய நோய், ரத்தத்தில் அதிகரித்த கொழுப்புகள், புகைப்பிடித்தல், தொடர் மதுப்பழக்கம், கட்டுப்பாடில்லா நீரிழிவு நோயின் பாதிப்புகள், உடல் பருமன், சிறிதளவு கூட உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, உறக்கத்தில் குறட்டை பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும் திடீர் மூச்சு திணறல் (சிலிப் அப்னியா), தலை, மூளைக்காயங்கள் இவைகளை தொடர்ந்து பக்கவாதம் வருகிறது.
சிகிச்சைகள்:
பக்கவாதம், வந்தவுடன் அல்லது அதற்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் நேரத்தை வீணடிக்காமல் உடனே நவீன மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். காலம் பொன்னானது. ஆகவே மூளை, நரம்பியல் மருத்துவர்களை பார்க்க வேண்டும். பக்கவாதத்தினால் ஏற்படும் பிந்தைய பாதிப்புகளை குணப்படுத்த ஏராளமான சித்த மருத்துவ தீர்வுகள் உள்ளன.
பேச்சு குழறலுக்கு:
அண்ட தைலம் 1-2 சொட்டு நாக்கின் அடியில் தொட்டு வைக்க வேண்டும். இது நாட்பட நல்ல பலனைத் தரும்.
கை, கால் செயலிழப்பு முகம் ஒரு பக்கமாக இழுத்தல்:
திரிகடுகு சூரணம் 1 கிராம், சண்ட மாருதச் செந்தூரம் 100 மி.கி., முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை சாப்பிட வேண்டும். திரிபலா சூரணம் 1 கிராம், நவ உப்பு மெழுகு 100 மி.கி. இவற்றை இரு வேளை சாப்பிட வேண்டும்.
முகத்தில் தேய்த்து மசாஜ் செய்வதற்கு உளுந்து தைலம் அல்லது விடமுட்டி தைலம் பயன்படுத்த வேண்டும். கை கால்களை தேய்த்து மசாஜ் செய்வதற்கு, சிவப்பு குக்கில் தைலம், வாத கேசரி தைலம், கற்பூராதி தைலம், சித்திர மூலத் தைலம் இவைகளை பயன்படுத்தலாம்.
ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு நீரிழிவு இவைகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும். மது, புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். குளிப்பதற்கு வெந்நீர் பயன்படுத்துவது சிறந்தது. சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.






