search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "First aid"

    • சுத்தமான காற்றை சுவாசிக்க விடாமல் தடுக்க கூடாது.
    • உயிர் மீட்பு சுவாச முதலுதவி தேவைப்பட்டால் செய்யலாம்.

    விஷம் குடித்தவரை முதலில் சுத்தமான காற்றுள்ள பெரிய இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். எல்லோரும் சுற்றி நின்று அவர் சுத்தமான காற்றை சுவாசிக்க விடாமல் தடுக்க கூடாது. விஷம் குடித்து படுத்திருப்பவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்று உங்களால் முடிந்தவரை கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். மூச்சு விடுகிறாரா, மார்பு சுருங்கி விரிகிறதா, இருமல் எதுவும் இருக்கிறதா, கண் திறந்து மூடுகிறாரா, வாய் திறந்து மூடுகிறாரா என்பதை கவனிக்க வேண்டும். உயிர் மீட்பு சுவாச முதலுதவி தேவைப்பட்டால் அதை செய்யலாம்.

    விஷம் குடித்தவரின் தற்போதைய நிலை எப்படியிருக்கிறது? அறிகுறி என்னென்ன இருக்கிறது? என்ன விஷம் குடித்தார் என்று அவரால் சொல்ல முடிகிறதா? விஷம் உடலினுள் சென்றதனால், அவர் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன? விஷம் குடித்தவரின் வயது என்ன? என்ன மாதிரி விஷம் குடித்திருப்பார்? எவ்வளவு அளவு விஷம் குடித்திருப்பார்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    விஷம் குடித்தவருக்கு உள்ள அறிகுறிகள்:

    உதட்டைச் சுற்றி, வாயைச் சுற்றி சிவந்து இருக்கலாம். மூச்சு விடுவதை முகத்துக்கு கிட்டே சென்று முகர்ந்து பார்த்தால், என்ன வாசனை அடிக்கிறது என்பதை வைத்து என்ன பொருளைக் குடித்திருப்பார் என்பதை ஓரளவு கணிக்கலாம். மூச்சுத்திணறல், வலிப்பு அமைதியின்மை, ஞாபக மறதி, மயக்கம், பேச்சு உளறல், பேச்சில் தடுமாற்றம், மனநிலை குழப்பம் போன்றவற்றில் ஏதேனும் சில அறிகுறிகள் இருந்தால் விஷத்தின் பாதிப்பு உடலில் ஏறி இருக்கிறது என்று அர்த்தம். இந்த மாதிரி சூழ்நிலையில் விஷம் அருந்தியவரை உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் கொண்டு செல்வது தான் நல்லது.

    • பெரிய விபத்துக்களில் இருந்து மக்களை மீட்பது எப்படி?
    • தீ விபத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நெடுஞ்சா லை துறை மற்றும் வட்டார மோட்டார் வாகன போக்குவரத்து துறை சார்பில் சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு முதலுதவி செயல் விளக்கம் முகாம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் பாலசுப்பி ரமணியன் தலைமை தாங்கினார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார், நெடுஞ்சாலைதுறை கோட்ட உதவி செயற் பொறியாளர் இந்திரன், உதவி காவல் ஆய்வாளர் முகிலரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெல்ஸ்பன் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு அலுவலர் ஜூலியஸ் தூய மணி வரவேற்று பேசினார். வெல்ஸ்பன் நிறுவனத்தின் மூத்த மேலாளர் கோபிராஜ் மற்றும் பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

    முகாமில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் கிருபாகரன் தலைமையில், ரெட் கிராஸ் தலைமை பயிற்சியாளர் பெஞ்ஜமின் முதல் உதவி குறித்து செயல்முறை விளக்கத்தை பொது மக்களுக்கு செய்துகா ன்பித்தனர். விபத்து ஏற்பட்டு கை, கால் முறிவு, மரணம் தருவாயில் காப்பாற்றுவது, பெரிய விபத்துக்கள் இருந்து மீட்பது, தீ விபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது, பின்னர் சிகிச்சை முறை அளிப்பது குறித்தும் முகாமில் 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு முதலுதவியை செயல்முறை விளக்கத்தை கேட்டும், பார்த்தும் தெரிந்து கொண்டனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மக்கள் தொடர்பாளர் டிரைவிங் சென்டர் கார்த்தி ஒருங்கிணைத்தார்.

    • பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஒவ்வொரு அரங்குகளையும் பார்வையிட்டு வந்தனர்.
    • பின்னர் உடனடியாக ஆம்புலன்சுக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்ப ட்டினத்தில் நெய்தல் புத்தகத் திருவிழா இன்று தொடங்கப்பட்டது. வருகிற 9-ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை ஏராளமான மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஒவ்வொரு அரங்குகளையும் பார்வையிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் அரசு கல்லூரியை சேர்ந்த மாணவி மற்றும் பள்ளி மாணவி ஒருவர் என 2 பேர் திடீரென்று மயக்கம் அடைந்தனர். அப்போது அங்கு இருந்த தோழிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி டைந்தனர். பின்னர் உடனடி யாக ஆம்புலன்சுக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வீட்டில் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்ற சந்திராவை விஷப்பாம்பு கடித்தது.
    • வழக்கு பதிவு செய்த சின்னசேலம் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வெற்றி லைக்கார தெருவை சேர்ந்த வர் ரமேஷ். கூலி வேலை செய்து வருகிறார். இவரு டைய மனைவி சந்திரா (வயது 39) இவர்களுக்கு தினகரன், தீபா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2-ந்தேதி இவரது வீட்டில் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்ற சந்திராவை விஷப்பாம்பு கடித்தது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் சந்திரா வை மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையாக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் சந்திரா பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது கணவன் ரமேஷ் கொடுத்த புகா ரின் அடிப் படையில் வழக்கு பதிவு செய்த சின்ன சேலம் போலீ சார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    • அவிநாசி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆபத்து கால முதலுதவி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பாதிக்கப்பட்டவா்களை பாதுகாப்பான முறையில் மீட்பது குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

    அவிநாசி,

    உலக முதலுதவி தினத்தையொட்டி அவிநாசி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆபத்து கால முதலுதவி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்திய மருத்துவக்கழகத்தின்கீழ் இயங்கும் 108 அவசர ஊா்தி இயக்குநரகம், தனியாா் அவசர ஊா்திகள் சங்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், யூத் ரோட்டரி சங்க பொறுப்பாளா் ராஜ்குமாா், 108 அவசர ஊா்தி ஊழியா்கள் ராஜேஷ், மனோஜ், மோகன்ராஜ் ஆகியோா் முதலுதவி குறித்த செயல்முறை விளக்கமளித்தனா்.

    இதில், இயற்கை பேரிடரில் பாதிக்கப்படுபவா்களை எவ்வாறு மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது, எலும்பு முறிவு, மாரடைப்பு, மூச்சு திணறல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவா்களை பாதுகாப்பான முறையில் மீட்பது குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

    • முதலுதவி சாதனங்களை கையாள்வது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
    • பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் எவ்வாறு ஈடுபடுவது?

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தினரால் பேரிடர் கால மீட்பு பணி, முதலுதவி குறித்த ஒத்திகை மற்றும் பயிற்சி நிகழ்வு நடைபெற்றது.

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம் முன்னிலையில் திருக்காட்டு ப்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் மாணவர்களின் ஒத்துழைப்பு மற்றும் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்வது அருகாமையில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களை காப்பாற்றுவது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

    முதலுதவி சாதனங்களை கையாளுவது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் தெரிவித்தனர்.

    பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தெரிந்து கொண்டனர்.

    • பாண்டுரங்கன் நிலத்திற்கு செல்வதற்காக ஏரிக்கரையில் இறங்கு ம்போது எதிர்பாராத விதமாக மூதாட்டியை பாம்பு கடித்தது.
    • இது குறித்து கீழ்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள உலகியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் .இவரது தாயார் முத்தம்மாள் (வயது 70) இவர்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முத்தம்மாள் தனது மற்றொரு மகனான பாண்டுரங்கன் நிலத்திற்கு செல்வதற்காக ஏரிக்கரையில் இறங்கு ம்போது எதிர்பாராத விதமாக மூதாட்டியை பாம்பு கடித்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முத்தம்மாள் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செந்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழ்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ரிஷிவந்தியம் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    ரிஷிவந்தியத்தை அடுத்த லாலாபேட்டையை சேர்ந்த வர் சுந்தரபாண்டியன் (வயது 25) விவசாயி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் கீழத்தேனூரில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். கீழத்தேனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் சுந்தரபாண்டியன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச் சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே சுந்தர பாண்டியன் பரிதாப மாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர் அய்யனார் பாளை யத்தை சேர்ந்த சக்திவேல் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கீழ்காணும் அனைத்துமே முதலுதவிகள் மட்டும்தான்.
    • மூக்குவழியாகவும் சில பொருள்கள் சென்றுவிடுவதுண்டு.

    சில குழந்தை கீழே எது கிடந்தாலும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். அதேபோல் ஆசையாக நாம் குழந்தைகளுக்கு வாங்கித் தரும் சாக்லேட் போன்றவை, சில நேரங்களில் பெரும் விபரீதத்தை ஏற்படுத்திவிடும். சாக்லேட் மட்டுமல்ல குழந்தைகள் சில நேரங்களில் காசு, ரப்பர், கோலிக்குண்டு, பாசி, ஹேர்பின், நறுக்கிய காய்கறிகள், பேனா மூடி போன்றவற்றை வாயில் போட்டு விழுங்கிவிடுவதுண்டு. அப்படி விழுங்கிவிட்டால் குழந்தைகளுக்கு என்னென்ன முதலுதவிகள் செய்ய வேண்டும்? இதுபற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    குழந்தைகளால் விழுங்கப்படும் பொருள்கள் மூச்சுக்குழாய் அல்லது உணவுக்குழாய்க்குள்தான் செல்லும். சில நேரங்களில் இது இரண்டும் பிரியும் இடமான தொண்டைக்குழிக்குள்ளும் சிக்கிக் கொள்ளலாம். மூச்சுக்குழாய்க்குள் சென்று அடைத்துக் கொண்டால், சுவாசப்பாதை தடைபடும். மூச்சுவிட முடியாது. உணவுக்குழாய்க்குள் என்றால், இரைப்பை வழியாக வயிற்றுக்குள் செல்லும். வயிற்றுக்குள் செல்லும் பொருளின் தன்மையைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். சில பொருள்கள் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் வெளியேறிவிடுவதும் உண்டு.

    குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால், முதலில் அவர்களை இருமச் சொல்ல வேண்டும். பின்னர், அவர்களைக் குனியவைத்து, முதுகுப் பகுதியில் ஐந்து முறை பலமாகத் தட்ட வேண்டும். அப்படியும் விழுங்கிய பொருள் வெளியே வராவிட்டால், குழந்தையை பின்புறத்திலிருந்து கட்டியணைத்து அவர்களின் நெஞ்சுக்குக் கீழே, தொப்புளுக்கு மேலே நம் ஒருகை முஷ்டி மேல் இன்னுமொரு கை வைத்து ஐந்து முறை மேல் நோக்கித் தள்ள வேண்டும். அப்படியும் பொருள் வரவில்லையென்றால், மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட வேண்டும்.

    கீழ்காணும் அனைத்துமே முதலுதவிகள் மட்டும்தான். குழந்தைகள் எதை விழுங்கியிருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடுவதுதான் நல்லது.

    பேச்சு மூச்சு இல்லாத நிலையில் குழந்தைகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கு இடைப்பட்ட நேரத்தில் இதய மூச்சு மறுஉயிர்ப்பு முதலுதவிகளைச் செய்யலாம். முதலில், குழந்தையை மல்லாக்கப் படுக்கவைத்து நெஞ்சுப்பகுதிக்கு நடுவில் நம் கையைவைத்து நிமிடத்துக்கு நூறுமுறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படியே முப்பது தடவை செய்த பின்னர், குழந்தையின் மூக்குக்கு அருகே காதை வைத்து, மூச்சு வருகிறதா என்று கவனிக்க வேண்டும்.

    வராவிட்டால், குழந்தையின் வாயில் வாய்வைத்து இரண்டு முறை ஊத வேண்டும். அப்படியும் குழந்தைக்கு மூச்சு வரவில்லை என்றால், மீண்டும் முதலில் செய்ததுபோல நெஞ்சுப்பகுதியில் ஐந்து முறை கைவைத்து அழுத்த வேண்டும். மீண்டும் வாயில் வாய்வைத்து இரண்டு முறை ஊத வேண்டும். இப்படியே தொடர்ச்சியாக மருத்துவ உதவி கிடைக்கும்வரை செய்ய வேண்டும். ஒன்று முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த முதலுதவிகளைச் செய்யலாம்.

    ஒரு வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகள் என்றால், முதலில் வாய்க்குள் விரலைவிட்டு ஏதாவது இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். இல்லையென்றால் நம் கைகளிலோ, தொடைகளிலோ குழந்தையைக் குப்புறப் படுக்கவைத்து, தலையை தாழ்வாக வைத்துக்கொண்டு குழந்தையின் முதுகில் ஐந்து முறை தட்ட வேண்டும்.

    அப்படியும் விழுங்கிய பொருள் வரவில்லையென்றால், குழந்தையை அதே நிலையில் மல்லாக்கப் படுக்கவைத்து, நெஞ்சுக்குக் கீழே நம் இரண்டு விரல்களை வைத்து மேல் நோக்கிவாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேற்கண்ட அனைத்துமே முதலுதவிகள் மட்டும்தான். குழந்தைகள் எதை விழுங்கியிருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடுவதுதான் நல்லது. பேச்சு மூச்சு இல்லாத நிலையில் குழந்தைகள் இருந்தால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர் இதய மூச்சு மறுஉயிர்ப்பு முதலுதவி செய்யலாம்.

    சிலர் குழந்தைகளை தலைகீழாக வைத்து உலுக்குவார்கள். அது தவறு; அப்படிச் செய்யக் கூடாது. தண்ணீர் தருவதோ, சாப்பிடக் கொடுப்பதோ வேண்டாம்.

    வாய்வழியாக மட்டுமல்லாமல், மூக்குவழியாகவும் சில பொருள்கள் சென்றுவிடுவதுண்டு. உதாரணமாக பொரி, கடலை, பாசி போன்றவை. இவற்றால் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால், குழந்தையின் மூக்கில் சளி வடிந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் ரத்தமும் வழியலாம். சமயத்தில், நோய்த்தொற்று ஏற்பட்டு புண்ணாகிவிடும். அதனால் குழந்தையின் மூக்கில் புண் ஏதாவது இருந்தாலும் மருத்துவரிடம் கூட்டிச் சென்றுவிடுவது நல்லது.

    • குழந்தைகளை மிகவும் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.
    • குழந்தைகள் கீழே எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட்டு கொள்வார்கள்.

    சில குழந்தைகள் கீழே எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட்டு கொள்வார்கள். எனவே குழந்தைகளை மிகவும் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.

    குழந்தைகள் தவறுதலாக ஏதேனும் விழுங்கிவிட்டாலோ அல்லது சாப்பிடும்போது ஏதேனும் உணவுத் தொண்டையில் எக்குத் தப்பாகச் சிக்கிக்கொண்டாலோ, கையை விட்டு எடுக்கவோ, விரலை விட்டு எடுக்கவோ, கண்டிப்பாக முயற்சிக்கக் கூடாது.

    தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டால், அதை எடுப்பதற்கு, 'ஹீம்லிக் மெனுவர்' ( HEIMLICH MANEUVER) என்ற செய்முறை இருக்கிறது.

    இந்த முதல் உதவி சிகிச்சை முறைப்படி தெரிந்தவர்கள், அதை உபயோகித்துப் பொருளை எடுக்கலாம்.

    இல்லையெனில் உடனடியாக மருத்துவமனைக்குப் போய்விட வேண்டும்.

    ஏனென்றால், விழுங்கிய எட்டு நிமிடங்களுக்குள் அந்தப் பொருளை வெளியே எடுக்க வேண்டும். எனவே ஒவ்வொரு நொடியும், தங்க நொடிதான்.

    எட்டு நிமிடங்களுக்குப் பிறகும் ஆக்ஸிஜன் மூளைக்குச் செல்லவில்லை என்றால், விளைவு விபரீதம் ஆகிவிடும்.

    எனவே எதை செய்தாலும் தாமதிக்காமல் செய்வது மிகவும் முக்கியம்.

    • இதயம் செயலிழக்கும் போது மார்பை அழுத்தி செயல் பட வைக்கும் சிகிச்சை பற்றிய செயல் விளக்கம்.
    • 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் 10-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 10 ஆயிரம் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு உயிர் காக்கும் முதலுதவி மற்றும் இதயம் செயலிழக்கும் போது மார்பை அழுத்தி செயல் பட வைக்கும் சிகிச்சை பற்றிய செயல் விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதன் முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம், புனல் குளத்தில் உள்ள கிங்ஸ் மற்றும் குயின்ஸ் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சியை மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவரும்,

    இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்க தலைவருமான மருத்துவர் சரவணவேல் அளித்தார்.

    பயிற்சியை கல்லூரி செயலாளர் ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் அற்புத விஜயசெல்வி, குயின்ஸ் கல்லூரி முதல்வர் சித்ராதேவி தொடங்கி வைத்து முன்னிலை வகித்தனர்.

    500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இதில் கிங்ஸ் கல்லூரியின் நாட்டுநல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அம்பலத்தரசு, தினேஷ், சுரேஷ்பாபு, மருத்துவமனை நிறுவனத்துறை தலைவர் ஞானசவுந்தரி கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சியானது மேலும் பல கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.

    சீர்காழியில் காவலர்களுக்கு விபத்து, பேரிடர் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட சீர்காழி, கொள்ளிடம், புதுப்பட்டினம், திருவெண்காடு, வைத்தீ ஸ்வரன்கோவில், பூம்புகார் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சி முகாம் சீர்காழி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

    சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக் தலைமை வகித்தார். அரசு தலைமை மருத்துவர் பானுமதி, இன்ஸ்பெக்டர் மணிமாறன் முன்னி வகித்தனர்.பயிற்சி முகாமில் 108 வாகனத்தில் பணி புரியும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் இணைந்து முதலுதவி குறித்த செயல் விளக்கம் அளித்தனர்.

    குறிப்பாக விபத்தில் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்தவர்கள், பாம்பு கடித்து பாதிக்கப்பட்ட வர்கள், மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திடீரென சுயநினைவு இழந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தற்காப்பு முதலுதவி சிகிச்சைகள் குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர். இதில் சீர்காழி சரகத்திற்கு உட்பட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் அனைத்து நிலை காவலர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×