search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தக திருவிழாவை பார்வையிட வந்த 2 மாணவிகள் மயங்கி விழுந்தனர்
    X

    புத்தக திருவிழாவை பார்வையிட வந்த 2 மாணவிகள் மயங்கி விழுந்தனர்

    • பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஒவ்வொரு அரங்குகளையும் பார்வையிட்டு வந்தனர்.
    • பின்னர் உடனடியாக ஆம்புலன்சுக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்ப ட்டினத்தில் நெய்தல் புத்தகத் திருவிழா இன்று தொடங்கப்பட்டது. வருகிற 9-ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை ஏராளமான மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஒவ்வொரு அரங்குகளையும் பார்வையிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் அரசு கல்லூரியை சேர்ந்த மாணவி மற்றும் பள்ளி மாணவி ஒருவர் என 2 பேர் திடீரென்று மயக்கம் அடைந்தனர். அப்போது அங்கு இருந்த தோழிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி டைந்தனர். பின்னர் உடனடி யாக ஆம்புலன்சுக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×