ஆபத்து கால முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி

அவிநாசி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆபத்து கால முதலுதவி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பாதிக்கப்பட்டவா்களை பாதுகாப்பான முறையில் மீட்பது குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

அவிநாசி,

உலக முதலுதவி தினத்தையொட்டி அவிநாசி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆபத்து கால முதலுதவி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய மருத்துவக்கழகத்தின்கீழ் இயங்கும் 108 அவசர ஊா்தி இயக்குநரகம், தனியாா் அவசர ஊா்திகள் சங்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், யூத் ரோட்டரி சங்க பொறுப்பாளா் ராஜ்குமாா், 108 அவசர ஊா்தி ஊழியா்கள் ராஜேஷ், மனோஜ், மோகன்ராஜ் ஆகியோா் முதலுதவி குறித்த செயல்முறை விளக்கமளித்தனா்.

இதில், இயற்கை பேரிடரில் பாதிக்கப்படுபவா்களை எவ்வாறு மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது, எலும்பு முறிவு, மாரடைப்பு, மூச்சு திணறல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவா்களை பாதுகாப்பான முறையில் மீட்பது குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com