search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    விஷம் அருந்தியவரை காப்பாற்ற என்ன செய்வது?
    X

    விஷம் அருந்தியவரை காப்பாற்ற என்ன செய்வது?

    • சுத்தமான காற்றை சுவாசிக்க விடாமல் தடுக்க கூடாது.
    • உயிர் மீட்பு சுவாச முதலுதவி தேவைப்பட்டால் செய்யலாம்.

    விஷம் குடித்தவரை முதலில் சுத்தமான காற்றுள்ள பெரிய இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். எல்லோரும் சுற்றி நின்று அவர் சுத்தமான காற்றை சுவாசிக்க விடாமல் தடுக்க கூடாது. விஷம் குடித்து படுத்திருப்பவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்று உங்களால் முடிந்தவரை கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். மூச்சு விடுகிறாரா, மார்பு சுருங்கி விரிகிறதா, இருமல் எதுவும் இருக்கிறதா, கண் திறந்து மூடுகிறாரா, வாய் திறந்து மூடுகிறாரா என்பதை கவனிக்க வேண்டும். உயிர் மீட்பு சுவாச முதலுதவி தேவைப்பட்டால் அதை செய்யலாம்.

    விஷம் குடித்தவரின் தற்போதைய நிலை எப்படியிருக்கிறது? அறிகுறி என்னென்ன இருக்கிறது? என்ன விஷம் குடித்தார் என்று அவரால் சொல்ல முடிகிறதா? விஷம் உடலினுள் சென்றதனால், அவர் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன? விஷம் குடித்தவரின் வயது என்ன? என்ன மாதிரி விஷம் குடித்திருப்பார்? எவ்வளவு அளவு விஷம் குடித்திருப்பார்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    விஷம் குடித்தவருக்கு உள்ள அறிகுறிகள்:

    உதட்டைச் சுற்றி, வாயைச் சுற்றி சிவந்து இருக்கலாம். மூச்சு விடுவதை முகத்துக்கு கிட்டே சென்று முகர்ந்து பார்த்தால், என்ன வாசனை அடிக்கிறது என்பதை வைத்து என்ன பொருளைக் குடித்திருப்பார் என்பதை ஓரளவு கணிக்கலாம். மூச்சுத்திணறல், வலிப்பு அமைதியின்மை, ஞாபக மறதி, மயக்கம், பேச்சு உளறல், பேச்சில் தடுமாற்றம், மனநிலை குழப்பம் போன்றவற்றில் ஏதேனும் சில அறிகுறிகள் இருந்தால் விஷத்தின் பாதிப்பு உடலில் ஏறி இருக்கிறது என்று அர்த்தம். இந்த மாதிரி சூழ்நிலையில் விஷம் அருந்தியவரை உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் கொண்டு செல்வது தான் நல்லது.

    Next Story
    ×