சின்னசேலத்தில் பாம்பு கடித்து பெண் பலி

வீட்டில் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்ற சந்திராவை விஷப்பாம்பு கடித்தது. வழக்கு பதிவு செய்த சின்னசேலம் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
சின்னசேலத்தில் பாம்பு கடித்து பெண் பலி
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வெற்றி லைக்கார தெருவை சேர்ந்த வர் ரமேஷ். கூலி வேலை செய்து வருகிறார். இவரு டைய மனைவி சந்திரா (வயது 39) இவர்களுக்கு தினகரன், தீபா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2-ந்தேதி இவரது வீட்டில் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்ற சந்திராவை விஷப்பாம்பு கடித்தது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் சந்திரா வை மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையாக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் சந்திரா பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது கணவன் ரமேஷ் கொடுத்த புகா ரின் அடிப் படையில் வழக்கு பதிவு செய்த சின்ன சேலம் போலீ சார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com