என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skin Allergies"

    • உணவு ஒவ்வாமை சுமார் 4-8% குழந்தைகளை பாதிக்கிறது.
    • முட்டை, பால், கோதுமை மற்றும் சோயா ஒவ்வாமைகள் 5 வயதிற்குள் மறைந்துவிடும்.

    குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலான விஷயம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமானது, உணவு ஒவ்வாமை. உணவு ஒவ்வாமை ஏற்பட்டால் குழந்தைகள் சத்துள்ள பொருட்களை சாப்பிட முடியாது, உடல் எடை குறையும், உடல்நலம் பாதிக்கப்படும். உணவு ஒவ்வாமை சுமார் 4-8% குழந்தைகளை பாதிக்கிறது. அந்த வகையில், குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதைக் குணப்படுத்தும் முறைகளைக் காண்போம். 

    குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை இருப்பதை எவ்வாறு கண்டறிவது?

    வளரும் குழந்தைகளுக்கு புதிதாக உணவுகளை பழக்கப்படுத்த வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக சாதம், முட்டை, வேர்க்கடலை, அவித்த உருளைக்கிழங்கு, ஆப்பிள் போன்றவற்றை பெற்றோர்கள் கொடுக்க தொடங்குவார்கள். அப்படி இந்த பொருட்கள் ஒத்துகொள்ளவில்லை எனில் சாப்பிட்ட சிறிதுநேரத்திலேயே குழந்தைகள் வாந்தி எடுத்துவிடுவார்கள். அல்லது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். அரிப்பு, தோல் வெடிப்புகள், வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். சிலநேரங்களில் மூச்சு விடுதலில் சிரமம் இருக்கும். மேலும் சில உணவுகளை குழந்தைகள் சாப்பிடவே மாட்டார்கள். அப்போது அது காலப்போக்கில் சரியாகிவிடும் என பெற்றோர் விட்டுவிடுவார்கள். குழந்தைக்கு உணவு ஒவ்வாமை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும். அது ஒவ்வாமைதானா என உறுதிப்படுத்தி அதன்பின் அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் வழங்குவர். மேலும் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவை வேறு எந்த முறையில் கொடுக்கலாம் எனவும் அறிவுறுத்துவர். 


    குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள்

    ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொதுவான உணவுப் பொருட்கள்...

    • பால்
    • முட்டை
    • வேர்க்கடலை
    • மரக்கொட்டைகள்
    • மீன்
    • கோதுமை
    • சோயா
    • ஷெல்ஃபிஷ்

    மேற்கூறிய 8 உணவுகள்தான் 90% உணவு ஒவ்வாமைகளை ஏற்படுத்துகின்றன. 

    ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு என்ன செய்வது?

    முட்டை, பால், கோதுமை மற்றும் சோயா ஒவ்வாமைகள் 5 வயதிற்குள் மறைந்துவிடும். ஆனால் சில ஒவ்வாமைகள் தொடர்ந்து நீடிக்கும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், வேர்க்கடலை மற்றும் குழந்தைக்கு ஒவ்வாமை கொடுக்கும் பொருட்களை உங்களின் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக ஆக்குங்கள். குழந்தைக்கு முட்டை அவித்து கொடுத்தால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்றால், மாற்று வழியில் எவ்வாறு அதனை கொடுக்கலாம் என மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். பின்னர் தொடர்ந்து அதனை கொடுத்துவரும்போது இந்த பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். 

    ஒவ்வாமையை தடுக்க என்ன செய்யலாம்?

    ஒரு உணவுப்பொருள் குழந்தைக்கு ஒவ்வாமையை கொடுக்கிறது என்றால் அதை கொஞ்ச நாட்கள் தவிர்க்கவேண்டும். குழந்தையை பார்த்துக்கொள்பவர்களிடமும், பள்ளியிலும் அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப்பொருட்கள் குறித்து தெரிவித்தல் நல்லது. ஒவ்வாமை இருப்பவர்கள் எப்போதும் வெளியில் செல்லும்போது எபிநெஃப்ரின் ஆட்டோ-இன்ஜெக்டரை எடுத்துச் செல்வது நல்லது. குழந்தையின் பள்ளி அல்லது பகல்நேர பராமரிப்பு மையத்திலும் குழந்தைக்கு தேவையான மருத்தை வழங்குவது நல்லது. 

    • சருமம், மூக்கு, தொண்டை பகுதியில் ஈரப்பதத்தை இழக்க செய்துவிடும்.
    • விரைவிலேயே வயதாகும் தோற்றம் எட்டிப்பார்க்கும்.

    கோடை வெயிலின் உக்கிரம் பல இடங்களில் அதிகரிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், பலரும் குளிர்சாதன (ஏ.சி.) வசதியுள்ள அறைக்குள் அதிக நேரம் செலவிட தொடங்கி விட்டார்கள். அலுவலகம் மட்டுமின்றி வீடுகளிலும் ஏ.சி.யின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.


    அப்படி ஏ.சி.யில் அதிக நேரம் இருப்பது 6 விதமான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கக்கூடும். அவை பற்றியும், தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.

    முன்கூட்டியே வயதாகும் தோற்றம்:

    ஏர்கண்டிசன் (ஏ.சி.) வசதி உள்ள அறைக்குள் நிலவும் வெப்பத்தை மட்டும் குறைப்பதில்லை. ஈரப்பதத்தையும் குறைத்துவிடும். குறிப்பாக சருமம், மூக்கு, தொண்டை பகுதியில் ஈரப்பதத்தை இழக்க செய்துவிடும். சரும வறட்சி, சரும எரிச்சல், சருமம் உரிதல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    சிலருக்கு சருமம் நெகிழ்வுத்தன்மை அடைந்து மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் ஏற்படக்கூடும். இது விரைவிலேயே வயதாகும் தோற்றம் எட்டிப்பார்ப்பதற்கான அறிகுறியாக மாறக்கூடும். அத்தகைய பிரச்சனை கொண்டவர்கள் ஏ.சி. அறையில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். சரும பராமரிப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


    நீரிழப்பு-சோர்வு

    ஏ.சி.கள் சூரியக்கதிர்கள் உமிழும் வெப்பத்தை குறைத்தாலும் சுற்றுச்சூழலில் கலந்திருக்கும் ஈரப்பதத்தை நீக்குகின்றன. இது நீரிழப்புக்கு வித்திடும். அதன் காரணமாக தாகம், சோம்பல், சோர்வு போன்றவை எட்டிப்பார்க்கும்.

    அதனால் ஏ.சி. அறைக்குள் அதிக நேரம் செலவிடுபவர்கள் உடலில் நீரேற்றத்தை பராமரிக்க போதுமான அளவு தண்ணீர் பருகிக்கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் தொடர்ச்சியாக ஏ.சி.க்குள் இருக்காமல் அவ்வப்போது வெளியே நடமாட வேண்டும்.


    கண் எரிச்சல் - கண் வறட்சி

    சிலருக்கு கண்கள் வறட்சி நிலையிலேயே காணப்படும். அவர்களின் கண்களில் போதுமான அளவு கண்ணீர் திரவம் படர்ந்திருக்காது. அப்படி கண்களில் வறட்சி தன்மை கொண்டவர்கள் ஏ.சி.யில் அதிக நேரம் இருப்பது நிலைமையை மோசமாக்கும். கண்களில் ஈரப்பதம் குறைந்து கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் எட்டிப்பார்க்கக்கூடும்.


    சுவாசப் பிரச்சனை

    ஏ.சி.யில் இருந்து வெளிப்படும் குளிர்ந்த, உலர்ந்த காற்று சுவாச பாதைக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக சளி, இருமல் போன்ற நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும். குறிப்பாக நாள்பட்ட நுரையீரல் நோய் (சி.ஓ.பி.டி.), மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்புகளை கொண்டவர்களுக்கு பிரச்சினையை அதிகப்படுத்தும்.

    அதிலும் ஏ.சி.யை முறையாக பராமரிக்காவிட்டால் அதில் படர்ந்திருக்கும் தூசு, அழுக்குகள், பூஞ்சை காளான் உள்ளிட்டவை ஏ.சி. வெளியிடும் குளிர் காற்றில் கலந்து ஒவ்வாமை, சுவாச நோய்களுக்கு காரணியாகிவிடும்.


    இயற்கை எண்ணெய் உற்பத்தி குறைவு

    ஏர் கண்டிஷனிங் செய்யப்பட்ட அறைக்குள் அதிக நேரம் இருந்தால், உடலில் வியர்வை உற்பத்தி செய்யும் திறன் குறைந்துவிடும். இதனால் இயற்கையாகவே உடலில் எண்ணெய் உற்பத்தியாகும் திறனும் பாதிப்படையும்.

    அதன் காரணமாக சருமம் மந்தமாகவும், ஆரோக்கியமற்றதாகவும் தோன்றும். உடலில் எண்ணெய் இல்லாததால் முடி வறட்சி அடையும். முடி உடைவது, முடி உதிர்வது போன்ற பிரச்சினைகளும் எட்டிப்பார்க்கும்.


    தோல் வியாதிகள்

    எக்ஸிமா, சொரியாசிஸ், ரோசாசியா போன்ற தோல் வியாதிகளை கொண்டவர்கள் ஏ.சி. அறையில் அதிக நேரம் செலவிடும்போது ஏ.சி.யில் இருந்து வெளிப்படும் காற்று நிலைமையை மோசமாக்கக்கூடும். சருமம் ஈரப்பதத்தை இழந்து சரும வெடிப்புக்கு வித்திடும். தோல் பிரச்சனைகளை அதிகரிக்க செய்துவிடும்.

    இந்த பிரச்சனைகளை தவிர்க்க ஏ.சி. அறையில் குறிப்பிட்ட நேரம் செலவிடுவது நல்லது. இடையிடையே வேறு அறைக்கோ, வெளிப்புற சூழலுக்கோ இடம் மாறிக்கொள்வது சிறப்பானது. உடலை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர், இளநீர், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், பழச்சாறுகள் உள்ளிட்டவற்றை பருகி வரலாம். ஏ.சி.யை முறையாக பராமரிப்பதும் முக்கியமானது.

    • சிவப்பு ஒயினில் ரெஸ்வெராட்ரோல் போன்ற பாலிபினால்கள் உள்ளன.
    • ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

    ரெட் ஒயின் மற்றும் தோல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவு மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாகும், சில ஆய்வுகள் மிதமாக உட்கொள்ளும் போது சாத்தியமான நன்மைகளை வழங்குகிறது. சிவப்பு ஒயினில் ரெஸ்வெராட்ரோல் போன்ற பாலிபினால்கள் உள்ளன, அவை ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன.

    மருத்துவர்கள் கூறுகையில், "சிவப்பு ஒயினில் பாலிபினால்கள் உள்ளன, இது சூரிய ஒளியில் இருந்து உங்கள் பாதுகாப்பை அதிகரிக்கும். இருப்பினும், சிவப்பு ஒயின் தோலை சேதப்படுத்துகிறது, ஏனெனில் அது ரோசாசியாவை (தோல் நிலை), நீரிழப்பு மற்றும் ஹிஸ்டமினிக் எதிர்வினைகளை ஏற்படுத்தும், அதே நேரத்தில் உணர்திறன் சாத்தியத்தை அதிகரிக்கும்.

    ஒயினில் உள்ள பாலிபினால்கள் திராட்சை மற்றும் பிற பழங்களில் இருந்து நேரடியாக எடுக்கப்படலாம் என்றும் அது ஒயின் மூலம் வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

    "ஆல்கஹால் ஆக்சிஜனேற்ற சேதத்தை தூண்டுகிறது மற்றும் உங்களுக்கும் உங்கள் சருமத்திற்கும் வயதாகிவிடுவதால், உங்கள் சருமத்தை பாதுகாக்க விரும்பினால் சிவப்பு ஒயினை தவிர்க்க வேண்டும். சிவப்பு ஒயினில் ஆக்சிஜனேற்றங்கள் இருந்தாலும், பொதுவாக, ஆல்கஹால் தோல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகிய இரண்டிலும் தீங்கு விளைவிக்கும் என்பதை அடையாளம் காண வேண்டியது அவசியம்.

    நீரேற்றம், சரியான தோல் பராமரிப்பு மற்றும் உகந்த தோல் நல்வாழ்வுக்கான அடித்தளமாக சத்தான உணவு ஆகியவற்றை உள்ளடக்கிய சமநிலையான வாழ்க்கை முறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறந்த சரும நன்மைகளுக்கு மதுவை நம்புவதற்குப் பதிலாக, சருமத்தைப் பராமரிப்பதில் எளிமையான மற்றும் பயனுள்ள அணுகுமுறைகளைத் தழுவுவது நல்லது.

    அதிகப்படியான மது அருந்துதல் தோல் நீரிழப்புக்கு வழிவகுக்கும், முன்கூட்டிய வயதாவதை ஊக்குவிக்கும். ஒரு சமநிலையான அணுகுமுறை, பல்வேறு ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவை உள்ளடக்கியது, உகந்த தோல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.

    மிதமான சிவப்பு ஒயின் நுகர்வு தோல் தொடர்பான சில நன்மைகளை அளிக்கும் போது, தனிநபர்கள் சீரான உணவு, நீரேற்றம், சூரிய பாதுகாப்பு மற்றும் அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதைத் தவிர்த்தல் உள்ளிட்ட நிறுவப்பட்ட தோல் பராமரிப்பு நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    ஒயின் குடிப்பது அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது என்று பெரும்பாலான தோல் மருத்துவர்கள் கருதினாலும், தனிப்பட்ட உடல்நலம் மற்றும் தோல் நிலைகளின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனையைப் பெற தோல் மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெறுவது எப்போதும் சிறந்தது.

    • சூரிய ஒளி உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.
    • சிலருக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    வெயிலில் அதாவது இயற்கை வெளிச்சத்தில் பல உருவத் தோற்றமுடைய பல வடிவமுள்ள தோல் வெடிப்புகளும் சிகப்பு நிற தடிப்புகளும் உடலில் சிலபேருக்கு ஏற்படுவதுண்டு. மேலே சொன்னது போல தோலில் வேனற்கட்டி போன்ற சிறிய சிறிய சிகப்பு புள்ளிகள் சில பேருக்கு உடல் முழுவதும் ஏற்படுவதுண்டு.

    சூரிய ஒளியில் இருக்கும் புறஊதாக் கதிர்கள் தோலில் படுவதாலும் அல்லது வேறு சில செயற்கை ஒளிக்கதிர்கள் தோலில் படுவதாலும் ஏற்படுவதுண்டு. இதனால் நமது உடலில் இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தில் மாற்றம் ஏற்பட்டு அது இந்த சிகப்பு நிற தடிப்புகளை உண்டாக்கிவிடுகிறது.


    மொத்தத்தில் வெயில் அதாவது சூரிய ஒளி உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம். இது உங்களுக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு ஒத்துக் கொள்வதில்லை. ஆனால் இதைத் தெரிந்தவர்கள் மருந்தைத் தேடிக் கொள்வார்கள். தெரியாதவர்கள் குணமாகும்வரை பல மருந்துகளைத் தேடி ஓடிக்கொண்டிருப்பார்கள்.

    பரம்பரையாகக் கூட சிலருக்கு சூரிய ஒளி அலர்ஜி ஏற்படுவதுண்டு. சில மருந்துகள், ரசாயனப் பொருட்கள், சரும வியாதிகள், கிருமி நாசினிகள், வாசனைத் திரவியங்கள் முதலியனவைகளை உபயோகிப்பவர்களுக்குக்கூட சூரிய ஒளி அலர்ஜி ஏற்படுவதுண்டு. இவைகளில் எதனால் உங்களுக்கு வருகிறது என்பதை நீங்கள் உபயோகிக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக நிறுத்திப் பாருங்கள். கண்டுபிடித்துவிடலாம்.


    சூரிய ஒளி அலர்ஜி சிலருக்கு லேசாக வந்து எந்தவித சிகிச்சையும் தேவைப்படாமல் தானாகவே சரியாகிவிடும். சிலருக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    சூரிய ஒளி அலர்ஜி இருப்பவர்கள் உடலை முடிந்தவரை மூடி மறைக்குமாறு ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் போவதற்கு சுமார் 20 நிமிடங்கள் முன்பே புறஊதாக் கதிர் தடுப்பு கிரீம்களை தடவிக் கொள்ள வேண்டும்.


    இயற்கையாகவே நமது உடல் சூரிய ஒளியை நல்ல வகையில் மிக அதிகமாகவே உபயோகப்படுத்திக் கொள்ளும்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. நமது உடலுக்கு வைட்டமின் 'டி' சத்து போதுமான அளவு கிடைக்க சூரிய ஒளி மிகவும் உபயோகமாக இருக்கிறது.

    இதன் மூலம் நமது உடல் எலும்புகள் அனைத்தும் உறுதியாகிறது. உடலுக்கு புதுத்தெம்பும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.

    ×