search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beard"

    • நெல்லிக்காய் மற்றும் மோர் ஆகியவற்றால் மாதத்திற்கு ஒரு முறை தாடியை கழுவுவேன்.
    • பீகானேரில் நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்று மிக நீளமான தாடி வளர்த்தவர் என்ற விருதை பெற்றுள்ளேன்.

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சந்திரபிரகாஷ் என்பவர் மாநிலத்திலேயே நீளமான தாடி வைத்துள்ள நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவர் 3 அடி நீளம் கொண்ட தாடியை வளர்த்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், நான் என்னுடைய தாடியை பராமரிக்க தினமும் ஒரு மணி நேரம் எடுத்து கொள்கிறேன். கடந்த 7 வருடங்களாக ஷேவ் செய்யாமல் தாடியை வளர்த்து வருகிறேன். நெல்லிக்காய் மற்றும் மோர் ஆகியவற்றால் மாதத்திற்கு ஒரு முறை தாடியை கழுவுவேன். குளிக்கும் போது கண்டிஷனரையும் தடவுவேன். இந்த பொருட்களை தவிர தாடியை நல்ல நிலையில் வைத்திருக்க தேங்காய் மற்றும் எள் எண்ணையையும் தடவுவேன்.

    பீகானேரில் நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்று மிக நீளமான தாடி வளர்த்தவர் என்ற விருதை பெற்றுள்ளேன். இந்த போட்டிகள் நீண்ட தாடியை பராமரிக்கும் எனது ஆர்வத்திற்கு ஊக்கத்தை அளித்தது. நான் வேலை செய்யும் இடத்திற்கு செல்ல பஸ் மூலம் தினமும் 50 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும். எனது பணி இடத்திற்கு செல்லும் போது தாடியை பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனித்து கொள்கிறேன் என்றார்.

    • தாடி என்பது சீக்கியர்களின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.
    • மூன்றாவது முறையாக சாதனைப் பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

    சுவீடனை சேர்ந்த பிர்ஜெர் பெலாஸ் என்பவர் 5 அடி 9 அங்குலம் நீளத்துக்கு தாடி வளர்த்திருந்தார். இதுதான் ஏற்கனவே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை கடந்த 2008-ல் ஆண்டு கனடாவில் வசிக்கும் சீக்கியர் சர்வன் சிங் முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்தார்.

    அப்போது சர்வன் சிங் தாடியின் நீளம் 7 அடி 8 அங்குலமாக இருந்தது. அதன் பிறகு கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலியில் நடந்த சாதனை நிகழ்ச்சியில் அவரது தாடியை அளந்து பார்த்தனர். அப்போது அது 8 அடி 2.5 அங்குலமாக வளர்ந்து காணப்பட்டது.

    இந்நிலையில் சர்வன் சிங் மீண்டும் தனது கின்னஸ் சாதனையை தானே முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது தாடியை அளந்த போது அது 8 அடி 3 அங்குலமாக வளர்ந்து காணப்பட்டது. இதன் மூலம் தனது சாதனையை தானே மீண்டும் முறியடித்துள்ளார். மூன்றாவது முறையாக சாதனைப் பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது என்று கின்னஸ் உலக சாதனை புதன்கிழமை மார்ச் 22, 2023 தெரிவித்துள்ளது.

    அவரது தாடி இதற்கு முன்பு கருப்பாக காணப்பட்டது. ஆனால் தற்போது நரைத்த நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து சர்வன் சிங் கூறியதாவது:-

    நான் 17 வயது முதல் தாடியை வளர்த்து வருகிறேன். இதுவரை ஒரு தடவை கூட தாடியை வெட்டியதில்லை. தாடி என்பது சீக்கியர்களின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். எனவே இந்த தாடியை கடவுளின் பரிசாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனது அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன தாடியை எடுக்க மறுத்துள்ள விராட் கோலி, தனது தாடியை பற்றி பேச்சு நடந்து கொண்டிருப்பது பொழுது போக்காக உள்ளது என அவர் ட்வீட்டியுள்ளார். #ViratKohli #BreakTheBeard

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி என்றதும், அவரது அதிரடி ஆட்டத்துடன் தாடியும் நம் கண் முன்னே வந்து போகும். இந்நிலையில், தற்போது கிரிக்கெட் வீரர்களிடம் பிரேக் தி பியர்ட் (தாடியை அகற்றுதல்) என்ற சேலஞ்ச் பிரபலமாக உள்ளது. இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்ட பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது தாடியை ஷேவ் செய்து மற்ற வீரர்களுக்கு சேலஞ்ச் விடுகின்றனர்.

    இந்நிலையில், இந்த சேலஞ்சை ஏற்க விராட் கோலி மறுத்து விட்டதாக தெரிகிறது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள கே.எல் ராகுல், ‘விராட் கோலி தனது தாடியை இன்ஸ்சுரன்ஸ் செய்ய போவதாக தனக்கு தெரிகிறது’ என பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் சிலர் விராட் கோலியின் தாடியை புகைப்படம் எடுப்பது போலவும், சில பேப்பர்களில் கையெழுத்து பெறுவது போல காட்சிகள் இருந்தன.



    ஆனால், நிஜத்தில் டெல்லியில் உள்ள மியூசியம் ஒன்றில் விராட் கோலியின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்காக அவரது உருவங்கள் அளவிடப்பட்டது. அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை ராகுல் கிண்டலுக்காக வெளியிட்டுள்ளார். ராகுலின் வீடியோவுக்கு பதில் கொடுத்துள்ள கோலி, ‘தனது தாடியை பற்றி பேசிக்கொண்டிருப்பது பொழுது போக்காக உள்ளது’ என ட்வீட்டியுள்ளார்.
    ×