search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேக்சிங்"

    • எக்ஸ்ஃபோலியேட் செய்துகொள்வதுதான் முதல் ஸ்டெப்.
    • சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றலாம்.

    உங்கள் அழகான சருமத்தை மேலும் பொலிவாகக் காட்டிட சருமத்தில் இருக்கும் தேவை இல்லாத முடிகளை நீக்குதல் மிகவும் முக்கியமானது. முகம், கை, கால் மற்றும் மென்மையான பாகங்களில் உள்ள தேவை இல்லாத முடிகளை நீக்குவதற்குப் பல வழிகளை பின்பற்றி வருகிறார்கள். அவற்றில், பலர் பெரிதும் ஆர்வம் காட்டும் ஒரு வழி - வேக்சிங். இதை எளிமையாக வீட்டிலேயே செய்துகொள்ளலாம். வேக்சிங்கில் ஹாட் வேக்ஸ் மற்றும் கோல்டு வேக்ஸ் என இருவகைகள் உள்ளன.

    எக்ஸ்ஃபோலியேட்

    வேக்சிங் செய்வதற்கு முன் எக்ஸ்ஃபோலியேட் செய்துகொள்வதுதான் முதல் ஸ்டெப். வேக்சிங் செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்பு சருமத்தின் மேல் இருக்கும் இறந்த செல்களை நீக்க வேண்டும். அதற்கு சர்க்கரை, காபி ஸ்கிரப்கள், ஆல்ஃபா ஹைட்ராக்சி அமிலங்கள், பீட்டா ஹைட்ராக்சி அமிலங்கள், சாலிசிலிக் அமிலங்கள் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மாஸ்க், ஓட்மீல் ஸ்கிரப் போன்றவற்றைப் பயன்படுத்தி எளிதாக சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றலாம். இதன் மூலம், சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்புடனும் காணப்படும்.

    மாய்ஸ்ச்சரைஸர்

    நமது உடலில் ஈரப்பதம் குறையும் போது, சருமத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதற்கு, இயற்கை உட்பொருள்கள் நிறைந்திருக்கும் மாய்ஸ்ச்சரைஸரை உபயோகப்படுத்தும்போது நம் உடலில் ஈரப்பதம் மேலோங்கி இருக்கும். மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்துவதும் சருமத்தின் தன்மைகளைப் பொறுத்து மாறுபடும். எண்ணெய் வழியும் சருமம் உடையவர்கள் லைட் மாய்ஸ்ச்சரைசர், நார்மல் சருமம் உடையவர்கள் மீடியம் மாய்ஸ்ச்சரைசர் மற்றும் வறண்ட சருமம் உடையவர்கள் ஹெவி மாய்ஸ்ச்சரைசரைப் பயன்படுத்தலாம்.

    ஒவ்வொரு நாளும் அலுவலகம் கிளம்பும்போது உங்களது வாட்ச், போன் போன்ற அடிப்படையான விஷயங்களை மறக்காமல் எடுத்துக்கொள்வது போல உங்கள் சருமத்தை புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். இது உங்கள் தோல் ஆரோக்கியத்தை புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுக்காக்கிறது. மேலும், வெளிப்புற சுற்றுச்சூழல் மாசுபாட்டால் தோலில் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

    மேற்கூறிய வழிகளைப் பின்பற்றி, சருமத்தை ஆரோக்கியமாகவும், வேக்சிங் செய்து பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம்.

    • கால்களுக்கும் சில பராமரிப்புகளைச் செய்தால் மட்டுமே, அவை பிசுக்கு மற்றும் தழும்பு இல்லாமல் பளிச்சென்று ஜொலிக்கும்.
    • கால்கள் வாழைத்தண்டுப் போல ஜொலிப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

    * ஒரு சிலருக்கு கெமிக்கல் சேர்க்கப்பட்ட க்ரீம்களைப் பயன்படுத்தி முடிகளை எடுக்கும்போது, கால்களின் சருமம் கருப்பாகிடும். அப்படிப்பட்டவர்கள் ரேசர் பயன்படுத்தியோ அல்லது வேக்ஸ் பண்ணியோ முடிகளை நீக்கலாம்.

    * சில பெண்களுக்கு வேக்ஸ் செய்தால், கால்களில் சின்ன சின்னதாக வீக்கங்கள் வரும். இதை, நாங்கள் `ஸ்ட்ராபெர்ரி லெக்ஸ்' என்போம். இந்த வீக்கங்களில் நமைச்சல் அதிகமாக இருக்கும். அவற்றில் முடி வளரும்போது நமைச்சல் இன்னும் அதிகரிக்கும். இதுபோல ஆகிடும் பெண்கள் `விமன் ரேசர்' பயன்படுத்தி முடிகளை நீக்கலாம். இந்த ரேசர் கொஞ்சம் அழுத்தினாலும் சருமத்தை கட் செய்யாது. இந்த ரேசரில் முடிகளை நீக்கும்போது கால்களில் இருக்கிற மாய்ஸ்ரைசர் குறையாது என்பது கூடுதல் பிளஸ். ஆனால், இதை வாரத்துக்கு ஒருமுறை செய்ய வேண்டி வரும்.

    * நார்மல் ரேசர் பயன்படுத்தி கால்களில் இருக்கும் முடிகளை ரிமூவ் செய்வதற்கு முன், ஏதாவது ஒரு ஆயிலையோ அல்லது குளியல் சோப் நுரையையோ தடவி விட்டுச் செய்தால், கால்களின் சருமம் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.

    * மசாஜ் செய்தும் முடிகளை நீக்கலாம். பாதாம் மற்றும் ஆலிவ் ஆயிலைக் கலந்து கால்களின்மேல் அப்ளை செய்து, மேலும் கீழுமாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த ஆயில் ஒரு மணி நேரம் அப்படியே கால் சருமத்தில் ஊற வேண்டும். பிறகு, கடலை மாவு 5 டீஸ்பூன், சர்க்கரை 2 டீஸ்பூன் கலந்து, அதை ஈரக் கைகளால் தொட்டு தொட்டு காலில் பரபரவெனத் தேய்த்துக் கழுவினால் கால்களில் இருக்கிற முடிகள் உதிர்வதுடன் அழுக்கு, தழும்புகள் எல்லாம் படிப்படியாகப் போய், கால்கள் பளிங்கில் செய்ததுபோல பளிச்சென்று ஆகி விடும். இந்த மசாஜ் அண்டு ஸ்கிரபை வாரம் இரண்டு முறை செய்யவேண்டும்.

    * ஸ்கர்ட் போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்கு நினைப்பார்கள். ஆனால், கால்கள் வறண்டு பொலிவிழந்து இருக்கிறது என அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்கள். அவர்கள், சர்க்கரையையும் உப்பையும் சமமாக எடுத்து, ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, கால்கள் மற்றும் பாதங்களில் மசாஜ் செய்தால் அந்தப் பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாய்ந்து, கால்கள் உயிர்ப்புடன் மின்னும். தயக்கமின்றி நடைபோடலாம்.

    * கால்கள் பொலிவிழந்து இருந்தால், கோகோ பட்டர் மசாஜ் செய்தாலும் பொலிவு கிடைத்து விடும்.

    * கால்கள் அழகாக இருக்கும்போது, பாதங்களும் வெடிப்பில்லாமல் இருந்தால்தானே அதுவொரு கம்ப்ளீட் அழகாக இருக்க முடியும். அதனால், பாதங்களில் வெடிப்பு இருந்தால், நல்லெண்ணெயில் 2 சொட்டு டீ ட்ரீஆயில் கலந்து வெடிப்புகளில் தடவி வரலாம். டீ ட்ரீ ஆயில் கிடைக்கவில்லை என்றால் லாவண்டர் ஆயிலுடன் 4 சொட்டு ஆலிவ் ஆயில் கலந்து பாதங்களில் தொடர்ந்து அப்ளை செய்து வாருங்கள். பாதங்களில் ஈரத்தன்மை பேலன்ஸாக இருக்க ஆரம்பித்தால், வெடிப்புப் பிரச்னை போயே போய் விடும்.

    • எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.
    • தயிரை பாதங்களில் தடவி, பிரஷினால் வெடிப்புகளில் தேய்க்க வேண்டும்.

    முகம் மட்டும் அழகாக இருந்தால் போதாது கால்களும்(legs) பார்க்க அழகாக இருக்க வேண்டும். அப்போது தான் உடைக்கு ஏற்ற காலணிகள் நாம் தேர்வு செய்து அணிய முடியும். இல்லையெனில் கால்கள்(legs) பொலிவிழந்து காணப்படும். பாவடை அணிய ஆசைப்படுபவர்கள் கால்கள்(legs) பொலிவுடன் இல்லாததால் அணிய தயங்குவார்கள். நல்ல பொலிவான பளபளப்பான கால்களை(legs) பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

    பாதங்களிலுள்ள சொரசொரப்பு நீங்க :

    * ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால்(legs) வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகள் தங்காது.

    * கடுகு எண்ணெயை தினமும் கால்(legs) பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு நீங்கும். மென்மையான பாதங்களாக திகழும். தினமும் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெயை பாதத்தில் தேயுங்கள். சொரசொரப்பான பாதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

    மிருதுவான பாதங்கள் கிடைக்க :

    * தயிரை பாதங்களில் தடவி, பிரஷினால் வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் உப்பு அல்லது சோடா உப்பை குதிகால்களில்(legs) தேய்த்து, கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி மாறி மாறி வாரம் மூன்று முறை செய்தால் பாதம் மெத்தென்று ஆகும்.

    * வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில்(legs) தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், மென்மையான பாதங்கள் கிடைக்கும்.

    * கால்கள்(legs) அழகாக இருக்கும்போது, பாதங்களும் வெடிப்பில்லாமல் இருந்தால் தானே அதுவொரு கம்ப்ளீட் அழகாக இருக்க முடியும். அதனால், பாதங்களில் வெடிப்பு இருந்தால், நல்லெண்ணெயில் 2 சொட்டு டீ ட்ரீஆயில் கலந்து வெடிப்புகளில் தடவி வரலாம். டீ ட்ரீ ஆயில் கிடைக்கவில்லை என்றால் லாவண்டர் ஆயிலுடன் 4 சொட்டு ஆலிவ் ஆயில் கலந்து பாதங்களில் தொடர்ந்து அப்ளை செய்து வாருங்கள். பாதங்களில் ஈரத்தன்மை பேலன்ஸாக இருக்க ஆரம்பித்தால், வெடிப்புப் பிரச்னை போயே போய் விடும்.

    * ஸ்கர்ட் போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்கு நினைப்பார்கள். ஆனால், கால்கள்(legs) வறண்டு பொலிவிழந்து இருக்கிறது என அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்கள். அவர்கள், சர்க்கரையையும் உப்பையும் சமமாக எடுத்து, ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, கால்கள் மற்றும் பாதங்களில் மசாஜ் செய்தால் அந்தப் பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாய்ந்து, கால்கள்(legs) உயிர்ப்புடன் மின்னும். தயக்கமின்றி நடைபோடலாம்.

    வெடிப்பு மறைய :

    * மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேயுங்கள். 10 நிமிடன்ம் கழித்து பாதத்தை கழுவலாம். இது கால்(legs) வெடிப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.

    * மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால்(legs) வெடிப்பில் பூசி வர கால்(legs) வெடிப்பு குணமாகும்.

    * கற்றாழையில் இருக்கும் சதைபகுதியை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் ஒரே மாதத்தில் வெடிப்பு சரியாகிவிடும்.

    * உருளைக் கிழங்கி சாறினை எடுத்து பாதங்களில் பூசி வந்தால் வெடிப்பு மறைந்து குதிகால்கள்(legs) அழகு பெறும். வெங்காயத்தை வதக்கி அரைத்து கால்(legs) பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.

    * பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும். வெங்காயத்தை வதக்கி அரைத்து கால்(legs) பாதங்களில் தடவி வந்தால் கால்(legs) வெடிப்பு மறையும்.

    • சில பெண்களுக்கு வேக்ஸ் செய்தால், கால்களில் சின்ன சின்னதாக வீக்கங்கள் வரும்.
    • மசாஜ் செய்தும் முடிகளை நீக்கலாம்.

    கால்களுக்கும் சில பராமரிப்புகளைச் செய்தால் மட்டுமே, அவை பிசுக்கு மற்றும் தழும்பு இல்லாமல் பளிச்சென்று ஜொலிக்கும். சரி, கால்கள் வாழைத்தண்டுப் போல ஜொலிப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

    * கால்களில் இருக்கும் முடிகளை, உங்கள் சருமத்துக்கு ஏற்ற க்ரீமைப் பயன்படுத்தி ரிமூவ் செய்யலாம்.

    * ஒரு சிலருக்கு கெமிக்கல் சேர்க்கப்பட்ட க்ரீம்களைப் பயன்படுத்தி முடிகளை எடுக்கும்போது, கால்களின் சருமம் கருப்பாகிடும். அப்படிப்பட்டவர்கள் ரேசர் பயன்படுத்தியோ அல்லது வேக்ஸ் பண்ணியோ முடிகளை நீக்கலாம்.

    * சில பெண்களுக்கு வேக்ஸ் செய்தால், கால்களில் சின்ன சின்னதாக வீக்கங்கள் வரும். இதை, நாங்கள் `ஸ்ட்ராபெர்ரி லெக்ஸ்' என்போம். இந்த வீக்கங்களில் நமைச்சல் அதிகமாக இருக்கும். அவற்றில் முடி வளரும்போது நமைச்சல் இன்னும் அதிகரிக்கும். இதுபோல ஆகிடும் பெண்கள் `விமன் ரேசர்' பயன்படுத்தி முடிகளை நீக்கலாம். இந்த ரேசர் கொஞ்சம் அழுத்தினாலும் சருமத்தை கட் செய்யாது. இந்த ரேசரில் முடிகளை நீக்கும்போது கால்களில் இருக்கிற மாய்ஸ்ரைசர் குறையாது என்பது கூடுதல் பிளஸ். ஆனால், இதை வாரத்துக்கு ஒருமுறை செய்ய வேண்டி வரும்.

    * நார்மல் ரேசர் பயன்படுத்தி கால்களில் இருக்கும் முடிகளை ரிமூவ் செய்வதற்கு முன், ஏதாவது ஒரு ஆயிலையோ அல்லது குளியல் சோப் நுரையையோ தடவி விட்டுச் செய்தால், கால்களின் சருமம் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.

    * மசாஜ் செய்தும் முடிகளை நீக்கலாம். பாதாம் மற்றும் ஆலிவ் ஆயிலைக் கலந்து கால்களின்மேல் அப்ளை செய்து, மேலும் கீழுமாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த ஆயில் ஒரு மணி நேரம் அப்படியே கால் சருமத்தில் ஊற வேண்டும். பிறகு, கடலை மாவு 5 டீஸ்பூன், சர்க்கரை 2 டீஸ்பூன் கலந்து, அதை ஈரக் கைகளால் தொட்டு தொட்டு காலில் பரபரவெனத் தேய்த்துக் கழுவினால் கால்களில் இருக்கிற முடிகள் உதிர்வதுடன் அழுக்கு, தழும்புகள் எல்லாம் படிப்படியாகப் போய், கால்கள் பளிங்கில் செய்ததுபோல பளிச்சென்று ஆகி விடும். இந்த மசாஜ் அண்டு ஸ்கிப்பை வாரம் இரண்டு முறை செய்யவேண்டும்.

    * ஸ்கர்ட் போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்கு நினைப்பார்கள். ஆனால், கால்கள் வறண்டு பொலிவிழந்து இருக்கிறது என அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிடுவார்கள். அவர்கள், சர்க்கரையையும் உப்பையும் சமமாக எடுத்து, ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, கால்கள் மற்றும் பாதங்களில் மசாஜ் செய்தால் அந்தப் பகுதிகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாய்ந்து, கால்கள் உயிர்ப்புடன் மின்னும். தயக்கமின்றி நடைபோடலாம்.

    ×