search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Strawberry"

    • சருமத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்கை அகற்றி, சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.
    • அற்புதமான ஸ்கிரப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

    அந்த காலம் முதல் பெண்கள் தங்கள் சருமத்தை பராமரித்துக்கொள்ள பல இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவது உண்டு. அது அவர்களின் சருமத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்கை அகற்றி, சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும். ஆனால் தற்போதைய அவசர உலகத்தில் தாங்களே தயாரித்து சருமப்பொலிவை பாதுக்காக்க பெண்களுக்கு நேரம் இல்லாததால், கெமிக்கல் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இது சருமத்திற்கு மட்டும் கெடுதல் செய்வது மட்டுமல்லாமல், உடலிற்கும் தீங்கு விளைவிக்க கூடும். அதனை தடுக்க, வெறும் மூன்றே பொருட்களை வைத்து வீட்டில் சருமப்பொலிவை அதிகரிக்க அற்புதமான ஸ்கிரப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

    ஸ்ட்ராபெர்ரி பிரவுன் சுகர் ஸ்கிரப்

    உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சருமத்தையும் பாதுகாக்க உதவுகிறது ஸ்ட்ராபெர்ரி பழம். இதில் இருக்கும் வைட்டமின் சி சரும பாதிப்பை குறைகிறது. மேலும் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்சை எதிர்த்துப் போராடி சருமப்பொலிவை தக்க வைக்க பயன்படுகிறது. சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதோடு மட்டும் இல்லாமல் சரும சுருக்கத்தை குறைத்து இளமையாக இருக்க உதவி செய்கிறது.

    தேவையான பொருட்கள்:

    ஸ்ட்ராபெர்ரி - 3 அல்லது 4

    பிரவுன் சுகர் - 2 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

    செய்முறை:

    ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்கு கழுவி அதில் இருக்கும் கம்பு மற்றும் நடுவில் இருக்கும் தண்டை அகற்ற வேண்டும். அதன்பிறகு துண்டு துண்டாக நறுக்கி ஸ்ட்ராபெர்ரியை நன்றாக மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் பிரௌன் சுகர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். அவ்ளோ தான் சருமத்தை அழகாக பராமரிக்கும் ஸ்கிரப் தயார். இந்த ஸ்கிரப்பை சுத்தமான சருமத்தில் பயன்படுத்தினால் தான் வித்தியாசம் நன்றாக இருக்கும். எனவே, முதலில் உங்கள் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அதன் பின்னர் தயார் செய்த ஸ்கிரப்பை முகத்தில் அப்ளை செய்து வட்ட வடிவில் விரல்களால் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அடுத்து 10 நிமிடம் கழித்து பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தம் செய்து கொள்ளவும். இப்போது உங்களின் முகத்தை பார்த்தால் உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும். முகம் அவ்ளோ பொலிவுடன் இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.

    • ஸ்ட்ராபெரி பழங்கள் கிலோ ரூ.200க்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • கொய் மலர்களுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது.

    கடந்த பல ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காததால், அவர்களது பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் வங்கியில் கடன் பெற்று தேயிலைக்குப் பதிலாக மாற்று விவசாயமான கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டனர்.

    இந்த கொய் மலர்களுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் விவசாயிகளுக்கும் லாபம் கிடைத்தது.

    இருப்பினும் இந்த தொழில் விவசாயிகளுக்கு புதியதாக இருந்ததாலும், போதிய அனுபவம் இல்லாததாலும் கொய்மலர் சாகுபடி தொழிலில் தொய்வு ஏற்பட்டது.

    இதனால் விவசாயிகள் வங்கிக் கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டனர்.

    இதையடுத்து பெரும் செலவில் அமைக்கப்பட்ட குடில்கள் வீணாகாமல் தடுக்கும் வகையில் பெரும்பாலான விவசாயிகள் அந்தக் குடில்களில் மேரக்காய், பீன்ஸ், உள்ளிட்ட மலை காய்கறிகள் மற்றும் ஸ்ட்ராபெரி பழங்களை பயிரிட்டு அதன் மூலம் கணிசமான லாபம் ஈட்டி வந்தனர்.

    தற்போது அவர்கள் பயிரிட்ட ஸ்ட்ராபெரி பழங்களுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து ஸ்ட்ராபெரி பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:-

    கூக்கல் தொரை, கேர்கம்பை, கீழ் கோத்தகிரி தூனேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஸ்ட்ராபெரி பழங்களை கொய்மலர் குடில்களில் பயிரிட்டுள்ளனர்.

    ஸ்ட்ராபெரி பயிரிடுவதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன் இத்தாலி நாட்டில் இருந்து 700 நாற்றுக்கள் கொண்ட ஒரு பெட்டி நாற்றுக்களை 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தும், புனேவில் இருந்து நாற்றுக்கள் ஒன்றுக்கு ரூபாய் 10 வீதமும் வாங்கி வந்தோம்.

    கொய்மலர் குடில்களில் உள்ள மண்ணை பதப்படுத்தி அந்த மண்ணுடன் மாட்டு புழு உரம், ஆடு மற்றும் மாட்டு சாணம் ,தசகாவியம் பஞ்சகாவியம் ஆகிய இயற்கை உரங்களைக் கலந்து மண்ணை நன்கு பதப்படுத்தி நாற்றுகளை பயிரிட்டோம். சொட்டுநீர் பாசனம் செய்து நாற்றுக்களை நன்கு பராமரித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஸ்ட்ராபெரி பழங்கள் அறுவடைக்கு தயாராகின. தற்போது சாகுபடியும் அதிகரித்து வருகிறது.

    குறித்த கால இடைவெளியில் தொடர்ந்து பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறோம்.

    இந்த நாற்றுக்களை உரிய முறையில் நன்கு பராமரித்தால் ஒரு ஆண்டு காலம் வரை பலன் தரும். கடந்த ஆண்டு கிலோ 350 ரூபாய் வரை கொள்முதல் விலை கிடைத்தது.

    தற்போது ஒரு கிலோ ஸ்ட்ராபெரி பழத்திற்கு 200 ரூபாய் கொடுத்து விளைநிலங்களுக்கே வியாபாரிகள் நேரில் வந்து கொள்முதல் செய்து செல்கின்றனர்.தேவைக்கேற்ப கொள்முதல் விலை இன்னும் உயரும் வாய்ப்புள்ளது.

    எனவே அதை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×