என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெர்த் ஆடுகளம்"

    • AUSvIND 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது.
    • ஓவல் மைதானத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் 4 முறை மழை குறுக்கிட்டதால் போட்டி 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 21.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது. இந்நிலையில், ஓவல் மைதானத்தில் மழை பெய்து வருவதால் மைதானத்தின் ஈரப்பதத்தை அகற்ற புற ஊதா (UV) விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. இதன்மூலம் மைதானத்தின் ஈரப்பதத்தை போக்கி விரைவாக உலர வைக்கலாம்.

    ஆஸ்திரேலியா அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மைதானத்தை உலரவைக்கும் நிலையில், பணக்கார கிரிக்கெட் கவுன்சிலான பிசிசிஐ அயர்ன் பாக்ஸ், ஹேர் ட்ரையர் கொண்டு மைதானத்தை உலரவைக்கிறது என்று இணையத்தில் விமர்சனம் எழுந்துள்ளது.

    இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்பாஞ்ச் கொண்டு நீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்தது. அதோடு உலரச் செய்யும் பணிக்கு மணல் தூவப்பட்டது. மேலும் அயர்ன் பாக்ஸ், ஹேர் ட்ரையர் போன்றவையும் பயன்படுத்தப்பட்டது.

    அப்போதே பிசிசிஐ இந்தப் பணிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்தனர். மழையால் ஏற்படும் ஈரத்தை துரிதமாக உலரச் செய்ய நவீன தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தாதது குறித்தும் சாடி இருந்தனர்.

    ரூ.7000 கோடி சொத்து மதிப்பு கொண்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் கவுன்சில் மைதானத்தை உலரவைக்க ற ஊதா (UV) விளக்குகள் பயன்படுத்தும் நிலையில், ரூ.20,000 கோடி சொத்துமதிப்பு கொண்ட பிசிசிஐ ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது ஏன்? என்றும் பிசிசிஐ-ன் வருமானம் என்று எல்லாம் எங்கு தான் செல்கிறது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    • இந்த ஆட்டத்தை 42 ஆயிரத்து 423 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.
    • சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்த ஆண்டில் இந்தியாவின் முதல் தோல்வி இதுவாகும்.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் அடிக்கடி மழை குறுக்கிட்டதால் போட்டி 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 21.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி 23-ந் தேதி நடக்கவுள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டி நடைபெற்ற மைதானத்தில் மழையால் ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்ட நிகழ்வு இப்போது தான் முதல்முறையாக நடந்துள்ளது.

    இந்த ஆட்டத்தை 42 ஆயிரத்து 423 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர். பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியம் புதிதாக கட்டப்பட்டு 2018-ம் ஆண்டு திறக்கப்பட்ட பிறகு இங்கு மழையால் ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்ட நிகழ்வு இப்போது தான் முதல்முறையாக நடந்துள்ளது.

    சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்த ஆண்டில் இந்தியாவின் முதல் தோல்வி இதுவாகும். ஏற்கனவே 8 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தது.

    • அதிவேகமும், நல்ல பவுன்சுக்கு தகுந்தவாறு ஆடுகளத்தை உருவாக்கியுள்ளோம்.
    • போக போக ஆடுகளத்தில் விரிசல் ஏற்பட்டால், ஆட்டத்தின் போக்கை மாற்றும்.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இந்த ஆடுகளத்தன்மை முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சொர்க்கபுரியாக இருக்கும் என்று பிட்ச் தலைமை பராமரிப்பாளர் இசாக் மெக்டொனால்டு இப்போதே எச்சரித்துள்ளார். சுழலுக்கு ஏற்ற ஆடுகளத்தில் விளையாடிவிட்டு வந்துள்ள இந்திய பேட்ஸ்மேன்களுக்கு முதல் போட்டியே பெரும் தலைவலியாக இருக்கப்போகிறது.

    இசாக் மெக்டொனால்டு கூறுகையில், 'இது ஆஸ்திரேலியா....அதிலும் பெர்த்... இங்கு தொடர்ச்சியாக அதிவேகமும், நல்ல பவுன்சுக்கு தகுந்தவாறு ஆடுகளத்தை உருவாக்கியுள்ளோம். சரியாக சொல்வது என்றால் கடந்த ஆண்டு எப்படி இருந்ததோ அதையே பின்பற்ற விரும்புகிறேன். சென்ற ஆண்டு இங்கு டெஸ்டின் போது (ஆஸ்திரேலியா- பாகிஸ்தான்) ஆடுகளத்தில் 10 மில்லிமீட்டர் அளவுக்கு புற்கள் விடப்பட்டு இருந்தது. இது நல்ல தொடக்க புள்ளியாக அமைந்தது.

    ஏனெனில் புற்கள் காரணமாக முதல் 3 நாட்கள் மிகுதியான வேகம் காணப்பட்டது. ஆனால் இரு அணியிலும் புயல்வேக பவுலர்கள் இருந்ததால் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். இந்த ஆண்டும் அது போலவே இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் சில பேட்ஸ்மேன்கள் இத்தகைய சூழலை சிறப்பாக எதிர்கொண்டு துரிதமாக ரன் எடுக்க முடிந்தது போல் இந்த முறையும் எடுக்க முடியும். இந்த டெஸ்ட் 5-வது நாளுக்கோ அல்லது கடந்த ஆண்டை போல 4-வது நாளின் கடைசி பகுதிக்கோ செல்லும் என்று நம்புகிறேன். போக போக ஆடுகளத்தில் விரிசல் ஏற்பட்டால், ஆட்டத்தின் போக்கை மாற்றும்' என்றார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இங்கு நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இதில் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் வெறும் 89 ரன்னில் சுருண்டது. அதே சமயம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் 'பவுன்ஸ்' பந்துகளில் உடலில் அடிவாங்கினர். குறிப்பாக லபுஸ்சேன் எனது வாழ்க்கையில் விளையாடிய கடினமான பிட்ச் இது தான் என்று அப்போது குறிப்பிட்டார்.

    வேகப்பந்து வீச்சாளர்களுக்கே ஆடுகளம் ஒத்துழைக்கும் என பிட்ச் பராமரிப்பாளர் தெளிவுப்படுத்திய நிலையில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும், ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலன்ட் ஆகியோரும் யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள்.

    ×