search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayor JeganPeriyasamy"

    • தூத்துக்குடி மாவட்ட மழலையர் தொடக்கப்பள்ளிகள் சங்கம் சார்பில் வண்ணம் தீட்டுதல், முகமூடி தயாரித்தல் போன்ற கலை இலக்கிய திறன் போட்டிகள் நடைபெற்றது.
    • போட்டியில் சாயர்புரம் செயின் மேரிஸ் பள்ளி முதல் இடத்தை பிடித்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் குழந்தை கள் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட மழலையர் தொடக்கப் பள்ளிகள் சங்கம் சார்பில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட வண்ணம் தீட்டு தல், முகமூடி தயாரித்தல் போன்ற கலை இலக்கிய திறன் போட்டிகள் நடைபெற்றது.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளிகளுக்கான பரிசளிப்பு விழா திருச்செந்தூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை தாங்கினார். மழலையர் பள்ளிகள் சங்க செயலாளர் ஜோசப் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு வெற்றி பெற்ற பள்ளிகள் மற்றும் மாணவ, மாணவி களை பாராட்டி பரிசு கேடயங்களை வழங்கி பேசினார்.

    போட்டியில் சாயர்புரம் செயின் மேரிஸ் பள்ளி முதல் இடத்தையும், குளத்தூர் கலைவாணி நர்சரி பள்ளி 2-வது இடத்தையும், மற்றொரு சாயர்புரம் பள்ளி 3-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது. விழாவில் தூத்துக்குடி மாவட்ட தனியார் பள்ளிகளின் கல்வி அலுவலர் பிரபா குமார், நிர்வாகிகள் வல்லநாடு பாரதி சங்கரலிங்கம், தூத்துக்குடி ஜீவானா கோல்டி, தாளாளர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொருளாளர் ஜாய்பெல்பிராங் நன்றி கூறி னார்.

    • தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது.
    • ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தூத்துக்குடி மாநகர பகுதியில் 5 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது. கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூடுதல் நுண் உரம் தயாரிக்கும் மையம்

    தூத்துக்குடி மாநகராட் சிக்கு சொந்தமான தருவைக் குளம் உரக்கிடங்கு மற்றும் ஜோதி நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான எந்திரங்கள் மற்றும் கூடுதல் நுண் உரம் தயாரிக்கும் மையம் அமைக்கும் பணிகளை ரூ.1 கோடியே 83.50 லட்சம் மதிப்பீட்டில் 15-வது நிதி குழு மானியம் 2023 -24 நிதியில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. ரூ.60 லட்சத்தில் 3 நகர்ப்புற சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டிடம் அமைப்பதற்கு துறை சார்ந்த அனுமதி பெறப்பட்டுள்ளது. ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் தூத்துக்குடி மாநகர பகுதியில் 5 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

    சங்கரபேரி பகுதிகளில் தேங்கும் மழை நீரினை வெளியேற்ற செய்யும் வகையில் பெரிய பள்ளம் ஓடை வரைலான பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.1 2 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. 15-ம் நிதி குழு மானியம் 2022-23 ஆண்டு நிதியில் தூத்துக்குடி மாநகர பகுதியில் குடிநீர் பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் என மொத்தம் 13 பணிகள் ரூ. 5 கோடியே 68 லட்சத்தில் மதிப்பீட்டில் மேற்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குனர் அனுமதி பெறப்பட்டுள்ளது.

    சுத்திகரிப்பு நிலையம்

    மாநகராட்சி வல்லநாடு கலியாவூர் தலைமை நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம், மாநகரில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் ஆகியவற்றின் குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு இயக்குதல் நிர்வாகப் பணிகளுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தொகையுடன் கூடுதல் செலவினத் தொகை மொத்தம் ரூ. 59 லட்சம் அனுமதிக்கும் நடவடிக்கை,

    மாநகராட்சியின் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புதிதாக திறக்கப்பட்ட அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் வணிக வளாக கடை ஒப்பந்தம் கோரியவர்களுக்கு உரிமம் வழங்குதல், வடக்கு மண்டலம் அம்பேத்கர் நகரில் ரூ. 28.87 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்ப பூங்கா சிறப்புகள் பராமரிப்புகள் செய்யப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி, கோட்டுராஜா, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், கணக்குகுழு தலைவர் ரெங்கசாமி, பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார் ,கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரிக்டா ஆர்தர் மச்சாது, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, சந்திரபோஸ், வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமிசுடலைமணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ்,சேகர், ராமச்சந்திரன், ஹரி கணேஷ்,ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர் உட்பட அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சரஸ்வதி பூஜையை அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆட்டோ, வேன் ஓட்டுநர்களுடன் மேயர் கொண்டாடினார்.
    • தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை தூய்மையாகவும், மாசில்லா நகரமாகவும் மாற்றுவது மட்டுமல்லாமல் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர வடக்கு மண்டலத்தில் உள்ள கலைஞர் மேல் நிலை நீர் தேக்க தொட்டி, நுண் உரம் செய்யலாக்க மையத்தில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை யில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டார்.

    அதிகாரிகள், அலுவ லர்கள், தூய்மை பணியா ளர்கள் மற்றும் ஆட்டோ, வேன் ஓட்டுநர்களுடன் கொண்டாடினார்.

    அப்போது மேயர் பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை தூய்மையாகவும், மாசில்லா நகரமாகவும் மாற்றுவது மட்டுமல்லாமல் வண்ண விளக்குகளாலும் அலங் கரிக்கப்பட்டு வருகின்றது.

    அதன் தொடர்ச்சியாக ஏற்கனவே ஜெயராஜ் ரோடு மற்றும் 4-ம் கேட்டில் இருந்து செல்லும் பாதையில் அமைக்கப்பட்டுள்ளது போல் தற்போது கருப்பட்டி சொசைட்டி அருகே உள்ள பூங்காவிலும், சுகம் ஓட்டல் அருகில் உள்ள ரவுண்டா னாவிலும் வண்ண விளக்கும், நீரூற்றும் அமைக்க முடிவு செய்து பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது.

    மேலும் இது போல் அண்ணா சிலை பின்புறம், கலைஞர் அரங்கம் அருகில், மில்லர்புரம் மற்றும் எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு ரவுண்டானா ஆகிய பகுதிகளிலும் வரும் காலங்களில் நடைபெறும் என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் மாநகர துணை செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான கீதாமுருகேசன், வட்ட முன்னாள் மாமன்ற உறுப்பி னர் ரவீந்திரன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் சுகாதார அலுவலர் ஹரி கணேஷ் உட்பட அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
    • மாநகராட்சி 4 மண்டலங்களிலும் குடிநீர் வழங்கும் நிர்வாக பணிகள், பொது சுகாதார பிரிவின் மூலம் பள்ளிகள்,மருத்துவமனைகளுக்கு சுகாதார சான்று வழங்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில், சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் சிறப்பான கல்வியினை வழங்கும் மகத்தான பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சி இந்திய அளவில் 3-வது பரிசுக்கு தேர்வாகி மாநகராட்சிக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் ஹர்திப் சிங் பூரியிடம் இருந்து, தேசிய விருதினை நானும், கமிஷனரும் இணைந்து பெற்றுக்கொண்டோம். அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வழங்கி வாழ்த்து பெற்றோம். அதுபோல அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் , பேரூராட்சிகளின் இயக்குநர் கிரன் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு ஆகியோரிடமும் வாழ்த்துக்கள் பெற்றோம். இதற்கு காரணமான அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த விருது பெறப்பட்டுள்ளதால் வருகிற காலங்களில் மாநகராட்சியை சுகாதாரமாகவும், பசுமை நிறைந்த நகரமாகவும், மாசற்ற சுற்று சூழல் மேம்பாடு அடைந்த நகரமாகவும் இருக்கும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள், மேயர் ஜெகன் பெரியசாமிக்கும், கமிஷனருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து, மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள் மற்றும் காற்று மாசுபடுவதை தவிர்த்தல், சுற்றுச்சூழலை மேம்படுத்துதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல் பொருட்டு மியாவாகி முறையில் அமைக்கப்பட்ட அடர் காடுகளை தொடர்ந்து பராமரிக்க நடவடிக்கை எடுப்பது, மாநகராட்சி பொது நிதியின் கீழ்மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாநகராட்சி 4 மண்டலங்களிலும் குடிநீர் வழங்கும் நிர்வாக பணிகள், பொது சுகாதார பிரிவின் மூலம் பள்ளிகள் மருத்துவமனைகள் உணவு விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சுகாதாரச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டணம் திருத்தம் செய்து வசூலிக்க தீர்மானிப்பது உட்பட பல்வேறு தீர்மா னங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி,கோட்டுராஜா, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழு தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரிக்டா ஆர்தர் மச்சாது, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, சந்திரபோஸ், வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், கமிஷனரின் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன், ஹரிகணேஷ், ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர் உட்பட அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 3-வது வார்டு ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் மாநகர மேயர் ஜெகன் பெரிய சாமி கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.
    • இதேபோல் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்ற கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதி கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அமைந்துள்ள வார்டுகளுக்கு தலா 5 குழுக்கள் வீதம் 60 வார்டுகளுக்கு 300 பகுதி சபா குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதன் முதல் கூட்டம் கடந்தாண்டு நடை பெற்று பொதுமக்களின் கோரிக்கைகள் மனுக்களாக பெறப்பட்டு திட்டங்களாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக நேற்று அந்தந்த பகுதிகளில் பகுதி சபா கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள், வார்டு கவுன்சிலர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். 3-வது வார்டு ஹவுசிங் போர்டு பகுதியில் கவுன்சிலர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநகர மேயர் ஜெகன் பெரிய சாமி கலந்து கொண்டு மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றி பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.

    நிகழ்ச்சியில் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் பிரபாகரன் ஜாஸ்பர் மற்றும் மாவட்ட தி.மு.க. ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் டி.டி.சி.ரா ஜேந்திரன் உள்ளிட்ட பகுதி முக்கிய நிர்வாகிகள் ஏராள மா னோர் கலந்து கொண்டனர்.

    57-வது வார்டு எம். சவேரியார்புரம் கணேஷ் நகர் மேற்கு பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் கலந்து கொண்ட திரளான பொதுமக்கள் கவுன்சிலர் ஜெயலட்சுமி சுடலைமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில், எங்கள் பகுதியில் மக்கள் பயன் பாட்டில் இருந்து வந்த கழிவு நீர் வடிகால் அகற்ற ப்பட்டு மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகாலில் பொதுமக்கள் குளிக்கும் தண்ணீர், துணி துவைக்கும் தண்ணீரை விட அனுமதிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    இதேபோல் மாநகரா ட்சியின் அனைத்து வார்டு களிலும் நடைபெற்ற கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதி கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இதன்படி நடைபெற்ற பகுதி சபா கூட்டங்களில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்ன லட்சுமி, கோட்டு ராஜா, கவுன்சிலர்கள் ராம கிருஷ்ணன், கீதாமுருகேசன், கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரிக்டா ஆர்தர் மச்சாது, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்து வேல், ராஜதுரை, சந்திர போஸ், வெற்றிச்செல்வன் உட்பட அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.

    • தூத்துக்குடியில் சில பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் மந்த நிலையில் இருப்பதாக புகார்கள் வந்தன.
    • தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ் குமாருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள 60 வார்டுகளிலும் மாநகராட்சி சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்த புதிய சாலைகள் வடிகால்கள் என பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநகரம் முழுவதும் புதிய வடிகால்கள் புதிய சாலைகள் மக்கள் பயன்பாட்டுக்கு செயல்ப டுத்தப்பட்டும் வருகிறது,

    இந்நிலையில் சில பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் மந்த நிலையில் இருப்பதாக புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ் குமாருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அரசு அலுவலர்களுடன் மாநகரின் 4 மண்டல பகுதிகளிலும் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறுகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் அறிவித்த படி அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்பட்டு சாலை மற்றும் மக்கள் வசிப்பிடங்களின் மழைநீர் தேங்காதபடி பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய 4 மண்டலங்களிலும் அரசு அலுவலர்களுடன் நேரடியாக சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.

    அப்போது அறிவிக்கப் பட்ட பணிகள் எந்த அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஒப்பந்ததாரர்களிடம் கேள்வி எழுப்பினார்.மேலும் மழைக்காலம் தொடங்கும் முன்பாக ஒப்பந்தம் பெற்று எடுத்துக்கொள்ளப்பட்ட அனைத்து பணிகளும் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுகுறித்து உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார். ஆய்வின் போது ரவீந்திரன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். 

    • பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து புதிதாக போடப்பட்டுள்ள வழித்தடத்தில் குடிநீர் வழங்கப்பட்டுள்ளதால் அப்பகுதியினை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மாநகராட்சி அலுவலகத்தில் மாநகரின் பிரதான சாலைகளை கண்காணிக்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை மேயர் பார்வையிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதி வளர்ச்சி பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கருப்பட்டி சொசைட்டி அருகில் உள்ள தெருக்களில் குடிநீர் சரியாக வரவில்லை என்று பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து புதிதாக போடப்பட்டுள்ள வழித்தடத்தில் குடிநீர் வழங்கப்பட்டுள்ளதால் அப்பகுதியினை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் 3-வது மைல் மேம்பாலத்தில் இருந்து பக்கிள் ஓடையை நோக்கி செல்லும் பாதையை அகலப்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து அதன் அருகே உள்ள காவல் சோதனை சாவடியை எதிர்புறம் அமைக்க அதிகாரிகளிடம் பேசினார். வரும் நாட்களில் பணிகள் ஆரம்பமாகும் என்று அப்போது மேயர் தெரிவித்தார்.

    மாநகராட்சி அலுவ லகத்தில் மாநகரின் பிரதான சாலைகளை கண்கா ணிக்கும் ஒருங்கி ணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடு களை பார்வை யிட்டார்.தொடர்ந்து மேட்டுபட்டி யில் இருந்த மின் மயானத்தின் தகன மேடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பழுதடைந்து காணப்படு வதாக ஏற்கனவே ஆய்வு செய்த பொழுது பொதுமக்கள் கூறினர்.தற்போது அந்த பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிவுற்று ள்ளதை தொடர்ந்து அதனை மேயர் ஜெகன் பெரியசாமி அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

    மேலும் பிரையன்ட் நகர் 12-வது தெருவில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளையும், மில்லர்புரம் மற்றும் ராஜீவ் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்

    ஆய்வுகளின் போது மேயரு டன் முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மாநகர துணை செயலாளரும், கவுன்சிலருமான கீதாமுரு கேசன், கவுன்சிலர்கள் ஜான் சீனிவாசன், பொன்னப்பன் கண்ணன், முத்துவேல் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளராக ரமேஷ் பிரபாகரன், ஜாஸ்பர், மாநகராட்சி அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • மரக்கன்றுகள் நடும் விழாவை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முன்னாள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு ரஹ்மத்நகரில் உள்ள பூங்காவில் மாநகராட்சியின் மூலம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதனை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாநகர துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள், ஹரிகணேஷ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மாநகர மக்களுக்கு தற்போது கோடை காலத்திலும் சீரான குடிநீர் வழங்கப்படுகின்றது.
    • மக்கள் தங்களின் மேலான கருத்துக்களை வாட்ஸ்-அப் எண்ணான 7397731065 மூலமாகவும் ,மின் அஞ்சல் தளத்தின் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகர மக்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி பதவியேற்ற கடந்த ஓராண்டில் மாநகராட்சிக்குட்பட்ட 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சாலை மற்றும் வடிகால் வசதிகளை செய்து கொடுத்துள்ளோம்.

    மாநகர மக்களுக்கு தற்போது கோடை காலத்தி லும் சீரான குடிநீர் வழங்கப் படுகின்றது. மேலும் சீர்மிகு நகரமாகவும் சிறந்த மாநகராட்சியாகவும் தூத்துக்குடி மாநகராட்சியை மாற்றிடவும் மக்கள் தங்களின் மேலான கருத்துக் களையும் வாட்ஸ்-அப் எண்ணான 7397731065 மூலமாகவும் மின் அஞ்சல் தளத்தின் மூலமாகவும் தெரிவிக்கலாம். https://tinyurl.com/rj8snbvm, Android Users @ Playstore https://tinyurl.com/mwf47eew, IOS Users @ Appstore https://tinyurl.com/4wduufea. இது போன்ற திட்டத்தின் மூலம் பெறப்படும் கருத்துக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்த்த அலுவலர்களுடன் இணைந்து உடனடியாக பரிசிலிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    தொடர்ந்து ஜெயிலானி தெரு பகுதியில் நடைபெற உள்ள புதிய தார் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மாமன்ற உறுப்பினர் மும்தாஜ், தி.மு.க. நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 4 இடங்களில் இறகு பந்து விளையாடுவதற்காக விளையாட்டு அரங்கப் பணிகளை நடபெறுகிறது.
    • பணிகளை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 4 இடங்களில் இறகுபந்து விளையாடுவதற்காக நடைபெற்று வரும் உள் விளையாட்டு அரங்கப் பணிகளை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது பணிகள் முடிவடைந்து விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று உறுதியளிக்கிறோம் என்று இருவரும் கூறினர். ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.


    ×