search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் குழந்தைகள் தின விழா, கலை இலக்கிய திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
    X

    பரிசளிப்பு விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பரிசு கோப்பை வழங்கிய காட்சி.

    தூத்துக்குடியில் குழந்தைகள் தின விழா, கலை இலக்கிய திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

    • தூத்துக்குடி மாவட்ட மழலையர் தொடக்கப்பள்ளிகள் சங்கம் சார்பில் வண்ணம் தீட்டுதல், முகமூடி தயாரித்தல் போன்ற கலை இலக்கிய திறன் போட்டிகள் நடைபெற்றது.
    • போட்டியில் சாயர்புரம் செயின் மேரிஸ் பள்ளி முதல் இடத்தை பிடித்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் குழந்தை கள் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட மழலையர் தொடக்கப் பள்ளிகள் சங்கம் சார்பில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட வண்ணம் தீட்டு தல், முகமூடி தயாரித்தல் போன்ற கலை இலக்கிய திறன் போட்டிகள் நடைபெற்றது.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளிகளுக்கான பரிசளிப்பு விழா திருச்செந்தூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை தாங்கினார். மழலையர் பள்ளிகள் சங்க செயலாளர் ஜோசப் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு வெற்றி பெற்ற பள்ளிகள் மற்றும் மாணவ, மாணவி களை பாராட்டி பரிசு கேடயங்களை வழங்கி பேசினார்.

    போட்டியில் சாயர்புரம் செயின் மேரிஸ் பள்ளி முதல் இடத்தையும், குளத்தூர் கலைவாணி நர்சரி பள்ளி 2-வது இடத்தையும், மற்றொரு சாயர்புரம் பள்ளி 3-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது. விழாவில் தூத்துக்குடி மாவட்ட தனியார் பள்ளிகளின் கல்வி அலுவலர் பிரபா குமார், நிர்வாகிகள் வல்லநாடு பாரதி சங்கரலிங்கம், தூத்துக்குடி ஜீவானா கோல்டி, தாளாளர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொருளாளர் ஜாய்பெல்பிராங் நன்றி கூறி னார்.

    Next Story
    ×