search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "feedback"

    • மாநகர மக்களுக்கு தற்போது கோடை காலத்திலும் சீரான குடிநீர் வழங்கப்படுகின்றது.
    • மக்கள் தங்களின் மேலான கருத்துக்களை வாட்ஸ்-அப் எண்ணான 7397731065 மூலமாகவும் ,மின் அஞ்சல் தளத்தின் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகர மக்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி பதவியேற்ற கடந்த ஓராண்டில் மாநகராட்சிக்குட்பட்ட 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சாலை மற்றும் வடிகால் வசதிகளை செய்து கொடுத்துள்ளோம்.

    மாநகர மக்களுக்கு தற்போது கோடை காலத்தி லும் சீரான குடிநீர் வழங்கப் படுகின்றது. மேலும் சீர்மிகு நகரமாகவும் சிறந்த மாநகராட்சியாகவும் தூத்துக்குடி மாநகராட்சியை மாற்றிடவும் மக்கள் தங்களின் மேலான கருத்துக் களையும் வாட்ஸ்-அப் எண்ணான 7397731065 மூலமாகவும் மின் அஞ்சல் தளத்தின் மூலமாகவும் தெரிவிக்கலாம். https://tinyurl.com/rj8snbvm, Android Users @ Playstore https://tinyurl.com/mwf47eew, IOS Users @ Appstore https://tinyurl.com/4wduufea. இது போன்ற திட்டத்தின் மூலம் பெறப்படும் கருத்துக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்த்த அலுவலர்களுடன் இணைந்து உடனடியாக பரிசிலிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    தொடர்ந்து ஜெயிலானி தெரு பகுதியில் நடைபெற உள்ள புதிய தார் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மாமன்ற உறுப்பினர் மும்தாஜ், தி.மு.க. நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    • சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
    • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, நடந்தை மற்றும் இருக்கூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான கல்குவாரி சுரங்கத்தின் அங்கீகாரம் காலவதியானதை தொடர்ந்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலமாக ஒப்பந்தம் மேற்கொண்டு சுரங்கத்திட்டம் தயாரிக்கப்பட்டு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.

    அதன்படி, மாநில சுற்றுசூழல் மதிப்பீட்டு ஆணையத்தால் குறிப்பு விதிமுறை கடிதம் வழங்கப்பட்டு விண்ணப்பதாரரால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மல்டிகலர் கிரானைட் குவாரி சுரங்கத்தின் பொதுமக்கள் கருத்து கேட்புக்கூட்டம், தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு பரமத்தியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் நடைபெற்றது.

    இதில், பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் கலையரசன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணன், பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, மண்டல துணை தாசில்தார் சித்ரா, சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிற துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கருத்துகளை வாய்மொழியாகவும், எழுத்து பூர்வமாகவும் பதிவு செய்தனர். அவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

    • பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், சங்ககிரி ஐசிஎல் சமுதாய கூடத்தில் நடத்தியது.
    • ஆலையின் முதன்மை மேலாளர் பொதுமக்கள் தொடர்பு மற்றும் பாதுகாவல் அதிகாரி ஆத்மராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், சங்ககிரி ஐசிஎல் சமுதாய கூடத்தில் நடத்தியது. இந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சேலம் மாவட்ட சுற்றுச்சூ ழல் பொறியாளர் கோபா லகிருஷ்ணன் மற்றும் சேலம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் பிரசாத், சங்ககிரி ஆர்டிஓ சௌமியா, தாசில்தார் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கருமாபுரத்தானூர் சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கம் மற்றும் வீராச்சி பாளையம் சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்க திட்டம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இதில், ஆலையின் துணைத் தலைவர் (தயாரிப்பு) வீரபாகு, மூத்தபொதுமேலாளர் (சுரங்கம் மற்றும் சுற்றுச்சூ ழல்) பழனிகுமரேசன், ஆலையின் முதன்மை மேலாளர் பொதுமக்கள் தொடர்பு மற்றும் பாதுகா வல் அதிகாரி ஆத்மராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    65 ஆண்டுகளாக இயங்கி வரும் பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக, இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #UGC #HigherEducationCommission
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உயர் கல்வியை ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) செயல்பட்டு வருகிறது. 1953-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கல்விசார்ந்த விஷயங்களில் மட்டுமின்றி, தகுதியுள்ள கல்லூரிகளுக்கு நிதி உதவி வழங்குவதும் இதன் பணியாகும். இதனால், கல்வித்தரம் மீது முழுக்கவனம் செலுத்த முடியாததால், பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக, இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இத்தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார். இதற்கான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அது தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

    மேலும், அமைச்சகத்தின் இணையதளத்தில் வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளது. அதுபற்றி கல்வியாளர்கள், பொதுமக்கள் ஜூலை 7-ந் தேதி மாலை 5 மணிவரை கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பு, கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தும். மானிய விவகாரங்களை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கவனித்துக் கொள்ளும்.   #UGC #HigherEducationCommission
    ×