search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Higher Education Commission"

    இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்க தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    திருச்சி:

    பல்கலைக்கழக மானிய குழுவை கலைத்துவிட்டு உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பினை ஏற்படுத்துவதற்கான சட்டவரைவினை எதிர்த்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் சார்பில் கருத்தரங்கு திருச்சியில் நடந்தது.

    கருத்தரங்கிற்கு சங்கத்தின் முன்னாள் மாநில பொது செயலாளர் திருச்செல்வம் தலைமை தாங்கிபேசினார். அவர் பேசுகையில், ‘’பல்கலைக்கழக மானிய குழு 100 சதவீதம் நிதி வழங்குகின்ற அமைப்பாகவும், ஜனநாயகத்துடன் கல்வியாளர்களை கொண்டு செயல்பட்ட அமைப்பாகும்.

    தற்போது மத்திய அரசு இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்கி உயர்கல்வியின் மாண்பை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் உயர்கல்வியை அரசியல் ஆக்கும் முயற்சி நடைபெறுவதுடன் உயர்கல்வியின் உதவித்தொகை குறைக்கப்படுவதும் தனியார் மயமாக்கும் முயற்சியும், கல்வியை வணிக மயமாக்குதலை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகும் அவலம் உள்ளது’’ என்றார்.

    கருத்தரங்கில் உயர்கல்வி ஆணையத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்க முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். #anbumaniramadoss
    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்பான பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக இந்திய உயர்கல்வி ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழு கல்வியாளர்கள் அமைப்பாக செயல்பட்டு வந்த நிலையில், புதிய அமைப்பு அரசியல் அமைப்பாக மாற்றப்படும் ஆபத்து உள்ளது.

    பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினர்களை அரசே நினைத்தாலும் நீக்க முடியாத நிலையில், புதிய அமைப்பில் உள்ள 14 பேரையும் மத்திய அரசு நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் நீக்க முடியும். எனவே இந்த புதிய அமைப்பானது மத்திய அரசின் கொள்கை பரப்பும் அமைப்பாகவே செயல்பட முடியும்.

    பல்கலைக்கழகங்கள் மீதான மாநில அரசுகளின் அதிகாரங்களையும் உயர்கல்வி ஆணையம் பறிக்கும். எனவே, சமூக நீதிக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான உயர்கல்வி ஆணையத்தை அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #anbumaniramadoss
    65 ஆண்டுகளாக இயங்கி வரும் பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக, இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #UGC #HigherEducationCommission
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உயர் கல்வியை ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) செயல்பட்டு வருகிறது. 1953-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கல்விசார்ந்த விஷயங்களில் மட்டுமின்றி, தகுதியுள்ள கல்லூரிகளுக்கு நிதி உதவி வழங்குவதும் இதன் பணியாகும். இதனால், கல்வித்தரம் மீது முழுக்கவனம் செலுத்த முடியாததால், பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக, இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இத்தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார். இதற்கான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அது தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

    மேலும், அமைச்சகத்தின் இணையதளத்தில் வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளது. அதுபற்றி கல்வியாளர்கள், பொதுமக்கள் ஜூலை 7-ந் தேதி மாலை 5 மணிவரை கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பு, கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தும். மானிய விவகாரங்களை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கவனித்துக் கொள்ளும்.   #UGC #HigherEducationCommission
    ×