search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college teachers"

    ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 25 கல்லூரி பேராசிரியர்களை சஸ்பெண்டு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது. #CollegeTeachers #JactoGeo
    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 2-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். பேச்சு வார்த்தைக்கு அரசு அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது. மேலும் பணிக்கு திரும்ப காலக்கெடு நிர்ணயித்தது.

    இதையடுத்து ஆசிரியர்கள் 30-ந்தேதி பணிக்கு திரும்பினர். அதன்பின் அரசு ஊழியர்களும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

    அரசு நிர்ணயித்த காலக்கெடுக்குள் பணிக்கு திரும்பாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1500 பேர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாய்ந்தது.

    ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்று இருந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 25 கல்லூரி பேராசிரியர்களை சஸ்பெண்டு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.

    முன்தேதியிட்டு ஜனவரி 25-ந் தேதியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சென்னை மாநில கல்லூரியை சேர்ந்த 6 பேராசிரியர்களும் அடங்குவர்.

    இதற்கான உத்தரவு கல்லூரி முதல்வர்களிடம் இருந்து பேராசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. #CollegeTeachers #JactoGeo
    இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்க தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    திருச்சி:

    பல்கலைக்கழக மானிய குழுவை கலைத்துவிட்டு உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பினை ஏற்படுத்துவதற்கான சட்டவரைவினை எதிர்த்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் சார்பில் கருத்தரங்கு திருச்சியில் நடந்தது.

    கருத்தரங்கிற்கு சங்கத்தின் முன்னாள் மாநில பொது செயலாளர் திருச்செல்வம் தலைமை தாங்கிபேசினார். அவர் பேசுகையில், ‘’பல்கலைக்கழக மானிய குழு 100 சதவீதம் நிதி வழங்குகின்ற அமைப்பாகவும், ஜனநாயகத்துடன் கல்வியாளர்களை கொண்டு செயல்பட்ட அமைப்பாகும்.

    தற்போது மத்திய அரசு இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்கி உயர்கல்வியின் மாண்பை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் உயர்கல்வியை அரசியல் ஆக்கும் முயற்சி நடைபெறுவதுடன் உயர்கல்வியின் உதவித்தொகை குறைக்கப்படுவதும் தனியார் மயமாக்கும் முயற்சியும், கல்வியை வணிக மயமாக்குதலை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகும் அவலம் உள்ளது’’ என்றார்.

    கருத்தரங்கில் உயர்கல்வி ஆணையத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பல்கலைக்கழக மானியக்குழு அமைத்த சம்பள மறுஆய்வு குழு, பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆளுகைக்கு உட்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு இணையான அதிகாரிகளுக்கு ஊதியத்தை உயர்த்த சிபாரிசு செய்தது. அதை ஏற்றுக்கொண்டு ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர் கல்வித்துறை இயக்குனர் கடந்த ஆண்டு நவம்பர் 2-ந் தேதி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    அதன் அடிப்படையில், அந்த சிபாரிசை தமிழக அரசு ஆய்வு செய்து இந்த அரசாணையை பிறப்பிக்கிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஊதியம் உயர்த்தப்படுகிறது.

    இந்த சம்பள உயர்வு, 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியிட்டு அமல்படுத்தப்படும். கல்லூரி ஆசிரியர்களுக்கான ஓய்வு வயது 58 ஆகவும், பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான ஓய்வு வயது 60 ஆகவும் நீடிக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×