என் மலர்
இந்தியா

ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
- ராஜஸ்தான் விளையாட்டு குழுவின் இணையதளத்திற்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல்.
- பாதுகாப்பு நடவடிக்கையாக மைதானத்தில் இருந்து ஊழியர்கள் வெறியேற்றினர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் ராஜஸ்தான் விளையாட்டு குழுவின் இணையதளத்திற்கு பாகிஸ்தானில் இருந்து இ-மெயில் வந்துள்ளது.
மைதானத்திற்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருப்பதால் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக மைதானத்தில் இருந்து ஊழியர்கள் வெறியேற்றினர்.
மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நபுணர்கள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
Next Story






