search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FIFA World Cup Football"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கத்தாரில் பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது.
    • ஐந்து டன் மணலைப் பயன்படுத்தி மணல் சிற்பம் உருவாக்கம்.

    பூரி:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், உலகின் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவ்வவ்போது சிற்பங்களை உருவாக்கி வருகிறார். இந்நிலையில் கத்தாரில் நேற்று தொடங்கிய பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் குறித்து பூரி கடற்கரையில் 8 அடி உயர மணல் சிற்பத்தை அவர் உருவாக்கி உள்ளார்.

    இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஐந்து டன் மணலைப் பயன்படுத்தி, இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தொடரில் பங்கேற்றுள்ள 32 நாடுகளை சேர்ந்த 1,350 நாணயங்களையும், இந்திய நாணயங்களையும் அவர் பயன்படுத்தி உள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு மணல் சிற்ப போட்டிகளில் பங்கேற்ற போது இந்த நாணயங்களை சேகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மணல் சிற்பம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

    இதுவரை நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இதுவே சிறந்த போட்டி என்று பிபா தலைவர் கூறியுள்ளார். #FIFA2018 #WorldCup
    சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) தலைவர் ஜியானி இன்பான்டினோ மாஸ்கோவில் நேற்று அளித்த பேட்டியில், ‘இதுவரை நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இதுவே சிறந்த போட்டி என்று என்னால் உறுதிபட சொல்ல முடியும். உயர்தரமான இந்த போட்டிக்கான எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்த ரஷியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வீடியோ உதவி நடுவர் (வி.ஏ.ஆர்.) தொழில்நுட்பம் நல்ல பலனை அளித்துள்ளது.

    இந்த தொழில்நுட்பம் கால்பந்து ஆட்டத்தின் தன்மையை மாற்றவில்லை. கால்பந்து ஆட்டத்தில் நடைபெறக்கூடிய தவறுகளை களைந்து இருக்கிறது. நடுவர்கள் சரியான முடிவை எடுக்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. வி.ஏ.ஆர். முறை அமல்படுத்தியதன் மூலம் ஆப்-சைடு கோல் அனுமதிக்கப்படுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. போட்டியை நேரில் காண ஏறக்குறைய 10 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் ரஷியா வந்துள்ளனர். உலகம் முழுவதும் இந்த போட்டியை 300 கோடிக்கு மேற்பட்டவர்கள் டெலிவிஷன் மூலம் கண்டு களித்துள்ளனர்’ என்று தெரிவித்தார். #FIFA2018 #WorldCup
    உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. இந்த அணி இறுதிப் போட்டியில் குரோஷியா அல்லது இங்கிலாந்தை சந்திக்கிறது. #FifaWorldCup2018 #France
    செயின்ட்பீட்டர்ஸ்பர்க்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது.

    இதன் முதல் அரை இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு நடந்தது. இதில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதின. இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருந்தது.

    ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் பெல்ஜியம் கேப்டன் ஈடன் ஹசாட் கோல் வாய்ப்பை தவற விட்டார். அவர் அடித்த பந்து கோல் கம்பத்தை விட்டு சற்று வெளியே சென்றது.

    அடுத்த 4-வது நிமிடத்தில் அவர் அடித்த வேகமான ஷாட்டை பிரான்ஸ் பின்கள வீரர் ரபெல் வரேல் தடுத்து விட்டார். 22-வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் அருமையாக தடுத்து பெல்ஜியத்துக்கு ஏமாற்றம் கொடுத்தார். டோபி ஆல்டர் அடித்த ஷாட்டை அவர் சிறப்பாக செயல்பட்டு தடுத்தார்.

    இதே போல பிரான்ஸ் அணியும் சில வாய்ப்புகளை தவற விட்டது. 39-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் பவார்ட் அடித்த பந்தை பெல்ஜியம் கோல் கீப்பர் கோர்ட்டஸ் தடுத்து விட்டார்.

    முதல் பாதியில் இரு அணிகளும் கடுமையாக கோல் அடிக்க போராடின. ஆனால் அது பலன் இல்லாமல் போனது. இதனால் முதல் பாதியில் 0-0 என்ற நிலை இருந்தது.

    2-வது பகுதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் பிரான்ஸ் கோல் அடித்தது. 51-வது நிமிடத்தில் அந்த அணிக்கு ‘கார்னர் கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிரீன்ஸ்மேன் அடித்த பந்தை பின்கள வீரரான சாமுவேல் உமிட்டி தலையால் முட்டி மிகவும் அருமையாக கோலாக்கினார். இதன் மூலம் பிரான்ஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.



    கோல் வாங்கியதால் சமன் செய்ய பெல்ஜியம் போராடியது. ஆனால் அந்த அணியின் முயற்சி எடுபடாமல் போனது. 61-வது நிமிடத்தில் டி புருயன் வாய்ப்பை தவற விட்டார். 65-வது நிமிடத்தில் மெர்டன்ஸ் அடித்த பந்தை பிரான்ஸ் கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார். அதற்கு அடுத்த நிமிடத்தில் பெலானி தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்தை விட்டு சற்று விலகி சென்றது.

    81-வது நிமிடத்தில் விஸ்டல் அடித்த அதிரடியான ஷாட்டை பிரான்ஸ் கோல்கீப்பர் தடுத்தார். மேலும் முன்னணி வீரரான லுகாகுவும் சில நல்ல வாய்ப்புகளை தவறவிட்டார். பெல்ஜியத்தின் கடும் போராட்டத்துக்கு பலன் இல்லாமல் போனது.



    அதே நேரத்தில் பிரான்ஸ் 2-வது கோல் அடிக்க கிடைத்த சில வாய்ப்புகளை நழுவவிட்டது. ஜிரவுட், கிரீன்ஸ்மேன், டோலிகோ ஆகியோர் கோலாக்க தவறினர். ஆட்டத்தின் முடிவில் பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    பிரான்ஸ் கடந்த 20 ஆண்டுகளில் 3-வது முறையாக உலக கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி பெற்றது. இதற்கு முன் 1998, 2006-ல் அந்த அணி தகுதி பெற்று இருந்தது.

    இதில் 1998-ல் சொந்த மண்ணில் நடந்த போட்டியில் பிரேசிலை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றது. 2006-ல் இத்தாலியிடம் பெனால்டி ஷூட்டில் தோற்று கோப்பையை இழந்தது.

    பிரான்ஸ் அணி இறுதிப் போட்டியில் குரோஷியா அல்லது இங்கிலாந்தை சந்திக்கிறது.

    பெல்ஜியம் சிறப்பாக ஆடியும் கோல் அடிக்க முடியாமல் போனது அதிர்ஷ்டம் இல்லாததே காரணம். இந்த தொடரில் அபாரமாக ஆடிய அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது ஏமாற்றமே.

    பெல்ஜியம்அணி 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இன்றைய 2-வது அரை இறுதியில் தோற்கும் அணியுடன் விளையாடும். 3-வது இடத்துக்கான ஆட்டம் 14-ந் தேதியும், இறுதிப்போட்டி 15-ந் தேதியும் நடக்கிறது. #FifaWorldCup2018 #France
    உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. இ பிரிவில் இடம் பெற்றுள்ள நாடுகள் பற்றி ஒரு பார்வை. #FIFA2018
    பிரேசில் (தரவரிசை- 2)

    கால்பந்து விளையாட்டுக்கு பெயர் போனது பிரேசில். தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள அந்நாட்டு மக்கள் இந்த விளையாட்டை மிகவும் ரசிக்க கூடியவர்கள். அதற்கு ஏற்ற வகையில் அந்நாட்டு கால்பந்து அணியும் திகழ்கிறது. உலக கோப்பையை பிரேசில் அணி 5 முறை வென்று உலக சாதனை படைத்து இருக்கிறது. மேலும் அனைத்து உலக கோப்பை போட்டியிலும் விளையாடிய ஒரே அணி ஆகும்.

    பீலே, ரொனால்டோ, ரொனால்டினோ, ஜிகோ, கேரின்சா, ரொமாரியோ போன்ற உலகின் தலைசிறந்த வீரர்களை உருவாக்கியது. பிரேசில் அணி 1958, 1962, 1970, 1994, 2002 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பையை வென்றது. 5 முறை உலக கோப்பையை வேறு எந்த அணியும் வென்றது கிடையாது. மேலும் பிரேசில் அணி இரண்டு தடவை 2-வது இடத்தையும் (1950, 1998), 3-வது இடத்தையும் (1938, 1978), 4-வது இடத்தையும் (1974, 2014) பிடித்தன. அந்த அளவுக்கு கால்பந்தில் அந்த அணி வலிமையாக உள்ளது. கடந்த முறை சொந்த மண்ணில் நடந்த போட்டியில் பிரேசில் அணி அரை இறுதியில் 1-7 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் மோசமாக தோற்றது. நட்சத்திர வீரர் நெய்மர் காயத்தால் விலகியது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

    தற்போதுள்ள பிரேசில் அணி பலம் பொருந்தியதாக இருப்பதால் 6-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. நெய்மர் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவரது உத்வேகமான ஆட்டம் பிரேசில் அணியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் சர்வதேச போட்டியில் 54 கோல்கள் அடித்து உள்ளார். பிலிப் கோடினோ, ராபர்ட்டோ பிர்மினோ, பிரட், டியோகோ சில்வா போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    உலக கோப்பை போட்டிக்கு முதல் அணியாக நுழைந்த பிரேசில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்து, செர்பியா, கோஸ்டாரிகா போன்ற நாடுகள் அந்த பிரிவில் உள்ளன. இதில் சுவிட்சர்லாந்து சவாலான அணி. இந்த பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் நம்பிக்கையுடன் பிரேசில் அணி இருக்கிறது.

    உலக கோப்பையில் 104 ஆட்டத்தில் விளையாடி 70-ல் வெற்றி பெற்றது. 17 ஆட்டத்தில் தோற்றது. மீதியுள்ள 17 போட்டியில் டிரா ஆனது. 221 கோல்கள் அடித்துள்ளன. 102 கோல்கள் வாங்கியுள்ளன.

    சுவிட்சர்லாந்து (தரவரிசை-6 )

    ஐரோப்பா கண்டத்தில் உள்ள சுவிட்சர்லாந்து உலக கோப்பை போட்டியில் 10 முறை விளையாடி உள்ளது. இதில் 3 தடவைகால் இறுதி வரை நுழைந்து உள்ளதே அந்த அணியின் சிறப்பான நிலையாகும். கடைசியாக 1954-ம் ஆண்டு அந்த அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. அதற்கு பின்னர் சுவிட்சர்லாந்து தான் விளையாடிய 7 போட்டியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கடந்த முறை 2-வது சுற்றோடு வெளியேறியது. தற்போது அந்த அணி தர வரிசையில் ‘டாப் 10’ இடத்தில் உள்ளது. மேலும் அந்த அணி மிகவும் சிறப்பாக விளையாடுவதால் 64 ஆண்டுகளுக்கு பிறகு சிறந்த நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘இ’ பிரிவில் முதலிடத்தை பிடிக்க கூடிய திறமையுடன் சுவிட்சர்லாந்து உள்ளது. பிரேசில் அணிக்கு கடும் சவாலாக இருக்கும். பெக்ராமி, ஷொர்டான், ஷேபரோவிக் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். உலக கோப்பை போட்டியை நடத்திய அணிகளில் அந்நாடு ஒன்றாகும். அங்கு 1954-ல் போட்டி நடந்தது.

    சிறந்த நிலை: கால் இறுதி (1934, 1938, 1954)

    கோஸ்டாரிகா (தரவரிசை- 23)

    5-வது முறையாக உலக கோப்பையில் கோஸ்டாரிகா பங்கேற்கிறது. இதற்கு முன்பு (1990, 2002, 2006, 2014) போட்டியில் ஆடி இருந்தது.

    கடந்த உலக கோப்பையில் அந்த அணி கால் இறுதி வரை நுழைந்து இருந்தது. நெதர்லாந்திடம் பெனால்டி ஷூட்டில் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது. அந்த அணியில் பிரையன் ரூயிஸ், கிறிஸ்டியன் போலேன்ஸ், மார்கோ யூரினா போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    பிரேசில், சுவிட்சர்லாந்து போன்ற சிறந்த அணிகள் அந்த பிரிவில் இருப்பதால் கோஸ்டாரிகா ‘நாக்அவுட்’ சுற்றுக்கு முன்னேறுவது கடினமானதே.

    சிறந்த நிலை: கால்இறுதி (2014)


    செர்பியா (தரவரிசை- 34)

    8 ஆண்டுகளுக்கு பிறகு செர்பியா உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. செர்பியா தனி நாடாக சுதந்திரம் பெற்ற பிறகு 2-வது முறையாக பங்கேற்கிறது. ஒருங்கிணைந்த யூகோசுலேவியாக இருந்தபோது 2 முறை 4-வது இடத்தை (1930, 1962) பிடித்து இருந்தது.

    ஆஸ்திரியா, வேல்ஸ் அணிகளை வீழ்த்தி உலக போட்டிக்குள் நுழைந்தது. தகுதி சுற்றில் 20-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து இருந்தது. அலெக்சாண்டர் மிட்ரோவிக் 6 கோல்கள் அடித்து இருந்தார். இவானோவிக், நெமன்ஜா மோட்டிக் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். #FIFA2018
    ×