search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "La Liga"

    100 போட்டியில் விளையாடினால் லிவர்பூல் அணிக்கு 17 மில்லியன் பவுண்டு வழங்க வேண்டும் என்பதால், இந்த சீசனில் கவுட்டினோவை பார்சிலோனா டிரான்ஸ்பர் செய்யும் எனத் தெரிகிறது.
    பிரேசில் கால்பந்து அணியின் சிறந்த வீரர் பிலிப்பே கவுட்டினோ. இவர் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 106 மில்லின் பவுண்டுக்கு பார்சிலோனா வாங்கியது. அப்போது சில நிபந்தனைகள் கூடுதலாக சில 36 மில்லியன் பவுண்டு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.

    அதில் ஒன்று பார்சிலோனா அணிக்காக கவுட்டினோ 100 போட்டிகளில் பங்கேற்றால் 17 மில்லியன் பவுண்டு லிவர்பூல் அணிக்கு வழங்க வேண்டும் என்பதுதான்.



    தற்போது வரை பார்சிலோனா அணிக்காக கவுட்டினோ 71 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த சீசன் முடிந்தவுடன் வீரர்கள் டிரான்ஸ்பர் நடைபெறும். அப்போது கவுட்டினோவை வெளியேற்றாவிடில், அடுத்த சீசனில் அவர் தொடர்ந்து விளையாட வாய்ப்புள்ளது.

    இதனால் கவுட்டினோவை 17 மில்லியன் பவுண்டுக்காக பார்சிலோனா வெளியேற்றுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    ஸ்பெயின் நாட்டில் மட்டுமே விளைாடினால் போதுமா? இத்தாலிக்கு வாருங்கள் என்று மெஸ்சிக்க ரொனால்டோ சவால் விடுத்துள்ளார். #Messi #Ronaldo
    கால்பந்து போட்டியில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் கருதப்படுகிறார்கள். இதில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த மெஸ்சிக்கும், போர்ச்சுக்கலை சேர்ந்த ரொனால்டோவிற்கும் எதிராகத்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. லி லிகா தொடரில் மெஸ்சி பார்சிலோனாவிற்காகவும், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடினார்கள். அப்போது இருவரும் எதிரும் புதிருமாகத்தான் இருப்பார்கள். கடும் போட்டி நிலவும்.

    ரொனால்டோ போர்ச்சுக்கல் தேசிய அணிக்காகவும், அங்குள்ள கிளப், இங்கிலாந்து பிரிமீயர் லீக், ஸ்பெயின் லா லிகா தொடர்களிலும் விளையாடியுள்ளார். தற்போது இத்தாலி செரி ஏ கிளப்பில் யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    ஆனால் அர்ஜென்டினா தேசிய அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி, ஸ்பெயின் நாட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில் இத்தாலிக்கு வாருங்கள் என்று மெஸ்சிக்கு ரொனால்டோ சவால் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில் ‘‘ஒருநாள் மெஸ்சி இத்தாலிக்கு வருவதை நான் கட்டாயம் விரும்புவேன். என்னுடைய சவாலை அவர ஏற்பார் என்று நம்புகிறேன். ஆனால், ஸ்பெயினில் அவர் மகிழ்ச்சியாக இருந்தால், அதற்கு நான் மதிப்பு அளிக்கிறேன்.



    அவர் வாழ்நாள் முழுவதும் பார்சிலோனாவிற்காக விளையாடினால், நான் அவரை இழக்கவில்லை. அவர்தான் என்னை இழக்கிறார். நான் இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கலில் விளையாடியுள்ளேன். அவர் இன்னும் ஸ்பெயினிலேயே இருக்கிறார். ஒருவேளை அவருக்கு நான் தேவைப்பட்டால், எனக்கு வாழ்க்கை சவாலாக இருக்கும். அதை நான் விரும்புவேன். ரசிகர்கள் மகிழ்ச்சியாக மாற்ற விரும்புவேன்.

    மெஸ்சி மிகவும் சிறந்த வீரர் மற்றும் சிறந்த மனிதர். ஆனால், இங்கே நான் எதையும் தவறவிடவில்லை. இது என்னுடைய புதிய வாழ்க்கை. நான் மகிழ்ச்சியாக உள்ளேன். என்னுடைய வசதியாக இடத்தை விட்டு, இத்தாலியில் இந்த சவாலை எடுத்துள்ளேன். இங்கு எல்லாம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. நான் இன்னும் வியக்கத்தக்க வீரர்தான் என்பதை நிரூபித்திருக்கிறேன்’’ என்றார்.
    லா லிகா கால்பந்து கிளப் போட்டியில் முன்னணி அணியான பார்சிலோனாவை அதன் சொந்த மைதானத்தில் வைத்து ரியல் பெட்டிஸ் 4-3 என வீழ்த்தியது. #Laliga #Barcelona
    லா லிகா கால்பந்து லீக்கில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா - ரியல் பெட்டிஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. சில போட்டிகளில் இடம்பெறாமல் இருந்த மெஸ்சி இந்த ஆட்டத்தில் இடம்பிடித்திருந்தார்.

    ஆட்டம் தொடங்கியது முதலே ரியல் பெட்டிஸ் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் ரியல் பெட்டிஸ் அணியின் ஜூனியர் ஃபிர்போ கோல் அடித்தார். 34-து நிமிடத்தில் ஜோக்குயின் கோல் அடித்தார். இதனால் ரியல் பெட்டிஸ் 2-0 என முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேரத்தில் பார்சிலோனா வீரர்கள் ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 68-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். அடுத்த 3-வது நிமிடத்தில் ரியல் பெட்டிஸ் அணியின் செல்சோ கோல் அடித்தார். இதனால் 3-1 என ரியல் பெட்டிஸ் முன்னணி பெற்றது.



    79-வது நிமிடத்தில் விடால் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 2-3 என பின்தங்கியிருந்தது. அடுத்த 4-வது நிமிடத்தில் ரியல் பெட்டிங் அணியின் செர்ஜியோ கானலெஸ் கோல் அடித்தார். இதனால் 2-4 என பார்சிலோனா பின்தங்யிருந்தது.

    அதன்பின் 90 நிமிடங்கள் வரை பார்சிலோனா அணியால் கோல் அடிக்கவில்லை. காயம் மற்றும் ஆட்ட நேரம் நிறுத்தம் ஆகியவற்றிற்கான கூடுதல் நேரத்தில், 92-வது நிமிடத்தில் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். இருந்தாலும் ரியல் பெட்டிஸ் 4-3 என பார்சிலோனாவை வீழ்த்தி அதிர்ச்சிக்குள்ளாக்கிறது.
    முறைகேடு செய்தால் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து தூக்கி எறியப்படுவீர்கள் என்று லா லிகா லீக்கின் தலைவர் பிஎஸ்ஜி-க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். #PSG #Laliga
    கால்பந்து கிளப் அணிகளில் ஸ்பெனில் உள்ள பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் உலகின் தலைசிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. அதேபோல் பிரான்ஸில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி பணக்கார கிளப்பாக திகழ்ந்து வருகிறது.

    பார்சிலோனா அணியில் இடம்பிடித்திருந்த நெய்மரை பிஎஸ்ஜி 222 மில்லியன் யூரோவிற்கு கால்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத தொகைக்கு வாங்கியது. அத்துடன் மட்டுமல்லாம் மொனாக்கோ அணியில் விளையாடிய கிலியான் மப்பேவை 180 மில்லியன் யூரோவிற்கு வாங்கியது.



    இது கால்பந்து சங்கங்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நெய்மர் டிரான்ஸ்பரில் பிஎஸ்ஜி விதிமுறையை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன.

    இதற்கிடையே பிஎஸ்ஜி அணி குறித்த விமர்சனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று லா லிகா தலைவர் சேவியர் டெபாஸிடம் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கேட்டுக்கொண்டது. ஆனார், சேவியர் டெபாஸ் அந்த கோரிக்கையை நிராகரித்து ‘‘முறைகேடு செய்தால் நீக்கப்படுவீர்கள்’’ என்ற எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    தொடர் தோல்வி காரணமாக ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளரான ஜுலேன் லோபெட்டேகுய் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். #RealMadrid
    ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து கிளப் அணி ரியல் மாட்ரிட் அணி. உலகிலேயே மிக பிரபலமான கிளப் கால்பந்து தொடரான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை தொடர்ந்து 3 முறை வென்று சாதனை படைத்தது ரியல் மாட்ரிட். அதன்பின், அந்த அணியின் வெற்றி பயிற்சியாளர் ஷிடேனின் ஷிடேன் அணியை விட்டு விலகுவதாக தெரிவித்தார். அத்துடன் ரியல் மாட்ரிட்டின் நட்சத்திர வீரரான ரொனால்டோ அதிரடியான யுவான்டஸ் அணிக்குச் சென்றார்.

    அதன்பின் ஸ்பெயின் தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்த ஜுலேன் லோபெட்டேகுய், ரியல் மாட்ரிட் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். உலகக் கோப்பைக்கு முன்னதாக ரியல் மாட்ரிட் அணியுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டதால் ஆத்திரமடைந்த ஸ்பெயின் கால்பந்து ஆணையம் லோபெட்டோகுய்-ஐ அதிரடியாக பணி நீக்கம் செய்தது.



    லோபெட்குயிவின் கீழ் 2018-19 கால்பந்து சீசனில் ரியல் மாட்ரிட் 3 வெற்றிகளுடன் நல்ல துவக்கம் பெற்றாலும், அதன்பின் தொடர்ந்து தோல்வியடைந்து வந்தது. சிறிய அணிகளுடனும் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற போட்டியில், முதல் இடத்தில் இருக்கும் பரம எதிரியான பார்சிலோனாவிடம் 5-1 என படுதோல்வி அடைந்தது.

    இந்நிலையில் ரியல் மாட்ரிட் அணி பயிற்சியாளர் ஜுலேன் லோபெட்டேகுய்-ஐ அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. தற்காலிகமாக சான்டியாகோ சோலரியை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
    எல் கிளாசிகோ போட்டியில் சுவாரஸ் ஹாட்ரிக் கோலால் ரியல் மாட்ரிட்டை 5-1 என துவம்சம் செய்தது பார்சிலோனா. #Laliga #Barcelona #RealMadrid
    எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் இடையிலான லா லிகா லீக் ஆட்டம் நேற்றிரவு நடைபெற்றது. பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

    ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் பார்சிலோனாவின் கவுட்டினோ முதல் கோலை பதிவு செய்தார். 30-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி சுவாரஸ் கோல் அடிக்க பார்சிலோனா முதல் பாதி நேரத்தில் 2-0 என முன்னிலை பெற்றது.



    2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் ரியல் மாட்ரிட் அணியின் மார்சிலோ கோல் அடித்தார். அதன்பின் பார்சிலோனா வீரர்கள் நம்பமுடியாத வகையில் விளையாடினார்கள். சுவாரஸ் 75-வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்தார். 83-வது நிமிடத்தில் எளிதாக மேலும் ஒரு கோல் அடித்தார்.




    சுவாரஸ் ஹாட்ரிக் கோலால் பார்சிலோனா 4-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. 87-வது நிமிடத்தில் விடால் தலையால் முட்டி கோல் அடிக்க 5-1 என ரியல் மாட்ரிட்டை துவம்சம் செய்தது பார்சிலோனா.
    லா லிகா புள்ளிகள் தரவரிசையில் நடப்பு சாம்பியன் ஆன பார்சிலோனா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. #LaLiga #Barcelona
    லா லிகா கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் வாலன்சியா அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே வாலன்சியா அணியின் கரேய் கோல் அடித்து பார்சிலோனாவிற்கு அதிர்ச்சி அளித்தார்.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பார்சிலோனா கேப்டன் மெஸ்சி 23-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 சமநிலை ஆனது. அதன்பின் ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி 1-1 என வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.



    இந்த போட்டியை பார்சிலோனா டிரா செய்ததால் லா லிகா புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா 8 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியின் மூலம் 15 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.



    செவியா 8 போட்டியில் 5 வெற்றி, 1 டிரா, இரண்டு தோல்விகள் மூலம் 16 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ரியால் மாட்ரிட் நான்கு வெற்றி, தலா இரண்டு டிரா, தோல்வியின் மூலம் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
    லா லிகா கால்பந்து லீக்கில் ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ டி மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. #LaLiga #RealMadrid
    லா லிகா கால்பந்து லீக்கில் ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ டி மாட்ரிட் இடையிலான ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ‘மாட்ரிட் டெர்பி (Madrid Derby)’ என்று அழைக்கப்படும்.

    இதில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இரு அணி வீரர்களும் களம் இறங்குவார்கள். ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் ஆட்டம் நடைபெற்றதால், ரியல் மாட்ரிட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் ரியல் மாட்ரிட் அணியால் கடைசி வரை கோல் அடிக்க இயலவில்லை. அதேபோல் அட்லெடிகோ டி மாட்ரிட் அணியும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.



    மற்றொரு ஆட்டத்தில் பார்சிலோனா - அத்லெடிக் கிளப் அணிகள் மோதின. ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் அத்லெடிக் கிளப் அணியின் டி மார்கோஸ் கோல் அடித்து பார்சிலோனாவிற்கு அதிர்ச்சி அளித்தார்.

    2-வது பாதி நேரத்தில் கோல் அடிக்க பார்சிலோனா கடும் முயற்சி எடுத்தது. 84-வது நிமிடத்தில் முனிர் கோல் அடிக்க ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது. அதன்பின் இரு அணிகளம் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் பாதி நேரத்தில் மெஸ்சி விளையாடவில்லை. 55-வது நிமிடத்தில்தான் களம் இறங்கினார்.
    லா லிகா கால்பந்து தொடரில் எஸ்பான்யல் அணியை 1-0 என வீழ்த்திய ரியல் மாட்ரிட் 4 வெற்றி, ஒரு டிராவுடன் முதல் இடம் வகிக்கிறது. #LaLiga #RealMadrid
    லா லிகா கால்பந்து தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட் - ஆர்சிடி எஸ்பான்யல் அணிகள் மோதின.

    ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான சான்டியாகோ பெர்னாபு மைதானத்தில் நடைபெற்றது. சொந்த மைனதாத்தில் விளையாடினாலும் ரியல் மாட்ரிக் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. எஸ்பான்யல் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ரியல் மாட்ரிட் தடுமாறியது.

    ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் அசென்சியோ ஒரு கோல் அடிக்க ரியல் மாட்ரிட் 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரு அணி வீரர்களும் ஆட்டம் முடியும் வரை கோல் அடிக்கவில்லை. இதனால் ரியல் மாட்ரிட் 1-0 என வெற்றி பெற்றது.



    இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று 13 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. பார்சிலோனா 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
    லா லிகாவில் பென்சிமா, காரேத் பேலே ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் 4-1 என சிடி லெகன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. #LaLiga #Benzema
    லா லிகா கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட். சிடி லெகன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் 4-1 என ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.

    ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் காரேத் பேலே முதல் கோலை பதிவு செய்தார். 24-வது நிமிடத்தில் லெகன்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதைப் பயன்படுத்தி லெகன்ஸ் அணியின் கர்லில்லோ கோல் அடித்தார். அதன்பின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.



    2-வது பாதி நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென்சிமா 48 மற்றும் 61-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். 66-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி செர்ஜியோ ரமோஸ் கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் ரியல் மாட்ரிட் 4-1 என வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியுடன் ரியல் மாட்ரிட் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மூன்று போட்டிகளிலும் 10 கோல்கள் அடித்துள்ளது.
    லா லிகா கால்பந்து தொடரில் முன்னணி கிளப்புகளான பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் தங்களது 2-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றது. #Laliga #Barcelona
    லா லிகா கால்பந்து தொடரின் 2-வது வார ஆட்டம் கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - ஆர். வல்லாடோலிட் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டெம்பேல் 57-வது நிமிடத்தில் கோல் அடிக்க பார்சிலோனா 1-0 என வெற்றி பெற்றது.



    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் கிரோனா எப்.சி-யை எதிர்கொண்டது. இதில் ரியல் மாட்ரிட் 4-1 என வெற்றி பெற்றது. 16-வது நிமிடத்தில் கிரோனா எப்சி அணியின் போர்ஜா முதல் கோலை அடித்தார்.



    39-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி செர்ஜியோ ரமோஸ் கோல் அடித்தார். அதன்பின் 52-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி பென்சிமா கோல் அடித்தார். காரத் பேலே 59-வது நிமிடத்திலும், 80-வது நிமிடத்தில் பென்சிமாவும் கோல் அடித்தனர்.
    லா லிகா 2018-19 சீசனை மெஸ்சி, கவுட்டினோ ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பார்சிலோனா வெற்றியோடு தொடங்கியுள்ளது. #LaLiga #Messi
    ஐரோப்பா நாடுகளில் நடைபெறும் கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து தொடரில் ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் பங்கேற்கும் பார்சிலோனா அணியில் நட்சத்திர வீரர் மெஸ்சி இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

    2017-2018 சீசனினல் பார்சிலோனா சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் 2018-19 சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. பார்சிலோனா தனது முதல் ஆட்டத்தில் நேற்று டிபெர்ட்டிவோ அலெவ்ஸ் அணியை எதிர்கொண்டது.



    முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் பார்சிலோனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 64-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். 83-வது நிமிடத்தில் கவுட்டினோ ஒரு கோல் அடித்தார். இன்ஜூரி நேரத்தில் ஆட்டத்தின் 92-வது நிமிடத்தில் மெஸ்சி மேலும் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 3-0 என வெற்றி பெற்றது.



    மற்ற போட்டிகளில் ரியல் சோசியேடாட், லெவான்டே அணிகள் வெற்றி பெற்றன. செல்டா - எஸ்பான்யல், கிரோனா - வல்லாடோல்டு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
    ×