என் மலர்
நீங்கள் தேடியது "UEFA Champions League"
- 4ஆவது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணி கோல் அடித்தது.
- அதன்பின் ஆட்டம் முடியும் வரை இரு அணிகளாலும் கோல் அடிக்கமுடியவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.
இதன் அரையிறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அரையிறுதி 2 லெக் ஆட்டங்களாக நடத்தப்படும். இரு அணிகளும் தலா ஒரு முறை தங்களுடைய சொந்த மைதானத்தில் மோதும். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து அதிக கோல் அடிக்கும் அணி வெற்றிபெறும்.
அதன்படி முதல் அரையிறுதி போட்டியில் ஆர்சனல்- பிஎஸ்ஜி அணிகள் இந்திய நேரப்படி இன்று காலை மோதின. இந்த போட்டி லண்டனில் உள்ள ஆர்சனலுக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கிய 4ஆவது நிமிடத்தி் ஆர்சனலுக்கு பிஎஸ்ஜி அதிர்ச்சி அளித்தது. க்வாரட்ஸ்கெலியா இடது பக்கம் கார்னரில் இருந்து பாஸ் செய்த பந்தை உஸ்மான் டெம்ப்ளே கோலாக மாற்றினார்.
அதன்பின் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிஎஸ்ஜி 1-0 என வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது லெக் வருகிற 8ஆம் தேதி நடைபெறுகிறது.
பிஎஸ்ஜி சொந்தமான மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் பிஎஸ்ஜி டிரா அல்லது வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஆர்சனல் 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பெனால்டி சூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும்.
மற்றொரு அரையிறுதியில் பார்சிலோனா- இன்டர் மிலான் அணிகள் மோதுகின்றன. முதல் லெக் இன்று நள்ளிரவிலும், 2ஆவது லெக் வருகிற 7ஆம் தேதி நள்ளிரவிலும் நடைபெறுகிறது.
- 2 லெக்கிலும் சேர்த்து ஆர்சனல் ரியல் மாட்ரிட்டை 5-1 என பந்தாடியது.
- பார்சிலோனா 5-3 என டார்ட்மன்-ஐ வீழ்த்தியது.
UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டங்களின் 2ஆவது லெக் ஆட்டங்கள் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை நடைபெற்றன.
ஒரு காலிறுதியின் 2ஆவது லெக்கில் ரியல் மாட்ரிட்- ஆர்சனல் அணிகள் மோதின. முதல் லெக்கில் ஆர்சனல் 3-0 என வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்றால் ரியல் மாட்ரிட் அணி 4 கோல் அடித்து ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
சொந்த மைதானத்தில் விளையாடியதால் ரியல் மாட்ரிட் சாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆர்சனல் அபாரமாக விளையாடி 2-1 என வெற்றி பெற்றது. இதனால் இரண்டு லெக்கிலும் சேர்த்து 5-1 என ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதி 2ஆவது லெக்கில் இன்டர் மிலான்- பேயர்ன் முனிச் அணிகள் மோதின. இந்த போட்டி 2-2 என சமநிலை பெற்றது. முதல் லெக்கில் இன்டர் மிலான் 2-1 என வெற்றி பெற்றதால் மொத்தமாக 4-3 என வெற்றி பெற்றது.
4ஆவது காலிறுதியில் ஆஸ்டன் வில்லா- பிஎஸ்ஜி அணிகள் மோதின. இதில் ஆஸ்டன் வில்லா 3-2 என வெற்றி பெற்றிருந்தது. என்றாலும் முதல் லெக்கில் பிஎஸ்ஜி 3-1 என வெற்றி பெற்றிருந்ததால் மொத்தமாக 5-4 என பிஎஸ்ஜி வெற்றி பெற்றது.

4ஆவது காலிறுதியில் பார்சிலோனா- டார்ட்மன்ட் அணிகள் மோதின. இதில் டார்ட்மன்ட் 3-1 என வெற்றி பெற்றது. என்றாலும் முதல் லெக்கில் பார்சிலோனா 4-0 என வெற்றி பெற்றிருந்ததால் பார்சிலோனா 5-3 என வெற்றி பெற்றது.
மே 1ஆம் தேதி நடைபெறும் அரையிறுதியில் முதல் லெக்கில் பிஎஸ்ஜி- ஆர்சனல், பார்சிலோனா- இன்டர் மிலான் அணிகள் மோதுகின்றன. 2ஆவது லெக் மே 8ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதிப் போட்டி ஜூன் 1ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
- ப்ரீஹிக்கை பயன்படுத்தி ஆர்சனம் வீரர் ரைஸ் அற்புதமாக கோல் அடித்தார்.
- மிக்கேல் மெரினோ 78ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க ஆர்சனல் 3-0 என வெற்றி பெற்றது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்படும். 2024-2025ஆம் ஆண்டு தொடருக்கான காலிறுதி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. காலிறுதி போட்டிகள் இரண்டு லெக் (Leg) ஆக நடத்தப்படும். இரண்டு அணிகள் அதன் சொந்த மைதானங்களில் தலா ஒரு முறை மோத வேண்டும்.
காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஆர்சனல்- ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான முதல் லெக் போட்டி ஆர்சனலுக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
இந்த போட்டியின் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 2ஆவது பாதி நேர ஆட்டத்தில் ஆர்சனல் வீரர் அற்புதமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் 58-ஆவது நிமிடத்தில் ஆர்சனல் வீரர் டெக்லான் ரைஸ் ப்ரீஹிக் மூலம் சிறப்பாக கோல் அடித்தார். அடுத்த 70ஆவது நிமிடத்திலும் ப்ரீஹிக் மூலம் கோல் அடித்தார். இதனால் ஆர்சனல் 2-0 என முன்னிலை பெற்றது. 78ஆவது நிமிடத்தில் மிக்கேல் மெரினோ கோல் அடிக்க 3-0 என்ற வலுவான முன்னிலையை பெற்றது.
அதன்பின் ரியல்மாட்ரிட் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆர்சனல் 3-0 என வெற்றி பெற்றது. 2-ஆவது லெக் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெறும். அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் ரியல் மாட்ரிட் இதில் 4-0 என வெற்றி பெற வேண்டும்.
இல்லையெனில இரண்டு போட்டிகளிலும் சேர்த்த ஒரு கோல் அதிகமாக அடிக்க வேண்டும். ஒருவேளை இரண்டு போட்டிகளிலும் சேர்த்து இரு அணிகளும் சமமான கோல்களை பெற்றால் பெனால்டி சூட்அவுட் முறை கடைபிடிக்கப்படும்.
2ஆவது லெக் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் வருகிற 17ஆம் தேதி நடைபெறுகிறது.
- இரு அணிகளும் முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்கவில்லை.
- 68வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி அபாரமான கோல் அடித்தார்.
இஸ்தான்புல்:
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சார்பில் ஆண்டுதோறும் கிளப் அணிகளுக்கிடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் ஃபிஃபா உலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது.
அவ்வகையில், இந்த ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இஸ்தான்புல் நகரில் உள்ள அட்டாடர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில், மான்செஸ்டர் சிட்டி, இன்டர் மிலன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. இரு அணிகளுமே எதிரணியின் தடுப்பாட்டத்தை முறியடித்து கோல் அடிக்க முயன்றன. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்கப்படவில்லை.

இந்நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி முன்னேறியது. 68வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி, எதிரணியின் தடுப்பாட்டத்தை முறியடித்து அபாரமான கோல் அடித்தார். இதன்மூலம் மான்செஸ்டர் சிட்டி 1-0 என முன்னிலை பெற்றது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. அதன்பின்னர் இன்டர் சிட்டி அணி பதிலடி கொடுக்க முயன்றும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் மான்செஸ்டர் சிட்டி 1-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் கிளப் தொடங்கிய 143 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது.
- இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியும் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின.
- டோர்முண்ட் அணியின் டிபெண்டர் டானி கார்வஜால் அசந்த நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது.
UEFA சாம்பியன் ஷிப் லீக் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய கோப்பை கால்பந்து 69 வது சீசன் போட்டிகள் கடந்த வருடம் ஜூன் மாதம் தொடங்கி நடந்து வந்த நிலையில் சாம்பியன் லீக் பட்டத்தை வெல்வதற்காக இறுதிப்போட்டியானது நேற்று (ஜூன் 1) சனிக்கிழமை லண்டனில் உள்ள வெம்ப்லே மைத்தனத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியும் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. இந்த லீக் தொடர் முழுவதிலும் இரண்டாவது சிறந்த அணியாக விளங்கிய டொர்முண்ட் அணி ஆட்டத்தின் முதல் பாதியில் வாய்ப்பு கிடைத்தும் 3 கோல்களை தவறவிட்டது.
டோர்முண்ட் அணியின் டிபெண்டர் டானி கார்வஜால் அசந்த நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது. தொடர்ந்து ரியல் மத்ரித் வீரர் வினீசியஸ் ஜூனியர், 9 நிமிட இடைவெளியில் ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதன்மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியை வீழ்த்தி ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஷிப் லீக் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. ஐரோப்பிய லீக் கோப்பையை ரியல் மாட்ரிட் அணி வெல்வது இது 15 ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டம் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சொந்தமான ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்றது. மான்செஸ்டர் அணிக்கான நீண்ட காலம் விளையாடியவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. பின்னர் ரியல் மாட்ரிட் அணிக்கு சென்றார். தற்போது யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
பழைய கிளப் உடன் மோதுவதற்கான ரொனால்டோ ஓல்டு டிராஃபோர்டிற்குச் சென்றார். ரொனால்டோவை காண மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். நேற்றிரவு நடைபெற்ற மான்செஸ்டர் அணிக்கெதிரான ஆட்டத்தில் யுவான்டஸ் 1-0 என வெற்றி பெற்றது.

ஆட்டம் முடிந்ததும் ரொனால்டோ மைதானத்தில் இருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஏராளமான ரசிகர்கள் ரொனால்டோவுடன் செல்பி எடுக்க மைதானத்திற்குள் நுழைந்தனர்.
அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை பிடித்து வெளியேற்றினார். ஒரு ரசிகர் மட்டும் ரொனால்டோவை நெருங்கினார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்தனர். அந்த நேரத்தில் ரொனால்டோ ரசிகரின் செல்லை வாங்கி, அவருடன் செல்பி எடுத்து, அதன்பின் செல்லை ரசிகரிடம் வழங்கினார். ரொனால்டோ செல்லை வாங்கி செல்பி எடுத்த சந்தோசத்தில் அந்த ரசிகர் வெளியேறினார்.
ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது. இந்த அணிகள் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
ஒரு ஆட்டத்தில் ‘எச்’ பிரிவில் இடம் பிடித்துள்ள இத்தாலியின் முன்னணி கிளப்பான யுவான்டஸ் ஸ்பெயின் கிளப் அணியான வாலென்சியாவை எதிர்கொண்டது. யுவான்டஸ் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பிடித்திருப்பதால், அந்த அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாதி ஆட்டத்தில் ஆட்டம் பரபரப்பாக சென்றது. ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு ‘ப்ரீ ஹிக்’ வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ பந்தை அடிக்க முயற்சி செய்தார். அவருடன் வாலென்சியா வீரரும் சென்றார். அப்போது வாலென்சியா வீரர் கீழே விழுந்தார். உடனே கிறிஸ்டியானா ரொனால்டோ அவரை தலையில் தட்டினார்.
இதனால் நடுவர் அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து ரொனால்டோவை வெளியேற்றினார். எவ்வளவு மன்றாடியும் நடுவர் தனது முடிவை மாற்றவில்லை. இதனால் ரொனால்டோ கண்ணீர் வடித்தபடி வெளியேறினார். ரொனால்டோ இல்லாமல் யுவான்டஸ் 10 வீரர்களுடன் விளையாடிய யுவான்டஸ் வெற்றி பெற்றது.
யுவான்டஸ் அணி அடுத்த போட்டியில் யங் பாய்ஸ் என்ற அணியையும், அதற்கடுத்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியையும் எதிர்கொள்கிறது. ரொனால்டோ ரெட் கார்டு பெற்றதால் யங் பாய்ஸ் அணிக்கெதிராக விளையாட முடியாது.

அதேவேளையில் இதுகுறித்து ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்தது. விசாரணையில் அதிக போட்டியில் விளையாட தடைபோட்டால் முக்கியமான மான்செஸ்டர் போட்டியில் விளையாடாத நிலை ஏற்படும். ஆனால், ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கை ஒரு போட்டியில் விளையாட மட்டுமே தடைவிதித்துள்ளது.
இதனால் தனது பழைய கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடுகிறார்.
ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது. இந்த அணிகள் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டுமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
ஒரு ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனா நெதர்லாந்தின் பிஎஸ்வி எய்ன்டோவன் அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
32-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 77 மற்றும் 87-வது நிமிடத்தில் மெஸ்சி அடுத்தடுத்து கோல் அடித்தார். இதற்கிடையில் டெம்பேள் 75-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 4-0 என வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் ‘எச்’ பிரிவில் இடம் பிடித்துள்ள இத்தாலியின் முன்னணி கிளப்பான யுவான்டஸ் வாலென்சியாவை எதிர்கொண்டது. யுவான்டஸ் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பிடித்திருப்பதால், அந்த அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பாதி ஆட்டத்தில் ஆட்டம் பரபரப்பாக சென்றது. ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு ‘ப்ரீ ஹிக்’ வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ பந்தை அடிக்க முயற்சி செய்தார். அவருடன் வாலென்சியா வீரரும் சென்றார். அப்போது வாலென்சியா வீரர் கீழே விழுந்தார். உடனே கிறிஸ்டியானா ரொனால்டோ அவரை தலையில் தட்டினார். இதனால் நடுவர் அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து ரொனால்டோவை வெளியேற்றினார்.
எவ்வளவு மன்றாடியும் நடுவர் தனது முடிவை மாற்றவில்லை. இதனால் ரொனால்டோ கண்ணீர் வடித்தபடி வெளியேறினார். ரொனால்டோ இல்லாமல் யுவான்டஸ் 10 வீரர்களுடன் விளையாடியது. முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

2-வது பாதி நேரத்தில் 45 மற்றும் 51 நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தது. இதை மிராலெம் சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் 2-0 என யுவான்டஸ் முன்னிலைப் பெற்றது. அதன்பின் 39 நிமிடங்கள் கோல் அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் ரொனால்டோ இல்லாமலேயே யுவான்டஸ் 2-0 என வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் லீக் முதல் லீக்கில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய நிலையில், ரொனால்டோ ரெட் கார்டு பெற்று ஏமாற்றம் அளித்தார்.
இதில் 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது. இந்த அணிகள் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டுமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

ஒரு ஆட்டத்தில் குரூப் ‘சி’யில் இடம்பிடித்துள்ள பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் - லிவர்பூல் அணிகள் மோதின. இரண்டு முன்னணி அணிகள் மோதியதால் இந்த ஆட்டம் மிகவும் எதிர்பார்ப்பு மிகுந்ததாக அமைந்தது.
ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் டேனியல் ஸ்டர்ரிட்ஜ் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 6-வது நிமிடத்தில் லிவர்பூலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஜேம்ஸ் மில்னர் கோல் அடித்தார். இதனால் லிவர்பூல் 2-0 என முன்னிலைப் பெற்றது.

லிவர்பூல் அணிக்கு பதிலடியாக பிஎஸ்ஜி அணியின் தாமஸ் மெயுனியர் 40-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் லிவர்பூல் 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது.
2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியது. இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் 83-வது நிமிடத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் கிலியான் மப்பே கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 2-2 என சமநிலை ஆனது.
90 நிமிடம் வரை இதே ஸ்கோர் நிலவியதால் ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்ஜூரி நேரத்தில் 92-வது நிமிடத்தில் ரொபெர்ட்டோ ஃபேர்மினோ கோல் அடிக்க லிவர்பூல் த்ரில் வெற்றி பெற்றது.
போட்டியின் முதல் பாதி நேரத்தில் லிவர்பூல் அணியின் முன்னணி வீரரான முகமது சாலா பந்தை கோல் நோக்கி கடத்திச் சென்றார். அப்போது ரியல் மாட்ரிட் கேப்டனும், பின்கள வீரரும் ஆன செர்ஜியோ ரமோஸ் சாலாவின் கோல் முயற்சியை தடுக்க அவருடன் மோதிக்கொண்டே பந்தை தடுக்கச் சென்றார்.

அப்போது ரமோஸ் கைக்குள் சாலா கை மாட்டியது. அப்போது சாலாவை ரமோஸ் தள்ளியதால் சாலா கீழே விழுந்தார். இதில் சாலாவின் வலது கை தோள்பட்டை பலமாக தரையில் சென்று தாக்கியது. இதனால் சாலா வலியால் துடித்தார். பின்னர் சிறிது நேரம் விளையாடிய பின்னர் வலி தாங்க முடியாமல் வெளியேறினார். ஆனால் ரமோஸிற்கு நடுவர் எந்த தண்டனையும் வழங்கவில்லை.
இதனால் லிவர்பூல் ரசிகர்கள் கடும் கோபம் அடைந்தனர். அத்துடன் அமெரிக்காவில் பாதிப்படைந்த மக்களுக்காக உதவும் சேஞ்ச்.ஓர்ஜி (Change.org) என்ற இணைய தளத்தில் பிபா மற்றும் யூஈஎஃப்ஏ செர்ஜியோ ரமோஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 3 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
2018-19 தொடரின் இறுதிப் போட்டி அடிட்லெடிகோ மாட்ரிட் அணியின் ஹோம் தைானமான வாண்டா மெட்ரோபோலிடானோவில் நடக்கிறது. இந்த மைதானத்தில் 67 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்.
இந்நிலையில் 2019-2020 தொடரின் இறுதிப் போட்டி துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள அட்டாடர்க் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறும் என யூஇஎஃப்ஏ தலைவர் அலெக்சாண்டர் செபரின் உறுதிப்படுத்தியுள்ளார்.

2005-ம் ஆண்டு தொடரின் இறுதிப் போட்டி இந்த மைதானத்தில்தான் நடைபெற்றது. இதில் லிவர்பூல் - ஏசி மிலன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஒரு கட்டத்தில் 0-3 என பின்தங்கியிருந்த லிவர்பூல், பின்னர் 3-3 என டிரா செய்தது. அதன்பின் நடைபெற்ற பெனால்டி சூட்அவுட்டில் வெற்றி பெற்று வாகை சூடியது.






