என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது சாலா"

    • கடந்த சீசனில் 29 கோல்கள் அடித்துள்ளார்.
    • இந்த விருதை 3ஆவது முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளார்.

    இங்கிலாந்து ப்ரிமீயர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று லிபர்பூல். இந்த அணிக்காக எகிப்தின் தலைசிறந்த வீரரான முகமது சாலா விளையாடி வருகிறார். இவர் இந்த ஆண்டுக்கான PFA விருதை வென்றுள்ளார். இத்துடன் மூன்று முறை இந்த விருதை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

    இங்கிலீஷ் ப்ரிமீயர் லீக் கடந்த சீசனில் 29 கோல்கள் அடித்திருந்தார். 3ஆவது முறை இந்த விருதை வெல்வதன் மூலம், இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் தலைசிறந்த வீரர்களாக திகழ்ந்த மார்க் ஹியூக்ஸ், ஆலன் ஷியரெர், தியரி ஹென்ரி, ரொனால்டோ, காரத் பேலே, கெவின் டி ப்ரூயின் ஆகியோர் சாதனையை முறியடித்துள்ளார்.

    • 2017ஆம் ஆண்டு லிவர்பூல் அணியுடன் இணைந்தார்.
    • 8 வருட ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 2 வருடம் ஒப்பந்தம் நீடிப்பு.

    எகிப்தின் நட்சத்திர கால்பந்து வீரர் முகமது சாலா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு லிவர்பூல் அணியில் இணைந்தார். கடந்த 8 வருடங்களாக அந்த அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார்.

    இவருடைய ஒப்பந்தம் இந்த சீசனுடன் முடிவடைகிறது. இதனால் அணியில் இருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முகமது சாலா லிவர்பூல் அணியுடன் மேலும் இரண்டு வருடத்திற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதனால் 2027 வரை லிவர்பூல் அணிக்காக விளையாடுவார்.

    முகமது சாலா உடன் டிரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்டு, விர்ஜில் வான் டிக் ஆகியோருடைய ஒப்பந்தமும் நிறைவடைகிறது. ஆனால் இவர்கள் இருவரும் இன்னும் ஒப்பந்தம் குறித்து முடிவு செய்யவில்லை.

    முகமது சாலா இது தொடர்பாக கூறுகையில் "நிச்சயமாக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எங்களிடம் இப்போது ஒரு சிறந்த அணி உள்ளது. முன்பும் எங்களுக்கு ஒரு சிறந்த அணி இருந்தது.

    சாம்பியன் பட்டம் வென்று எனது கால்பந்து வாழ்க்கையை அனுபவிக்க எங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதுவதால் நான் கையெழுத்திட்டேன்.

    இது மிகவும் நல்லது. எனக்கு இங்கு எனது சிறந்த ஆண்டுகள் இருந்தன. நான் எட்டு ஆண்டுகள் விளையாடினேன். இது 10 ஆண்டுகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறத. இங்கே என் வாழ்க்கை மற்றும் கால்பந்தை போட்டியை அனுபவிக்கிறேன். என் கால்பந்து வாழ்க்கையில் சிறந்த ஆண்டுகள் இருந்தன" என்றார்.

    முகமது சாலா லிவர்பூல் அணிக்காக 281 போட்டிகளில் விளையாடி 182 கோல்கள் அடித்துள்ளார். இவர் விளையாடியபோது லிவர்பூல் இங்கிலீஷ் பிரீமியர் லீக், சாம்பியன்ஸ் லீக்கை வென்றுள்ளது.

    எகிப்து நாட்டைச் சேர்ந்த முன்னணி கால்பந்து வீரரான முகமது சாலா, தொடர்ந்து 2-வது முறையாக தென்ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    எகிப்து நாட்டின் கால்பந்து வீரர் முகமது சாலா. இவரின் அபார ஆட்டத்தால் எகிப்து அணி ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் அபாரமாக விளையாடினார். இதனால் 2017-ம் ஆண்டுக்கான தென்ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதை முதன்முறையாக தட்டிச் சென்றார்.

    இந்நிலையில் தற்போது 2-வது முறையாக தென்ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றுள்ளார். விருது பெற்ற முகமது சாலா கூறுகையில் ‘‘நான் சிறுவனாக இருக்கும்போதே இந்த விருதை பெற வேண்டும் என்பது கனவாக இருந்தது. தற்போது இரண்டு முறை இந்த விருதை பெற்றுள்ளேன். இந்த விருதை எகிப்து மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
    பார்சிலோனா அணிக்காக கடந்த சீசனில் 68 போட்டியில் 34 கோல்கள் அடித்த மெஸ்சி, ஐந்தாவது முறையாக தங்க ஷூவை தட்டிச் சென்றார். #Messi
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளில் விளையாடும் வீரர்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக கோல்கள் அடிக்கும் வீரர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் தங்க ஷூ வழங்கப்படும். 2017-18 சீசனில் பார்சிலோனாவின் மெஸ்சி, லிவர்பூல் அணியின் முகமது சாலா, டோட்டன்ஹாம் அணியின் ஹாரி கேன் ஆகியோருக்கிடையே தங்க ஷூவை பெற கடும் போட்டி நிலவியது.

    இறுதியில் 68 போட்டிகளில் 34 கோல்கள் அடித்த மெஸ்சி தங்க ஷூவை தட்டிச் சென்றார். மெஸ்சி இந்த விருதை ஐந்தாவது முறையாக வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்கு முறை வென்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 52 போட்டிகளில் 26 கோல்கள் அடித்திருந்தார்.

    தங்க ஷூவை வென்ற மெஸ்சி இதுபற்றி கூறுகையில் ‘‘உண்மையிலேயே நான் கால்பந்து போட்டியை தொடங்கும்போது இது நடக்கும் என்று நினைக்கவே இல்லை. நான் இந்த போட்டியை மிகவும் விரும்புகிறேன். இந்த விருதை மீண்டும் பெறுவேன் என்று நினைத்தது கிடையாது’’ என்றார்.
    ஐரோப்பிய சம்மேளனத்தின் 2017-18-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருதை பெற்ற மோட்ரிச்சிற்கு ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார். #Ronaldo #LukaModric
    கிளப் அணிகளுக்கு இடையிலான 2017-18 கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச், முகமது சாலா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    பெரும்பாலான விருதிற்கு இவர்கள் மூன்று பேரும் பரிந்துரைக்க பட்டுள்ளனர். ஆனால் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் குரோசியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சில விருதுகளை தட்டிச் செல்லும் நிலையில் உள்ளார்.

    கடந்த வாரம் ஐரோப்பா கால்பந்து சம்மேளனத்தின் 2017-18-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது. ரொனால்டோ, முகமது சலா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி மோட்ரிச் விருதை கைப்பற்றினார்.



    விருதை வாங்கிய மோட்ரிச்சிற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மொட்ரிச் கூறுகையில் ‘‘ரொனால்டோ எனக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அதில் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த ரொனால்டோ, தான் மகிழ்ச்சியடைவதாகவும், இந்த விருதிற்கு நான் தகுதியுடைவன் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் நாம் விளையாட்டில் மோதிக்கொள்ள காத்திருக்க முடியாது என்றார்’’ என தெரிவித்துள்ளார்.
    2017-18-ம் ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் யூனியன் சார்பில் வழங்கப்படும் விருதிற்கான பட்டியலில் மெஸ்சி பெயர் இல்லை. #Messi #Ronaldo
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து சங்கங்களின் யூனியன் சார்பில் 2017-18 சீசனின் சிறந்த வீரரை தேர்வு செய்து விருது வழங்கும். பல வீரர்களை தேர்வு செய்து அதில் இருந்து மூன்று பேரை இறுதியாக தேர்வு செய்வார்கள். இதில் ஒருவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவார்.



    கடைசி மூன்று பேரை தேர்வு செய்து இன்று முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி பெயர் இடம்பெறவில்லை.



    யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.



    இறுதிப் போட்டிக்கு முன்னேறிய லிவர்பூல் அணியின் முகமது சாலாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதன்முறையாக மூன்று பேர் கொண்ட பட்டியலில் சாலா இடம்பிடித்துள்ளார்.
    எகிப்து கால்பந்து அணியின் முன்னணி வீரரான முகமது சாலா லிவர்பூல் அணி உடனான ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார். #Salah #Liverpool
    எகிப்து கால்பந்து அணியின் முன்னணி வீரரான முகமது சாலா 2016-17 சீசனில் இத்தாலி கிளப்பான ரோமாவிற்காக விளையாடி வந்தார். அந்த அணிக்காக 31 போட்டிகளில் பங்கேற்று 15 கோல்கள் அடித்திருந்தார்.

    அவரை விற்க ரோமா முடிவு செய்தது இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான லிவர்பூல் சுமார் 42 மில்லியன் யூரோ கொடுத்து 5 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்தது. ரோமாவில் சரியாக விளையாடாத முகமது சாலா, லிவர்பூல் அணிக்காக நம்பமுடியாத வகையில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2017-2018 சீசனில் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் 32 கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். ஒட்டு மொத்தமாக 44 கோல்கள் அடித்துள்ளார்.



    சிறப்பான ஆட்டத்தால் சிறந்த ஆப்பிரிக்கா வீரர், கால்பந்து எழுத்தாளர்கள் சங்கங்களின் சிறந்த வீரர் விருது ஆகியவற்றை தட்டிச் சென்றார். 26 வயதான முகமது சாலாவின் துடிப்பான ஆட்டத்தை பார்த்து அசந்துபோன ரியல் மாட்ரிட் உள்ளிட்ட முன்னணி கிளப்புகள் இவரை ஒப்பந்தம் செய்ய விரும்பின. அதேவேளையில் லிவர்பூல் அணி அவரை வெளியிட விரும்பவில்லை.

    இந்நிலையில் சாலா உடனான ஒப்பந்ததை லிவர்பூல் அணி ஐந்தாண்டிற்கு நீட்டித்துள்ளது. இதன்மூலம் 2024 வரை அவர் இதே அணியில் தொடர்வார். இவருக்கான டிரான்ஸ்பர் தொகை எவ்வளவு என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், வாரத்திற்கு 2 மில்லியன் பவுண்டு சம்பளம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.
    மெஸ்சி மற்றும் என்னை பின்னுக்குத் தள்ளி முகமது சாலாவால் பலோன் டிஆர் விருதை வெல்ல முடியும் என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார். #Ronaldo
    ஆண்டுதோறும் கால்பந்து விளையாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு பலோன் டிஆர் என்ற உயரிய விருது வழங்கப்படும். 2008-ல் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகியோர் தலா ஐந்து முறை இந்த விருதை பெற்றுள்ளனர்.

    இந்த விருதை இவர்கள் இருவரையும் தவிர மற்ற வீரர்கள் நெருங்க முடியாத நிலை உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், முகமது சாலாவால் இந்த விருதை வெல்ல முடியும் என்ற ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில் ‘‘இந்த வருடத்தின் வெளிப்பாடுகளில் ஒருவர் சாலா. ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான யூரோப்பா சாம்பியன்ஷிப் போட்டியில் ஏற்பட்ட காயம் அவரை வெளியேற்றாது என்று நம்புகிறேன்.



    பலோன் டிஆர் விருதிற்கு எனக்கும், மெஸ்சிக்கும் இடையில்தான் போட்டி என்று பெரும்பாலான நபர்கள் பேசிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், மற்ற வீரர்களும் இந்த ரேஸில் நுழைய வாய்ப்புள்ளது. அதில் உறுதியாக சாலாவும் ஒருவர்’’ என்றார்.

    லிவர்பூல் அணிக்காக சாலா ஒட்டுமொத்தமாக 44 கோல்கள் அடித்துள்ளார்.
    உலகக் கோப்பையில் விளையாடுவதற்காகவே ரஷியா வந்துள்ளேன் என்று எகிப்து அணியின் முன்னணி வீரர் முகமது சாலா கூறியுள்ளார். #FIFA2018
    எகிப்து கால்பந்து அணியின் முன்னணி வீரர் முகமது சாலா. இவர் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 27-ந்தேதி நடைபெற்ற ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான யூரோ சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் சாலாவிற்கு காயம் ஏற்பட்டது.

    இந்த காயத்திற்காக மூன்று வாரங்கள் முகமது சாலா ஓய்வு எடுக்க வேண்டியிருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவித்தனர். சனிக்கிழமை எகிப்து அணி ரஷியா சென்றடைந்தது. ரஷியா அணியுடன் முகமது சாலாவும் சென்றிருந்தார்.



    நான் ரஷியா வந்ததே உலகக் கோப்பையில் விளையாடுவதற்கே என்று முகமது சாலா கூறியுள்ளார். இதுகுறித்து சாலா கூறுகையில் ‘‘காயம் ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது. நான் ரஷியா வந்ததே உலகக் கோப்பையில் விளையாடுவதற்காகத்தான்.

    நாங்கள் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்ற பின்னர், நான் அணியில் இடம்பெறாவிடில், உண்மையிலேயே கடினமாக இருக்கும். கடவுள் உலகக் கோப்பையில் நான் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பை அளித்துள்ளார். கனவு நனவாகியுள்ளது’’ என்றார்.
    முகமது சாலாவின் உடற்தகுதி குறித்து உறுதியான நிலை தெரியாத போதிலும், நம்பிக்கையுடன் ரஷியா வந்தடைந்தது எகிப்பு அணி. #WorldCup2018
    பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எகிப்பு அணி கடைசியாக 1990-ம் ஆண்டு இடம்பிடித்திருந்தது. அதன்பின் தற்போதுதான் 28 ஆண்டுகள் கழித்து 3-வது முறையாக தகுதிப் பெற்றுள்ளது. இதற்கு முகமது சாலாவின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

    கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்ற யூரோப்பா சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின்போது முகமது சாலா தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய சுமார் மூன்று வாரங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

    அதன்படி பார்த்தால் வருகிற 15-ந்தேதி உருகுவே அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாட தகுதி பெறுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்நிலையில் சாலாவுடன் எகிப்பு அணி நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) ரஷிய வந்தடைந்துள்ளது. சாலா அணியில் இடம்பிடித்திருந்தாலும் அவர் உருகுவே அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் பங்கேற்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் வெளிவரவில்லை.



    இதுகுறித்து எகிப்பு அணி டாக்டர் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த வாரம் தொடக்கத்தில் முகமது சாலாவின் காயம் குறித்து மதிப்பீடு செய்வோம். இரண்டு நாட்களுக்குப் பிறகும் எங்களால் உறுதியாக சொல்ல முடியாது. அவர் முழுவதும் குணமடையும் முன்பு, விளையாட அனுமதிக்கமாட்டோம்’’ என்றார்.

    எகிப்து அணியின் மானேஜர் கூறுகையில் ‘‘எங்கள் அணி போட்டியில் களம் இறங்க தயாராக இருக்கிறது. மனஉறுதியைில் அதிகமாக உள்ளது’’ என்றார்.

    ‘ஏ’ பிரவில் இடம்பிடித்துள்ள எகிப்பு 15-ந்தேதி உருகுவே அணியை எதிர்கொள்கிறது. 19-ந்தேதி ரஷியாவையும், 25-ந்தேதி சவுதி அரேபியாவையும் எதிர்கொள்கிறது.
    சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் முகமது சாலா காயத்திற்கு காரணமான செர்ஜியோ ரமோஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
    யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கடந்த சனிக்கிழமை நள்ளிரவு உக்ரைனில் நடைபெற்றது. இதில் ரியல் மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. காரேத் பேலே இரண்டு கோலும், பென்சிமா ஒரு கோலும் அடித்தனர். லிவர்பூல் ஒரு கோல் அடிக்க ரியல் மாட்ரிட் 3-1 என வெற்றி பெற்று தொடர்ச்சியாக 3-வது முறை கோப்பையை கைப்பற்றியது.

    போட்டியின் முதல் பாதி நேரத்தில் லிவர்பூல் அணியின் முன்னணி வீரரான முகமது சாலா பந்தை கோல் நோக்கி கடத்திச் சென்றார். அப்போது ரியல் மாட்ரிட் கேப்டனும், பின்கள வீரரும் ஆன செர்ஜியோ ரமோஸ் சாலாவின் கோல் முயற்சியை தடுக்க அவருடன் மோதிக்கொண்டே பந்தை தடுக்கச் சென்றார்.



    அப்போது ரமோஸ் கைக்குள் சாலா கை மாட்டியது. அப்போது சாலாவை ரமோஸ் தள்ளியதால் சாலா கீழே விழுந்தார். இதில் சாலாவின் வலது கை தோள்பட்டை பலமாக தரையில் சென்று தாக்கியது. இதனால் சாலா வலியால் துடித்தார். பின்னர் சிறிது நேரம் விளையாடிய பின்னர் வலி தாங்க முடியாமல் வெளியேறினார். ஆனால் ரமோஸிற்கு நடுவர் எந்த தண்டனையும் வழங்கவில்லை.

    இதனால் லிவர்பூல் ரசிகர்கள் கடும் கோபம் அடைந்தனர். அத்துடன் அமெரிக்காவில் பாதிப்படைந்த மக்களுக்காக உதவும் சேஞ்ச்.ஓர்ஜி (Change.org) என்ற இணைய தளத்தில் பிபா மற்றும் யூஈஎஃப்ஏ செர்ஜியோ ரமோஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 3 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
    ×